மாகாண சபை தேர்தல் விரைவில் நடத்தப்படும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

0 569

மாகாண சபை தேர்­தலை நடத்­து­வது தொடர்­பாக தேர்தல் ஆணைக்­கு­ழு­வுடன் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கிறேன். மாகாண சபை தேர்­தலை தாமதம் இல்­லாமல் உட­ன­டி­யாக நடத்­து­வ­தற்கு உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும். ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் பல்­வேறு கதை­களை சோடித்து மாகாண சபைத் தேர்­தலை பிற்­போ­டு­வ­தற்கு சிலர் முயற்­சித்து வரு­கி­றார்கள் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் எதிர்­கால புன­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் தொடர்­பான மாகாண மட்­டத்­தி­லான கலந்­து­ரை­யா­ட­லொன்று நேற்று முன்­தினம் இரவு ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெற்­றது. ஜனா­தி­ப­தியின் தலை­மையில் நடை­பெற்ற இக்­க­லந்­து­ரை­யா­டலில் ஊவா மற்றும் மத்­திய மாகாண தொகுதி அமைப்­பா­ளர்கள் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

அங்கு உரை­யாற்­று­கை­யி­லேயே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேற்­கண்­ட­வாறு கூறினார்:

அவர் தொடர்ந்தும் கலந்­து­ரை­யா­ட­லின்­போது உரை­யாற்­று­கையில்;

‘தற்­போது வரை 6 மாகாண சபை­களின் செயற்­பா­டுகள் ஸ்தம்­பித்­துப்­போ­யுள்­ளன. இது ஜன­நா­ய­கத்­துக்கு எதி­ரா­ன­தாகும். மாகாண சபை தேர்தல் நடத்­தப்­ப­டாமை அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தம் மூலம் எதிர்­பார்த்த இலக்­கு­க­ளுக்கு முர­ணா­ன­தாகும். மாகாண சபைத்­தேர்­தலை நடத்­து­வது தொடர்பில் தேர்தல் ஆணைக்­கு­ழு­வுடன் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கிறேன். மாகாண சபை தேர்­தலை உட­ன­டி­யாக நடத்தி மக்­களின் வாக்­கு­ரி­மை­யான ஜன­நா­ய­கத்தை உறுதி செய்ய வேண்டும்.

புதிய அமைச்­ச­ரவை நிய­மிக்­கப்­பட்டு 3 வாரங்கள் கடந்­து­விட்­டன. அமைச்­சுக்­களின் கீழுள்ள கூட்­டுத்­தா­ப­னங்கள், சபைகள் மற்றும் நிறு­வ­னங்­க­ளுக்கு தலை­வர்­களும் பணிப்­பாளர் சபை­களும் இது­வரை நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. இது தொடர்பில் சிலர் ஜனா­தி­பதி காரி­யா­ல­யத்­தையே குறை கூறு­கி­றார்கள். ஆனால் இது ஜனா­தி­பதி காரி­யா­ல­யத்தின் குறை­யல்ல.

இந்த நிலை­மைக்கு அந்­தந்த அமைச்­சுக்­களே பொறுப்புக்கூற வேண்டும். நிய­ம­னங்­க­ளுக்­கான சிபா­ரி­சுக்­காக பிர­த­மரின் காரி­யா­ல­யத்தின் மூலம் ஜனா­தி­பதி காரி­யா­ல­யத்­துக்கு இது­வரை அனுப்பி வைக்­கப்­ப­டா­மையே தாம­தத்­திற்கு கார­ண­மாகும். இதற்­கான பொறுப்­பினை ஜனா­தி­பதி காரி­யா­லயம் ஏற்கத் தயா­ராக இல்லை.

சபைகள், கூட்­டுத்­தா­ப­னங்கள் மற்றும் அரச நிறு­வ­னங்­க­ளுக்கு தலை­வர்­க­ளையும் பணிப்­பாளர் சபை­க­ளையும் நிய­மிக்­கும்­போது அது தொடர்­பான சிபா­ரி­சு­களைச் செய்­வ­தற்கு கமிட்­டி­யொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. அந்தக் கமிட்­டியின் சிபா­ரி­சு­களின் படியே நியனமங்கள் வழங்கப்படும் என்றார். கலந்துரையாடலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, பொதுச் செயலாளர் தயாசிரி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, ஊவா மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோரும் பங்கு கொண்டிருந்தனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.