கட்­டா­ர் மீதான தடைகள் சீர­டைய பல ஆண்­டுகள் தேவைப்­படும்: முன்னாள் பிர­தமர் தெரி­விப்பு

0 591

பார­சீக வளை­குடா அரபு நாடு­க­ளுக்கு இடை­யே­யான நம்­பிக்­கை­யினை மிகவும் தரக்­கு­றை­வாக மதித்து சவூதி அரே­பி­யாவின் திட்­ட­மி­டலின் கீழ் எமது நாட்டின் மீது விதிக்­கப்­பட்­டுள்ள தடைகள் சீர­டை­வ­தற்கு இன்னும் பல ஆண்­டுகள் செல்லும் என கட்டார் முன்னாள் பிர­தமர் ஷெய்க் ஹமாட் பின் ஜாஸ்ஸிம் பின் ஜபோர் அல் தானி கடந்த சனிக்­கி­ழமை தெரி­வித்­துள்ளார்.

வெளி­நாட்டுக் கொள்­கையில் ஒருதலைப்­பட்­ச­மாக சவூதி அரே­பியா எடுத்த முடிவு ஒரு­கா­லத்தில் சக்­தி­மிக்க அமைப்­பாக இருந்த ஜீசீசீ என அறி­யப்­பட்ட பார­சீக வளை­கு­டாவில் அமைந்­துள்ள அரபு நாடு­களின் பிராந்­தியக் கூட்­ட­மைப்பை நலி­வ­டையச் செய்து விட்­டது எனவும் தெரி­வித்தார்.

றஷ்­சியா அல்-யௌம் உட­னான நேர்­கா­ண­லின்­போது ‘வளை­கு­டாவின் கன­வுகள் சிதைந்­து­விட்­டன’ எனத் தெரி­வித்த ஷெய்க் ஹமாட் ‘ஜீசீசீ அழி­வ­டைந்­துள்­ளது, மீள நம்­பிக்­கை­யினைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு மேலும் பல ஆண்­டுகள் தேவைப்­படும்’ எனவும் தெரி­வித்தார்.

18 மாதங்­க­ளுக்கும் மேற்­பட்ட கட்டார் மீதான சவூதி அரே­பியா மற்றும் அதன் தோழமை நாடு­க­ளி­னது பொரு­ளா­தார மற்றும் இரா­ஜ­தந்­திரத் தடைகள் தோஹா மீது பொரு­ளா­தார ரீதி­யாவும் அர­சியல் ரீதி­யா­கவும் எந்தப் பாதிப்­பி­னையும் ஏற்­ப­டுத்­த­வில்லை, அது தோல்வி கண்­டுள்­ளது. வெளி­நாட்டுக் கொள்­கையில் தன்­னிச்­சை­யான முடிவின் காரணமாக றியாத் தற்போது தளம்பல் நிலையினைச் சந்தித்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

கட்டார் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்த நாடுகளால் அதற்கு ஆதரவான எவ்வித ஆதாரங்களையும் முன்வைக்க முடியாமல் போயுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர் தடைகளிலிருந்தும் சோடிக்கப்பட்ட நெருக்கடியிலிருந்தும் மீள்வதற்கும் கட்டார் சிறப்பாகச் செயற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

சவூதி அரேபியாவின் பட்டத்திற்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பல பிரச்சினைக்குரிய தீர்மானங்களுக்கு பின்னணியில் அவரே இருந்துள்ளார். அவருக்கு சிறந்த ஆலோசகர்கள் அவசியமாகும் எனவும் தெரிவித்தார்.

யெமனில் சவூதி அரேபியாவினால் நடத்தப்படும் யுத்தம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், அது உலகின் மிகவும் மோசமான மனிதப் பேரவலம் எனத் தெரிவித்ததோடு, 2015 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட மிகத் தவறான முடிவுமாகும் என்றார்.

யெமன் மீது யுத்தத்தை ஆரம்பிக்க வேண்டும் என யார் நினைத்தார்களோ அவர்கள் எவ்வாறு நித்திரை செய்கிறார்களோ என்பது எனக்குத் தெரியவில்லை எனவும் ஷெய்க் ஹமாட் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.