இராணுவ அலுவலக பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்ர நியமனம்

அடுத்த இராணுவத் தளபதியாகவும் நியமனம் பெறும் வாய்ப்பு

0 544

இரா­ணுவத் தள­ப­திக்கு அடுத்­த­ப­டி­யாக உள்ள உயர் பத­வி­யான இரா­ணு­வத்தின் அலு­வ­லக பிர­தானி பத­விக்கு மனித உரி­மைகள் விவ­கா­ரத்தில் பெரும் சர்ச்­சைக்­குள்­ளான மேஜர் ஜெனரல் சவேந்ர சில்வா நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.  இரா­ணு­வத்தின் அலு­வ­லக பிர­தா­னி­யாக செயற்­பட்ட  மேஜர் ஜெனரல் சம்பத் பெர்­னாண்டோ கடந்­தாண்டு டிசம்பர் 31 ஆம் திக­தி­யுடன் ஓய்­வு­பெற்ற நிலையில் இரா­ணுவத் தள­பதி லெப்­டினன் ஜெனரல் மகேஷ் சேன­நா­யக்கவால் ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைக்­கப்­பட்ட 10 மேஜர் ஜென­ரல்­களில் இருந்து அவர் இவ்­வாறு இரா­ணுவ அலு­வ­லக பிர­தா­னி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார்.  இது­வரை இரா­ணு­வத்தின் மனித உரி­மைகள் தொடர்பில் பொறுப்­பாக இருந்­து­வந்த மேஜர் ஜெனரல் சவேந்ர சில்வா நேற்று முதல் இவ்­வாறு இரா­ணுவ அலு­வ­லக பிர­தா­னி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இதனை இரா­ணுவத் தலைமை­யகம் உறுதி செய்­தது.

இரா­ணு­வத்தில் அலு­வ­லக பிர­தா­னி­யாக சவேந்ர சில்வா நிய­மிக்­கப்­பட்­டுள்ள நிலையில், இரா­ணுவத் தள­பதி இல்­லாத போது அவர் பதில் இரா­ணுவத் தள­ப­தி­யாக செயற்­படும் வாய்ப்பு ஏற்­பட்­டுள்­ளது. அத­னை­விட பெரும்­பாலும் இரா­ணு­வத்தின்  அடுத்த தள­ப­தி­யாக இரா­ணுவ அலு­வ­லக பிர­தா­னி­யாகக் கட­மை­யாற்றும் நபரே தெரிவு செய்­யப்­படும் நிலையில்,  லெப்­டினன் ஜெனரல் மகேஷ் சேன­நா­யக்­க­வுக்கு அடுத்து, சவேந்ர சில்வா இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­படும் சாத்­தியம் தற்­போது அதி­க­ரித்­துள்­ள­தாக பாது­காப்புத் தரப்பு தக­வல்கள் சுட்­டிக்­காட்­டின.

1984 ஆம் ஆண்டு இரா­ணு­வத்தில் இணைந்­தி­ருந்த மேஜர் ஜெனரல் சவேந்ர சில்வா, இறு­திக்­கட்ட யுத்­தத்­தின்­போது  58 ஆம் படைப் பிரி­வுக்குத் தலைமை தாங்­கிய நிலையில், அப்­படைப் பிரிவால் பாரிய மனித உரிமை மீறல்கள் நிகழ்த்­தப்­பட்­ட­தாக குற்­றமும் சாட்­டப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே அவர்  இரா­ணு­வத்தின் மிக முக்­கிய பொறுப்பில் அமர்த்­தப்­பட்­டுள்ளார். இரா­ணு­வத்தின் 19 ஆவது பயிற்சிக் குழுவின் உறுப்­பி­ன­ரான மேஜர் ஜெனரல் சவேந்ர சில்வா எதிர்­வரும் ஜூன் 21 ஆம் திகதி தனது 55 ஆவது வயதை பூர்த்தி செய்யும் நிலையில், அவ­ருக்கு சேவை நீடிப்பு வழங்கி இரா­ணுவத் தள­ப­தி­யாக அவரை ஆகஸ்ட் 18 ஆம் திக­தியின் பின்னர் நிய­மிக்க அதிக வாய்ப்­புள்­ள­தாக பாது­காப்பு அமைச்சின் உய­ர­தி­காரி ஒருவர் சுட்­டிக்­காட்­டினார்.

இரா­ணு­வத்தின்   அலு­வ­லக பிர­தானி போட்­டியில் முன்­ன­ணி­யி­லி­ருந்த மேஜர் ஜெனரல்  சத்­ய­பி­ரிய லிய­ன­கேக்கு 55 வயது எதிர்­வரும் நவம்பர் 14 ஆம் திக­தியே பூர்த்­தி­யா­கின்­றது. இந்­நி­லையில் ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் மேஜர் ஜெனரல் சவேந்ர இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்ட பின்னர் மேஜர் ஜெனரல் சத்­தி­யப்­பி­ரிய லிய­னகே இரா­ணுவ அலு­வ­லக பிர­தானி பத­விக்கு நிய­மிக்­கப்­ப­ட­லா­மென படை­த­ரப்பு வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

எவ்­வா­றா­யினும் ஏற்­க­னவே இரா­ணுவத் தள­பதி லெப்­டினன் ஜெனரல் மகேஷ் சேன­நா­யக்க ஜனா­தி­ப­திக்கு அனுப்­பி­வைத்த இரா­ணுவ அலு­வ­லக பிர­தானி பத­விக்­கான பரிந்­துரைப் பட்­டி­ய­லி­லுள்ள  யாழ். கட்­டளைத் தள­ப­தி­யாக தற்­போ­துள்ள மேஜர் ஜெனரல் தர்­ஷன ஹெட்­டி­யா­ராச்சி எதிர்­வரும் ஜூலை 22 ஆம் திக­தியும்,   மேஜர் ஜெனரல் அஜித் காரி­ய­க­ர­வன எதிர்­வரும் ஏபரல் 21 ஆம் திக­தியும்,  மேஜர் ஜெனரல் ருவன் குல­துங்க ஜூன் 15 ஆம் திக­தியும், மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் ஏப்ரல் 25 ஆம் திக­தியும்,  மேஜர் ஜெனரல் குமுது பெர்­னாண்டோ  ஒக்­டோபர் 25 ஆம் திக­தியும் தமது 55 வய­தினை பூர்த்தி செய்­கின்­றனர்.

55 வயதின் பின்னர் பாது­காப்பு படை­களில் சேவை­யாற்ற சேவை நீடிப்பு வழங்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

தற்­போது இரா­ணுவத் தள­ப­தி­யா­க­வுள்ள லெப்­டினன்  ஜெனரல் மகேஷ் சேன­நா­யக்­க­வுக்கு ஜனா­தி­பதி வழங்­கி­யுள்ள சேவை நீடிப்பு எதிர்­வரும் ஆகஸ்ட் 18 ஆம் திக­தியே நிறை­வுக்கு வரு­கின்­றது.

ஏற்­க­னவே இரா­ணுவ அலு­வ­லக பிர­தா­னி­க­ளுக்கு சேவை நீடிப்பு வழங்­கி­யமை, அவர்கள் அவ்­வாறு இரா­ணுவத் தள­ப­தி­யா­னமை போன்ற முன்­னு­தா­ர­ணங்கள் உள்ள நிலையில் சவேந்ர சில்­வா­வுக்கும் அது சாத்­தி­யப்­ப­டு­மென்று பது­காப்பு அவ­தா­னிகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

ஏற்­க­னவே பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக கோத்­தா­பய ராஜபக் ஷ கட­மை­யாற்­றிய காலங்­களில்  பல­கல்ல, ஜி.ஏ.சந்ர சிறி, நில்­டயஸ், தயா ரத்­னா­யக்க  உள்­ளிட்­டோ­ருக்கு அலு­வ­லக பிர­தானி பத­வியில் கட­மை­யாற்ற பதவி நீடிப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. அவர்­களில் தயா ரத்­நா­யக்க உள்­ளிட்டோர் பின்­னாளில் இரா­ணுவத் தளபதியாகினர்.

அதேபோல் தற்போதைய ஜனாதிபதி மைத்திரியின் அனுமதியுடன் தற்போது ஓய்வுபெற்ற இராணுவ அலுவலக பிரதானி சம்பத் பெர்னாண்டோவுக்கும் ஏற்கனவே பதவி நீடிப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே மேஜர் ஜெனரல் சவேந்ர சில்வாவுக்கு எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி 55 வயது நிறைவடைந்தாலும் அவருக்குப் பதவி நீடிப்பு வழங்கப்பட்டு பின்னர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.