ஹஜ் சட்டமூலம் விரைவில் சபையில் சமர்ப்பிக்கப்படும்

முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம்

0 466

ஹஜ் முக­வர்­களின் ஆலோ­ச­னை­க­ளையும் பெற்­றுக்­கொண்டு தயா­ரிக்­கப்­படும் ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்­கான சட்ட மூலம் விரைவில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டு அங்­கீ­காரம் பெற்றுக் கொள்­ளப்­படும்.

அ-து­வ­ரையில் தற்­போ­துள்ள ஹஜ் நடை-­மு­றை­களே முன்­னெ­டுக்­கப்­படும் என அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார்.

அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற ஹஜ் முக­வர்­க­ளுக்­கான நிய­ம­னங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலேயே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், ஹஜ்­கோட்டா பகிரும் தற்­போ­தைய முறையை அனை­வரும் அங்­கீ­க­ரித்­தி­ருக்­கி­றார்கள். அண்­மையில் இடம்­பெற்ற அர­சியல் நெருக்­க­டி­யின்­போது முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சர்­க­ளாக நிய­மனம் பெற்ற ஹிஸ்­புல்லாஹ் மற்றும் பெளசி என்போர் ஹஜ் ஏற்­பா­டு­களில் எந்த மாற்­றமும் செய்­யப்­ப­ட­மாட்­டாது. தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள ஏற்­பா­டு­களே முன்­னெ­டுக்­கப்­படும் என்று தெரி­வித்­துள்­ளமை இதனை உறு­திப்­ப­டுத்­து­கி­றது.

ஹஜ் ஏற்­பா­டு­களில் காலத்­துக்­கேற்ற மாற்­றங்கள் தேவை. மாற்­றங்கள் ஹஜ் பய­ணி­க­ளி­னதும், ஹஜ் முக­வர்­க­ளி­னதும் நலன் கரு­தி­ய­தா­கவே அமையும். அதனால் இது குறித்து எவரும் அச்­ச­ம­டையத் தேவை­யில்லை.

இவ்­வ­ருடம் நிய­மனம் பெற்­றுள்ள 92 ஹஜ் முக­வர்­க­ளுக்கும் தலா 10 ஹஜ் கோட்டா வீதம் வழங்­கப்­ப­டு­வ­துடன் அவர்கள் நேர்­முகப் பரீட்­சையில் பெற்றுக் கொண்­டுள்ள புள்­ளி­க­ளுக்கு அமை­வாக ஹஜ் கோட்டா பகி­ரப்­படும்.

ஹஜ் கட­மைக்­காக விண்­ணப்­பிப்­ப­வர்கள் அனை­வரும் அக்­க­ட­மையை நிறை­வேற்றிக் கொள்ளும் வகையில் ஹஜ் கோட்­டாவை அதி­க­ரித்துப் பெற்றுக் கொள்­வ­தற்­காக சவூதி ஹஜ் அமைச்­ச­ரிடம் பேச்­சு­வார்த்­தைகள் நடாத்­தப்­படும். அதற்­கான அழைப்பும் எமக்குக் கிடைத்­துள்­ளது. இவ்­வ­ரு­டத்தின் ஹஜ் கட்­ட­ணங்கள் எவ்­வாறு அமை­யு­மெனக் கூற முடி­யாது. ஏனென்றால் இலங்கை ரூபாவின் பெறு­மதி குறைந்து அமெ­ரிக்க டொலரின் பெறு­மதி அதி­க­ரித்­துள்­ளது. சவூ­தியில் வரி வீதங்­களும் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

ஹஜ் முக­வர்கள் ஹஜ் பய­ணி­களின் நலன் கரு­தி­ய­தா­கவே தமது சேவை­களைத் தொடர வேண்டும். உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட சேவைகளை வழங்க வேண்டும் என்றார்.

நிகழ்வில் அரச ஹஜ் குழுவின் தலைவர் எம்.ரி.சியாத் தலைமையில் குழுவின் அங்கத்தவர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.