எகிப்­தும் இஸ்ரேலும் இணைந்து சீனாய் போரா­ளி­க­ளுக்கு எதி­ராக செயற்­படும்

எகிப்­திய ஜனா­தி­பதி தெரி­விப்பு

0 663

சீனாய் தீப­கற்­பத்­தி­லுள்ள ஆயுதக் குழுக்­க­ளுக்கு எதி­ராக எகிப்து மற்றும் இஸ்ரேல் இணைந்து செயற்­ப­ட­வுள்­ள­தாக எகிப்­திய ஜனா­தி­பதி அப்துல் பத்தாஹ், எல்-­சிசி அமெ­ரிக்க ஊடக நிலை­ய­மொன்­றிற்குத் தெரி­வித்தார்.

எகிப்தில் அர­சியல் கைதிகள் இருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்­களை மறுத்த அவர் எகிப்தில் நவீன வர­லாற்றில் முதன்­மு­றை­யாக முன்னர் அவர் தலைமை தாங்­கிய இரா­ணு­வத்­தி­னரால் முன்னாள் ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தற்கு மேற்­கொண்ட நட­வ­டிக்கை தொடர்பில் அவர் எத­னையும் தெரி­விக்­க­வில்லை.

இந்த நேர்­கா­ணலை ஒளி­ப­ரப்­பாக்க வேண்டாம் என எகிப்­தினால் விடுக்­கப்­பட்ட வேண்­டு­கோளை மறுத்த சீ.பீ.எஸ் ஊடக நிறு­வனம் எகிப்­திய ஜனா­தி­ப­தியின் நேர்­காணல் முழு­வ­தையும் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ஒளி­ப­ரப்­பி­யது. இந்த நேர்­கா­ணலில் எந்தப் பகு­தியை ஒளி­ப­ரப்ப வேண்­டா­மென கோரிக்கை விடுக்­கப்­பட்­டது என்­பது தொடர்பில் அவ்­வூ­டக நிறு­வனம் விளக்­க­ம­ளிக்­க­வில்லை. எகிப்து 1979 ஆம் ஆண்டு இஸ்­ரே­லுடன் சமா­தான உடன்­ப­டிக்­கை­யொன்றை செய்­து­கொண்­டுள்ள நிலையில் இணைந்து பணி­யாற்­று­வது கேள்­விக்­கு­ரிய விட­ய­மாகப் பார்க்­கப்­ப­டு­கின்­றது. ஐ.எஸ் அமைப்பின் தலை­மை­யி­லான போரா­ளி­க­ளுடன் பல ஆண்­டுகள் எகிப்­திய படை­யினர் மோதலில் ஈடு­பட்ட கர­டு­மு­ர­டான மலைப்­ப­குதி மற்றும் பாலை­வனப் பகு­தி­களை இஸ்ரேல் மற்றும் காஸாவை எல்­லை­க­ளாகக் கொண்ட பிராந்­தி­ய­மான வடக்கு சீனாயில் கிளர்ச்­சிக்­கா­ரர்­க­ளுக்கு எதி­ராக இஸ்­ரே­லுடன் எகிப்து இணைந்து செயற்­படப் போவ­தாக கடந்த ஆண்டு வெளி­யான ஊடக தக­வல்­களை எகிப்­திய இரா­ணுவம் மறுத்­தி­ருந்­தது.

முன்­னொ­ரு­போதும் இல்­லா­த­வாறு இஸ்­ரே­லுக்கும் எகிப்­துக்கும் இடை­யே­யான உறவு நெருக்­க­மா­கி­யுள்­ளதா எனக் கேட்­கப்­பட்ட கேள்­விக்கு பதி­ல­ளிக்­கையில் ‘உண்­மைதான், நாம் இஸ்­ரே­லி­யர்­க­ளுடன் விரி­வான ஒத்­து­ழைப்­புடன் செயற்­பட்டு வரு­கின்றோம்.’ என அவர் பதி­ல­ளித்தார்.

இஸ்­ரே­லிய அதி­கா­ரிகள் எல்-­சிசி.யின் எகிப்­து­ட­னான பாது­காப்பு ஒத்­து­ழைப்பை வெளிப்­ப­டை­யா­கவே சிலா­கித்துப் பேசி­யுள்­ளனர். குறித்த எண்­ணிக்­கை­யான படை­க­ளையும் ஆயு­தங்­க­ளையும் இஸ்­ரே­லிய எல்­லைக்­க­ருகில் வைத்­தி­ருக்க முடியும் என 1979ஆம் ஆண்டின் உடன்­ப­டிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்த போதிலும் இஸ்­ரே­லிய எல்­லைக்­க­ருகில் படை­யினர், ஏவு­க­ணைகள், ஹெலி­கொப்டர் ஆயுதக் கப்­பல்­களை பணியில் ஈடு­ப­டுத்­து­வ­தற்­கான அனு­ம­தியை வெற்­றி­க­ர­மாக எகிப்து இஸ்­ரே­லி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொண்­டது.

எல்-­சிசி 2014 ஆம் ஆண்டு பத­விக்கு வந்­த­தி­லி­ருந்து இஸ்­ரே­லியப் பிர­தமர் பெஞ்­சமின் நெட்­டன்­யா­ஹுவை இரண்டு தட­வைகள் நேர­டி­யாகச் சந்­தித்­துள்ளார். இந்த சந்­திப்­புக்கள் எகிப்தில் பெரிய அளவில் ஊட­க­ம­யப்­ப­டுத்தப் பட­வில்லை ஏனெனில், எகிப்தில் பெரும்­பா­லான மக்கள் தமது அண்டை நாடான இஸ்­ரேலை பரம விரோத நாடாகக் கரு­து­கின்­றனர், இஸ்­ரே­லு­ட­னான உற­வுகள் சீர்­செய்­வ­தற்கு தொழிற்­சங்­கங்கள் மற்றும் பெரும்­பா­லான அர­சியல் கட்­சிகள் எதிர்ப்புத் தெரி­வித்து வரு­கின்­றன.

எகிப்தில் 60,000 அர­சியல் கைதிகள் இருப்­ப­தாக மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் தெரி­வித்­தி­ருக்­கி­ற­தென எல்-­சிசி.யிடம் கேட்­கப்­பட்ட போது, அவர்கள் எப்­படி இந்தத் தர­வு­களைப் பெற்­றுக்­கொண்­டார்கள் என்­பது எனக்குத் தெரி­ய­வில்லை எனத் தெரி­வித்த அவர் எப்­போ­தெல்லாம் சிறு­பான்­மை­யி­னரால் தீவி­ர­வாத சிந்­தனை திணிக்­கப்­ப­டு­கின்­றதோ அப்­போ­தெல்லாம் அவர்­க­ளது எண்­ணிக்­கை­யினைப் பொருட்­ப­டுத்­தாமல் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரி­வித்தார். குறித்த குற்­றத்தைச் செய்­த­மைக்­காக சட்ட நட­வ­டிக்­கை­களை எதிர்­கொண்­டி­ருப்­ப­வர்­களே சிறையில் அடைக்­கப்­பட்­டுள்­ளனர் என எல்-­சிசி கடந்த காலங்­களில் தெரி­வித்­தி­ருந்தார். எனினும் மனித உரிமைச் செயற்­பாட்­டா­ளர்­களோ விசா­ர­ணைகள் எது­வு­மின்றி இரண்டு வரு­டங்கள் அல்­லது அதற்கு மேற்­பட்ட காலங்கள் கைதிகள் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், விசா­ர­ணைகள் சட்­டங்­க­ளி­லுள்ள விட­யங்கள் கருத்தில் கொள்­ளப்­ப­ட­வில்லை என்­ப­தோடு நீதி­பதிச் சட்­டத்தை நடை­முறைப் படுத்­து­வ­தற்குப் பதி­லாக நாட்டை பாது­காத்தல் என்ற விட­யத்­தி­லேயே அக்­கறை செலுத்­து­கின்­றனர் எனவும் தெரி­விக்­கின்­றனர். அல் ஜஸீரா ஊட­க­வி­ய­லாளர் மஹ்மூட் ஹுஸைன் தனது குடும்­பத்­தி­னரைச் சந்­திக்க 2016 டிசம்பர் மாதம் நாட்­டுக்கு வந்த வேளையில் கைது செய்யப்பட்டார்.

ஹுஸைன் எவ்வித விசாரணைகளுமின்றி எகிப்திய சிறையில் 743 நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஊடகங்கள் மீதான இறுக்கமான கட்டுப்பாடு, மனித உரிமைக் குழுக்கள் மீதான கட்டுப்பாடுகள் உள்ளடங்கலான மாற்றுக்கருத்துக்களை அடக்குவதற்கான நட வடிக்கைகளின் ஒரு பகுதியே இந்தத் தடுத்து வைப்புக்களாகும். சர்வாதி காரியான ஹொஸ்னி முபாரக்கிற்கு எதிராக 2011 ஆம் ஆண்டு மக்கள் எழுச்சி மூலம் பெறப்பட்ட பெரும்பாலான சுதந்திரங்கள் பல மீண்டும் பழைய நிலைமைக்குச் சென்றுள்ளன.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.