சு.க. – பொதுஜன முன்னணி கூட்டணியிலிருந்தே ஜனாதிபதி வேட்பாளர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

0 573

ஸ்ரீலங்கா பொது­ஜன முன்னணியும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்து உரு­வாக்­கவுள்ள கூட்­ட­ணி­யி­லி­ருந்தே எதிர்வரும் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கான அபேட்­சகர் தெரிவு செய்­யப்படுவாரென எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள தனது காரி­யா­ல­யத்தில் ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யிலே இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,

இரு­கட்­சி­களும் இணைந்த கூட்­ட­ணி­யி­லி­ருந்து போட்­டி­யி­ட­வுள்ள ஜனா­தி­பதி வேட்­பாளர் யார் என்­பதை தேர்தல் அறி­விக்­கப்­பட்­டதும் வெளி­யி­டுவோம். பொது­ஜன பெர­மு­ன­வி­லி­ருந்தும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்தும் தனித்­த­னி­யாக ஜனா­தி­பதி அபேட்­ச­கர்கள் கள­மி­றக்­கப்­ப­ட­மாட்­டார்கள்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியைப் பாது­காத்­துக்­கொள்­வது ஜனா­தி­ப­தியின் பொறுப்­பாகும். அந்தப் பொறுப்­பினை ஜனா­தி­பதி நிச்­சயம் நிறை­வேற்­றுவார். ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து கூட்­ட­ணி­யொன்­றினை அமைப்­ப­தினால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு எவ்­வித பாதிப்பும் ஏற்­ப­டாது. அர­சாங்­கத்தை எதிர்த்து செயற்­ப­டு­ப­வர்­களை இந்தக் கூட்­ட­ணியில் இணைத்துக் கொள்­ளு­மாறு அழைப்பு விடுக்­கிறேன் என்றார். இதே­வேளை பொது­ஜன பெர­மு­ன­வுடன் கூட்­ட­ணியை அமைக்கும் பொறுப்­பினை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செய­லாளர் தயா­சிறி  ஜய­சே­க­ர­விடம் வழங்­கி­யுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அடுத்­து­வரும் தேர்­தல்­களில் மஹிந்த ராஜபக் ஷவின் தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைந்து போட்­டி­யி­டு­வ­தாக தீர்­மானம் மேற்­கொண்­டுள்­ளது. கூட்­ட­ணி­யுடன் இணைத்துக் கொள்வதற்காக தமிழ், முஸ்லிம் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்துமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஜனாதிபதியினால் பணிக்கப்பட்டுள்ளார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.