புத்­த பெருமானின் சிலை­களை பொருத்­த­மான இடங்­களில் மாத்­தி­ரமே வைக்­க­வேண்டும்

மாவ­னெல்லை சம்­ப­வத்தின் பின்­ன­ணியில் அர­சியல் என்­கிறார் கல­கம தம்­ம­ரங்சி தேரர்

0 639

புத்­தரின் சிலை­களை பொருத்­த­மான இடங்­களில் மாத்­தி­ரமே வைக்­க­வேண்டும். கண்ட இடங்­களில் வைப்­பது புத்த பெரு­மா­னுக்கு செய்யும் அகெ­ள­ர­வ­மாகும்.

அத்­துடன் மாவ­னெல்லை சம்­ப­வத்­துக்கு பின்­ன­ணியில் குறு­கிய அர­சியல் நோக்கம் கொண்­ட­வர்கள் இருக்­கலாம். அதனால் சிங்­கள – முஸ்லிம் மக்கள் முரண்­பட்­டுக்­கொள்­ளாமல் சிந்­தித்து செயற்­ப­ட­வேண்டும் என கல­கம தம்­ம­ரங்சி தேரர் தெரி­வித்தார்.

சோச­லிச மக்கள் முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில், சகல இன மக்­களும் தங்கள் மதத்தை பின்­பற்றி வாழும் உரிமை இந்த நாட்டில் இருக்­கின்­றது.

அதனால் எந்த மதத்தை சேர்ந்­த­வர்­க­ளாக இருந்­தாலும் அவர்கள் அச்­ச­மின்றி அவர்­களின் மதப்­போ­த­னை­களின் பிர­காரம் செயற்­பட முடியும். அதனை யாராலும் தடுக்க முடி­யாது.

மேலும் கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் மாவ­னெல்லை பிர­தே­சத்தில் புத்தர் சிலை­க­ளுக்கு சேதம் ஏற்­ப­டுத்­திய சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றிந்­தது. இதனால் அந்த பிர­தே­சத்தில் சிங்­கள முஸ்லிம் மக்கள் மத்­தியில் அச்­ச­மான சூழல் ஏற்­பட்­டுள்­ளது. பெளத்த மதத்தை பொறுத்­த­வ­ரையில் புத்த சிலைகள் சுத்­த­மான, கெள­ர­வ­மான இடங்­க­ளிலே வைக்­கப்­ப­ட­வேண்டும். ஆனால் இன்று அனைத்து தெருக்­க­ளிலும் சிலைகள் வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இது புத்த அதனால் சிங்­கள முஸ்லிம் மக்கள் இவ்­வா­றான சம்­ப­வங்கள் மூலம் ஆத்­திரம் கொள்­ளாமல் நிதா­ன­மாக செயற்­ப­ட­வேண்டும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.