ஜன­வ­ரியில் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு தயா­ரா­குங்கள்

மஹிந்த தரப்­புக்கு மரிக்கார் தெரி­விப்பு

0 680

ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கள­மி­றங்கத் தயாராகவே உள்ளார். மஹிந்த தரப்­புக்கு வெற்­றி­ய­டையும் நம்­பிக்கை இருக்­கு­மானால்  ஜன­வ­ரியில் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு  தயா­ரா­கு­மாறு  பாரா­ளு­மன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் குறிப்பிட்டார்.

ஜனா­தி­பதி தேர்தல் மற்றும் பொது தேர்­தல்­களை நடத்­து­வது தொடர்பில் விளக்­க­ம­ளிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

2019 ஜன­வ­ரிக்குப் பின்னர் ஜனா­தி­பதி தேர்தல் இடம்­பெறும். ஆனால் பொதுத் தேர்தல் 2020 ஆம் ஆண்டே இடம்­பெறும். அடுத்த பொதுத் தேர்தல் 2020 ஆம் ஆண்டு பெப்­ர­வரி 17 ஆம் திக­தியே நடத்­தப்­படும். அதற்கு முன்னர் பொதுத் தேர்­தலை நடத்த முடி­யாது. அதற்கு முன் தேர்­தலை நடத்த வேண்­டு­மானால் பெரும்­பான்­மை­யோடு பாரா­ளு­மன்­றத்தை கலைத்தால் மாத்­தி­ரமே நடத்த முடியும்.

பல­வந்­த­மா­கவே பிர­தமர் பத­வியினை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ பெற்­றுக்­கொண்டார். அவ்­வாறு பெற்­றுக்­கொண்­டாலும் நீண்­ட­நாட்கள் அந்தப் பத­வியில் அவரால் நிலைக்க முடி­ய­வில்லை. இவ்­வா­றா­ன­வொரு நிலை­மை­களில் அவர்­களால் பொதுத் தேர்­தலை நடத்த முடி­யது.

பாரா­ளு­மன்­றத்தில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கு மாத்­திரம் 106 ஆச­னங்கள் உள்­ளன. ஆட்சி புரியும் அந்­தஸ்தும் எங்­க­ளுக்கே உள்­ளது. கிடைக்­கப்­பெற்­றி­ருக்கும் இந்தக் குறு­கி­ய­கா­லத்தில் வெற்­றி­க­ர­மாக ஆட்சி அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்­தவே எதிர்­பார்க்­கின்றோம். சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்­க­ளையும் எங்­க­ளுடன் இணைத்­துக்­கொண்டு ஆட்சி நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் ஏனை­ய­வர்­க­ளுடன் ஒப்­பந்­தங்­களை மேற்­கொண்டு ஆட்­சி­பு­ரி­வ­தற்­கான அவ­சி­யமும் எங்­க­ளுக்கு இல்லை. சிக­்க­லான நிலை ஏற்­ப­டு­மாயின் தேர்­த­லுக்கு செல்வோம். தேர்­த­லுக்­கான தீர்­மானம் எங்­க­ளி­டமே உள்­ளது.

மாறாக பொதுத் தேர்­தலை நடத்­தினால் வெற்­றி­பெ­றுவோம் என்ற நம்­பிக்கை ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு இருக்­கு­மானால் பொதுத் தேர்­தலை நடத்­த­வேண்டும். இறு­தியில் யார் வெற்­றி­பெ­றுவார் என்­பதை தீர்­மா­னிப்போம்.

பிள­வு­பட்­டி­ருந்த ஐக்­கிய தேசியக் கட்சி இன்று ஒன்­றி­ணைந்­துள்­ளது. கட்­சியில் எந்­த­வித பிரச்­சி­னை­களும் இல்லை. எங்­க­ளுக்கும் இதுவே சரி­யான சந்­தர்ப்பம். தற்­போது சுதந்­தி­ரக்­கட்சி, பொது­ஜன பெரமுன ஆகிய இரு­கட்­சி­களும் ஒன்று சேர்ந்­துள்­ளன. ஆகவே, ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்­றி­பெ­றுவோம் என்ற நம்­பிக்­கை­யி­ருக்­கு­மானால் உடனடியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும். ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி  வேட்பாளரை தெரிவு செய்தே வைத்துள்ளது. தேவையான நேரத்தில் வேட்பாளரை அறிவிப்போம். ஆனால் அவர்களின் தரப்பில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை குறிப்பிட முடியாத நிலை எழுந்துள்ளது.
-Vidvelli

Leave A Reply

Your email address will not be published.