மரபியல் மாவட்டத்தில் மறைக்கப்படும் முஸ்லிம்களின் வரலாறு

0 156

சபீர் மொஹமட்

கண்டி, இலங்­கையின் கலை கலா­சார பண்­பாட்டு அம்­சங்­களின் தாயகம். அந்த கண்டி நக­ரத்தின் மையத்­தி­லி­ருந்து டி எஸ் சேனா­நா­யக்க வீதி­யி­னூ­டாக பய­ணித்து பழைய மாத்­தளை வீதியை அடைந்­த­போது கண்­டிய நட­னக்­கலை பாடல்கள் காதைத் தொட்­டது. பாடல்கள் வந்த திசை­நோக்கி கால்கள் நடந்­தன. சில­நொ­டி­க­ளிலே நிமிர்ந்­து­பார்க்­கவும் இஸ்­லா­மிய கட்­டடக் கலை அம்­சங்கள் நிறைந்த புரா­தன வீடு மிடுக்­குடன் காட்­சி­ய­ளித்துக் கொண்­டி­ருக்­கி­றது. பெண்­களும், சிறு­வர்­களும் கண்­டிய நட­னப்­பா­டல்­க­ளுக்கு அபி­ந­யித்து ஆடல் பயற்­சியைக் கற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். அரே­பிய கட்­டடக் கலை­யு­ட­னான புரா­தன வீட்டில் கண்­டிய நடனப் பயிற்சிக் கல்­லூ­ரியா என்று உள்­ம­னதில் ஒரு­கேள்வி எழுந்­தது. அந்தக் கேள்­விக்கு அப்­போதே விடை­தே­டவும் உத்­வேகம் ஏற்­பட்­டது.

அந்த வீட்டில் நடனப் பயிற்சி வழங்கிக் கொண்­டி­ருந்த பெண்­ணிடம் தயக்­கத்­துடன் பேச்­சுக்­கொ­டுக்க முற்­பட்­ட­போது, முதலில் பெண் பயிற்­சி­யாளர் தயங்­கினார். இது யாரு­டைய வீடு என்ற கேள்­வியைத் தொடுக்­கவும் அவர் இது அந்­தநீஸ் என்­றொரு வைத்­தி­ய­ருக்கு சொந்­த­மான ஒரு வீடு என்றார். அத்­துடன் அவர் நிறுத்­தி­வி­ட­வில்லை. ‘இதற்கு முன்­னரும் ஒரு­சிலர் இந்த வீட்டை யாரோ ஒரு முஸ்லிம் பெரி­யா­ரு­டைய வீடு என கூறிக்­கொண்டு வந்­தார்கள். ஆனால் அவ­ரு­டைய வீடு இது­வல்ல. அவர் வாழ்ந்­த­தாக கூறப்­ப­டு­கின்ற வீடு கீழே முன்பு இருந்­துள்­ள­தாக சிலர் கூறு­வதை நான் கேட்­டுள்ளேன். அவர் தமிழர் ஒரு­வ­ரு­டைய வீட்டில் கூலிக்­காக இருந்­துள்ளார். பின்னர் 1983 சிங்­கள தமிழ் கல­வ­ரத்தின் போது அந்த வீட்டை எரித்­த­தாக சிலர் கூறு­கின்­றார்கள்’ என்று ஒரே மூச்­சுடன் முடித்தார். ஆனால் அந்தப் பயிற்­சி­யா­ள­ரு­ட­னான உரை­யா­டலில் மயக்­கங்கள் பல இருந்­தன. அவ­ருக்கும் வெளிப்­ப­டை­யாக பேசு­வதில் தயக்­கங்­களும் இருந்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது. அதற்கு மேல் உள்­ளத்தில் எழுந்த கேள்­வி­க­ளுக்கு முழு­மை­யான விடை­தே­ட­வேண்­டிய உத்­வேகம் இன்­னமும் அதி­க­ரித்­தது.

இலங்­கையை பொறுத்­த­வ­ரையில் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான முறு­கல்கள், மோதல்கள், கல­வ­ரங்கள், வன்­மு­றைகள் என்­பது தசாப்­தத்­திற்கு ஆகக்­கு­றைந்­தது ஒன்று என்ற வகையில் வர­லாறு நெடு­கிலும் நடை­பெற்று இருக்­கின்­றன. 1915ஆம் ஆண்டு கண்­டியில் நடந்த சிங்­கள முஸ்லிம் கல­வரம், 1958ஆம் ஆண்டில் நடை­பெற்ற தமிழ்,சிங்­கள கல­வரம் 1977ஆம் ஆண்டு கல­வரம் மற்றும் கறுப்பு ஜூலை என அழைக்­கப்­ப­டு­கின்ற 1983தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான கல­வரம் என்று இந்தப் பட்­டியல் நீளு­கின்­றது. இதனால் இனங்­க­ளுக்கு இடை­யி­லான துரு­வப்­ப­டுத்தல் வலுத்­தது என்­பது பர­க­சியம்.

 

இந்தப் பின்­ன­ணியில் கண்­டியில் அர­பியக் கட்­ட­டக்­க­லை­யு­ட­னான வீட்டின் பின்­னணி பற்­றிய உரை­யா­டலை ஆரம்­பிப்­ப­தற்கு பொருத்­த­மான நப­ராக இருந்­தவர் பேரா­தனை பல்­க­லைக்­க­ழக முன்னாள் மெய்­யி­யல்­துறை பேரா­சி­ரியர் எம்.எஸ்.எம்.அனஸ். பேரா­சி­ரியர் அன­ஸு­ட­னான உரை­யாடல் ஆரம்­ப­மா­னது. அப்­போது கண்­டியில் வெறு­மனே அர­பியக் கட்­ட­டக்­கலை என்­ப­தற்கு அப்பால் கண்­டியில் வாழ்ந்து சரித்­திரம் படைத்த முது­பெரும் அறிஞர் சித்­தி­லெப்பை பற்­றிய பல்­வேறு தக­வல்­களை பேரா­சி­ரியர் அனஸ் வெளிப்­ப­டுத்­தினார். அறிஞர் சித்­தி­லெப்பை வாழ்ந்த வீடு, எழுதி வெளி­யிட்ட பத்­தி­ரிகை, குடும்பம், மனைவி முதல் அவ­ரு­டைய கல்­லறை இருக்கும் இடம் வரை பல வர­லாற்றுச் சான்­று­க­ளையும் பேரா­சி­ரியர் அனஸ் பட்­டி­ய­லிட்டுக் கூறினார்.

அறிஞர் சித்­தி­லெப்பை ஒரு தலை சிறந்த சட்­டத்­த­ர­ணி­யா­கவும் எழுத்­தா­ள­ரா­கவும் இருந்­துள்ளார். மேலும் அவர் கண்டி மாந­கர சபையின் உறுப்­பி­ன­ராக எட்டு ஆண்­டுகள் கட­மை­யாற்­றி­யுள்­ள­துடன் கண்டி மாந­கர சபையின் கீழ் காணப்­பட்ட நீதி­மன்­றத்தில் சுமார் நான்கு ஆண்­டுகள் நீதி­ப­தி­யா­கவும் கடமை ஆற்­றி­யுள்ளார்.

பேரா­சி­ரியர் அனஸ் அவர்­களின் கூற்­றுக்கள் தேட­லுக்­கான தாகத்­தினை அதி­க­ரித்­தது. மறு­தினம், மஹி­யாவ காட்டுப் பள்ளி என அழைக்­கப்­ப­டு­கின்ற பள்­ளிக்கு கள விஜ­ய­மொன்றை மேற்­கொண்­ட­போது அங்கே அறிஞர் சித்­தி­லெப்­பை­யு­டைய கல்­ல­றையை அடை­யாளம் காண்­பதில் சிர­மங்கள் இருந்­தன.

அழ­கான முறையில் பாது­காக்­கப்­ப­டு­கின்ற ஒரு கல்­ல­றை முதலில் காண்­பிக்­கப்­பட்­டது. அது அருகில் சென்று பார்க்­கையில் 1880 ஆம் ஆண்­டு­களில் எகிப்து நாட்டில் இருந்து நாடு கடத்­தப்­பட்ட ஒராபி பாஷா­வு­டை­ய­தாகும். குறித்த கல்­ல­றையை எகிப்து நாட்டு தூத­ரகம் பரா­ம­ரித்து வரு­வ­தா­கவும் ஒராபி பாஷா கலா­சார நிலையம் ஒன்று கூட கண்­டியில் உள்­ள­தா­கவும் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன. அதே­நேரம் அறிஞர் சித்­தி­லெப்­பையின் கல்­லறை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­போதும் எந்­த­வி­த­மான பாது­காப்போ பரா­ம­ரிப்போ இல்­லாமல் இருப்­பதைப் பார்க்க முடிந்­தது. அத­னை­ய­டுத்து ஒராபி பாஷா கலா­சார நிலை­யத்­திற்கு சென்­ற­போது எகிப்து நாட்டைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட ஒராபி பாஷா, 1880 களில் பிரித்­தா­னிய ஏகா­தி­பத்­தி­யத்­திற்கு எதி­ராகக் கிளர்ச்சி செய்­ததன் விளை­வாக அவரும் அவ­ருடன் இணைந்­தி­ருந்­த­வர்­களும் இலங்­கைக்கு நாடு கடத்­தப்­பட்­டனர். இவ்­வாறு ஒராபி பாஷா இலங்­கைக்கு வரும்­போது அறிஞர் சித்­தி­லெப்பை அவரை வர­வேற்­ப­தற்­காக துறை­மு­கத்­திற்கு சென்­றி­ருந்தார். பிற்­பட்ட காலங்­களில் ஒராபி பாஷா அறிஞர் சித்­தி­லெப்­பை­யுடன் இணைந்து இலங்கை முஸ்­லிம்­களின் நவீன கல்வி மறு­ம­லர்ச்­சிக்கு மிகப்­பெ­ரிய சேவை­களை ஆற்­றினார் என்ற வர­லாற்றுத் தக­வல்கள் கிடைத்­தன.

ஒராபி பாஷா கண்­டி­யிலே தங்­கி­யி­ருந்த வீடுதான் தற்­போது ஒராபி பாஷா கலா­சார நிலை­ய­மாக மாற்­றப்­பட்டு அவர் ஆற்­றிய சேவைகள் மற்றும் அவ­ரு­டைய ஞாப­கங்கள் என்று பல்­வேறு விட­யங்­களும் பத்­தி­ர­மாக பேணி பாது­காக்­கப்­பட்டு வரு­கின்­றன. அவற்றை எகிப்து நாட்டு தூத­ரகம் பரா­ம­ரிப்­ப­தாக அங்கே பொறுப்­பாக இருந்த மொஹமட் ஹாரூன் கூறி­னார். எகிப்து நாட்டில் இருந்து இலங்­கைக்கு நாடு கடத்­தப்­பட்ட ஒராபி பாஷாவின் நினை­வு­களை இலங்­கையில் எகிப்­திய தூத­ரகம் பாது­காக்­கின்­றது. ஆனால் இலங்­கையில் பிறந்து இலங்­கைக்கு சேவை ஆற்­றிய அறிஞர் சித்­தி­லெப்­பை­யு­டைய கல்­லறை கணக்கில் கொள்­ள­ப்ப­டா­தி­ருக்­கின்­றதே என்ற இயல்­பான ஆதங்கம் எனக்­குள்ளும் ஏற்­பட்­டது. அது­மட்­டு­மன்றி, நட­னப்­ப­யிற்சிப் பள்ளி நடை­பெறும் வீடு சித்­தி­லெப்­பை­யி­னு­டை­யது என்­றாலும் அதனை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்­வதில் பல்­வேறு திரி­வு­பட்ட நிலை­மை­களே காணப்­ப­டு­கின்­றன.
இத­னை­ய­டுத்து கண்டி மீரா மக்காம் ஜும்ஆ பள்­ளிக்குச் சென்­ற­போது, அங்கு சில வர­லாற்றுத் தக­வல்கள் மயிர்­க்கூச்­செ­றியச் செய்­தன.

கண்டி அஸ்­கி­ரிய மகா விகா­ரைக்குச் சொந்­த­மான காணியில் இருந்து கண்டி அரசர் கீர்த்தி ஸ்ரீ இரா­ஜ­சிங்­க­வினால் முஸ்­லிம்­க­ளுக்­காக அன்­ப­ளிப்­பாக வழங்­கப்­பட்ட காணி­யிலே அமைக்­கப்­பட்ட ஒரு ­பள்­ளி­வா­யலே கண்டி மீரா மக்காம் பள்­ளி­யாகும். தற்­போது காணப்­ப­டு­கின்ற பள்­ளி­வாயல் 1864 ஆம் ஆண்டு கட்­டப்­பட்­ட­தாகும். அது கிட்­டத்­தட்ட 160 வரு­டங்கள் பழை­மை­யா­னது.

இலங்­கையில் தொல்­பொருள் கட்­டளை சட்­டத்­திற்கு அமை­வாக 100 வரு­டங்­க­ளுக்கு மேற்­பட்ட கட்­ட­டங்கள் யாவும் தொல்­பொருள் திணைக்­க­ளத்­தினால் பரா­ம­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றது. அதிலும் குறிப்­பாக யுனெஸ்கோ உலக மர­பு­ரி­மை­யாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள கண்டி நகரில் அமை­யப்­பெற்­றுள்ள பழைய கட்­ட­டங்­களை தொல்­பொருள் திணைக்­க­ளமும் யுனெஸ்கோ அமைப்பும் மிகவும் கரி­ச­னை­யுடன் பரா­ம­ரித்து வரு­கின்­றார்கள். ஆனால் 160 வரு­டங்கள் பழ­மை­யான கண்டி மீரா மக்காம் ஜும்ஆ பள்­ளி­வா­யலில் தொல்­பொருள் திணைக்­க­ளத்­தினால் எந்­த­வொரு பரா­ம­ரிப்­புக்­களும் இடம்­பெ­ற­வில்லை. குறித்த பள்­ளி­வாயல் நிரு­வா­கத்­தி­ன­ரிடம் அது­பற்றி கேள்­வி­களைத் தொடுத்­த­போது, அவர்கள் எந்­த­வொரு விட­யத்­தி­னையும் அறிந்­தி­ருக்­க­வில்லை என்­பது உறு­தி­யா­கின்­றது.

இது­கு­றித்து மேலும் ஆராய்­வ­தற்­காக கண்டி மாந­கர சபைக்கு சென்­ற­போது முன்ணால் துணை மேயர் டீ.எம்.இலாஹி ஆப்­தீனை சந்­திக்க முடிந்­தது. இவர் கண்டி மீரா மக்கா ஜும்ஆ பள்­ளி­வா­யலின் நிர்­வாக சபை தலை­வ­ரா­கவும் உள்ளார். அந்த வகையில் அவ­ரி­டத்தில் முதலில் பள்­ளி­வாயல் விடயம் சம்­பந்­த­மாக வின­வி­ய­போது, உணர்ச்­சி­வ­சப்­பட்­ட­வ­ராக சில கருத்­துக்­களை பரி­மா­றினார்.

‘கண்டி நகரில் மீரா மக்காம் ஜும்ஆ பள்­ளி­வா­ய­லுக்குப் பின்னர் கட்­டப்­பட்ட கட்­ட­டங்கள் கூட தொல்­பொருள் திணைக்­க­ளத்தால் பரா­ம­ரிக்­கப்­ப­டு­கின்­றன. ஆனால் துர­திஷ்­ட­வ­ச­மாக எமது பள்­ளியை எவ­ருமே கண்டு கொள்­வ­தில்லை’ என்றார். மேலும் ‘கண்டி நகரில் காணப்­ப­டு­கின்ற முஸ்­லிம்­க­ளு­டைய கலா­சார வர­லாற்று சின்­னங்கள் எது­வுமே உரிய முறையில் பரா­ம­ரிக்­கப்­ப­டு­வது இல்லை’ என்ற பாரிய குற்­றச்­சாட்­டையும் அவர் முன்­வைத்தார். அது­மட்­டு­மன்றி நட­னப்­ப­யிற்சி கூட­மாக இருக்கும் புரா­தன வீடு தான் அறிஞர் சித்­தி­லெப்­பை­யு­டை­யது என்று டீ.எம்.இலாஹி ஆப்தீன் உறு­தி­யாகக் கூறினார். (தற்­போது அந்த வீட்டில் வாழ்ந்து வரு­ப­வர்­களை வாழிடம் அற்­ற­வர்­க­ளாக ஆக்­கு­வதோ அல்­லது அவர்­க­ளி­டத்­தி­லி­ருந்து உரிமை பறிப்­பதோ இக்­கட்­டு­ரை­யி­னதும், கட்­டு­ரை­யா­ள­ரதும் நோக்­க­மல்ல)

தொடர்ச்­சி­யாக சித்­தி­லெப்பை மாந­கர சபை உறுப்­பி­ன­ரா­கவும் மாந­கர சபைக்கு கீழ் காணப்­பட்ட நீதி­மன்­றத்தில் நீதி­ப­தி­யா­கவும் கட­மை­யாற்­றி­யுள்ளார். இந்­நி­லையில் அங்­கி­ருந்த பல அதி­கா­ரி­க­ளி­டமும் கட்­டு­ரை­யாளர் உரை­யா­டிய போது எவ­ருமே அறிஞர் சித்­தி­லெப்பை பற்­றிய எந்­த­வித குறிப்­புகளும் இல்லை என்றே கூறி­னார்கள். அதே­நேரம் ஒரு சிலர் அறிஞர் சித்­தி­லெப்பை என்ற பெய­ரையே அன்­றுதான் கேட்­டுள்­ளார்கள் என்­பதும் வேடிக்­கை­யாக இருந்­தது.

பின்பு தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் கண்டி காரி­யா­ல­யத்­திற்கு சென்­ற­போது சித்­தி­லெப்­பை­யு­டைய எந்­த­வொரு அடை­யா­ளங்­களும் எவ்­வாறு தொல்­பொருள் திணைக்­க­ளத்தால் பாது­காக்­கப்­ப­ட­வில்லை என்று வினாத்­தொ­டுத்­த­போது உரிய பதி­லகள் கிடைத்­தி­ருக்­க­வில்லை. அது­மட்­ட­மன்றி அங்­கி­ருந்த அதி­கா­ரிகள் யார் சித்­தி­லெப்பை அவர் என்ன செய்­துள்ளார் எனக் கேள்வி எழுப்­பிய துர­திஷ்­ட­மான நிலை­மை­களும் இருந்­தன. ஒரு­சிலர் ‘நீங்கள் கூறிய தொல்­பொருள் சின்­னங்­களை பாது­காப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு எழுத்து மூல­மாக ஒரு வேண்­டு­கோளை எனக்குத் தாருங்கள்’ என்று கூறி அவர்­க­ளு­டைய மின்­னஞ்­சலை வழங்­கிய சூழு­லுக்கும் முகங்­கொ­டுக்க நேர்ந்­தது.

கண்­டியில் இலங்கைத் தேசிய இன­மான முஸ்­லிம்­களின் நிலைமை இவ்­வாறு இருக்கும் போது மறு­புறம் கிழக்கு மாகா­ணத்தில் முஸ்­லிம்­களின் வாக்­கு­களை பெற்றுக் கொள்­வ­தற்­காக அர­சாங்கம் முன்னாள் முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் அஷ்ரப் அவர்­களின் நினைவு அருங்­காட்­சி­ய­கத்தை நிர்­மா­ணிப்­ப­தற்­காக 25 மில்­லியன் ரூபா நிதி­யினை ஒதுக்­கீடு செய்­துள்­ளது. ஆனால் துர­திஷ்டம் என்­ன­வென்றால் அஷ்­ர­புக்கு முன்­பி­ருந்தே இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கும் ஒட்­டு­மொத்த இலங்கை மக்­க­ளுக்கும் அளப்­ப­ரிய சேவை­யாற்­றிய அறிஞர் சித்­தி­லெப்பை வாழ்ந்த வீடு எது­வென்று கூட எவ­ருக்­குமே தெரி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

கண்டி நகரில் உள்ள வர­லாற்றுத் தொன்மம் நிறைந்த முஸ்லிம் பள்­ளி­வா­யல்கள் எது­வுமே இன்னும் தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் கீழ் அல்­லது உலக மர­பு­ரிமை சின்னம் என பெய­ரி­டப்­ப­ட­வில்லை. குறிப்­பாக டி.எஸ். சேன­நா­யக்க வீதியில் அமைந்­துள்ள சிவப்பு பள்ளி, சமகி மாவ­தையில் உள்ள மீரா மக்காம் பள்ளி மஹ்லரத்துல் நக்ஷ்பந்தியா தக்கியா மஸ்ஜித் மற்றும் காட்டுப்பள்ளி என்று அழைக்கப்படுகின்ற மஹியாவ ஜும்ஆ பள்ளி என்பன நூறு வருடங்களையும் தாண்டி மிடுக்குடன் காட்சியளிக்கின்ற­ன. ஆனால் இலங்கையிலோ தொல்பொருள் என்றால் அது பௌத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான வரலாறு என்ற ஒரு விம்பம் மக்கள் மனதில் பதிந்துள்ளது.

இறுதியாக நாம் மத்திய மாகாண தொல்பொருள் அத்தியட்­சகர் டிஎம்விகேடி திசநாயக்க அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கணடி நகரில் காணப்படுகின்ற முஸ்லிம்­க­ளின் வரலாற்றை எடுத்துரைக்கின்ற கட்டடங்கள் தலைவர்கள் மற்றும் அவர்களுடைய மரபுகள் எதுவும் பாதுகாக்கப்படவில்லையா என வினவினோம். அப்போது அவர், முஸ்லிம்கள் அவற்றை பராமரிப்பதற்கு இடம் தருவதில்லை. நாங்கள் முயற்சிக்கின்றோம். என்னை வந்து நேரில் சந்தியுங்கள் எனக் கூறினார்.

இலங்கையில் அரசியலமைப்பு ரீதியாக பௌத்த மதத்திற்கு முதலிடம் என்ற நிலைப்பாடுடன் பெரும்பான்மை வாதம் தலை தூக்கியதால் அது, அதிஉச்ச பிரிவினைவாதம் வரை சென்றுள்ளது. அதன் அடிப்படையில் சிறுபான்மை மக்களாக வாழ்கின்ற முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் கூட இங்கே புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதை இந்த சம்பவத்தின் ஊடாக எம்மால் உறுதிப்படுத்த முடியும்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.