அனாதைச் சிறார்­க­­ளின் வாழ்வில் நம்­பிக்கை ஒளிக்­கீற்றை ஏற்­ப­டுத்­தவே ‘Orphan Care’ திட்­டம்

அமானா வங்­கியின் சமூக நல திட்டம் தொடர்பில் அதன் தலைவர் அசாத் ஸஹீ­ட் வழங்­கிய நேர்­கா­ணல்

0 874

நாட்டில் இயங்கும் அனாதை இல்லங்களில் தங்­கி­யுள்ள சிறார்கள் 18 வயதை அடைந்த பின்னர் அவர்கள் தமது வாழ்வின் அடுத்த கட்ட பய­ணத்தை முன்­னெ­டுப்­ப­தற்கு பொரு­ளா­தார ரீதி­யா­கவும் மான­சீக ரீதி­யா­கவும் ஆத­ர­­­வ­ளிக்கும் நோக்கில் அமானா வங்­கி­யால் ‘Orphan Care’ எனும் தனியா­ன திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தாக இத்­திட்­டத்தின் தலைவர் அசாத் ஸஹீ­ட் தெரி­வித்­தார்.

இத்­திட்டம் உரு­வாக்­கப்­பட்­டதன் நோக்கம் தொடர்பில் விடி­வெள்­ளிக்கு வழங்­கிய நேர்­கா­ண­லி­லேயே அவர் இதனைக் குறிப்­பிட்­டார்.

அவ­ரது நேர்­கா­ணலின் முழு விபரம் வரு­மாறு :

அமானா வங்கி Orphan Care எனும் அனா­தை­கள் நலன் திட்டத்தை முன்­னெ­டுப்­பது ஏன்?

வங்கித் துறையில் ஒன்­றரை தசாப்­த அனு­பவம் கொண்ட அமானா வங்கி கடந்த காலங்­களில் பல்­வேறு சமூகப் பொறுப்­பு­ணர்வு திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்­ளது. தற்­போதும் அவ்­வா­றான பல திட்­டங்­களை நடை­மு­றைப்­­ப­டுத்தி வரு­கி­றது. உதா­ர­ண­மாக, களு­போ­வில வைத்­தி­ய­சா­லையில் ஒரு நோயாளர் விடுதியை அமானா வங்கி பொறுப்­பெ­டுத்து நிர்­வ­கித்து வரு­கி­றது.

விடுதியை புன­ர­மைத்­தது முதல் மாதாந்தம் தேவை­யான மருந்துப் பொருட்கள் உள்­ளிட்ட அவ­சிய தேவை­களை அமானா வங்கி கவ­னித்து வரு­கி­றது. மூக்குக் கண்­ணாடி வழங்­குதல், சக்­கர நாற்கா­லி­கள், கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்கு உத­வுதல் என அமானா வங்கி தனது சமூகப் பொறுப்­பு­ணர்வு திட்­டங்­களை முன்­­னெ­டுத்து வந்­துள்­ளது. எனினும் வங்­கியின் வளர்ச்சி அதி­க­ரிக்க அதிக­ரிக்க எமது முகா­மைத்­துவம் சமூ­கத்தில் தாக்கத்தைச் செலுத்தக் கூடி­ய­தொரு நிலை­பே­றான சமூக மேம்பாட்­டுத் திட்­டத்தை நடை­மு­றைப்ப­டுத்த வேண்டும் என சிந்­தித்­தது. அதன் வெளிப்­பாடாகவே 2019 இல் இந்த  Orphan Care திட்­ட­ம் ஆரம்­பிக்­கப்­பட்­ட­து.

உண்­மையில் இது ஒரு குறு­கிய கால திட்டம் அல்ல. நீண்ட காலத்தில் விளைவைத் தரக் கூடிய ஒரு திட்­ட­மாகும்.

Orphan Care என்­பது ஒரு பதிவு செய்­யப்­பட்ட நம்­பிக்கைப் பொறுப்­பு நிறு­வ­ன­மாகும். இதன் நிர்­வா­கி­க­ளாக நாட்டின் முன்­னணி துறை­சார் நிபு­ணர்­க­ளே உள்­­ளனர்.

Orphan Care திட்டம் பற்றி விளக்­க­மாக கூறுங்­கள்?

நாட்டின் பல பாகங்­க­ளிலும் அமைந்­துள்ள அனா­தைகள் இல்லங்­க­ளி­லி­ருந்து இந்தி திட்­டத்­திற்­காக சிறு­வர்கள் இன மத பேத­மின்றி தெரிவு செய்­யப்­ப­டு­கின்­றனர்.  இத்­திட்­டத்தில் உள்­வாங்­கப்­படும் ஓர் அனா­தைச் சிறா­ரை பொரு­ளா­தார ரீதி­யாகவும் மான­சீக ரீதி­யா­க­வும் வலு­வூட்­டு­வதே இத்­திட்­டத்தின் பிர­தான நோக்­க­மாகும்.

அனாதை இல்­லங்கள் சிறார்­க­ளுக்குத் தேவை­யான உணவு, உடை, கல்வி போன்­ற­வற்றை வழங்கி வரு­கின்­றன. எனினும் அவர்கள் 18 வயதின் பின்னர் குறித்த நிலை­யத்­தி­லி­ரு­ந்து வெளி­யே­றும்­போது அவர்­க­ளது எதிர்­கா­லம் என்ன என்ற ஒரு கேள்வி எழு­கி­றது. இந்தக் கேள்­விக்­கு பதி­ல­ளிப்­பதே  Orphan Care திட்­ட­மா­கும்.

தற்­­போது வரை எமது திட்­டத்தில் 90 அனாதை இல்­லங்கள் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளன. 3120 சிறார்கள் இத்­திட்டம் மூலம் தற்­போது நன்மை பெற்று வரு­கின்­றனர்.

இத்­திட்­டத்தின் கீழ் உள்­வாங்­கப்­படும் சிறு­வர்­க­ளுக்கு அமானா வங்­கி­யில் ஒரு கணக்கு திறக்­கப்­பட்டு ஒவ்­வொரு காலாண்­டிலும் ஒரு தொகைப் பணம் வைப்­பி­லி­டப்­படும். இவ்­வாறு வைப்­பி­லி­டப்­படும் பணத்தை அவர்கள் 18 வயது வரை பயன்­ப­டுத்த முடி­யாது. 18 வயதை அடைந்த பின்­னரே அவர்­க­ளது கணக்கில் சேர்ந்­துள்ள பணம் அவர்­க­ளுக்கு வழங்­கப்­படும். இந்தப் பணத்தை உயர் கல்வி தேவை­க­ளுக்கு பயன்­ப­டுத்­து­வதா அல்­லது அதனைக் கொண்டு சிறு தொழிலை ஆரம்­பிப்­பதா அல்­லது வேறு ஏதேனும் தேவை­க­ளுக்குப் பயன்­ப­டுத்­து­வதா என்­பதை அவ­ரே தீர்­மா­னிப்பார். அதில் வங்கி தலை­யி­டா­து.

இத்­ திட்­டத்தின் மூலம் அவர்­க­ளுக்கு வாழ்க்­கையில் தலை நிமிர்ந்து நிற்­ப­தற்­கான இரண்­டா­வது வாய்ப்­பொன்றை நாம் வழங்­­கு­கிறோம். சிறு வயதில் பெற்­றோரை இழந்த அவர்கள் 18 வய­தா­னதும் மீண்டும் சமூ­கத்தால் கைவி­டப்­படவில்லை என்பதை அவர்­க­ளுக்கு நாம் உணர்த்­து­கிறோம்.

அனாதை இல்­லங்­க­ளி­லி­ருந்து 18 வய­தா­ன­வுடன் வெளி­யேறும் இவர்கள் அதன் பின்னர் பல்­வேறு சமூகப் பிரச்­சி­­னை­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்டி வரலாம். தமக்கு யாரும் இல்­லா­த­போது வீதி­களில் பிச்சை எடுக்­கலாம், விபச்­சா­ரத்தில் ஈடு­ப­டலாம், களவு, கொள்­­­­ளை­களில் ஈடு­ப­டலாம் அல்­லது பணம் சம்­பா­திப்­ப­தற்­கா­க ஏதே­னும் குற்றச் செயல்­களில் ஈடு­ப­டலாம். இவ்­வா­றான சமூக விரோத செயல்­க­ளின்பால் அவர்கள் தள்­ளப்­ப­டு­வதைத் தடுத்து அவர்­க­ளுக்கு வாழ்க்­கையில் ஒரு நம்­பிக்­கை­யைக் கொடுப்­பதே இத்­திட்­டத்தின் பிர­தான நோக்­க­மா­கும்.

இத்­திட்­டத்தின் கீழ் பயன்­­பெறும் ஒருவர் தான் 18 வயதை அடைந்­ததும் அரு­கி­லுள்ள ஏதே­னு­மொரு அமானா வங்­கிக் கிளைக்கு தன­து பாது­கா­வலர் ஒரு­வ­ருடன் சென்று தன­து கணக்­கி­லுள்ள பணத்தை மீளப் பெறலாம். எனினும் நாம் ஒருவர் வந்து கேட்­ட­வுடன் பணத்தைத் தூக்கிக் கொடுப்­ப­தில்லை. மாறாக அவர்கள் இப் பணத்தை எவ்­வாறு சிறந்த வழியில் செலவு செய்­யலாம் என்­ப­தற்­கான ஆலோ­ச­னைகள் மற்றும் வழி­காட்­டல்­களை வழங்­குவோம்.

இதற்கு முன்னர் இத்­திட்­டத்தில் உள்­வாங்­கப்­பட்­டுள்ள சிறார்கள் 15 அல்­லது 16 வயதை அடையும் போதே நாம் அவர்கள் பற்­றிய தக­வல்­களை அவர்களை பரா­ம­ரிக்கும் அனாதை இல்­லங்­க­ளி­லி­ருந்து பெற்றுக் கொள்­வோம். அவர்­க­ள் எதிர்­கா­லத்தில் என்ன துறையில் கால்­வைக்கப் போகி­றார்கள்? அவர்­களது ஆர்வம் என்ன? என்­பது பற்­றிய விபரங்­களைச் சேக­ரிப்­போம். அதற்­க­மைவாக அவர் பொருத்­த­மா­ன­தொரு துறையில் அப் பணத்தை செலவு செய்­வ­தற்கு நாம் ஏற்­பா­டு­களைச் செய்வோம். உதா­ர­ண­மாக ஒருவர் சமையல் கலை நிபு­ண­ராக வர விரும்­பினால் அதற்குப் பொருத்­த­மா­ன பயிற்­சியைப் பெற நாம் வழி­காட்­டு­வோம். உயர்கல்வி கற்க விரும்பினால் அதற்கும் வழிகாட்டுவோம்.

இத்­திட்­டத்தின் உள்வாங்­கப்­பட்­டுள்ள பிள்­ளை­க­ளுக்கு பணத்துக்­கு அப்பால் வேறு ஏதேனும் ஆத­ர­வு­களை இத்­திட்டம் வழங்­­கு­கி­ற­தா­?

நிச்­ச­ய­மா­க. இத்­திட்­டத்தின் மூலமாக வெறு­மனே பணத்தை மாத்­திரம் வழங்­காமல் அவர்­க­ளுக்கு ஒரு தோழ­னாக, வழி­காட்­டி­யாக, ஆலோ­ச­க­ராக  Orphan Care இருக்­கி­ற­து.

நீங்கள் 18 வயதை அடைந்­து அனாதை இல்­லத்தை விட்டு வெளி­யே­றினால் உங்­க­ளுக்கு கை கொடுக்க அமானா வங்­கி­யின்  Orphan Care திட்டம் இருக்­கி­றது என்ற நம்­பிக்­கையை, எதிர்­பார்ப்பை பெற்­றோரை இழந்த, பெற்­றோ­ரால் கைவி­டப்­பட்ட ஒவ்­­வொரு சிறா­ருக்கும் இத்­திட்டம் வழ­ங்கு­கி­ற­­து.

அனாதைச் சிறு­வர்கள் பாரிய மன அழுத்­தங்­களுக்கு உள்­ளா­கின்­றனர். சில நேரங்­களில் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளையும் சந்­திக்­கின்­றனர். சில நேரம் வாழ்வில் நம்­பிக்­கை­யி­ழந்து தற்­கொலை செய்து கொள்­வோமா என்றும் சிந்­திக்­கின்­றனர். எனவே இவ்­வா­றான உள­வி­யல் நெருக்­க­­டி­க­ளி­லி­ருந்து அவர்­களைப் பாது­காப்­ப­தற்­குத்­தே­வை­யான ஆலோ­ச­னைகள் மற்றும் வழி­காட்­டல்­க­ளையும் ஏனைய துறை­சார் நிறு­வ­னங்­க­ளுடன் இணைந்து நாம் வழங்­கு­கி­­றோம். தற்­கொ­லை­களைத் தடுப்­ப­தற்­காக பணி­பு­ரியும் சுமி­த்­ராயோ நிறு­வனத்து­ட­னும் பற்­சி­கிச்சை, கண் சிகிச்சை போன்ற மருத்­து­வ முகாம்­களை நடாத்த கொழும்பு பல்­க­லைக்­க­ழக மருத்­துவ பீட ரோட்­டரி கழ­கம் போன்­ற­வற்றுடனும் நாம் கைகோர்த்­துள்ளோம்.

இதற்­­கான பய­னா­ளி­களை எவ்­வாறு தெரிவு செய்­கி­றீர்­கள்? முஸ்­லிம்கள் மாத்­தி­ரமா பய­னா­ளி­கள்?

இந்த திட்­டத்­திற்கு இன, மத வேறு­பா­டுகள் கிடை­யாது. ஐக்­கிய நாடுகள் சபையின் எடு­கோள்­­க­ளுக்­க­மைய பெற்­றோரில்­ ஒரு­வ­ரையோ அல்­லது இரு­வ­ரை­யு­­­மோ இழந்த எந்­த­வொ­ரு சிறா­ரையும் நாம் இத்­திட்­டத்தில் உள்­வாங்­குவோம். அமானா வங்­கி ஓர் இஸ்­லா­மிய வங்­கி­யாக இருக்­கின்ற போதிலும் அதன் சேவை அனைத்து மக்­க­ளுக்­கு­மா­னது. அந்த வகையில் Orphan Care திட்­டமும் அனைத்து அனா­தை­க­ளுக்­கு­மா­ன­து. குறிப்­பாக சொல்ல வேண்­டு­மானால் பெளத்த, இந்து, கிறி­ஸ்­தவ மற்றும் இஸ்­லா­மிய சம­யங்­களைப் பின்­பற்­று­கின்ற நிறு­வ­னங்­களால் நடாத்­தப்­படும் அனாதை இல்­லங்கள் அனைத்தும் இந்த திட்­டத்தில் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளன.

இதற்கான நிதி எங்கிருந்து கிடைக் கிறது? இதில் அமானா வங்கியின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது? 

இந்த திட்டத்திற்கான பிரதான நிதி மூலமாக அமானா வங்கியே உள்ளது. இதனை அமுல்படுத்துவதற்கான நிர்வாக செலவுகளையும் எமது வங்கியே முழுமையாக பொறுப்பேற்றுள்ளது. இதற்கு பிள்ளைகளின் கணக்கிலிருந்து ஒரு சதம் கூட செலவிடப்படாது. இதற்கு மேலதிகமாக மேலும் சில நிறுவனங்கள், தனி நபர்களும் நிதி உதவிகளை வழங்குகின்றனர். அமானா வங்கியில் கணக்கை வைத்திருப்போர் ஸ்டான்டிங் ஓடர்கள் மூலம் மாதாந்தம் ஒரு தொகை பங்களிப்பை வழங்குகின்றனர். மேலும் இணைய வழி நிதிப் பரிமாற்றம், வீசா, மாஸ்டர் அட்டைகள் மூலமான நிதிப் பரிமாற்றம் மூலமும் பங்களிப்புகள் கிடைக்கின்றன. அதேபோன்று வெளிநாடுகளில் வசிக்கின்ற, தொழில்புரிகின்ற இலங்கையர்களையும் இத்திட்டத்திற்காக அணுகியுள்ளோம். மேலும் வர்த்தக நிலையங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டு அதன் மூலமும் நிதி திரட்டப்படுகிறது.

இத்திட்டத்தின் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட கணக்காய்வாளர்கள் மூலம் எமது கணக்கறிக்கை தயாரிக்கப்படுகிறது.

தனி நபர்கள், வியா­பார நிறு­வ­னங்கள் எவ்­வாறு இந்தப் பணியில் பங்கெடுக்கலாம்? 

வியாபார நிறுவனங்கள் தமது பொருட்களை விற்பனை செய்யும்போது வருமானத்தில் ஒரு சிறு பகுதியை ஓபன் கெயாருக்கு வழங்கலாம். உதாரணமாக தண்ணீர் போத்தல் விற்பனை நிறுவனம் ஒன்று தாம் விற்பனை செய்யும் ஒவ்வொரு போத்தலிலிருந்தும் ஒரு சிறு தொகையை இத்திட்டத்திற்கு வழங்குகிறது. கொழும்பிலுள்ள பேக்கரிப் பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று தாம் விற்பனை செய்யும் ஒவ்வொரு இறாத்தல் பாணிலிருந்தும் ஒரு தொகையை வழங்குகிறது. இவ்வாறு சிறிய, பெரிய வியாபார நிறுவனங்கள் அனைத்தும் தமது வசதிக்கு ஏற்றவாறு நிதி உதவிகளை வழங்குகின்றன. இதற்கென எம்மால் விநியோகிக்கப்படும் உண்டியல்களைப் பெற்று நிதி சேகரித்து வழங்கலாம்.

இத்திட்டத்திற்கு பங்களிக்க விரும்பும் ஒருவர் எவ்வாறு உங்களைத் தொடர்பு கொள்ளலாம்?

அருகிலுள்ள அமானா வங்கிக் கிளைக் குச் செல்வதன் மூலம் இதுபற்றிய மேல திக விபரங்களைப் பெற்று விருப்பமான வழியில் உதவலாம். அல்லது இத்திட் டத்தின் இணையதளமான https://www.orphancare.org இற்கு விஜயம் செய்யலாம். +94117756775 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொள்ளலாம்.

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.