கொழும்பு மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்கள் சம்மேளனங்கள் ஊடாக நிவாரண நடவடிக்கை

வெள்ள அனர்த்தம் தொடர்பான முஸ்லிம் சிவில் அமைப்புகளின் கூட்டத்தில் தீர்மானம்

0 188

(எஸ்.என்.எம்.சுஹைல்)
நாட்டின் பல பகு­தி­க­ளிலும் ஏற்­பட்­டுள்ள சீரற்ற கால­நிலை கார­ண­மாக ஏற்­பட்­டுள்ள அனர்த்­தங்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­க­ளுக்கு நிவா­ரண நட­வ­டிக்­கை­களை கொழும்பு மாவட்­டத்­தி­லுள்ள பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனங்கள் ஊடாக வழங்­கு­வ­தற்கு உலமா சபை தலை­மை­யி­லான முஸ்லிம் சிவில் அமைப்­புகள் தீர்­மா­னித்­துள்­ளன.

வெள்ள அனர்த்த முகா­மைத்­துவம் தொடர்பில் கொழும்­பி­லுள்ள அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் தலை­மை­யக காரி­யா­லத்தில் கடந்த திங்கட் கிழமை இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின்­போதே இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் நிறை­வேற்­றுக்­குழு உறுப்­பி­னர்கள், கொழும்பு மாவட்­டத்­தி­லுள்ள பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னங்­களின் பிர­மு­கர்கள் மற்றும் முஸ்லிம் சமூக சேவை நிறு­வ­னங்­களின் உறுப்­பி­னர்கள் உள்­ளிட்ட பலரும் இந்த கூட்­டத்தில் கலந்­து­கொண்­டனர்.

இதன்­போது, நிலவும் சீரற்ற கால­நி­லையால் ஏற்­பட்­டுள்ள அனர்த்­தத்­திற்கு முகங்­கொ­டுத்­துள்ள மக்­க­ளுக்கு, எவ்­வா­றான உட­னடி பங்­க­ளிப்­புக்­களை வழங்­கலாம் என்­பது தொடர்பில் இச்­சந்­திப்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தோடு பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு அர­சாங்­கத்­திடம் இருந்து வெள்ள நிவா­ர­ணங்­களை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான வழி­வ­கைகள் குறித்தும் கலந்­தா­லோ­சிக்­கப்­பட்­டது.

மேலும் அந்­தந்த பகு­தி­க­ளி­லுள்ள மஸ்ஜித் சம்­மே­ள­னங்கள் பாதிக்­கப்­பட்­டுள்ள பகு­தி­களின் கள நில­வ­ரங்­களை நேரில் சென்று பார்­வை­யிட்டு, விப­ரங்­களை திரட்­டு­வ­தோடு அதற்­கான முன்­னெ­டுப்­புக்­களை கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனம் மற்றும் ஜம்­இய்யா ஆகி­ய­வற்­றுடன் இணைந்து மேற்­கொள்­வ­தா­கவும் இதன்­போது தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இதில் ஜம்­இய்யா சார்பில் பொதுச்­செ­ய­லாளர் அஷ்-ஷெக் எம். அர்கம் நூராமித், உப செய­லாளர் அஷ்-ஷெக் எம்.எஸ்.எம்.தாஸீம், நிறை­வேற்­றுக்­குழு உறுப்­பினர் அஷ்-ஷெக் எம். ரிபாஹ் ஹஸன் ஆகி­யோ­ருடன் கொழும்பு மாவட்ட ஜம்­இய்­யாவின் நிர்­வா­கி­களும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

இத­னி­டையே, அனர்த்­தங்கள் ஏற்­ப­டாத நாட்டின் ஏனைய பகு­தி­களில் நிவா­ர­ணங்­களை வழங்க விரும்­பு­ப­வர்கள் பிர­தே­சத்­தி­லுள்ள பிராந்­தி­யத்தில் இயங்கும் பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் ஊடாக நிவா­ரண உத­வி­களை கைய­ளிப்­ப­தற்­கான ஏற்பாடுகளை செய்ய முடியும் என ஜம்இய்யத்துல் உலமாவின் நிவாரண சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.

வெல்லம்பிட்டி, மல்வானை, காலி, போர்வை, தல்துவ உள்ளிட்ட 7 முஸ்லிம் பிரதேசங்களிலும் கடுமையான வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.