இலங்கை முஸ்லிம்களும் பிறை விவகாரமும்

0 49

எம்.எச்.எம்.பர்ஹத் மரிக்கார் (ஹக்கானி)

இலங்­கையில் பிறை விவ­கா­ரத்தில் இருக்­கின்ற சர்ச்சை புதி­தான ஒன்­றல்ல. எனினும் அவ்­வப்­போது இந்த சர்ச்சை தோன்றி மக்­களின் ஒற்­று­மையை சீர்­கு­லைப்­பதை அனு­ம­திக்க முடி­யாது. அந்த வகை­யில் இந்த ஆக்கம் இது பற்றி யச­ரி­யா­ன புரிதலை ஏற்­ப­டுத்தி நாம் எவ்­வாறு முன்­னோக்கிச் செல்­லலாம் என்­பதைப் பற்­றியே ஆராய முற்­ப­டு­கி­ற­து­.

இலங்­கையில் பிறை விவ­கா­ரத்தில்
பிர­தான மூன்று பிரி­வினர்
சர்­வ­தேச அல்­லது மக்கா பிறையின் படி அமல் செய்­ப­வர்கள்.
கணக்­கீட்டின் படி ஷேக் அவர்­களின் அறி­வித்­தலின் பிர­காரம் அமல் செய்­ப­வர்கள்.
இலங்­கையின் பிறைக் குழுவின் உள்­நாட்டு பிறை அறி­வித்­தலின் படி அமல் செய்­ப­வர்கள்.

இவர்­களுள் முதல் இரண்டு சாரா­ருக்கும் இலங்­கையின் பிறைக்­கு­ழுவின் அறி­வித்­த­லுக்கும் எவ்­வித சம்­பந்­தமும் இல்லை. அவர்கள் பிறைக் குழு விட­யத்தில் எதுவும் பேச வேண்­டி­ய­து­மில்லை. அவர்கள் அவர்­களின் பாட்டில் அவர்­க­ளு­டைய உல­மாக்­களின் வழி­காட்­டலில் அமல் செய்து விட்­டாலே பிரச்­சி­னையின் பாதி முடிந்து விடும்.

இம்­மு­றை பிறை கண்­டமை பற்­றி அறி­விப்­ப­தற்கு ஏற்­பட்ட தாமதத்தில் சமூக ஊட­கங்­களில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்த பதி­வுகள் இட்ட மற்றும் வட்­ஸப்பில் குரல் பதி­வுகள் இட்டு வீர வார்த்தை பேசி குழப்­பி­ய­வர்­களுள் இவர்­களே பாதி. இதனை அனை­வரும் ஏற்றுக் கொள்­வார்கள்.

எனவே இந்த இரண்டு சாரா­ருக்கும் இலங்கை பிறைக் குழுவின் விட­யங்­களில் தலை­யி­டவோ, அல்­லது அவர்­களின் நல­வு­களை பாராட்­டவோ, அல்­லது அவர்­களின் பிழை­களில் குறை கூறவோ எந்த வித தேவையும் இல்லை. காரணம் அந்த இரண்டு குழுவும் ஏலவே இலங்கை பிறைக்­கு­ழு­விற்கு கட்­டுப்­ப­டா­த­வர்கள் அல்­லது அவர்­களை ஏற்­கா­த­வர்கள்.

மேற்­கூ­றப்­பட்ட இரண்டு சாராரும் அவ­ரவர் முறைப்­படி அமல் செய்து விட்டு இலங்கை பிறை விவ­கா­ரத்தில் தலை­யி­டாமல் இருந்தால் அரை­வாசி பிரச்­சினை முடிந்துவிடும். அல்­ஹம்­து­லில்லாஹ். மீத­முள்ள அரை­வா­சிக்கு வருவோம்.

தாம­தித்து அறி­விப்­பது என்­பது அவ்­வ­ளவு பெரிய விட­ய­மல்ல. சர்­வ­தேச மக்கா பிறைப்­படி அறி­விப்­ப­வர்கள் வழ­மை­யாக இந்த நேரத்தில் தான் அறி­விக்­கின்­றார்கள் என்­பதை யாவரும் அறிவோம்.

மூன்­றா­வது தரப்­பி­ன­ரான இலங்கை பிறைக்­கு­ழுவின் அறி­வித்­தலின் படி அமல் செய்­ப­வர்களையும் மூன்றாக பிரிக்­க­லாம்.
பிறை தொடர்­பான அறிவு உள்­ள­வர்கள், பிறை­பார்ப்­பதில் தம்மை வழ­மை­யாக ஈடு­ப­டுத்­து­ப­வர்கள் மற்றும் பிறைக்­கு­ழுவை சார்ந்­த­வர்கள். (பிறைக்­குழு யார் என்­பது தனித் தலைப்பு)

பேஸ்புக், வட்ஸ்அப் பதி­வர்­கள். பிறை தொடர்­பாக தமது கருத்­துக்கள் கணிப்­புக்கள் பற்றி பதி­வி­டு­ப­வர்­கள்.

பிறை விவ­கா­ரத்தில் தமது எந்த ஈடு­பாடும் இல்­லாமல் இலங்­கையில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக பிறைக் குழு அறி­விக்கும் அற­விப்பை ஏற்று அமல் செய்யும் பொது­மக்கள். (இவர்­களுள் உல­மாக்கள், கல்­வி­மான்கள், துறை­சார்ந்­த­வர்கள் என சமூ­கத்தின் பல தரப்­பி­னரும் அடங்­கு­வார்கள்).

இவர்­களுள் மூன்றாம் தரப்­பி­ன­ரான பொது­மக்கள் பிறை விவ­கா­ரத்தில் இலங்­கையின் பிறைக் குழுவின் அறி­விப்பை ஏற்று அமல் செய்­கி­றார்கள். இவ­ர­்களால் எந்­த­வித பிரச்­சி­னையும் இல்லை.

மீத­முள்ள அரை­வாசிப் பிரச்­சி­னையில் 25 வீதப் பிரச்சினை முதல் தரப்­பான பிறை சம்­பந்­தப்­பட்ட விட­யத்தில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளி­டமும், மற்ற­ய 25 வீதப் பிரச்­சினை பேஸ்புக், வட்ஸ்அப் பதி­வர்­களி­ட­முமே இருக்­கி­றது.

முதலில் பேஸ்புக் பதி­வர்­கள் ஒரு முடி­விற்கு வர வேண்டும். தாம் தமது சொந்த கருத்தில் அல்­லது சொந்த ஆய்வின் படி (முஜ்­த­ஹித்­க­ளாக) பிறை விவ­கா­ரத்தில் அமல் செய்­யப்­போ­கின்­றோமா அல்­லது இலங்கை பிறைக்­கு­ழுவின் உத்­தி­யோ­க­பூர்வ அறி­வித்­தலை ஏற்று பின்­பற்றி (முகல்­லித்­க­ளாக) அமல் செய்­யப்­போ­கின்­றோமா.

இந்த முடிவை எடுத்து விட்டால் அவர்­களின் பிரச்­சி­னையும் இலங்­கையில் இருக்­காது. சொந்த முடிவில் அமல் செய்தால் அவர்­க­ளுக்கும் பிறைக் குழு­விற்கும் சம்­பந்தம் இருக்­காது. அல்லது பிறைக்­கு­ழுவின் அறி­விப்பை நாம் பின்­பற்றப் போகின்றோம் என்றால் அவ்­ர்­களும் மூன்றாம் குழுவில் இணைந்து விடு­வார்கள். அவர்­க­ளாலும் பிரச்­சினை இருக்­காது.

இனி மீத­முள்­ளது 25 வீதப் பிரச்­சி­னையே. இதனை மிகவும் சுல­ப­மாக முடித்துக் கொள்­ளலாம். காரணம் இதிலுள்­ள­வர்கள் சமூகப்பொறுப்பை சுமந்­த­வர்கள்.
பிறை விவ­கா­ரத்தில் தம்மை ஈடு­ப­டுத்தும் பிறைக்­குழு மிகவும் நிதா­ன­மா­கவும், தமது அபி­லா­ஷை­க­ளுக்கு அப்­பாலும் மர­ணத்­திற்கு பின்னர் நிச்­ச­ய­மாக நான் அல்­லாஹ்வின் முன்னிறுத்­தப்­ப­டுவேன் என்ற பொறுப்­பு­வாய்ந்த உணர்­வோடு செயற்­பட வேண்டும்.

இலங்­கையில் யார் பிறைக் குழு?
பிறைக்­குழு என்­றதும் எமது அனை­வ­ரது மனக் கண் முன்பும் வந்து நிற்­பது ஜம்­இய்­யத்துல் உல­மாவும், ரிஸ்வி முப்­தியும் தான். பிறைக் குழுவின் எந்­த விட­ய­மென்­றாலும் வழ­மை­யாக ஏச்­சுக்கும் பேச்­சுக்கும் உள்­வாங்­கப்­படும் பெயர்கள் ஜம்­இய்­யத்துல் உல­மாவும், ரிஸ்வி முப்­தியும்.

விடயம் அவ்­வா­றல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிறைக்­குழு என்­பது ரிஸ்வி முப்­தியோ ஜம்­இய்­யாவோ அல்ல. மாற்­ற­மாக பின்­வ­ருவோர் பிறைக் குழு­வி­ன­ராக கரு­தப்­ப­டு­கின்­றனர்.

  • கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலின் உறுப்­பி­னர்கள். (இவர்­களுள் உல­மாக்கள் மற்றும் பெரி­ய­பள்­ளி­வாசல் பிர­தி­நி­திகள் உள்­ள­டங்­கு­வார்கள்.)
  • அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா.
    இலங்கை முஸ்லிம் சமய பண்­பாட்­டலு­வல்கள் திணைக்­களம். (இது இலங்கை அர­சாங்க திணைக்­களம். அரபு நாடு­களில் இந்த திணைக்­க­ளங்­களே முடி­வு­களை எடுக்­கின்­றார்கள்.)
  • இது தவிர இலங்­கையின் பல­த­ரப்­பட்டோர் இந்த பிறைக் குழு தீர்­மா­னிக்கும் மாநாட்டில் தம்மை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்­றார்கள்.

இப்­போது சற்று தெளி­வ­டைந்­தி­ருப்­பீர்கள் என்ற நம்­பிக்­கை­யோடு மீத­முள்ள 25 வீதப் பிரச்­சி­னையை பார்ப்போம்.

முத­லா­வது : பிறைக்­கு­ழு­வா­னது பிர­தான ஐந்து தீர்­மா­னங்­களை எடுத்­துள்­ளீர்கள். இதில் ஏதா­வது மாற்­றத்தை ஏற்­ப­டுத்த உலக முஸ்லிம் மார்க்க அறி­ஞர்­க­ளுடன் இணைந்து மறு­ப­ரி­சீ­லனை செய்தால் பிறை விவ­கா­ரத்தில் சற்று முன்­னோக்­கலாம் என்­றி­ருந்தால் அதனை செய்­வது காலத்தின் தேவை.
இரண்­டா­வது : பிறை பார்த்து ஒரு முஸ்லிம் சாட்சி சொல்லும் போது அதனை பிறைக் குழு ஆராயும் விட­யத்தில் இருக்­கின்ற விட­யங்­களை மக்கள் மயப்­ப­டுத்­துங்கள். இது பிறைக்­கு­ழுவின் பொறுப்­பாகும். நீங்கள் ஒருவர் பிறை கண்டால் எப்­படி எல்லாம் கேள்வி கேட்­பீர்கள் என்­பதை அறிந்தால் தான் அத்­து­னை­யையும் கவ­னத்தில் கொண்டு பிறை­பார்ப்­பவர் செயற்­ப­டுவார்.
மூன்­றா­வது : பிறைக் குழு­விற்கு தக­வலை பெரிய பள்­ளியை சார்ந்­த­வர்­களோ, ஜம்­இய்­யாவை சார்ந்­த­வர்­களோ அல்­லது திணைக்­க­ளத்தை சார்ந்­த­வர்­களோ தான் தர வேண்டும் என்ற எந்­த­வித அடிப்­ப­டையும் இல்லை. இது உங்கள் உள்­வீட்டு பிரச்­சினை அல்ல. ஜம்­இய்­யாவின் கிளைகள் அறி­விக்க நாம் அதை ஏற்க மாட்டோம் என பெரிய பள்­ளியோ, திணைக்­க­ளத்தின் அதி­கா­ரிகள் பிறையை காண அதை நிரா­க­ரிக்க ஜம்­இய்­யாவோ முனையக்­கூ­டாது.
நான்­கா­வது : பிறைக் குழுவில் உள்­ள­வர்கள் தமது அபிப்­பி­ரா­யங்­களை பிறைக்­குழு மாநாட்டில் இருந்து கொண்டு தனிப்­பட்ட நபர்­க­ளுக்கு அனுப்பும் செயற்­பா­டு­களில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும்.
ஐந்­தா­வது : பிறை காண­மு­டி­யு­மான நாட்­களில், பிறை காண வாய்ப்பு குறை­வான நாட்­களில் என பிறை பார்ப்­ப­தற்கு சாத்­தி­ய­மான ஊர்­களை அடை­யா­ளப்­ப­டுத்தி பிறை பார்ப்­ப­தற்­கான குழுக்­களை அமைத்தல். ஏற்­க­னவே அமைத்­துள்­ளதை நாம் அறிவோம். ஆனாலும் அதனை சற்று மீள் கட்­ட­மைத்தல்.
ஆறா­வது : 12 மாதங்களும் பிறை பார்க்கின்ற போதி­லும் ரமழான் முடிந்து ஷவ்வால் பிறை­யி­லேயே மக்­க­ளுக்கு பிரச்­சினை இருக்­கி­றது என்ற விட­யத்தை அடையா­ளப்­ப­டுத்தி அனைத்து மஸ்­ஜித்­க­ளிலும் இமாம்­க­ளுக்கு திணைக்­க­ளத்தின் அனு­ச­ர­ணையில் பிறைக்­குழு வழி­காட்ட வேண்டும். மேலும் நிரு­வா­கி­களும் கட்­டாயம் அனைத்து மஸ்­ஜித்­க­ளிலும் அன்­றைய தினம் ஒன்று கூடி பிறை பார்ப்­ப­வர்கள் அறி­விக்கும் அறி­வித்­தலை உரிய முறையில் அறி­விக்க ஏற்­பா­டு­களை செய்ய வேண்டும்.
ஏழா­வது : பிறைக்­கு­ழுவில் அங்கம் வகிக்கும் உறுப்­பி­னர்களை நன்­றாக அலசி ஆராய்ந்து நிய­மிக்க வேண்டும். கடும்போக்கான, கொள்கைவாதிகளாக தம்மை அடையாளப்படுத்திய, முற்கோபக்கார்கள், தாம் பிடித்த முயலுக்கு நாலுகால்கள் என்று இருப்பவர்களுக்கு ஒரு போதும் இடமளிக்க கூடாது.
எட்டாவது : பிறைக் குழு சுயாதீனமாக இயங்க முடியாத நிலை இருந்தால் பகிரங்கமாக அல்லாஹ்விற்காக அதனை வெளிப்படுத்தி தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.
ஒன்பதாவது : ஒன்றாக கூடி தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர் வெளியில் வந்து எதிராக அல்லது எமக்கு விருப்பமில்லை ஆனாலும் என்ன செய்ய என்றெல்லாம் தமக்கு வேண்டப்பட்டவர்களோடு பேசுவதை பிறைக்குழுவை சார்ந்தவர்கள் விட்டு விட வேண்டும்.ஆக இப்படியான சில விடயங்களை செய்யும் போது நிச்சயமாக பிறை சர்ச்­சை­யை தவிர்க்­கலாம். சந்தோஷமாக நாம் எமது பெருநாள்­களை கொண்­டா­ட­வும் முடியும்.

Leave A Reply

Your email address will not be published.