இஸ்ரேலில் இலங்கையின் துணை தூதரகம் திறப்­பு

இலங்கை பலஸ்தீன் ஒருமைப்பாட்டு இயக்கம் கண்டனம்

0 60

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘இஸ்ரேல், காஸாவில் தொடர்ச்­சி­யாக இனப்­ப­டு­கொ­லை­களை மேற்­கொண்டு வரும் நிலையில் இலங்கை அர­சாங்கம் இஸ்­ரேலில் துணைத் தூத­ரகம் ஒன்­றினைத் திறந்­தி­ருப்­பது குறித்து இலங்கை பலஸ்தீன் ஒரு­மைப்­பாட்டு இயக்கம் வன்­மை­யாக கண்­டித்­துள்­ளது.

இலங்கை அர­சாங்­கத்தின் இந்­நி­லைப்­பாடு இஸ்ரேல் காஸாவில் இனப்­ப­டு­கொ­லை­களை மேற்­கொண்­டு­வரும் நிலையில் அந்­நாட்­டுடன் உற­வு­களை வலுப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது என்றும் தெரி­வித்­துள்­ளது.

இஸ்­ரேலில் இலங்கை துணைத் தூத­ரகம் ஒன்­றினைத் திறந்­தி­ருப்­பது குறித்து இலங்கை – பலஸ்தீன் ஒரு­மைப்­பாட்டு இயக்கம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யிலே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

குறிப்­பிட்ட அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, இஸ்­ரேலின் வட பகு­தி­யி­லுள்ள ஹைபா நகரில் இலங்­கையின் துணைத் தூத­ரகம் ஒன்று நிறு­வப்­பட்­ட­மை எமக்கு ஆழ்ந்த கவ­லை­யையும் ஏமாற்­றத்­தையும் அளிக்­கி­றது.

உல­க­ளா­விய நீதி மற்றும் கால­னித்­து­வத்­தி­லி­ருந்து சுதந்­தி­ரத்தை ஊக்­கு­விப்­பதில் இலங்­கையின் சாத­னையைப் பொறுத்த வரையில் இலங்கை அர­சி­ட­மி­ருந்து இரா­ஜ­தந்­திர வில­கலே எதிர்­பார்க்­கப்­பட்­டது என்­றாலும் இலங்கை அரசின் குறிப்­பிட்ட செயற்­பாடு இஸ்­ரே­லு­ட­னான உற­வினை வலுப்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­துள்­ளது.

அத்­தோடு இஸ்ரேல் காஸாவில் இனப்­ப­டு­கொ­லை­களை மேற்­கொண்­டு­வரும் நிலையில் இச்­செ­யற்­பாடு வன்­மை­யாக கண்­டிக்­கத்­தக்­க­தாகும்.
அத்­தோடு டெல் அவிவில் இலங்கை தூத­ரகம் ஒன்று இயங்கி­ வ­ரு­கி­றது. இஸ்ரேல் ஒரு சிறிய நாடாகும். இந்­நி­லையில் ஹைபா நகரில் துணைத் தூத­ர­க­மொன்­றினை திறக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்­ப­தையும் தெரி­விக்க விரும்­பு­கிறோம்.

இஸ்­ரே­லிய படைகள் 32 ஆயி­ரத்­துத்தும் மேற்­பட்ட அப்­பாவி பலஸ்­தீன மக்­களை கொன்று குவித்­துள்­ளது. காஸாவில் பட்­டி­னியால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கு நிவா­ரணம் மற்றும் உணவு உத­வி­களை வழங்­கு­வ­தற்கு நிதி திரட்டும் நட­வ­டிக்­கை­களில் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தற்­போது ஈடு­பட்டு வரு­கிறார். அவ­ரது தலை­மை­யிலே இந்த நிதி­யு­தவி திரட்­டப்­ப­டு­கி­றது. இவ்­வா­றான நிலை­மையில் இலங்­கையின் துணைத் தூத­ரக அலு­வ­லகம் ஹைபாவில் திறக்­கப்­பட்­டுள்­ளது.

இஸ்ரேல் இரா­ணு­வத்தின் தரை­வழி இரா­ணுவ நட­வ­டிக்­கை­களால் காஸாவில் மோச­மான பட்­டினி நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. மனி­தா­பி­மான நெருக்­க­டிகள் அதி­க­ரித்­துள்­ள­ன.இவ்­வி­வ­கா­ரத்தில் இலங்கை அர­சாங்கம் அச­மந்தப் போக்­குடன் செயற்­பட்டு வரு­கி­றது.

மேற்கு ஆசி­யாவில் அமை­தியை வளர்ப்­பதில் நாம் உறுதி பூண்­டுள்ள நிலையில் அர­சாங்­கத்தின் இச்­செ­யற்­பாட்டி­னை இஸ்­ரே­லுக்கு நன்­மை­ய­ளிக்கும் நட­வ­டிக்­கை­யாக நாங்கள் கரு­து­கிறோம். சர்­வ­தேச சட்­டங்­க­ளையும் மனி­தா­பி­மான சட்­டங்­க­ளையும் எவ்­வித தண்­ட­னை­யு­மின்றி இஸ்ரேல் மீறு­வ­தற்கு அர­சாங்­கத்தின் இந்­ந­ட­வ­டிக்கை கைமாறு செய்­வ­தாக அமைந்­துள்­ளது.

அர­சாங்கம் வர­லாற்றின் சரி­யான பக்கம் சார்ந்து செயற்­பட வேண்டும் என நாம் அழுத்­த­மாகத் தெரி­விக்க விரும்­பு­கிறோம். இவ்­வா­றான செயற்பாடுகளிலிருந்து தவிர்ந்திருக்குமாறும் கோருகிறோம். இந்நிலைமை உலக சமாதானத்தின் பிரதிநிதிகளை புண்படுத்துவது மாத்திரமல்ல ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பிரதேசங்களின் தாக்குதலுக்குள்ளான மக்களையும் புண்படுத்தும். இச்செயல்களிலிருந்தும் விலகி இருக்குமாறு நாம் அரசாங்கத்தை கடுமையாக வலியுறுத்துகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.