ராகம வைத்தியசாலை எம்.எச். ஒமர் விசேட கல்லீரல் நோய் சிகிச்சை நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

0 66

இலங்கை மக்­க­ளுக்கு உயர்­தர சுகா­தார சேவையை வழங்­கு­வதை உறுதி செய்­வ­தற்­காக கொழும்பு வடக்கு ராகம போதனா வைத்­தி­ய­சா­லையில் நிறு­வப்­பட்ட “எம். எச். ஒமர் விசேட கல்­லீரல் நோய் சிகிச்சை நிலையம்” செவ்­வாய்க்­கி­ழ­மை ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மையில் திறந்து வைக்­கப்­பட்­டது.

கொழும்பு வடக்கு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு வருகை தந்த ஜனா­தி­ப­தியை , வைத்­தி­ய­சா­லையில் வெற்­றி­க­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்ட கல்­லீரல் சத்­தி­ர­ சி­கிச்­சையின் மூலம் குண­ம­டைந்த சிறு­மி­யொ­ருவர் வர­வேற்­றது விசேட அம்­ச­மாகும்.

இலங்­கையில் குழந்­தைகள் மற்றும் பெரி­ய­வர்கள் மத்­தியில் நாள்­பட்ட கல்­லீரல் நோயின் பாதிப்பு அதி­க­ரித்து வரு­கி­றது. கல்­லீரல் செய­லி­ழப்­புக்கு கல்­லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்­டுமே பய­னுள்ள சிகிச்­சை­யாகும். இந்த சிக்­க­லான கல்­லீரல் நோய்­க­ளுக்­கான சிகிச்­சைக்கு விசேட அறிவு மற்றும் விலை­யு­யர்ந்த உப­க­ர­ணங்கள் அவ­சியம்.

கல்­லீரல் மாற்று சிகிச்­சையை வெற்­றி­க­ர­மாகச் செய்­வது ஒரு நாட்டின் சுகா­தாரப் பாது­காப்பின் வளர்ச்­சியின் குறி­காட்­டி­யாகும். பட்­டப்­பின்­ப­டிப்பு பயிற்சி மைய­மா­கவும் வட­கொ­ழும்பு கல்­லீரல் நோய்­க­ளுக்­கான மையம் செயற்­ப­டு­வ­தோடு கல்­லீரல் நோய்­களில் உயர்­தர ஆராய்ச்­சியை நடத்தி இலங்­கையில் கல்­லீரல் புற்­றுநோய் சிகிச்­சையின் மிகப்­பெ­ரிய தர­வுத்­த­ளத்தை பேணு­கி­றது.
இந்த கல்­லீரல் நோய் விசேட சிகிச்சை நிலை­யத்தை நிர்­மா­ணிப்­ப­தற்­காக எம். எச். ஒமர் நிதியம் இரண்­டரை பில்­லியன் ரூபாய்­களை நன்­கொ­டை­யாக வழங்­கி­யுள்­ளது.

இது இலங்­கையின் சுகா­தாரம் மற்றும் கல்வி சேவை­க­ளுக்கு இலங்­கையில் தொழில்­மு­னைவோர் வழங்­கிய மிகப்­பெ­ரிய நன்­கொ­டை­யாகும் .எம். எச். ஒமர் இந்த நாட்டில் புகழ்­பெற்ற பிராண்டிக்ஸ் குழு­மத்தின் ஸ்தாபகர் ஆவார்.
பெயர்ப் பல­கையை திரை­நீக்கம் செய்து எம். எச்.ஒமர் விசேட கல்­லீரல் நோய் சிகிச்சை நிலை­யத்தை திறந்து வைத்த ஜனா­தி­பதி அதன் வச­தி­களை அவ­தா­னிக்­கவும் இணைந்து கொண்டார்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க, அங்கு வைக்­கப்­பட்­டுள்ள விசேட அதி­தி­களின் நினைவுப் புத்­த­கத்தில் குறிப்பு ஒன்­றையும் இட்டார்.

அதனைத் தொடர்ந்து நடை­பெற்ற வைப­வத்தில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க, ஒமர் குடும்­பத்­தினர் வழங்­கிய தனித்­து­வ­மான நன்­கொடை மற்றும் பிராண்டிக்ஸ் வர்த்­த­கத்தின் ஊடாக நாட்டின் பொரு­ளா­தா­ரத்­திற்கு ஆற்­றிய பங்­க­ளிப்பை பாராட்­டினார்.

கல்­லீரல் மாற்று சத்­தி­ர­சி­கிச்­சை­க­ளுக்கு பிராந்­தி­யத்தில் சிறந்த நாடாக இன்று இலங்கை மாறி­யுள்­ளதை சுட்­டிக்­காட்­டிய ஜனா­தி­பதி, அந்த குழு நாட்­டிற்கு வழங்­கிய நற்­பெ­ய­ருக்கு நன்றி தெரி­வித்தார்.

அத்­துடன், இந்­நாட்டில் சுகா­தாரத் துறையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான அர­சாங்­கத்தின் வேலைத்­திட்டம் குறித்தும் ஜனா­தி­பதி இங்கு கருத்துத் தெரி­வித்தார்.

சிசு இறப்பு மற்றும் தாய் இறப்பு விகி­தங்­களின் அடிப்­ப­டையில் நமது நாடு புள்­ளி­வி­பர அடிப்­ப­டையில் சிறந்த நிலையில் உள்­ளது என்றும், கொவிட் தொற்­றுநோய் காலத்­திலும் அதைத் தொடர்ந்து வந்த பொரு­ளா­தார நெருக்­கடி காலத்­திலும் இலங்கை வலு­வாக முன்­னேற முடிந்­த­தாக இந்­நி­கழ்வில் உரை­யாற்­றிய சுகா­தார மற்றும் கைத்­தொழில் அமைச்சர் ரமேஷ் பத்­தி­ரன தெரி­வித்தார்.கொழும்பு வடக்கு போதனா வைத்­தி­ய­சா­லையில் இந்த வச­தி­க­ளுக்­காக 2.5 பில்­லியன் ரூபா தொகையை நன்­கொ­டை­யாக வழங்­கிய எம்.எச்.ஒமர் மற்றும் குடும்­பத்­தி­ன­ருக்கு அவர் நன்­றி­களை தெரி­வித்தார்.

உயர்­கல்வி இரா­ஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், எம். எச். ஒமரின் பேரனும் பிராண்டிக்ஸ் குழு­மத்தின் பணிப்­பா­ள­ரு­மான ஹாசிப் ஓமர், களனிப் பல்­க­லைக்­க­ழக உப­வேந்தர் பேரா­சி­ரியர் நிலாந்தி டி சில்வா, சுகா­தார அமைச்சின் செயலாளர் பி. ஜி. மஹிபால, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் ரணவீர, சுகாதார அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.