புதிதாக மத ஸ்தலங்கள் நிறுவ புதிய விதிமுறைகள்

மத விவகார அமைச்சின் அனுமதி அவசியம்

0 71

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்டில் புதி­தாக பள்­ளி­வா­சல்கள் உட்­பட ஏனைய மதஸ்­தலங்கள் நிறு­வப்­ப­டு­வ­தற்கு புத்­த­சா­சனம், மதம் மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சு புதிய சில விதி­மு­றை­களை கொண்டுவந்­துள்­ளது.

இத­ன­டிப்­ப­டையில் பள்­ளி­வா­சல்கள் பன்­ச­லைகள், கோவில்கள், ஆல­யங்கள் புதி­தாக நிர்­மா­ணிப்­ப­டு­வ­தாயின் புத்­த­சா­சனம், மதம் மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சின் அனு­ம­தி­யினைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும்.

இவ்­வா­றான அனு­மதி பள்­ளி­வா­சல்கள் உட்­பட மதஸ்­தா­ப­னங்கள் புதி­தாக நிறு­வப்­படும் பிர­தே­சத்தின் கிராம சேவை­யாளர் மற்றும் பிர­தேச செய­லா­ளரின் சிபா­ரி­சு­க­ளுடன் புத்­த­சா­சனம், மதம் மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சின் செய­லா­ள­ரி­ட­மி­ருந்து அனு­ம­தியைப் பெற்­றுக்­கொள்ள வேண்­டு­மெனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்ள பள்­ளி­வா­சல்கள் தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இஸட்.ஏ.எம்.பைஸ­லிடம் வின­வி­ய­போது, புதி­தாக பள்­ளி­வா­சல்கள் நிர்­மாணம் தொடர்பில் விண்­ணப்­பங்கள் கிடைக்­கப்­பெ­ற­வில்லை எனத் தெரி­வித்தார்.

இதே­வேளை நாட்டில் இது­வரை காலம் திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­ப­டா­துள்ள பள்­ளி­வா­சல்கள் கட்டம் கட்­ட­மாக பதிவு செய்­யப்­ப­டு­கின்­றன.
திணைக்­க­ளத்­துக்கு பதி­வுக்­காக கிடைக்­கப்­பெற்­றுள்ள விண்­ணப்­பங்கள் வக்பு சபை மற்றும் திணைக்­க­ளத்­தினால் ஆரா­யப்­பட்டு உரிய ஆவ­ணங்கள் கிடைக்­கப்­பெற்­றி­ருப்பின் பதி­வுகள் இடம்­பெற்று வரு­கின்­றன எனவும் அவர் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.