கிழக்கில் தகுதி­க்கேற்ப பத­வி­களை வழங்­கு­மாறே ஜனா­தி­பதி கூறி­னார்

0 77

கிழக்கு மாகாண சபை­யின் கீழ் வரும் அரச அலு­வ­ல­கங்­களின் உயர் பத­வி­க­ளுக்கு இன மத ரீதி­யா­க­வன்றி தகுதியின் அடிப்­ப­டை­யி­லேயே அதி­கா­ரிகள் நிய­மிக்­கப்­பட வேண்டும் என ஜனா­தி­பதி ரணில் விக்­ர­­ம­சிங்க தெரி­வித்­துள்­ளார்.

கடந்த வாரம் ஜனா­தி­ப­தி­­ கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டையில் நடை­பெற்ற சந்­திப்­பின்­போதே ஜனா­தி­பதி இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார்.

இச் சந்­திப்­பி­ன்­போது கிழக்கு மாகாண சபை­யின் கீழ் வரும் அரச அலு­வ­ல­கங்­களின் உயர் பத­வி­க­ளுக்கு மாகா­ணத்­தி­லுள்ள இன விகி­தா­சா­ரத்தின் அடிப்­ப­டையில் முஸ்­லிம்­க­ளை உள்­வாங்­கு­மாறு ஜனா­திபதி உத்­த­ர­விட்­ட­தாக வெளி­வந்த செய்­தி­களில் உண்மை இல்லை என இச் சந்­திப்பில் கலந்து கொண்ட உயர் அதி­காரி ஒருவர் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்­தார்.

கிழக்கு மாகா­ண முன்னாள் ஆளுநர் அநு­ராதா யஹம்பத்தின் பதவிக் காலத்தில் மாகாண பிர­தம செய­கத்தில் மாத்­திரம் முஸ்­லிம் அதி­கா­ரி ஒருவர் பதவி வகித்தார். எனினும் தற்­போதைய ஆளுநரின் காலத்தில் மாகாண பிர­தம செய­கத்தில் ஒரு­வரும் மாகாண பொதுச் சேவை ஆணைக்­கு­ழுவில் ஒரு­ முஸ்லிம் உயர் அதி­கா­ரியும் பதவி வகிக்­கின்­றனர். அந்த வகையில் முன்னர் இருந்­ததை விட தற்­போ­தைய ஆளு­­நரின் கீழ் மற்­றொரு முஸ்லிம் அதி­காரி கூடு­­த­லா­கவே பணி­யாற்­று­கி­றாரே தவிர அந்த எண்­ணிக்­கை குறைக்கப்­ப­டவில்­லை.

ஆளு­நரைப் பொறுத்­த­வரை நல­ன்­பு­ரித்­திட்­டங்­களில் மாத்­தி­ரமே அவரால் இன விகி­தா­­சா­ரத்­திற்­­கேற்ப வளங்­களைப் பகிர்ந்­த­ளிக்க முடியும். மாறாக உயர் பத­வி­க­ளுக்கு ஆட்­களை நிய­மிக்­கும்­போது அர­சாங்­கத்தின் வழி­காட்­டல்கள் பின்­­பற்­றப்­பட வேண்டும். பரீட்­சைகள் நேர்­கா­ணல்கள் நடாத்­தப்­பட்டு அவற்றில் வெளிப்­ப­­டுத்­தும் திற­மை மற்றும் தகுதியின் அடிப்­ப­டை­யி­லேயே இவ்­வா­றான நிய­ம­ன­ங்கள் வழங்­கப்­ப­டு­கின்­ற­ன.

இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பில் இன மத அடிப்­ப­டையில் நிய­ம­னங்­களை வழங்­கு­மாறு ஒரு­போதும் கூறப்­ப­ட­வில்லை. மாறாக திற­மை­மிக்­க­வர்­க­ளுக்கு உரிய தகு­திகாண் மட்­டங்­க­ளைத் தாண்டி பத­வி­களை வழங்­கு­மாறே குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அபி­வி­ருத்­தித் திட்­டங்­கள் நலன்­புரி நட­வ­டிக்­கைகள் என்று வரு­கின்ற போதும் அவை மாகா­ணத்­தி­லுள்ள சகல இன மக்­க­ளுக்கும் இன விகி­தா­சா­ரத்தின் அடிப்­ப­டையில் சென்­ற­டை­கின்­ற­னவா என்­பதை உறு­திப்­ப­டுத்த வேண்­டி­யது ஆளு­­நரின் கடப்­பா­டாகும். இதில் அவர் தவ­றி­­ழைத்தால் அது பற்றி முஸ்லிம் எம்.பி.க்கள் ஜனா­­தி­ப­தி­யிடம் முறை­யிட முடி­யும். மாறாக உயர் அதி­கா­ரி­­களின் நிய­ம­ன விட­யத்தில் ஆளு­நரைக் குற்­றம்­சாட்­டு­வது நியாய­மற்­றது என்றும் அவர் மேலும் தெரி­வித்­தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.