கிழக்கு முஸ்லிம் எம்.பி.களை சந்தித்தார் ஜனாதிபதி

0 69

ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கும் கிழக்கு மாகாண முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­பொன்று இடம்­பெற்­றுள்­ளது.

இந்த சந்­திப்பு நேற்று காலை 11 மணி­ய­ளவில் பாரா­ளு­மன்­றத்­தி­லுள்ள ஜனா­தி­பதி காரி­யா­ல­யத்தில் இடம்­பெற்­றுள்­ளது. இதன்­போது, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்­ட­மானும் கலந்­து­கொண்­டி­ருந்தார். அத்­துடன், அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஏ.எல்.எம்.அதா­வுல்லாஹ், எச்.எம்.எம்.ஹரீஸ், பைஸல் காஷிம், எஸ்.எம்.எம்.முஸர்ரப் மற்றும் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி­ஸாஹிர் மௌலானா ஆகி­யோரும் கலந்­து­கொண்­டனர்.

இதன்­போது, கிழக்கு மாகா­ணத்தில் நிர்­வா­கத்­துறை நிய­ம­னங்­க­ளின்­போது முஸ்லிம் அதி­கா­ரிகள் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்ள விடயம் குறித்து பிரஸ்­தா­பிக்­கப்­பட்­டுள்­ளது. இது விட­ய­மாகு பதி­ல­ளித்த கிழக்கு மாகாண ஆளுனர், விரைவில் இரு பத­விகள் வெற்­றி­ட­மா­க­வுள்­ளது, அவ்­வி­டங்­க­ளுக்கு முஸ்லிம் அதி­கா­ரி­களை நிய­மிப்­பது குறித்து கவனம் செலுத்த முடியும். அத்­தோடு, தகு­தி­யுள்­ள­வர்கள் குறித்து அவ­தானம் செலுத்­து­வ­தாக குறிப்­பிட்­டுள்ளார்.

இத­னி­டையே, குறித்த சந்­திப்­பின்­போது மட்­டக்­க­ளப்பு கோர­ளைப்­பற்று மத்தி பிர­தேச செய­லகம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் காத்­தான்­கு­டியில் மூடப்­பட்­டுள்ள பள்­ளி­வாசல் குறித்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி­சாஹிர் மௌலா­னா­வினால் ஜனா­தி­ப­திக்கு கடி­த­மொன்று கைய­ளிக்­கப்­பட்­டது.

இதில், மூடப்­பட்ட பள்­ளி­வா­சலை மீண்டும் திறப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ள­துடன், பல்­வேறு கோரிக்­கை­களும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன், இச்­சந்­திப்­பின்­போது, திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான இம்ரான் மகரூப் மற்றும் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்­பிலும் ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்கு கொண்­டு­செல்­லப்­பட்­டது.

இத­னி­டையே, கிழக்கு மாகாண நிர்­வாக அதி­கா­ரிகள் பத­விகள் வழங்­கப்­ப­டு­வதில் இன விகி­தா­சார சம­நிலை பேனப்­ப­டாமை குறித்த இம்ரான் மகரூப் எம்.பி. அண்மையில் கண்டனத்தை வெளியிட்டதுடன், பாரா­ளு­மன்­றத்­திலும் இது விட­ய­மாக சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். இந்­நி­லையில், தனக்கு கூட்­டத்­திற்­கான அழைப்பு விடுக்­கப்­ப­டா­மை­யா­னது வேறு நிகழ்ச்சி நிர­லுக்கு அமை­வா­ன­தாக இருக்­கலாம் என்றும் அவர் தெரிவித்தார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.