5 வருடங்களாகியும் தளர்த்தப்படாத முஸ்லிம்களுக்கு எதிரான தீர்மானங்கள்

0 118

ஏ.ஆர்.ஏ.பரீல்

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு நாட்டில் சிறு­பான்­மை­யாக வாழும் முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கைகள் சுமார் 5 வரு­டங்கள் அண்­மித்த நிலை­யிலும் தொடர்ந்தும் அமுலில் இருக்­கின்­றன.
உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு உட்­பட ஏனைய விசா­ர­ணை­களின் அறிக்­கைகள் வெளி­யி­டப்­பட்­டன. என்­றாலும் தாக்­கு­தலின் சூத்­தி­ர­தாரி இது­வரை கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை காரணம் காட்டி மஹர சிறைச்­சாலை வளாக நூற்­றாண்டு கால வர­லாறு உடைய பள்­ளி­வாசல் சிறைச்­சாலை அதி­கா­ரி­களால் கையேற்­கப்­பட்டு இன்று சிறைச்­சாலை ஊழி­யர்­களின் விடு­தி­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது. அங்கு புத்தர் சிலை­யொன்றும் வைக்­கப்­பட்­டுள்­ளது.
அத்­தோடு வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் இஸ்­லா­மிய நூல்கள், குர்ஆன் பிர­தி­க­ளுக்கு கடு­மை­யான நிபந்­த­னைகள் விதிக்­கப்­பட்­டுள்­ளன. குர்ஆன் பிர­திகள் கூட அவற்றுள் அடங்­கி­யி­ருக்கும் கருத்­துகள் தொடர்பில் ஆரா­யப்­ப­டு­கின்­றன. முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கி­வரும் இவ்­வா­றான சவால்கள் குறித்து அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிசாத் பதி­யுதீன் அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றி­யி­ருந்தார்.

ஏனைய மத நூல்­களின் இறக்­கு­ம­தியின் போது விதிக்­கப்­ப­டாத இவ்­வா­றான கடு­மை­யான நிபந்­த­னைகள் குர்ஆன் பிர­திகள் மற்றும் இஸ்­லா­மிய மத நூல்கள் இறக்­கு­ம­தியின் போது மாத்­திரம் ஏன் விதிக்­கப்­ப­டு­கின்­றன? முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் தீவி­ர­வா­தி­க­ளாக முத்­திரை குத்­தப்­பட்டு வரு­கி­றார்­களா?
அரபு நாடு­களில் இருந்து இலங்­கைக்கு வரும் சுற்­றுலாப் பய­ணிகள் தமக்குத் தேவை­யான குர்ஆன் பிரதி அல்­லது இஸ்­லா­மிய நூல்­களை எடுத்து வரும் போது அவை சுங்க அதி­கா­ரி­களால் பறி­முதல் செய்­யப்­ப­டு­கின்­றன. இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்­குத்தான் இந்த நிலைமை. எனவே பாது­காப்பு அமைச்­ச­ராக பதவி வகிக்கும் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க இது விட­யத்தில் உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரிசாத் பதி­யுதீன் கோரி­யுள்ளார்.

முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ முஸ்­லிம்­களை தீவி­ர­வா­தி­க­ளாக கருதி வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து குர்ஆன் பிர­தி­க­ளையும், இஸ்­லா­மிய நூல்­க­ளையும் நாட்­டுக்குள் கொண்டு வர அனு­ம­திக்க வேண்டாம் என பாது­காப்பு செய­லா­ள­ருக்கு கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்­துள்ளார். இக்­க­டி­தத்தை தற்­போ­தைய ஜனா­தி­பதி மீளப்­பெற்று குர்ஆன் பிர­திகள், இஸ்­லா­மிய நூல்கள் இறக்­கு­ம­திக்கு அனு­மதி வழங்க வேண்டும் எனவும் ரிசாத் பதி­யுதீன் கோரி­யுள்ளார்.

மேலும் நுவ­ரெ­லியா நோர்வூட் தோட்­டத்­தி­லுள்ள பள்­ளி­வாசல் காணியில் இஸ்­லா­மிய நிறு­வனம் ஒன்­றினால் கட்டி முடிக்­கப்­பட்ட ஐந்து வீடு­களை அப்­ப­குதி பிர­தேச செய­லாளர் வழக்­கு­தாக்கல் செய்து அரசு டமை­யாக்­கி­யி­ருக்­கிறார். இப்­ப­குதி மக்கள் நீதி­மன்றம் சென்று போரா­டு­ம­ள­வுக்கு பண­மில்­லா­த­வர்­க­ளா­கையால் அவ்­வீ­டுகள் ஒரு­த­லைப்­பட்­ச­மாக தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது எனவும் ரிசாத் பதி­யுதீன் சுட்டிக் காட்­டி­யுள்ளார். இது தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்­டமான், ராமேஸ்­வரன் எம்.பி. ஆகி­யோ­ருக்கு கடிதம் அனுப்­பியும், தொலை­பேசி மூலம் பேசியும் எந்தத் தீர்வும் எட்­டப்­ப­ட­வில்லை எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் குறித்த பள்­ளி­வாசல் நிர்­வாக சபை அங்­கத்­தவர் ஒரு­வரை விடி­வெள்ளி தொடர்பு கொண்டு வின­வி­யது.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 21 பேரையும் தொடர்பு கொண்டோம். அவர்­க­ளுக்கு கடிதம் அனுப்­பினோம். பிர­தேச அர­சி­யல்­வா­தி­க­ளையும் தொடர்­பு­கொண்டோம். ஆனால் இது­வரை எந்தத் தீர்வும் கிடைக்­க­வில்லை. இதே­வேளை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரிசாத் பதி­யுதீன் இவ்­வி­வ­கா­ரத்தை பாரா­ளு­மன்­றத்தின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­துள்ளார். அவ­ருக்கு நன்றி கூற வேண்டும்.

பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மாக 1 ஏக்கர் காணி­யி­ருக்­கி­றது. இக்­கா­ணியில் விவ­சாயம் செய்தோம். அதில் நஷ்டம் ஏற்­பட்­டது. இத­னை­ய­டுத்தே அக்­கா­ணியில் வீடு­களைக் கட்­டு­வ­தற்குத் தீர்­மா­னித்து 6 வீடு­களைக் கட்டி இப்­ப­குதி மக்­க­ளுக்கு 2500 ரூபா வாட­கைக்கு வழங்­கினோம்.

ஆனால் பிர­தேச செய­லாளர் இதற்­கெ­தி­ராக வழக்கு தாக்கல் செய்து வீடு­களை அர­சு­ட­மை­யாக்கிக் கொண்டார். தற்­போது பிர­தேச செய­ல­கத்தின் பணி­யா­ளர்கள் இந்த வீடு­களில் தங்­க­யி­ருக்­கி­றார்கள். நாம் பிர­தேச அர­சி­யல்­வா­தி­க­ளிடம் நீதி கோரி­யி­ருக்­கிறோம் என்று கூறினார்.

மஹர சிறைச்­சாலை பள்­ளி­வாசல்
மஹர சிறைச்­சாலை பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்­பி­லான தற்­போ­தைய நிலைமை தொடர்பில் பள்­ளி­வாசல் ஜமா­அத்தார் சங்க தலைவர் ஹபீல் லக்­ஸா­னவை தொடர்­பு­கொண்டு விடி­வெள்ளி வின­வி­யது.

அவர் விளக்­க­ம­ளிக்­கையில், ‘2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு பள்­ளி­வாசல் மூடப்­பட்­ட­தி­லி­ருந்து இப்­ப­குதி முஸ்­லிம்கள் தமது சமயக் கட­மை­களை நிறை­வேற்­றிக்­கொள்­வதில் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர். அருகில் உள்ள பள்­ளி­வா­சல்­க­ளுக்கு பல மைல்கள் பயணம் செய்ய வேண்­டி­யுள்­ளது. இப்­ப­குதி மக்­க­ளுக்கு பள்­ளி­வா­ச­லொன்­றினை அமைத்­துக்­கொள்­வ­தற்கு ஏற்­பாடு செய்­யு­மாறு ஜனா­தி­பதி நீதி­ய­மைச்சர், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம், வக்பு சபை, சிறைச்­சாலை திணைக்­களம் என்­ப­ன­வற்­றிடம் பல தட­வைகள் கோரிக்கை விடுத்­துள்ளோம்.

நியாயம் கோரி வழக்குத் தாக்கல் செய்­வ­தற்கு எம்­மிடம் பணம் இல்லை. 2019இல் வக்பு ட்ரிபி­யு­னலில் வழக்­கொன்று நடந்­தது. சிறைச்­சாலை ஆணை­யா­ள­ருக்கு உரிய நட­வ­டிக்கை எடுக்­கும்­படி அறி­விக்­கப்­பட்டும் எதுவும் நடை­பெ­ற­வில்லை. தற்­போ­தைய வக்பு சபைக்கும் எமது நிலை­மையை அறி­வித்­துள்ளோம். முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் தொடர்பு கொண்­டுள்ளோம். ஆனால் தீர்வு தான் கிடைக்­க­வில்லை.

பள்­ளி­வாசல் பரி­பா­லன சபை தற்­போது ஒரு நிலைப்­பாட்­டுக்கு வந்­துள்­ளது. இது தொடர்பில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு அறி­விக்­க­வுள்ளோம். மூடப்­பட்­டுள்ள பள்­ளி­வா­ச­லுக்குப் பதி­லாக சிறைச்­சாலை காணியில் எமக்கு இடம் ஒதுக்கித் தரு­மாறு கோர­வுள்ளோம். நாங்­களே புதி­தாக பள்­ளி­வா­சலை நிர்­மா­ணித்துக் கொள்ள தீர்­மா­னித்­துள்ளோம்’ என்றார்.

ராகம வைத்­தி­ய­சாலை பள்­ளி­வாசல்
ராகம அர­சாங்க வைத்­தி­ய­சா­லையில் இயங்­கி­வந்த பள்­ளி­வாசல் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு மூடப்­பட்­டுள்­ளது. இந்தப் பள்­ளி­வா­சலும் இது­வரை திறக்­கப்­ப­ட­வில்லை. இது தொடர்பில் சுகா­தார அமைச்சர், ஜனா­தி­பதி மற்றும் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வித்தும் திறப்­ப­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை.

ராகம வைத்­தி­ய­சா­லையில் பணி­பு­ரியும் முஸ்லிம் டாக்­டர்கள், ஊழி­யர்கள் மற்றும் வைத்­தி­ய­சா­லைக்கு வருகை தரும் முஸ்­லிம்கள் தமது சமய கட­மை­க­ளுக்கு இந்தப் பள்­ளி­வா­சலைப் பயன்­ப­டுத்தி வந்­தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லை­ய­டுத்து முஸ்லிம் சமூ­கத்­தின்­மீது சந்­தேகம் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள இவ்வாறான நடவடிக்கைகளினால் முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. தங்களது சமயக் கடமைகளையேனும் நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலைக்கு அவர்கள் ஆளாகியுள்ளனர். பாராளுமன்றத்தில் கணிசமான அளவு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகித்தாலும் சமூகம் சார்ந்த இந்த விவகாரங்களுக்கு இதுவரை தீர்வு பெற்றுக் கொள்ள முடியாதிருப்பது வருந்தத் தக்கதாகும்.

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க முஸ்­லிம்கள் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னைக்கு விரைவில் தீர்வு வழங்­கப்­படும் என்று நீண்ட கால­மாக கூறி­வ­ரு­கிறார். ஆனால் இது­வரை எவ்­வித நட­வ­டிக்­கையும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. எதிர்­வரும் தேர்­தல்­க­ளுக்கு முன்­பா­வது தீர்­வுகள் கிட்­டுமா? என முஸ்லிம் சமூகம் காத்திருக்கிறது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.