46 மேலதிக வாக்குகளால் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் சபையில் நிறைவேற்றப்பட்டது

ஆதரவாக 108 வாக்குகள்; எதிராக 62 வாக்குகள்; 54 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை

0 107

(எம்.ஆர்.எம்.வசீம், இரா.ஹஷான்)
நிகழ்­நிலைக் காப்புச் சட்­ட­மூலம் 46 மேல­திக வாக்­கு­களால் திருத்­தங்­க­ளுடன் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டது.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்­று­முன்­தி­னமும் நேற்­றை­ய­தி­னமும் விவா­தத்­துக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட நிகழ்­நிலைக் காப்புச் சட்­ட­மூலம் நேற்­றைய வாக்­கெ­டுப்­பின்­போது நிறை­வேற்­றப்­பட்­டது.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்­தினம் எதிர்க்­கட்­சி­களின் கடும் எதிர்ப்­பு­க­ளுக்கு மத்­தியில் பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் டிரான் அல­சினால் சபைக்கு சமர்ப்­பிக்கப்­பட்­ட நிகழ்­நிலை காப்புச் சட்­ட­மூலம் நேற்­று­முன்­தினம் சபையில் முன்­வைக்­கப்­பட்டு விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. இந்­நி­லையில் இரண்­டா­வது நாளாக நேற்றும் குறித்த சட்­ட­மூலம் விவா­திக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில், சட்­ட­மூ­லத்தின் இரண்­டா­வது மதிப்­பீட்டு விவாதம் முடி­வ­டைந்­ததும் நேற்று பி.ப 5.00 மணிக்கு எதிர்க்­கட்­சியின் பிர­த­ம­ கொ­ரடா பாரா­ளு­மன்ற உறுப்­பினர் லக்ஷ்மன் கிரி­யல்­ல­வினால் வாக்­கெ­டுப்புக் கோரப்­பட்­டது. இதற்கு அமைய நடத்­தப்­பட்ட வாக்­கெ­டுப்பில் சட்­ட­மூ­லத்­துக்கு ஆத­ர­வாக 108 வாக்குகளும் எதி­ராக 62 வாக்­கு­களும் பதி­வா­கின. இதற்­கமைய இந்தச் சட்­ட­மூ­லத்தின் இரண்­டா­வது மதிப்­பீடு 46 மேல­திக வாக்­கு­களால் நிறை­வேற்­றப்­பட்­டது. இத­னி­டையே 54 உறுப்­பி­னர்கள் வாக்­கெ­டுப்பில் கலந்­து­கொள்­ள­வில்லை.
விசே­ட­மாக, இதில் சட்ட மூலத்­துக்கு அர­சுடன் இணைந்து செயற்­ப­டும் எதிர்­க்கட்சி தரப்பில் உள்ள அலி­சப்ரி ரஹீம், ஏ.எல்.எம். அதா­வுல்லா உள்­ளிட்டோர் ஆத­ர­வாக வாக்­க­ளித்­தனர். எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதி­யுதீன், இம்­தியாஸ் பாக்கிர் மாக்கார், எம்.எச். அப்துல் ஹலீம், கபீர் ஹாஷிம், இம்ரான் மகரூப், எஸ்.எம்.மரிக்கார், அலி­சாஹிர் மௌலானா, பைஸல் காஷிம், எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் எதி­ராக வாக்­க­ளித்­தனர். இத­னி­டையே, குறித்த வாக்­கெ­டுப்பில் அமைச்சர் அலி சப்ரி, இரா­ஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், அரச ஆத­ரவு உறுப்­பினர் எஸ்.எம்.எம்.முஸர்ரப், எதி­ரணி உறுப்­பி­னர்­க­ளான எச்.எம்.எம்.ஹரீஸ், ஏ.ஆர்.இஷாக், ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் வாக்­கெ­டுப்­புக்கு வருகை தந்­தி­ருக்­க­வில்லை.

இதன் பின்னர், குழு நிலையில் திருத்­தங்கள் முன்­வைக்­கப்­பட்­ட­துடன், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சந்­திம வீரக்­கொ­டி­யினால் சட்­ட­மூ­லத்தின் 36வது பிரிவு தொடர்பில் முன்­வைக்­கப்­பட்ட திருத்­தத்­துக்கு வாக்­கெ­டுப்புக் கோரப்­பட்­டது. இதற்கு நடத்­தப்­பட்ட வாக்­கெ­டுப்பில் குறித்த திருத்­தத்­துக்கு ஆதரவாக 51 வாக்குகளும், எதிராக 92 வாக்குகளும் அளிக்கப்பட்டு 41 மேலதிக வாக்குகளால் இந்தத் திருத்தம் தோற்கடிக்கப்பட்டது.
இதனையடுத்து நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.