அபாய சமிக்­ஞையை எழுப்­பும் மத்திய கிழக்கு மோதல்­கள்

0 270

கா­ஸாவில் கடந்த வருடம் ஒக்­டோபர் 7 ஆம் திகதி தொடங்­கிய போர் 100நாட்கள் கடந்தும் முடி­வின்றித் தொடர்­கி­றது. ஒரே ஒரு தடவை ஓரிரு நாட்­க­ளுக்கு போர் நிறுத்­தப்­பட்ட போதிலும் அதுவும் எதிர்­பார்த்­த­ளவு நீடிக்­க­வில்லை. ஒக்­­டோபர் 7 முதல் நேற்று வரை சுமார் 26000 இற்கும் மேற்­பட்ட பலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­பட்­டுள்­ள­னர். 63 ஆயிரம் பேர் காய­­முற்­றுள்­ளனர். மறு­புறம் இக் காலப்­ ப­­கு­தியில் ஹமாஸின் தாக்­கு­தல்களில் கொல்­லப்பட்ட இஸ்­ரே­லி­யர்­களின் எண்­ணிக்கை 1139 எனக் குறிப்­பி­டப்­ப­டு­கி­றது.

கடந்த திங்கட்கிழமை இடம்­பெற்ற மோதல்­களில் 24 இஸ்­ரே­லிய படை­யினர் கொல்­லப்­ப­ட்­டுள்­ளனர். பலஸ்­தீன போரா­ளி­களின் ரொக்கட் தாக்­கு­தலில் இவர்கள் கொல்­லப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­­டு­கி­றது. போர் ஆரம்­பித்த பிற்­பாடு ஒரே தாக்­கு­த­லில் அதி­க­மான இஸ்­ரே­லி­யர்கள் கொல்­லப்­பட்ட சம்­ப­வ­மாக இது பார்க்­கப்ப­டு­கி­ற­து. அதற்கு முன்­தினம் காஸாவில் இஸ்ரேல் நடத்­திய தாக்­கு­தல்­களில் 195 பலஸ்­தீ­னர்கள் கொல்­ல­ப்­பட்­டி­ருந்­த­னர்.

இவ்­வாறு நாளுக்கு நாள் இஸ்ரேல் – பலஸ்­தீன மோதல் மோச­ம­டைந்து கொண்டே செல்­கி­றது. உயி­ரி­ழப்­பு­க­ளும் மனி­தா­பி­மான நெருக்­க­டி­க­ளும் முடிவின்றித் தொடர்­கின்­ற­ன.

இந்த முரண்­பாட்­டுடன் இணைந்­த­தாக மத்­திய கிழக்கு எங்கும் போர் பதற்றம் சூழ்ந்­துள்­ளது. குறிப்­பாக ஈரான் பாகிஸ்­தா­னி­லுள்ள தீவி­ர­வாதக் குழு ஒன்றை இலக்கு வைத்து நடாத்­திய ரொக்கட் தாக்­குதல் இரு நாடு­க­ளுக்­கு­மி­டையில் பதற்­றத்தைத் தோற்­று­வித்­தது.

அதே­போன்று செங்­க­டலில் யெமன் ஹூதி போரா­ளி­கள் இஸ்ரேல் மற்றும் அதன் ஆத­ரவு நாடு­களின் கப்­பல்­களை இலக்கு வைத்து நடத்தும் தாக்­கு­தல்கள் மற்­றுமொரு போருக்கு வித்­திட்­டுள்­ளன. கடந்த திங்­கட்­கி­ழ­மையும் அமெ­ரிக்க கப்­பல் ஒன்று மீது ஹூதிகள் தாக்­கு­தலை நடத்­தி­யி­ருந்­­த­னர். இதற்குப் பதி­ல­டி­யாக அமெ­ரிக்கா மற்றும் பிரித்­தா­னியா தலை­மை­யி­லா­ன படைகள் யெம­னி­லுள்ள ஹூதி இலக்­குகள் மீது வான் தாக்­குதல் நடத்­தி­யுள்­ளன. இந்த அணி­யு­டன் இணைந்து ஹூதி­க­ளுக்கு எதி­ராக போரா­டவே இலங்கைக் கடற்­படைக் கப்­பலை அனுப்ப­வுள்ள ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க அண்­­மையில் கூறி­யி­ருந்­தா­ர். பலஸ்­தீன போரா­ட்டக் குழுக்­க­ளுக்கு ஆத­ர­வு தெரி­வி­க்கும் வகை­யி­லேயே ஹூதிகள் கப்­பல்­களை இலக்கு வைத்த தாக்­கு­தல்­க­ளை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர். ஹூதி­க­ளுக்கு ஈரான் முழு­மை­யான ஆத­ரவை வழங்கி வரு­கி­ற­து.

மறு­பு­றம் லெப­னா­னைத் தள­மாகக் கொண்­டி­யங்கும் ஹிஸ்­புல்லாஹ் இய­க்­க­மும் இஸ்­ரே­லுக்கு எதி­ரான தாக்­கு­தல்­களை முன்­னெ­டுத்­து வரு­கி­றது. இஸ்­ரேலும் ஹிஸ்­புல்லாஹ் இலக்­கு­களை குறி­வைத்துத் தாக்­­கு­கி­றது. அது மாத்­தி­ர­மன்றி ஈராக்கில் இயங்கி வந்த இஸ்­ரேலின் மொசாட் அலு­வ­லகம் மீது ஈரான் நடத்­திய ரொக்கட் தாக்­கு­தலில் நால்வர் கொல்­லப்­பட்ட சம்­ப­வமும் பிராந்­தி­யத்தில் பதற்­றத்தை அதி­க­ரிக்க கார­ண­மா­கி­யுள்­ளது. அதே­போன்று மூன்று வாரங்­க­ளுக்கு முன்னர் லெப­னானில் அமைந்­துள்ள ஹமாஸ் அலு­வ­லகம் மீது இஸ்ரேல் நடாத்­திய ட்ரோன் தாக்­கு­தலில் ஹமாஸின் பிரதித் தலைவர் சாலிஹ் அல் அரூரி கொல்­லப்பட் சம்­ப­வமும் போரில் சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­களின் பழி­வாங்­கல்கள் உச்­ச­கட்­டத்தில் இருப்­பதைக் காட்­டு­கின்­ற­ன.

இவற்­றுக்கு அப்பால் சிரியா மீதும் இஸ்ரேல் இந்த வாரம் தாக்­குதல் நடத்­தி­யுள்­ளது. தலை­நகர் டமாஸ்கஸ் மீது கடந்த சனிக்­கி­ழமை நடாத்­தப்­பட்ட தாக்­கு­தலில் 10 பேர் கொல்­லப்­பட்­டுள்­ளனர். உயி­ரி­ழ­ந்­த­வர்­களில் ஐவர் ஈரான் இஸ்­லா­மிய குடி­ய­ர­சு பாது­காப்பு படை­யின் உறுப்பி­னர்­க­ளா­வர்.

இவ்­வாறு பலஸ்­தீன் இஸ்ரேல் மோதலைச் சூழ்ந்து மேலும் பல மோதல்கள் மத்­திய கிழக்­கெங்கும் பர­வி­யுள்­ளன. இது மத்­திய கிழக்­கின் அமைதி மற்றும் எதிர்­காலம் குறித்த கவ­லையைத் தோற்­று­வித்­துள்­ளது. மேற்கு நாடுகள் இஸ்­ரேலின் பின்னால் மறைந்து கொண்டு மற்­று­மொரு மிக மோச­மான போரை மத்­திய கிழக்­கி­லுள்ள இஸ்­லா­மிய தேசங்கள் மீது கட்­ட­விழ்த்­து விட்டுள்­ளன என்­ப­தையே இச் சம்­ப­வங்கள் எடுத்துக் காட்­டு­கின்­ற­ன.

ஏற்­க­னவே ஆப்­கா­னிஸ்­தானையும் ஈராக்­கையும் சிரி­யா­வையும் லிபி­யா­வை­யும் சிதைத்­தது போல் மேலும் பல முஸ்லிம் நாடு­களையும் சின்­னா­பின்­னப்­ப­டுத்தும் மறை­முக நோக்­கமே இதன் பின்னால் இருப்­பது தெரி­கி­ற­து.
இவ்­வா­றான பல் தரப்பு மோதல்­களால் மத்­திய கிழக்கு பாரிய மனி­தா­பி­மான நெருக்­க­டியைச் சந்­தித்­துள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் மனி­தா­பி­மான முக­வ­ரகம் தெரி­வித்­துள்­ளது. குறிப்­பா­க 1991 இற்குப் பின்னர் இவ்­வா­றான மோச­மா­ன­தொரு நிலை­மையை தாம் அவ­தா­னிப்­ப­தாக அந்நிறு­வனம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­து.

இந்­நி­லையில் மத்­திய கிழக்கில் அமை­தியை நிலை­நாட்­டு­வ­தற்­கான முயற்­­சி­களை மேலும் தீவி­ரப்­ப­டுத்த வேண்­டி­யதே உலக நாடுகள் மீதுள்ள கடப்­பா­டாகும். வல்­ல­ரசு நாடுகள் மோதல்­களில் பங்­கேற்று முரண்­பாட்டை மேலும் கூர்­மைப்­­ப­டுத்­தாது அமை­தியை நிலை­­நாட்ட முன்­வர வேண்­­டும் என வலி­யு­றுத்த விரும்­பு­கிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.