ரம்ஸி ராஸிக் : முறைப்­பா­டு செய்­த­வ­ரையே கைது செய்து சிறை­யி­ல­டை­த்த பொலிஸ்

0 101

ஏப்ரல் 2020 இல், குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் (சிஐடி) மொஹமட் ராஸீக் மொஹமட் ரம்­சியை கடு­கஸ்­தோட்­டையில் உள்ள அவ­ரது வீட்டில் வைத்து சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பான சர்­வ­தேச உடன்­ப­டிக்­கையை (ஐசி­சி­பிஆர்) மீறிய குற்­றச்­சாட்டில் கைது செய்­தது.

முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக கூறப்­படும் இன­வெறி தாக்­கு­தல்­களை எதிர்­கொள்ள “பேனா மற்றும் கணினி” மூலம் “சித்­தாந்த ஜிஹாத்” (போராட்டம்) செய்ய வேண்டும் என முஸ்­லிம்­களை வலி­யு­றுத்தும் வகையில் முகநூல் பதிவை எழு­தி­யதே அவர் செய்த குற்­ற­மாகும்.

சென்ற மாதம் நீதி­மன்­றத்தால் குற்­றச்­சாட்­டு­க­ளி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­டுள்ள கவி­ஞரும் சமூக ஊடக ஆர்­வ­ல­ரு­மான ரம்ஸி, அந்த வலி­மி­குந்த கால­கட்­டத்­தையும், அது அவர் மீதும், அவ­ரது மனைவி மற்றும் இரு பிள்­ளைகள் மீதும் ஏற்­ப­டுத்­திய நிரந்­தர வடுக்கள் குறித்­தும்­சண்டே டைம்­ஸுடன் பகிர்ந்து கொள்­கிறார். இந்த சம்­ப­வத்தால் “நான் மிகவும் கஷ்­டப்­பட்டேன், என் குடும்­பமும் மிகவும் கஷ்­டப்­பட்­டது.” என்றும் அவர் கூறினார்.

முகநூல் பதிவில் ‘ஜிஹாத்’ என்ற வார்த்­தையைப் பயன்­ப­டுத்­தி­ய­தற்கு வருத்­தப்­ப­டு­கி­றீர்­களா, அதனை சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தாத வகையில் கூறி­யி­ருக்­கலாம் என கரு­து­கி­றீர்­களா எனக் கேட்­ட­தற்கு, “பதிவில் எதையும் மாற்ற வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்று நான் நினைக்­கிறேன். ஏதா­வது தவறு இருந்தால் தானே நான் மாற்ற வேண்டும்.” என்றார்.

“நான் அந்த பதிவை முஸ்லிம் சமூ­கத்­திற்­காக எழு­தி­யதால் தான் நான் ‘ஜிஹாத்’ என்ற வார்த்­தையைப் பயன்­ப­டுத்­தினேன்,” என்று அவர் கூறினார். “நான் முஸ்­லிம்­க­ளுக்கு எழு­தும்­போது, முஸ்­லிம்­களால் புரிந்­து­கொள்­ளப்­படக் கூடிய விதத்­தி­லேயே குறிப்­பிட வேண்டும், எங்கள் மொழி வழக்கில் இந்த வார்த்­தையை பயன்­ப­டுத்­து­கிறோம்’’ என்றார்.

இந்த ஆண்டு நவம்பர் 14 அன்று, ரம்­ஸியின் அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­ட­தாக உயர் நீதி­மன்றம் அறி­வித்­தது. அவர் ICCPR சட்டம், தண்­டனைச் சட்டம் அல்­லது கணினி குற்றச் சட்டம் ஆகிய மூன்று சட்­டங்­களின் கீழ் கைது செய்து தடுப்புக் காவலில் வைக்­கு­ம­ளவு எந்த குற்­றமும் செய்­ய­வில்லை என்றும் அது தீர்­மா­னித்­தது.

சர்ச்­சைக்­கு­ரிய பதிவைத் தொடர்ந்து வந்த நாட்­களில், ரம்­ஸிக்கு எதி­ராக முஸ்லிம் விரோத வெறுப்பு பதி­வுகள் முக­நூலில் அதிகம் பகி­ரப்­பட்டன். அத்­துடன் அவ­ரது உயி­ருக்கு அச்­சு­றுத்­தல்­களும் விடுக்­கப்­பட்­டன. இது பற்றி உட­ன­டி­யாக பொலிஸ் மா அதி­ப­ரிடம் புகார் செய்தார். பொலிசார் அவ­ருக்கு பதில் வழங்­கவோ பாது­காப்பை வழங்­கவோ இல்லை. மாறாக முறைப்­பாடு செய்த ரம்­ஸி­யையே பொலிசார் அன்று மாலை கைது செய்­தனர்.

அடுத்த ஐந்து மாதங்­களும் எட்டு நாட்­களும் அவரை தடுப்புக் காவலில் வைத்­தி­ருந்­தனர். செப்­டம்பர் 2020 இல், அவ­ருக்கு பிணை வழங்­கப்­பட்­டது.
கைது செய்­யப்­பட்­டதைத் தொடர்ந்து, ரம்ஸி ராஸிக் கொழும்­புக்கு அழைத்து வரப்­பட்டு, சிஐடி தலை­மை­ய­கத்தில் இர­வோடு இர­வாகத் தங்க வைக்­கப்­பட்டார். அங்கு இருந்­த­வர்கள் அல்­லாஹ்வை அவ­ம­திக்கும் வார்த்­தை­களைப் பயன்­ப­டுத்தி ரம்­ஸியை நோக்கி கூச்­ச­லிட்­ட­துடன் ரம்ஸி மீது தாக்­கு­தலும் நடத்­தினர். அவர்கள் “நீ எங்கள் மீது போர் பிர­க­டனம் செய்ய முயன்­றி­ருக்­கிறாய்” என்று குற்­றம்­சாட்­டினர் கூச்­ச­லிட்­டனர். ரம்ஸி மறுநாள் மாஜிஸ்­திரேட் முன் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டார். இதன்­போது அங்கு அவ­ரது உடல்­நிலை மோச­ம­டைந்­தது.

ரம்­ஸிக்கு முடக்கு வாதம் உள்­ளது. இதனால் விவ­சாயத் திணைக்­க­ளத்தில் மொழி­பெ­யர்ப்­பா­ள­ராக கட­மை­யாற்றி வந்த அவர் முன்­கூட்­டியே ஓய்­வு­பெற வேண்­டிய கட்­டாயம் ஏற்­பட்­டது. “எனக்கு ஏற்­பட்ட நோய் கார­ண­மாக, சிறையில் தலை­ய­ணைகள் இல்­லாமல் சிமென்ட் தரையில் தூங்­கு­வது மிகவும் கஷ்­ட­மாக இருந்­தது,” என்று அவர் கூறினார். “ சிறைக்குள் மிகவும் நெரி­ச­லாக இருந்­தது, சில கைதிகள் கழிப்­ப­றை­களில் தூங்­கினர், மற்­ற­வர்கள் நின்று கொண்டே தூங்­குவர்.” என்றார்.

சிறைச்­சா­லையில் குந்தி மலங்­க­ழிக்கும் கழிப்­பறை மட்­டுமே இருந்­ததால், கழி­வ­றையைப் பயன்­ப­டுத்­து­வது கூட அவ­ருக்கு கஷ்­ட­மாக இருந்­தது. இரண்டு மாதங்­க­ளுக்குள், ரம்­ஸியின் கால்­களில் ஏற்­பட்ட புண்­க­ளுக்­காக சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்றார். “அவர்கள் எனக்கு வலி நிவா­ர­ணி­களை மட்­டுமே கொடுத்­தனர் மற்றும் என் காயங்­க­ளுக்கு மருந்­திட்­டனர்,” என்று அவர் கூறினார். “எனக்குத் தேவை­யான மருந்து தங்­க­ளிடம் இல்லை என்று சிறைச்­சாலை வைத்­தி­ய­சாலை ஊழி­யர்கள் கூறினர், அது கொரோனா காலம் என்­பதால், எனது மூட்­டு­வ­லிக்­கான மருந்தை எனது குடும்­பத்­தி­னரால் தொடர்ந்து அனுப்ப முடி­ய­வில்லை.”

மற்­றொரு முறை, ஒன்லைன் வழி­யாக நடந்த நீதி­மன்ற அமர்வில் கலந்து கொள்ள சிறைக் காவ­லர்­களால் அவ­ச­ர­மாக அழைத்துச் செல்­லப்­பட்­ட­த­போது, ரம்ஸி தடுக்கி வீழ்ந்து காயம் அடைந்தார். “எனது மூட்­டு­வலி கார­ண­மாக என்னால் வேக­மாக நடக்க முடி­யாது. பொலிசார் அவ­ச­ரப்­ப­டுத்­தி­யதால் நான் அவ­ச­ரப்­பட வேண்­டிய கட்­டாயம் ஏற்­பட்­டது,” என்று அவர் கூறினார். ” ‘‘அந்த ஒன்லைன் அமர்வில் வலியைச் சகித்துக் கொண்டே பங்­கு­பற்­றினேன்” என்றார்.

இவ் விபத்து நடந்து ஒரு வாரத்­திற்கு பின்­னரே டாக்­டர்கள் எக்ஸ்ரே எடுத்து கை முறிந்­தி­ருப்­பதை கண்­டு­பி­டித்­தனர்: அவர்கள் அன்று சரி­யாக சிகிச்சை வழங்­க­வில்லை, அதனால் அந்தக் கை இன்­று­வரை பழைய நிலைக்குத் திரும்­ப­வில்லை” என்றும் அவர் குறிப்­பிட்டார்.

கொவிட்-19 தடுப்பு விதி­மு­றைகள் குறிப்­பாக கைதி­க­ளுக்கு கடு­மை­யா­கவே இருந்­தது. இதனால் உற­வி­னர்கள் அவர்­களைப் பார்க்­கவோ தேவை­யா­ன­வற்றை வழங்­கவோ முடி­யாத நிலை ஏற்­பட்­டது. கொரோனா விதி­மு­றைகள் தளர்த்­தப்­பட்­டதும் ரம்­ஸியை குடும்­பத்­தினர் அவ்­வப்­போது சந்­தித்­தனர். ஆனால் அவர் காவலில் இருந்த காலம் வரை, அவர் ஒரு முறை கூட தனது சட்­டத்­த­ர­ணி­களை சந்­திக்­க­வில்லை. அவர் நீதி­வா­னுடன் இணையம் வழி­யாகப் பேசி­ய­போது, காவலில் இருந்­த­போது தான் அனு­ப­வித்த கஷ்­டங்­களைப் பற்றி சுதந்­தி­ர­மாக நீதி­வா­னிடம் கூறு­வ­தற்கு சிறைச்­சாலை அதி­கா­ரிகள் இட­ம­ளிக்­க­வில்லை. இந்த அனு­பவம் தன்னை மன உளைச்­ச­லுக்கு ஆளாக்­கி­யுள்­ளது என்­கிறார்.

“ரிமாண்டில் அனை­வரும் மோச­மாக நடத்­தப்­ப­டு­கி­றார்கள்,” என்று அவர் கூறினார். “ஆனால் காவ­லர்கள் என்னை உள­வியல் ரீதி­யாக குறி­வைத்து, ‘ஐஎஸ்­ஐஎஸ் காரன்’ என்று அழைத்­தனர். என்னை ஒரு பயங்­க­ர­வாதி போல் நடத்­தினர்.” என்றார். அதே­போன்று சிறைக்கு வெளியே, அவ­ரது குடும்­பத்­தி­னரும் பயங்­க­ர­வா­தி­களைப் போன்றே பார்க்­கப்­பட்­டனர்.
அவர் கைது செய்­யப்­பட்­ட­போது ரம்­ஸியின் மக­ளுக்கு வயது 16. தந்தை விளக்­க­ம­றியல் சிறையில் இருந்­த­போமே மகள் சாதா­ரண தர பரீட்­சைக்குத் தோற்­றினார். அச்­சு­றுத்­தல்­களால் தாங்கள் தாக்­கப்­ப­டலாம் என்ற பயத்தில் மகள் இருந்தார். அதனால் அவர் பயணம் செய்­வ­தையோ அல்­லது டியூஷன் வகுப்­பு­க­ளுக்குச் செல்­வ­தையோ தவிர்த்­து­விட்டார்.

“உயர்­நீ­தி­மன்­றத்தால் பிணை வழங்­கப்­பட்ட பிறகும், நண்­பர்கள் எங்­க­ளிடம் பேசு­வ­தற்கு பயந்­தனர், மேலும் சில அய­ல­வர்கள் எங்­களை பயங்­க­ர­வா­திகள் போல பார்த்­தார்கள்” என்று ரம்ஸி கூறினார். இந்தக் கைதினால் “எனது நற்­பெ­ய­ருக்கு களங்கம் ஏற்­பட்­டது.” என்றார்.

உள­வியல் பாதிப்­புக்கு மேல­தி­க­மாக, அவ­ரது குடும்பம் பொரு­ளா­தார நெருக்­க­டி­யையும் சந்­தித்­தது. முன்­கூட்­டியே ஓய்வு பெற்­றதால் சிறிய ஓய்­வூ­தி­யமே அவ­ருக்கு கிடைத்­தது. ஃப்ரீலான்ஸ் வேலைகள் இல்­லாமல், அன்­றாட செல­வு­களைச் சந்­திப்­பது கடி­ன­மாக இருந்­தது. இந்த பாதிப்­பு­க­ளி­லி­ருந்து இன்று வரை இக் குடும்பம் மீள­வில்லை.

இப்­போ­தெல்லாம் எனக்கு வேலை குறை­வா­கவே கிடைக்­கி­றது,” என்று ரம்ஸி விளக்­கினார். “கை மற்றும் மோச­ம­டைந்து வரும் மூட்­டு­வலி கார­ண­மாக கணி­னியில் தட்­டச்சு செய்­வதும் கடினம்.” என்றார்.

தான் கைது செய்­யப்­பட்­டி­ருப்­பது துன்­பு­றுத்­தலை இலக்­காகக் கொண்­டது என்றும், சட்­டத்தை மீறிய அடிப்­ப­டையில் அல்ல என்றும் ரம்ஸி கூறு­கிறார். (தற்­போது மக்கள் தவ­றாகக் கைது செய்­யப்­பட்டு தடுப்புக் காவலில் வைக்­கப்­படும் போக்கு அதி­க­மாக இருப்­ப­தாக உயர்­நீ­தி­மன்றம் தனது தீர்ப்பில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­மையும் கவ­னிக்­கத்­தக்­கது)

“ICCPR இன் கீழ் மஜிஸ்­திரேட் எனக்கு பிணை வழங்க முடி­யாது என்­பது அவர்­க­ளுக்குத் தெரியும். இந்த சட்­டத்தின் கீழ், அவர்கள் குறைந்­தது ஆறு மாதங்­க­ளுக்கு என்னை உள்ளே வைத்­தி­ருக்க முடியும்.” என்று குறிப்பிட் அவர் பிணை கிடைத்த பிறகும், வழக்கு மேலும் மூன்று ஆண்­டுகள் நீடித்­த­தா­கவும் கூறினார்.

அவரைக் கைது செய்து காவலில் வைத்­தி­ருப்­ப­தற்கு, சிஐடி அதி­கா­ரிகள் ஐசி­சி­பிஆர், குற்­ற­வியல் சட்டம் மற்றும் கணினி குற்றச் சட்டம் ஆகி­ய­வற்றின் பிரி­வு­களை “ஆயு­தங்­க­ளாக” பயன்­ப­டுத்­தினர் மற்றும் “தண்­ட­னைக்கு சம­மான நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளனர்” என்றும் உயர்­நீ­தி­மன்றம் தனது தீர்ப்பில் கூறி­யது.
ரம்ஸி ராசிக்கை கைது செய்து தடுத்து வைத்­த­மைக்­காக அரசு அவ­ருக்கு ரூ. 10 இலட்சம் இழப்­பீடு வழங்க வேண்டும் என்றும் கணினி மற்றும் தட­ய­வியல் பயிற்சிப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி மற்றும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் ஆகியோர் ரம்­ஸிக்கு அவர்­களின் தனிப்­பட்ட நிதி­யி­லி­ருந்து தலா ரூ. 30,000 வழங்க வேண்டும் என்றும் உயர் நீதி­மன்றம் அண்­மையில் தீர்ப்­ப­ளித்­தது.

ஒப்­பீட்­ட­ளவில் இது சிறிய இழப்­பீடு என்ற போதிலும் இந்த தீர்ப்பு முக்­கி­யத்­து­மிக்­கது என ரம்ஸி கரு­து­கிறார். ” நான் மிகவும் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன். இத் தீர்ப்பு அனை­வ­ருக்கும் பய­னுள்­ள­தாக இருக்கும். இதன் பிறகு தன்­னிச்­சை­யாக மக்­களைக் கைது செய்­வ­தற்கு பொலிசார் தயங்­கு­வார்கள்.’’ என்றார்.
இன்று, ரம்ஸி ஒரு சுயா­தீன மொழி­பெ­யர்ப்­பா­ள­ரா­கவும் சமூக ஊடக ஆர்­வ­ல­ரா­கவும் கிறேன். இத் தீர்ப்பு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதன் பிற­கு தன்னிச்சையாக மக்களைக் கைது செய்வதற்கு பொலிசார் தயங்குவார்கள்.’’ என்றார்.

இன்று, ரம்ஸி ஒரு சுயா­தீ­ன மொழிபெயர்ப்பாளராகவும் சமூக ஊடக ஆர்வலராகவும் சிவில் சமூக செயற்­பாட்­டா­ள­ரா­க­வும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அவர் சுதந்திரம், கலை மற்றும் வெளிப்பாட்டிற்கான நடவடிக்கைக் குழுவு­ட­ன் இணைந்­தும் பணியாற்றுகிறார். மேலும் தனக்கு விருப்­ப­மா­­ன இதயத்திற்கு நெருக்கமான தலைப்புகளில் எழுதியும் வரு­கி­றார்.
உங்கள் வாழ்வில் சந்­தித்த இந்த அனு­பவம் சமூக விவ­கா­ரங்­களில் குரல் கொடுப்­ப­தற்கு உங்­க­ளுக்கு அச்­சத்தை தந்­ததா எனக் கேட்­ட­­தற்கு ‘‘ என் பங்கை தொடர்ந்து செய்வேன்,” என அவர் பதிலளித்தார். “குறைந்த பட்சம் அடுத்த தலைமுறைக்காவ­து, நம் நாட்டிலும் சமூகத்திலும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்” என்­றார்.

நன்றி: சண்டே ரைம்ஸ் 03.12.2023

  • Vidivelli

Leave A Reply

Your email address will not be published.