மூலைக்குள் ஆர்ப்­பாட்டம் நடாத்தி யாது பயன்?

0 122

காசாவில் நெத்­த­ன்யா­குவின் இஸ்­ரவேல் படைகள் மேற்­கொண்­டுள்ள இனச்­சுத்­தி­க­ரிப்­பையும், கொலை­க­ளையும், அழி­வு­க­ளையும், அவற்றுள் குறிப்­பாக, பச்­சிளம் பால­கரின் உயி­ரற்ற சட­லங்­க­ளையும் அவற்றைக் கட்­டி­ய­ணைத்துக் கதறும் தாய்க்­கு­லத்­தையும் காணொ­ளிகள் காட்­டும்­போது எந்தக் கல்­நெஞ்­சமும் இள­கா­தி­ருக்க முடி­யாது. போருக்கும் சில வரை­ய­றை­களை சர்­வ­தேசம் விதித்­துள்­ளது. அவற்­றை­யெல்லாம் மீறி நெத்­த­ன்யா­குவின் படைகள் செயற்­ப­டு­வதை கண்டும் காணா­த­துபோல் இருந்­து­கொண்டு அப்­போ­ருக்கு வெளிப்­ப­டை­யா­கவே ஆத­ர­வ­ளிக்கும் அமெ­ரிக்­கா­வையும் அதன் அடி­வ­ரு­டி­க­ளையும் இறை­கூட மன்­னிக்­காது. ஹிட்­லரின் மறு­பி­ற­வியோ நெத்­த­ன்யாகு என்று கருதும் அள­வுக்கு அவரின் கொடூ­ரங்கள் அதி­க­ரித்­துள்­ளன. அமெ­ரிக்­காவை மிகக்­கொ­டிய ஷைத்தான் என்று 1979 இல் ஆய­துல்லாஹ் குமேனி வரு­ணித்­தமை பல­ருக்கு ஞாப­க­மி­ருக்­கலாம். அந்த ஷைத்­தானே இன்று புதிய மத்­திய கிழக்கு ஒழுங்கு என்ற ஒரு புதிய வேதத்தைப் போதிக்­கி­றது. அதைப்­பற்றிப் பின்னர் விளக்­குவோம்.

ஹமாஸ் போரா­ளிகள் ஒக்­டோபர் ஏழில் ஏற்­ப­டுத்­திய இரத்­தக்­க­ள­ரி­யைப்­பற்றி விப­ரிக்­கையில் அது ஒரு வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதை என்­பதை எனது முன்­னொரு கட்­டுரை எடுத்­துக்­காட்­டி­யது. அதனைத் தொடர்ந்து சுமார் ஒரு மாத கால­மாக நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் நிகழ்­வு­க­ளைப்­பற்றி ஊட­கங்கள் மூலம் வாச­கர்கள் அறிந்­தி­ருப்பர். எனவே அவற்­றை­யெல்லாம் மீண்டும் விப­ரிக்க இக்­கட்­டுரை விரும்­ப­வில்லை. ஆனால் அவை தொடர்­பாக வெளி­யு­லகு எவ்­வாறு தனது நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­து­கின்­றது என்­ப­தையும் அதன் தாக்­கங்­க­ளைப்­பற்­றிய சில உண்­மை­க­ளையும் வாச­கர்­க­ளுடன் இச்­சந்­தர்ப்­பத்திற் பகிர்ந்­து­கொள்­வதே இக்­கட்­டு­ரையின் நோக்கம்.
முத­லா­வ­தாக அமெ­ரிக்­காவின் நாடகம். இஸ்­ர­வே­லுக்குத் தன்னைப் பாது­காக்கும் உரிமை உண்டு என ஆரம்­பித்து, ஹமாஸை ஓர் அப்­ப­ழுக்­கற்ற பயங்­க­ர­வாதத் தீங்கு என வரு­ணித்து, அதை ஒழிக்­கும்­வரை இஸ்­ரவேல் தனது போரை நிறுத்த முடி­யாது என முடி­வு­செய்து, இப்­போது அப்போர் சம்­பா­தித்த உலக வெறுப்பைச் சமா­ளிப்­ப­தற்­காக ஒவ்­வொரு நாளும் நான்கு மணித்­தி­யா­லங்­க­ளுக்கு மட்டும் காசா மக்கள் முடி­யு­மானால் தப்­பி­யோ­டு­வ­தற்கும் முடி­யா­த­வர்­க­ளுக்குச் சொற்ப வாழ்­வா­தார உத­வி­களை வழங்­கு­வ­தற்கும் சம்­மதம் தெரி­வித்­துள்­ளது. அவ்­வா­றானால் எஞ்­சிய 20 மணித்­தி­யா­லங்­க­ளுக்கும் காசாவை நிர்­மூ­ல­மாக்­கு­வ­தற்கு இஸ்­ர­வே­லுக்கு ஜோ பைடன் பூரண அனு­மதி வழங்­கி­யுள்ளார் என்­பது புல­னா­க­வில்­லையா? காசா குழந்­தை­களின் மயா­ன­பூமி என ஐ. நாவின் செய­லாளர் நாயகம் கூறி­யுள்­ளமை இன்னும் வெள்ளை மாளி­கைக்குக் கேட்­க­வில்லை போலும். இது­வரை பதின்­மூ­வா­யிரம் மனித உயிர்­களை இஸ்­ரவேல் இரா­ணுவம் பலி­கொண்­டுள்­ளது என்றும் ஒரு மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான மக்கள் அக­தி­க­ளாக்­கப்­பட்­டுள்­ளனர் என்றும் நம்பத் தகுந்த வட்­டா­ரங்கள் தக­வல்கள் வழங்­கி­யுள்­ளன. இருந்தும் உட­ன­டி­யான போர் நிறுத்­தத்தை ஆத­ரிக்க அமெ­ரிக்கா தயா­ரில்லை. இத­னி­டையில், பிரஞ்சு நாட்டின் தலை­வனும் சிறு­வர்­களை மட்டும் கொல்ல வேண்டாம், அதைத் ­த­விர்த்து இஸ்­ரவேல் எதுவும் செய்­யலாம் என்­ற­வாறு அறிக்கை விடுத்­துள்ளார். இவர்கள் எல்­லா­ரி­னதும் கைக­ளிலும் பலஸ்­தீன மக்­களின் இரத்தம் படிந்­துள்­ளது. இவர்கள் இஸ்­ர­வே­லுக்கு வழங்­கிய ஆயு­தங்­களும் ஆத­ர­வுமே இன்று காசாவை நிர்­மூ­ல­மாக்­கி­யுள்­ளது.

இரண்­டா­வ­தாக அரபு நாடு­களின் கைய­று­நிலை. இதைப்­பற்­றியும் ஏற்­க­னவே ஒரு கட்­டு­ரையில் விப­ரித்­துள்ளோம். இந்தப் பரி­தா­பத்­துக்கு முக்­கி­ய­மான ஒரு காரணம் இந்த நாடு­களின் அர­சுகள் எல்­லாமே அமெ­ரிக்­காவின் தயவில் இயங்­கு­வது. மக்­களின் வாக்­கு­களால் ஜன­நா­யக அடிப்­ப­டையில் இவை இயங்­கு­மாயின் சுல்­தான்­களும் அமீர்­களும் அர­சர்­களும் இள­வ­ர­சர்­களும் ஆட்­சியில் இருப்­பார்­களா என்­பது சந்­தே­கமே. ஆனால் அவர்கள் ஆட்­சியில் இருக்க வேண்டும் என்­ப­துதான் அமெ­ரிக்­காவின் விருப்பம். காரணம் அரபு நாடு­களின் எண்­ணெய்யும் எரி­வா­யுவும் தடை­யின்றி அமெ­ரிக்­கா­வுக்கும் அதன் நேச நாடு­க­ளு­க்கும் கிடைக்க வேண்­டு­மாயின் அமெ­ரிக்­காவின் புதிய மத்­திய கிழக்கு ஒழுங்கு நிலைத்­தி­ருக்க வேண்டும். அதற்கு இந்தப் பழ­மை­வா­தி­களின் ஆட்சி இன்­றி­ய­மை­யா­தது. 2011 இல் அரபு வசந்தம் என்ற அர­சியற் பூகம்பம் கைரோவில் வெடித்­ததும் அதை எப்­ப­டி­யா­வது முறி­ய­டிக்க வேண்டும் என்ற எண்­ணத்­துடன் செயற்­பட்டு அதில் அமெ­ரிக்கா வெற்றி கண்­டதும் அமெ­ரிக்க ஒழுங்கை நிலை­நாட்­டவே. இந்த ஒழுங்கின் இன்னோர் அங்­கம்தான் 2020 செப்­டம்பர் 15 இல் இஸ்­ர­வே­லுக்கும் பஹ்ரைன் உட்­பட ஏழு ஐக்­கிய அரபு அமீ­ர­கங்­க­ளுக்­கு­மி­டையே கைச்­சாத்­தி­டப்­பட்ட இப்­றாகிம் இணக்­கப்­பா­டுகள். அதன் ஒரே குறிக்கோள் இந்த அமீ­ர­கங்­க­ளுக்கும் இஸ்­ர­வே­லுக்கும் இடையே சிநேக உறவு ஏற்­ப­ட­வேண்டும் என்­பதே. இப்­போது சவூதி அரே­பி­யாவும் இஸ்­ர­வே­லுடன் சினேக உறவு கொண்­டாட ஆயத்­த­மா­கி­யுள்­ளது. ஆதலால் இவர்கள் இப்­போது நடை­பெறும் போரில் பலஸ்­தீ­னுக்கு ஆத­ர­வாக செயற்­ப­டுவர் என எதிர்­பார்ப்­பது தவறு. அவர்கள் அந்தப் பிரச்­சி­னையைக் கைக­ழுவிவிட்­டனர் என்று கூறு­வதே பொருத்தம். இருந்தும் பெரு­கி­வரும் எதிர்ப்­பு­க­ளுக்கு மத்­தியில் இந்த நட்­பு­றவில் வெடிப்­புகள் ஏற்­ப­டலாம்.

இருந்தும் இப்­போ­ருக்­கெ­தி­ரான ஆர்ப்­பாட்­டங்கள் உல­க­ளா­விய ரீதியில் நாளுக்கு நாள் அதி­க­ரிக்­கின்­றன. மனி­தா­பி­மா­னமும் சுதந்­திர வேட்­கையும் சமா­தா­னமும் விரும்பும் கோடிக்­க­ணக்­கான மக்கள் இப்­போரை உட­ன­டி­யாக நிறுத்­து­மா­று­கோரி ஆர்ப்­பாட்­டத்தில் இறங்­கி­யுள்­ளனர். இந்த ஆர்ப்­பாட்­டங்கள் யூத­ மக்­க­ளுக்கு எதி­ரா­கவோ இஸ்­லா­மிய மக்­க­ளுக்கு எதி­ரா­கவோ அல்­லாது பக்­கச்­சார்­பின்றி பலஸ்­தீன மக்­களும் யூத­மக்­களும் தங்கள் தங்கள் நாட்டில் சுதந்­தி­ர­மா­கவும் இறை­மை­யு­டனும் சமா­தா­ன­மாக வாழ­வேண்டும் என்ற எண்­ணத்­து­டனும் நெத்­த­ன்­யா­குவின் மூர்க்­கத்­த­ன­மான போர் வெறிக்­கெ­தி­ரா­கவும் நடை­பெ­று­கின்­றன.

உதா­ர­ண­மாக, அமெ­ரிக்­காவின் வெள்ளை மாளி­கைக்கு முன்­பா­கவும், லண்­டனில் பிர­த­மரின் அலு­வ­ல­கத்­திற்கு முன்­பா­கவும் ஆஸ்­தி­ரே­லி­யாவின் எல்லா தலை­ந­க­ரங்­க­ளிலும் உல­கத்தின் கவ­னத்தை ஈர்க்கும் நோக்­குடன் பல்­லா­யி­ரக் ­க­ணக்­கான மக்கள் இன­மத பேத­மின்றி இணைந்து இவ்­வார்ப்­பாட்­டங்­களை நடத்­து­கின்­றனர். இந்தப் பின்­ன­ணியில் இலங்­கையில் முஸ்­லிம்கள் மேற்­கொண்ட ஆர்ப்­பாட்­டங்­க­ளைப்­பற்றி ஒரு சில கருத்­துக்­களைத் தெரி­விக்க வேண்­டி­யி­ருக்­கி­றது.

முஸ்­லிம்கள் தனி­யாக ஏறா­வூ­ரிலும் கல்­மு­னை­யிலும் கிண்­ணி­யா­விலும் காத்­தான்­கு­டி­யிலும் ஆர்ப்­பாட்­டங்கள் நடாத்­து­வதால் அது உலக கவ­னத்தை ஈர்க்கப் போவ­தில்லை. மூலைக்குள் ஆர்ப்­பாட்டம் நடாத்தி யாது பயன்? அவ்­வார்ப்­பாட்­டங்கள் தலை­ந­க­ரிலே அமெ­ரிக்க தூத­ர­கத்தின் முன்­பா­கவோ இஸ்­ரே­லிய தூத­ர­கத்தின் முன்­பா­கவோ அரபு நாடு­களின் தூத­ர­கங்­களின் முன்­பா­கவோ சகல இன ­மக்­களும் கலந்த ஆர்ப்­பாட்­டங்­க­ளாக அமைதல் வேண்டும்.
இது­வரை இலங்கை முஸ்­லிம்கள் தமது பிரச்­சி­னை­களை தேசிய ரீதி­யிலோ சர்­வ­தேச ரீதி­யிலோ மற்­றைய இனங்­க­ளுடன் சேர்ந்து முன்­வைக்­காமல் தமக்­குள்­ளா­கவே குண்டாஞ் சட்­டிக்குள் குதிரை ஓட்­டு­வ­து­போன்று அவற்­றுக்குத் தீர்­வு­காண முற்­பட்­டதால் அவர்­களின் எந்தப் பிரச்­சி­னையும் நிரந்­த­ர­மாகத் தீர்க்­கப்­ப­ட­வில்லை என்று கூறலாம். அதே­போன்று மற்­றைய இனங்கள் தேசிய மட்­டத்தில் தமது பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்குப் போரா­டும்­போதும் முஸ்­லிம்கள் ஓரத்தில் நின்­று­கொண்டு வேடிக்கை பார்ப்­ப­வர்­களா­கவே இருந்­துள்­ளனர். இந்தப் பழக்­க­தோ­ஷமே பலஸ்­தீன ஆர்ப்­பாட்­டங்­க­ளிலும் பிர­தி­ப­லித்­துள்­ளன.

முஸ்­லிம்­க­ளுக்னெ இரண்டு கட்­சிகள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. அத்­துடன் அகில இலங்கை ஜமி­யத்துல் உலமாவும் இயங்­கு­கின்­றது. இவர்­களின் தலை­மையில் ஏன் பலஸ்­தீ­னுக்­கான ஒரு தேசி­ய­மட்ட ஆர்ப்­பாட்­டத்தை சகோ­தர இனங்­களின் ஆத­ர­வுடன் ஒழுங்கு செய்ய முடி­யாது? ஒரு புறத்தில் பலஸ்­தீன மக்கள் விட­யத்தில் சர்­வ­தே­சத்தின் இரட்டை வேடத்­தைப்­பற்றி ஜனா­தி­பதி பேசு­கிறார். மறுபுறத்தில் பலஸ்­தீனப் பிரச்­சி­னைக்கு இரட்டை அரசுத் தீர்­வையே இலங்­கையும் ஆத­ரிக்­கி­ற­தென்ற அர்த்தமற்ற ஒரு பல்லவியை வெளிநாட்டு அமைச்சர் பாடுகிறார். ஜனாதிபதியோ முஸ்லிம்களின் வாக்குகளைக் கவர்வதற்காகப் பேசுகிறார். அமைச்சரோ மேற்கு நாடுகளின் பொருளாதார ஆதரவைக் காப்பாற்றிக்கொள்ளவும் இஸ்ரவேலின் நட்பைக் காப்பாற்றவும் பேசுகிறார். ஆனால் இஸ்ரவேலின் ஐம்பத்தாறு வருட அடக்குமுறைக்குள் அகப்பட்டு அதிலிருந்து விடுதலைகாணப் போராடும் பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக அவர்கள் எந்தக் குரலும் இதுவரை கொடுக்கவில்லை. உதாரணமாக, இஸ்ரவேல் தனது 75ஆவது வருட வைபவத்தை கொழும்பிலே கொண்டாடும்போது அதில் கலந்துகொண்ட இலங்கை வெளி­நாட்­ட­மைச்சர் ஒரு முஸ்­லி­மாக இருந்தும் அவ­ரது உரையில் பலஸ்­தீன மக்­களின் பிரச்­சி­னை­யைப்­பற்றி ஒரு வார்த்­தை­யேனும் பேசா­தது இலங்கை அரசின் நாட­கத்தை வெளிப்­ப­டுத்­த­வில்­லையா?
என­வேதான் முஸ்­லிம்கள் தேசி­ய­மட்­டத்தில் காசாவில் இஸ்­ரவேல் திட்­ட­மிட்டு நடத்தும் இனச்­சுத்­தி­க­ரிப்பை கண்­டித்து ஆர்ப்­பாட்­டங்­களை மேற்­கொள்ள வேண்­டு­மென இக்கட்டுரை வலியுறுத்துகிறது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.