முடிவின்றித் தொடரும் மூளைசாலிகளின் வெளியேற்றம்

0 1,089

தர்ஹா நகர் றம்ஸியா ஹம்ஸா

இன்று நாடு எதிர்­நோக்கும் பாரிய பிரச்­சினை மூளை­சா­லி­களின் வெளி­யேற்­ற­மாகும். பாரிய பொரு­ளா­தார பிரச்­சி­னையைப் போன்றே மற்­று­மொரு பாரிய பிரச்­சினை தான் மூளை­சா­லி­களின் வெளி­யேற்றம் ஆகும். கடந்த ஆண்டு நாடு எதிர்­கொண்ட அந்­நியச் செலா­வணி தட்­டுப்­பாட்டை நிவர்த்தி செய்­வ­தற்­காக அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு வெளி­நாடு சென்று தொழில் புரி­வ­தற்­காக சம்­ப­ள­மற்ற 5 ஆண்டு விடு­மு­றையை வழங்க அரசு தீர்­மா­னித்­தது. இதன் பின்­னரே சகல அரச துறை­க­ளிலும் உள்ள உத்­தி­யோ­கத்­தர்­க­ளி­னதும் வெளி­நாடு செல்லும் வீதம் அதி­க­ரித்­தது எனலாம்.

மற்றும் இவ்­வாறு வெளி­யேறிக் கொண்­டி­ருப்­ப­வர்கள் வைத்­தி­யர்கள், பொறி­யி­யலா­ளர்கள், விமா­னிகள், தகவல் தொடர்­பாடல் தொழி­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் விரி­வு­ரை­யா­ளர்கள், கணக்­கி­யலா­ளர்கள், தொழில் நிர்­வாக அதி­கா­ரிகள், சட்­டத்­த­ர­ணிகள்என இன்னும் இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்­வாறு நிபு­ணத்­துவம் வாய்ந்­த­வர்­களின் வெளி­யேற்­றத்­தினால் வரும் இடை­வெ­ளி­களை நிரப்­பு­வது என்­பது முடி­யு­மான காரி­யமா என்­பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும். இதனால் நாடு கடும் நெருக்­க­டி­களை எதிர் நோக்கிக் கொண்­டி­ருக்­கின்ற போதிலும் கூட அர­சாங்கம் எந்த மாற்று நட­வ­டிக்­கை­க­ளையும் எடுத்­த­தாகத் தெரி­ய­வில்லை. அண்­மையில் ஏற்­பட்ட கொவிட் தொற்று, ஆட்­சி­யா­ளர்­க­ளினால் எடுக்­கப்­பட்ட தவ­றான தீர்­மா­னங்கள், நாடு எதிர் நோக்கிக் கொண்­டி­ருக்கும் பொரு­ளா­தார நெருக்­கடி இத்­துடன் நேர­டி­யாக அவர்­களின் ஊதி­யத்தில் விதிக்­கப்­பட்ட தனியாள் வரி, அவர்­க­ளுக்­கான விஷேட கொடுப்­ப­னவுகள் இல்­லா­ம­லாக்­கப்­பட்­டமை, அவர்­க­ளுக்­காகக் கொடுக்கப்பட்­டி­ருந்த வசதி வாய்ப்­புக்கள் குறைக்­கப்­பட்­டமை போன்­ற­னவும் அவர்­களின் வெளி­யேற்­றத்­திற்­கான கார­ணங்­க­ளாகக் கூறலாம். மூளை­சா­லி­களின் வெளி­யேற்­றத்தின் தாக்­கத்தை அரச தனியார் என்று வேறு பிரிக்க முடி­யாது. எந்­த­வொரு நாடும் இழந்த பொரு­ளா­தா­ரத்­தி­லி­ருந்து மீண்டும் மீள நிதி மாத்­தி­ர­மன்றி மனித மூல­த­னமும் அத்­தி­யா­வ­சி­ய­மாகும். இதே வேளை பல்­வேறு தொழில் வல்­லு­னர்­களும் நாட்டை விட்டு வெளி­யே­றி­யுள்­ள­மையால் ஏற்று­மதித் துறை பாரிய நெருக்­க­டி­களை எதிர் கொண்­டுள்­ள­தாக தேசிய ஏற்­று­ம­தி­யா­ளர்கள் சபை சுட்டிக்காட்­டு­கின்­றது.

இன்­றைய இளைஞர் யுவ­தி­களும் கூட தத்­த­மது உயர்­கல்­வியை தாய் நாட்டில் தொடர்­வதை விட்டு விட்டு வெளி­நா­டு­களை நோக்கிப் படை­யெ­டுத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இதனால் மனி­த­வள பற்­றாக்­குறை ஏற்­ப­டு­வதைத் தடுக்க முடி­யாது. அது மட்­டு­மன்றி நாட்டின் எதிர்காலமே இளை­யோர்­களின் கையில் தங்­கி­யி­ருக்கும் போது அந்த இளம் சந்­த­தி­களே நாட்டை விட்டு வெளி­யேறும் போது நாட்டின் எதிர்­காலம் கேள்­விக்­கு­றியே!

இனி சுகா­தாரத் துைறயி­லுள்ள நிபு­ணத்­துவம் வாய்ந்­த­வர்­களின் வெளி­யேற்­றத்­தினால் நாடு சொல்­லொணாத் துய­ரத்­திற்கு முகம் கொடுத்துக் கொண்­டி­ருக்­கி­றது. குறிப்­பாக வைத்­திய நிபு­ணர்கள் நாட்டை விட்டுச் செல்­வதால் இதய நோய் அறுவைச் சிகிச்சைப் பிரிவு, சிறு­வர்­க­ளுக்­கான சத்­தி­ர­சி­கிச்சைப் பிரிவு, மகப்­பேற்றுப் பிரிவு, புற்று நோய் சிகிச்சைப் பிரிவு உள்­ளிட்­ட­வற்றில் நோயா­ளர்கள் பாரிய சிக்­கலை எதிர் நோக்­கு­வ­தாக வைத்­திய சங்­கங்கள் தெரி­விக்­கின்­றன. சுகா­தாரத் துைறயில் நிபு­ணத்தும் வாய்ந்­த­வர்கள் மட்­டு­மன்றி வைத்­தி­யர்கள், தாதி­யர்கள் என அனைத்துத் துறை­யி­ன­ருமே வெளி­யேறிக் கொண்­டுதான் இருக்­கி­றார்கள். இதன் பிர­தி­பலன் என்ன என்­பதை இன்று நாம் அனு­ப­விக்கத் தொடங்கியிருக்­கிறோம்.

வைத்­தி­யர்கள் நாட்­டி­லி­ருந்து வெளி­யே­று­வதால் சுகா­தாரத் துறையில் ஏற்­பட்­டுள்ள பாதிப்பைப் போல் தகு­தி­யுள்ள விரி­வு­ரை­யா­ளர்கள் நாட்­டி­லி­ருந்து வெளி­யே­று­வ­த­னாலும் நாட்டின் கல்வித் துறையும் பாரிய எதிர்­ம­றை­யான தாக்­கத்தை எதிர்­நோக்கிக் கொண்­டுதான் உள்­ளது.

இன்று விரி­வு­ரை­யா­ளர்­களின் வெளி­யேற்­றத்­தினால் அரச பல்­க­லைக்­க­ழ­கங்கள் மாத்­தி­ர­மன்றி தனியார் பல்­க­லைக்­க­ழ­கங்­களும் சம­மான பாதிப்­புக்­க­ளையே எதிர் நோக்­கு­கின்­றன.

கல்­வித்­துறை வீழ்ச்­சி­ய­டைந்தால் சிறந்த எதிர்­கால சந்­த­தி­யி­னரை எதிர்­பார்க்க முடி­யாது. உயர்­கல்­வித்­துறை மட்­டு­மன்றி பாட­சாலை ஆசி­ரி­யர்­க­ளிலும் கணி­ச­மானோர் வெளி­யேறி விட்­டனர். கடந்த காலங்­களில் பரீட்சை விடைத்­தாள்­களைத் திருத்­து­வ­தற்கு பற்­றாக்­குறை ஏற்­பட்­டதைப் போன்று இனி­வரும் காலங்­களில் வினாத்தாள் தயா­ரிக்கும் பணி­களில் ஈடு­ப­டு­வோ­ரி­னது எண்­ணிக்­கை­யிலும் பற்­றாக்­குறை ஏற்­ப­டலாம். பரீட்சை விடைத்தாள் திருத்­து­வதில் ஏற்­பட்ட தாம­தமே இன்று பாரீட்சை பெறு­பேறுகளின் வெளி­யீட்டில் தாமதம். இன்னும் ஜி.சீ.ஈ.சாதா­ர­ண­தர பரீட்சை (2022) பெறுபேறு வெளி­யி­டப்­ப­ட­வில்லை. இதனால் உயர்­கல்வி கற்­பதில் தாமதம். சில மாண­வர்கள் வெளி­நாட்டுப் புலமைப் பரி­சில்­க­ளுக்குக் கூட விண்­ணப்­பிக்கத் தகுதி அற்­ற­வர்­க­ளா­கி­றார்கள். காரணம் பெறுபேறு வெளி­யீட்டின் தாம­தத்­தினால் ஏற்­படும் வயது வித்­தி­யா­சமே. இதனால் இன்று பெரும்­பா­லான மாண­வர்கள் தமது அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு என்ன செய்­வ­தென்று முடி­வெ­டுக்க முடி­யா­த­வர்­க­ளாக மனம் நொந்து போய் இருக்­கி­றார்கள்.
இரண்டாம் மூன்றாம் கல்­வி­நிலை மட்­டு­மன்றி ஆரம்­ப­நிலைக் கல்­வியும் கூட இன்று கேள்­விக்­கு­றி­யாகிவிட்­டது.

எந்­த­வொரு நாட்­டிலும் நற்­பி­ர­ஜை­களை உரு­வாக்­கு­வது ஆரம்பக் கல்­விக்­கூ­ட­மான பாட­சாலைக் கல்­வியே. ஐந்தில் வளை­யா­தது ஐம்­ப­திலும் வளை­யாது. பாட­சாலைக் கல்வி சீர்­கெட்டுப் போனால் ஒழுக்­கமும் சீர்­கெட்டுப் போகும். சிறு­வர்கள் சீர்­கெட்டால் எதிர்­கால சமு­தாயம் சீர்­கெட்டுப் போகும். இன்­றைய சிறு­வர்­களே நாளைய தலை­வர்­க­ளாவர். நாடு வளம் பெற வேண்­டு­மானால் அறி­வாற்றல் மிக்க மனித வளம் இன்­றி­ய­மை­யா­த­தாகும்.

ஒரு பக்கம் மூளை­சா­லிகள் நாட்டை விட்டு வெளி­யேறிக் கொண்­டி­ருக்கும் நிலையில் மற்­றைய பக்கம் வல்­ல­ரசு நாடுகள் இலங்கைக்குள் காலடி எடுத்து வைத்துக் கொண்­டி­ருக்­கி­ன்றன. மூளை­சா­லி­களின் வெளி­யேற்­றத்தை முழு­மை­யாகக் கட்­டுப்­ப­டுத்த முடி­யா­விட்­டாலும் குறைப்­ப­தற்­கான திட்டங்களையாவது அர­சாங்கம் நடைமுறைப்படுத்த முயற்சிக்க வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.