ஜாமிஆ நளீ­மிய்­யா­வுக்கு வித்­திட்டோர்

0 443

இஸட்.ஏ. ஸன்ஹிர்
முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர்,
புத்தளம் வலயக் கல்வி அலுவலகம்

இலங்கை முஸ்­லிம்­களின் ஆரம்பக் கல்­விக்­கூ­ட­மாக ‘மக்தப்’ எனப்­படும் ‘குத்­தாப்கள்’ அமைந்­தி­ருந்­தன. ஐவேளைத் தொழுகை இடம்­பெறும் பள்­ளி­வா­சல்­க­ளை­யொட்­டி­ய­தாக இவை அமைக்­கப்­பட்­டன. முஸ்­லிம்­களின் குடி­யேற்­றத்­துடன் பள்­ளி­வா­சல்­களும் தோற்­றம்­பெற்­றன. கிரா­மங்கள் தோறும் அமைந்­தி­ருந்த குத்­தாப்­களில் காலை, உச்சி, மாலை என மூவேளைக் கற்றல், கற்­பித்தல் செயற்­பா­டுகள் இடம்­பெற்­றுள்­ளன. அறபு மொழியில் அமைந்­தி­ருக்கும் குர்­ஆனை ஓது­வ­தற்கு இங்கு கற்­பிக்­கப்­பட்­ட­துடன் மார்க்கக் கல்­வியும் அறபுத் தமிழ் இலக்­கி­யங்­களும் நடை­முறைப் பயிற்­சி­யுடன் வழங்­கப்­பட்­டன. அறபு அல்­லாத கல்­வியைக் கற்­பது மார்க்­கத்­துக்கு முர­ணா­னது என்று கரு­தப்­பட்ட கால­மொன்றும் இருந்­தது. நமது நாட்டு முஸ்­லிம்கள் தமது உயர்­கல்­விக்­காக ‘மத்­ர­ஸா’க்­களை நாடினர். இலங்­கையில் மத்­ர­ஸாக்­களின் வர­லாறு சுமார் 140 வரு­டங்­களைக் கொண்­ட­தாகும். மத்­ர­ஸாக்­களை நிறு­விய முன்­னோ­டி­யாக மாப்­பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹ்) கரு­தப்­ப­டு­கின்றார்.

ஜாமிஆ நளீமிய்யா பாடத்திட்டத்தினை உருவாக்குவதற்காக 1972 இல் பாகிஸ்தான் பயணமான ஐவர் கொண்ட குழு

மாறி­வரும் உலகின் சிந்­தனைப் போக்­கிற்கும் அதன்­வி­ளை­வாக உரு­வாகும் சவால்­க­ளுக்கும், மத்­ரஸாக் கல்­வியைப் பெறு­வதன் மூலம் மட்டும் முகம் கொடுக்­க­மு­டி­யாது என காலப்­போக்கில் உண­ரப்­பட்­டது. அத்­துடன், அங்கு இடம்­பெறும் கற்றல் கற்­பித்தல் முறை­களும் மாற்­றி­ய­மைக்­கப்­ப­ட­ வேண்­டு­மென்ற கருத்­துக்­களும் தோன்­றின. ஆரம்­ப­கா­லத்தில் இலங்கை முஸ்­லிம்கள் மத்­தியில் நவீன கல்விச் சிந்­த­னை­களை விதைத்­த­வர்­களுள் அறிஞர் சித்­தி­லெப்பை, ஐ. எல். எம். அஸீஸ் போன்றோர் குறிப்­பி­டத்­தக்­கோ­ராவர். 21.08.1892 இல் ‘அல் மத்­ர­ஸதுஸ் ஸாஹிறா’ தோற்­றம்­பெற்­றது. ‘மத்­ரஸா’ என்ற நிலை­யி­லி­ருந்து ‘ஜாமிஆ’ (கலா­ நி­லையம்) என்ற சிந்­த­னையை விதைத்­தவர் ஸாஹிறாக் கல்­லூரி அதி­ப­ராக (1948 –-1961) இருந்த அறிஞர் எ.எம்.எ.அஸீஸ் ஆவார். 1941 இல் அஸீஸ் அவர்கள், ‘மத அறிவைப் புகட்­டக்­கூ­டிய ஒரு மத்­திய முஸ்லிம் கலா­சாலை’ என்ற தலைப்பில் ‘முஸ்லிம் மித்­தி­ர­னில்’­எ­ழு­திய கட்­டுரை, 1963 இல் வெளி­யி­டப்­பட்ட ‘இலங்­கையில் இஸ்லாம்’ என்ற அவ­ரது நூலில் ‘எமக்கு ஒரு ஜாமியாஹ்’ என்ற தலைப்பில் மீண்டும் இடம்­பெற்­றது.

இலங்­கையில் செல்­வந்­த­ராக மட்­டு­மன்றி கொடை வள்­ள­லா­கவும் அனை­வ­ராலும் அறி­யப்­பெற்­றவர் பேரு­வளை, சீனன்­கோட்­டையை சேர்ந்த நளீம் ஹாஜி­யா­ராவார். மார்க்கக் கல்­வி­யுடன், உலகக் கல்­வி­யையும் போதிக்கும் கலா­நி­லையம் ஒன்று உரு­வாக்­கப்­படல் வேண்டும் என்ற எண்ணம் அன்னார் மன­திலும் உதித்­தது. தனது சொத்து செல்வம் முழு­வ­த­னையும் அதற்­காக அர்ப்­ப­ணிக்க ஹாஜியார் தயா­ராக இருந்தார். சீனன்­கோட்டை தன­வந்­தர்கள், பிர­மு­கர்கள் அனை­வரும் முழு­ம­ன­துடன் அவ­ருக்கு உதவ முன்­வந்­தனர். அக்­கால உல­மாக்­க­ளி­னதும் அறி­ஞர்­க­ளி­னதும் நெருங்­கிய நட்பும் நளீம் ­ஹா­ஜி­யா­ருக்குக் கிடைத்­தது. 19.08.1973 ஞாயிறு அன்று ‘ஜாமிஆ நளீ­மிய்யா’, இலங்­கையில் முஸ்­லிம்கள் முத­லா­வது குடி­யே­றிய பேரு­வ­ளையில் தோற்­றம்­பெற்­றது.

ஜாமிஆ நளீ­மிய்­யாவின் அங்­கு­ரார்ப்­பண தினத்­தன்று, அதன் தாபகர் அல்ஹாஜ் எம்.ஐ.எம். நளீம் அவர்கள் ஆற்­றிய உரையில், “இதனை ஆரம்­பிப்­ப­தற்கு கல்வி அறிவு குறைந்த, ஆனால் பரி­பூ­ரண, உறு­தி­யான, இறை நம்­பிக்கை கொண்ட முப்­பத்தி இரண்டு பேர­டங்­கிய குழு­வொன்று முயற்­சித்­தது. இக்­கு­ழு­வுடன் மார்க்கக் கல்வி கற்­றோரும் உலகக் கல்வி கற்­றோரும் இணைந்­தனர். இவர்கள் எமக்குத் தேவை­யான ஆலோ­ச­னை­களை வழங்கி, பாடத்­திட்­டத்­தையும் வகுத்து எம்­முடன் சேர்ந்து செயல்­ப­டு­கின்­றனர். எந்த சுய இலா­பத்­தையும் கரு­தாது அல்­லாஹ்­வுக்­கவே அவர்கள் செய­லாற்­று­கின்­றனர்” எனத்­தெ­ரி­வித்தார்.

ஜாமி­ஆவின் உரு­வாக்­கத்­துக்கு நளீம் ஹாஜி­யா­ருடன் தோளோடு தோள்­நின்ற சீனன்­கோட்டை பிர­மு­கர்கள் சிலர் இன்றும் எம்­மத்­தியில் வாழ்­கின்­றனர். அவர்­களுள் சீனன்­கோட்டை பள்ளி சங்க தற்­போ­தைய தலை­வரும் நளீ­மிய்யா இஸ்­லா­மிய கலா­பீட சங்­கத்தின் முத­லா­வது கெள­ரவ பொரு­ளா­ள­ரு­மான ஏ. எச். எம். முக்தார் ஹாஜியார், உப செய­லா­ளரும் பொரு­ளா­ள­ரு­மான எம். எச். எம். ஹிப்­ப­துல்லாஹ் ஹாஜியார், ஏ. ஆர். எம். சுலைமான் ஹாஜியார், ஏ. ரீ. எம். பாயிஸ் ஹாஜியார், ஏ. சி. எம். சல்மான் ஹாஜியார், ஏ. ஆர். எம். பாரூக் ஹாஜியார், எஸ். எம். பாஸி ஹாஜியார், சட்­டத்­த­ரணி எம். சி. எம். ஹம்ஸா போன்றோர் குறிப்­பி­டத்­தக்­கோ­ராவர். நளீ­மிய்யா இஸ்­லா­மிய கலா­பீட சங்­கத்தின் முத­லா­வது கெள­ரவ செய­லாளர், மர்ஹூம் சீ.எல்.எம். அபுல்­ஹசன் (ஜே.பீ.) ஆவார்.

1982 மே மாதம் 9 ஆம் திகதி இடம்­பெற்ற ஜாமிஆ நளீ­மிய்­யாவின் முதல் பட்­ட­ம­ளிப்பு விழா­வின்­போது உரை­யாற்­றிய ஜாமி­ஆவின் தாப­கரும் அதன் ஆயுட்­காலத் தலை­வ­ரு­மான அல்ஹாஜ் எம். ஐ. எம். நளீம் அவர்கள் பின்­வ­ரு­மாறு குறிப்­பிட்­டார்கள். “இலங்கை முஸ்­லிம்கள் மத்­தியில் இஸ்­லா­மிய சன்­மார்க்கக் கல்­வி­யையும் ஏனைய உலகக் கல்­வி­க­ளையும் ஒரே நேரத்தில் கற்­றுத்­தேர்ந்த, இஸ்­லா­மிய தஃவாவை சமு­தா­யத்தின் தேவைக்­கேற்ற வகையில் போதிக்­கக்­கூ­டிய உல­மாக்­களை, இஸ்­லா­மிய அறி­ஞர்­களை, சிந்­த­னை­யா­ளர்­க­ளைக்­கொண்ட ஒரு பரம்­ப­ரையை உரு­வாக்­க­ வேண்டும் என்ற ஒரு உதிப்பை, எல்லாம் வல்ல அல்லாஹ் எனது உள்­ளத்தில் உரு­வாக்­கினான். அதனை இஸ்­லா­மிய அறி­ஞர்கள், கல்­வி­மான்கள், உல­மாக்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து அவர்­க­ளிடம் சமர்ப்­பித்தேன். அக்­குழு அமைப்பு, பாடத்­திட்டம், பரி­பா­லனம் ஆகிய அம்­சங்­களைத் தயா­ரித்­தது. அதன்­படி 1973 இல் ஜாமிஆ நளீ­மிய்யா அமைக்­கப்­பட்­டது”.

நளீ­மிய்­யாவை உரு­வாக்­கு­வதில், உல­மாக்கள் என்ற ரீதியில், தப்லீக் அமைப்பின் முக்­கி­யஸ்தர் மஸ்ஊத் ஆலிம் ஸாஹிப், ஜமா­அதே இஸ்­லாமி அமீர் ஏ. எல். எம். இப்­ராஹீம், கலீ­பதுஷ் ஷாதுலி ஷாஹுல் ஹமீத் பஹ்ஜி, ஜாமி­ஆவின் தாபக அதிபர் மெள­லவி தாஸின் (நத்வி, அல் அஸ்­ஹரி), பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ள­ராக இருந்த எம். ஏ. எம். சுக்ரி போன்றோர் முக்­கி­ய­மா­ன­வர்­க­ளாவர். இவர்­களுள் ஆரம்பம் முதலே ஹாஜி­யா­ருடன் இணைந்­தி­ருந்­தவர் மஸ்ஊத் ஆலிம் அவர்­க­ளாவார். சீனன்­கோட்­டையைச் சேர்ந்த கலீ­பதுஷ் ஷாதுலி மர்ஹூம் எம். ஐ. எம். மன்சூர் ஆலிம் அவர்­களும் பரி­பா­லன சபையின் ஆரம்­ப­கால உறுப்­பி­னர்­களுள் ஒரு­வ­ராவார்.

கல்­வி­மான்கள் வரி­சையில் அறிஞர் எ. எம். எ. அஸீஸ், நீதவான் ஏ. எம். அமீன் போன்றோர் குறிப்­பி­டத்­தக்­கோ­ராவர். மேலும் சீனன்­கோட்­டையை சேர்ந்­த­வர்­க­ளான ஏ. சி. ஏ. வதூத் ஹாஜியார் (Secretary, Ceylon Muslim Missionary Society), வைத்­தியர் யூ.எல்.எம். பஷீர், சட்­டத்­த­ர­ணி­க­ளான எம். சி. எம். ஹம்ஸா, ஏ. சீ. எம். ஏ. மசூத், ஏ. ஜே. எம். மசூத் ஆகி­யோ­ருடன் ஜே. எம். எம். ராஜி (B.A ), உப அதிபர் ஏ. ஏ. எம். முஹம்மத் காசிம் போன்றோர் நளீ­மிய்யா இஸ்­லா­மிய கலா­பீட பரி­பா­லன சபையின் ஆரம்­ப­கால அங்­கத்­த­வர்­க­ளாவர். இவர்­களில் எம். சி. எம். ஹம்ஸா ஹாஜியார் தவிர்ந்த ஏனையோர் இறை­யடி எய்­தி­விட்­டனர்.

அறிஞர் எ. எம். எ. அஸீஸ் அவர்கள் இஸ்­லா­மிய கலா­நி­லையம் ஒன்­றுக்­கான திட்­ட­வ­ரைபை ஏற்­க­னவே உரு­வாக்­கி­யி­ருந்தார். அஸீஸ் காலத்து ஸாஹி­றாவின் ஆசி­ரி­யரும், அவரின் நண்­பரும், எழுத்­தா­ளரும், நூல­க­ரு­மான எஸ்.எம். கமா­லுத்தீன், ஜாமி­ஆவின் முத­லா­வது நூலகர் ஏ. ஆர். ஏ. நூர் அமீன் போன்றோர் இதில் அவ­ருக்கு உறு­து­ணை­யாக இருந்­தனர். எனினும் இஸ்­லா­மியக் கல்­வி­யையும் உலகக் கல்­வி­யையும் ஒன்­றி­ணைத்துக் கற்­பிக்கும் விரி­வான நடை­மு­றை­யொன்று அக்­காலப் பகு­தியில் இலங்­கையின் எந்­த­வொரு முஸ்லிம் கல்வி நிறு­வ­னத்­திலும் இல்­லா­தி­ருந்­தது.

சன்­மார்க்கக் கல்­வி­யையும் உலகக் கல்­வி­யையும் இணைத்துக் கற்­பிக்கும் கன்னி முயற்­சி­யா­கவும் பரீட்­சார்த்த செயற்­பா­டா­கவும் நளீ­மிய்யா கலா­பீடம் தொடங்­கப்­ப­ட­வி­ருந்த நிலையில், எ.எம்.எ. அஸீஸ் அவர்­களின் ஆலோ­ச­னைக்­கேற்ப, பாகிஸ்தான் சென்று அங்­குள்ள கலா­நி­லை­யங்­களின் அனு­ப­வங்­களைப் பெறு­வ­தெனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. கலா­நிதி எம். ஏ. எம். சுக்ரி, மெள­லவி யூ. எம். தாஸின், எம். எச். எம். ஹிப்­ப­துல்லாஹ் ஹாஜியார், ஏ. ஆர். எம். சுலைமான் ஹாஜியார், ஏ. ரீ. என். பாயிஸ் ஹாஜியார் ஆகிய ஐவர் கொண்ட குழு 1972 இல் பாகிஸ்தான் பய­ண­மா­கி­யது. அதற்­காக அவர்கள் கராச்சி முதல் பெஷாவர் வரை சென்­றனர். ஜாமிஆ நளீ­மிய்­யாவின் ஆரம்­ப­காலப் பாடத்­திட்­டத்­தினை உரு­வாக்­கு­வதில் எம்­மத்­தியில் வாழ்ந்­து­கொண்­டி­ருக்கும் மெள­லவி ஏ.எல்.எம். இப்­ராஹிம் போன்­றோரும் பெரும்­பங்­காற்­றி­யுள்­ளனர். ஜாமிஆ நளீ­மிய்யா ஆரம்­பிக்­கப்­ப­டும்­போது நிரந்­தர ஆசி­ரி­யர்கள் இருவர் மட்­டுமே. அதில் ஒருவர் அதிபர் மெள­லவி யூ. எம். தாஸின் (நத்வி), மற்­றை­யவர் பிரதி அதிபர் மெள­லவி ஏ. எம். சி. எம். புஹாரி (மன்­பஈ) ஆகி­யோ­ராவர்.

இவ்­வ­ருடம் ஜாமிஆ நளீ­மிய்யா தனது பொன்­வி­ழாவை கொண்­டாடும் வேளையில், நளீ­மிய்யா இஸ்­லா­மிய கலா­பீட சங்­கத்தின் ஆரம்­ப­கால உறுப்­பி­னர்கள் சில­ரையும் நினை­வு­கூ­ரு­வது பொருத்­த­மாக இருக்கும். அவர்­களுள் உப தலைவர் சீ. எம். அப்துல் கபூர் ஹாஜியார், எம். எச். எம். ஹம்ஸா ஹாஜியார், எம். ராஸிக் யூசுப் ஹாஜியார், எம். எஸ். எம். யாகூத் ஹாஜியார், எம். ஐ. எம். கலீல் ஹாஜியார், எஸ். எம். ஹாஷிம் ஹாஜியார், எம். எச். எம். நூமான் ஹாஜியார், ஏ. ஏ. எம். ஹாரூன் ஹாஜியார், வை. எல். எம். அமீர் ஹாஜியார், ஏ. ஐ. எம். அன்வர் ஹாஜியார், ஏ. பீ. எம். ஹனிபா ஹாஜியார், ஏ. எம். எம். ரவூப் ஹாஜியார், ஏ. எம். எம். ஹனபி ஹாஜியார், எம். ஆர். எம். ஹம்ஸா ஹாஜியார், எம். எஸ். எம். மர்சூக் ஹாஜியார், வை. எல். எம். ஸாலிஹ் ஹாஜியார், எஸ். எம். அன்வர் ஹாஜியார், ஏ. ஏ. முஹம்மத் ஷஹீத் ஹாஜியார், சனூன் ஹாஜியார், எம். எஸ். எம். அனஸ் ஹாஜியார் போன்றோர் குறிப்­பி­டத்­தக்­கோ­ராவர்.

‘மக்­தபி’ன் பரி­ணாம வளர்ச்­சியே ‘ஜாமி­ஆ’­வாகும். 1970 களில் விதைத்த வித்து இன்று விருட்­ச­மாகப் படர்ந்து வியா­பித்­துள்­ளது. அது தாண்­ட­வேண்­டிய மைல் கற்கள் இன்­னு­முள்­ளன. ஜாமி­ஆ­வுக்குள் ஒரு ‘சுவ­டிக்­கூடம்’ அமைக்­கப்­ப­டு­வது காலத்தின் தேவை­யாகும். எமது அடுத்த அடியை அர்த்­த­முள்­ள­தாக ஆக்­கு­வ­தற்கு இது அவ­சி­ய­மாகும். ஜாமி­ஆவின் தாபகர் நளீம் ஹாஜியார் உட்பட அதற்கு வித்திட்டவர்கள் என்றென்றும் நினைவுகூரப்படவேண்டியவர்களாவர். ‘தாபகர்கள் தினம்’ ஒன்றின் மூலம் இதனை சாத்தியமாக்கலாம். இலங்கை முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்டுழைத்தவர்களுக்கும் நளீமிய்யா கலாபீடம் உருவாக நளீம் ஹாஜியாருடன் இணைந்து செயற்பட்டவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா பேரருள் புரிவானாக. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.