பலஸ்தீனத்தின் பரிதாபமும் மேற்குலகின் கபடமும் அரேபியர்களின் கையறுநிலையும்

0 208

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

முகவுரை
“நிலம் இல்­லாத மக்­க­ளுக்கு மக்கள் இல்­லாத நிலம் வேண்­டும்” என்ற உண்­மையும் பொய்யும் கலந்த ஒரு கோஷத்தை முன்­வைத்து ஆரம்­ப­மா­கிய சியோ­னி­சர்­களின் நாடு தேடும் படலம் பிரித்­தாளும் பிரித்­தா­னி­யரின் ஆட்­சிக்குள் அன்று சிக்கிக் கிடந்த அரபு மக்­களின் பலஸ்­தீ­னத்தைப் பங்­கு­போட்டு இஸ்­ரவேல் என்ற ஒரு நாட்டை 1948ல் வென்­றெ­டுக்க வழி­கோ­லி­யது. அந்த நாடு சியோ­னி­சர்கள் கேட்­ட­து­போன்று மக்கள் இல்­லாத ஒரு நில­மல்ல. மாறாக, அங்கே இஸ்­லா­மி­யரும் கிறித்­த­வர்­களும் யூதர்­களும் சிநேக உற­வுடன் வாழ்ந்த ஒரு பிர­தேசம். அந்தப் பலஸ்­தீன நாட்­டுக்கு சுமார் நாலா­யிரம் வருட வர­லா­றுண்டு. அந்த வர­லாற்றை பூர­ண­மாகப் படிக்க விரும்­பு­ப­வர்கள் நூர் மசல்கா என்ற வர­லாற்­ற­றிஞர் ஆங்­கி­லத்தில் எழுதி வெளி­யிட்­டுள்ள பலஸ்­தீனம் என்ற நூலை­யா­வது வாசிக்க வேண்டும். சியோ­னி­சர்­களின் பிரச்­சாரம் எவ்­வாறு பலஸ்­தீ­னத்தின் உண்­மை­யான வர­லாற்றை மூடி­ம­றைத்து வெறும் கட்­டுக்­க­தை­க­ளையும் கற்­பனைச் சம்­ப­வங்­க­ளையும் கலந்த ஒரு புனை­க­தையை வர­லா­றென உலகை நம்பச் செய்­துள்­ளது என்­பதை மசல்­காவின் நூல் ஆதா­ரங்­க­ளுடன் விளக்­கு­கின்­றது. அவற்­றை­யெல்லாம் விப­ரிப்­ப­தற்கு இக்­கட்­டுரை இட­ம­ளிக்­காது. ஆகவே இன்று காசாவில் நடை­பெறும் இஸ்­ர­வேலின் இனச்­சுத்­தி­க­ரிப்­பினை மைய­மா­க­வைத்து சில கருத்­துக்­கனை வாச­கர்­க­ளுடன் பகிர்ந்­து­கொள்­வது இக்­கட்­டு­ரையின் நோக்கம். அதா­வது இக்­கட்­டுரை அங்கு நடை­பெறும் நாளாந்தக் கொலை­க­ளையும் அழி­வு­க­ளையும் ஒவ்­வொன்­றாக அல­சாமல் அந்தக் கொலை­க­ளுக்கும் அழி­வு­க­ளுக்கும் அடிப்­ப­டை­யாக அமைந்த சில உண்­மை­களை வாச­கர்­களின் கவ­னத்­துக்குக் கொண்­டு­வர விரும்­பு­கி­றது.

பலஸ்­தீ­னத்தின் பரி­தாபம்
முதலில் ஒரு வர­லாற்று உண்­மையை வலி­யு­றுத்த வேண்­டி­யுள்­ளது. அதா­வது நபி மூசாவின் வழித்­தோன்­றல்­க­ளான யூதர்கள் தமது தாயகம் என்று அழைப்­ப­தற்கு நிலப்­பி­ர­தேசம் ஒன்­றில்­லாமல் உல­கெலாம் நாடோ­டி­க­ளாகத் திரிந்­த­போது அவர்­களை ஒரு தீண்­டாச்­சா­தி­க­ளைப்போல் நடத்­தி­யது ஐரோப்­பிய கிறிஸ்­தவ உலகு. அந்தக் கொடு­மை­யான வர­லாற்றின் இறுதி அத்­தி­யா­யமே ஹிட்­லரின் ஆட்சி ஜேர்­ம­னியில் மேற்­கொண்ட யூத இனச்­சுத்­தி­க­ரிப்பு. ஆனால் அவர்­களை எங்கும் வாழ ­மு­டி­யாமல் கிறிஸ்­தவ நாடுகள் விரட்­டி­ய­டித்­த­போ­தெல்லாம் அவர்­க­ளுக்குப் புக­லிடம் வழங்கி அவர்­களை தன்­மா­னத்­துடன் வாழ­வைத்­த­வர்கள் முஸ்­லிம்கள். இஸ்­பா­னியா என்று இன்று அழைக்­கப்­படும் அன்­றைய அந்­தலூஸ் நாட்டின் வர­லாறு இந்த உண்­மைக்குச் சிறந்த ஒரு சான்று. மேலும், சிலுவை யுத்­தத்­திலே கிறிஸ்­தவப்­ப­டைகள் பலஸ்­தீ­னத்­துக்குள் நுழைந்­த­போது அவர்கள் முத­லிலே கொன்று குவித்­தது அங்­கு­ வாழ்ந்த யூத­ மக்­க­ளையே. அத­னா­லேதான் பின்னர் சலா­ஹுதீன் ஐயூபியின் தலை­மையில் முஸ்­லிம்­படை பலஸ்­தீ­னத்தை மீட்­கச்­சென்­ற­போது அவர்­களை வர­வேற்­ற­வர்கள் யூதர்கள். இந்த வர­லாற்றைப் பின்­ன­ணி­யாகக் கொண்டு இன்று பலஸ்­தீ­னத்தின் காசாவில் இஸ்­ர­வே­லுக்­கெ­தி­ராக நடை­பெறும் போராட்­டத்தை நோக்­கினால் அது அந்­நாட்டு அரே­பி­ய­ருக்கும் அல்­லது முஸ்­லிம்­க­ளுக்கும் யூதர்­க­ளுக்­கு­மி­டையே நடை­பெறும் போர் எனக்­க­ரு­து­வது தவறு. எனவே யூத­மக்கள் கொலை­யுண்­டதைக் கொண்­டா­டு­வது மிரு­கத்­தனம். நபி­பெ­ரு­மா­னாரின் ஒரு மனைவி யூதப் பெண் என்­ப­தையும் ஒரு யூதரின் மரண ஊர்­வலம் போகும்­போது நபி­களார் எழுந்­து­நின்று மரி­யாதை செய்­த­தையும் முஸ்­லிம்கள் மறத்­த­லா­காது.

இன்று நடப்­பது உண்­மையில் இஸ்­ர­வேலின் இன­வாத அடக்­கு­முறை ஆட்­சிக்கும் அடக்­கப்­பட்ட மக்­க­ளுக்கும் இடையே நடை­பெறும் ஒரு விடு­த­லைப்­போ­ராட்டம். சுருக்­க­மாகக் கூறினால் தென்­னா­பி­ரிக்­காவில் அன்று நில­விய ‘அப்­பார்தைற்’ அல்­லது நிற­வெறி ஆட்­சியே இன்று இஸ்­ர­வேலில் இன­வெறி ஆட்­சி­யாக நடை­பெ­று­கின்­றது. அந்த நாட்டில் வாழும் அரபு மக்கள் படும் இன்­னல்­களை மேற்­கு­லகு கண்டும் காணா­த­துபோல் இருப்­பது இஸ்­ரவேல் ஆட்­சி­யினை ஆமோ­திப்­பது போல் இல்­லையா? அந்த ஆட்­சியின் இன்னோர் அங்­கமே காசாவில் வாழும் மக்­களை மூச்சுத் திண­றும்­ப­டி­யான அடக்­கு­மு­றைக்கு இஸ்­ரவேல் ஆளாக்­கி­யுள்­ளமை. அந்த நிலை­யி­லி­ருந்து தமது மக்­களை எப்­ப­டி­யா­வது விடு­த­லை­யாக்கி சுதந்­திர வேட்­கை­யுடன் போரா­டு­வதே ஹமாஸ் இயக்கம். கடந்த சில நாட்­க­ளின்முன் அந்த இயக்கம் வீசிய ரொக்கட் குண்­டுகள் நூற்­றுக்­க­ணக்­கான யூத­ மக்­களைப் பலி­கொண்­டமை வருந்­தத்­தக்க ஒரு சம்­ப­வ­மா­கினும் அதன் அர­சியல் பின்­ன­ணியை மறந்­து­விட்டு வெறு­மனே அப்­போ­ரா­ளி­களை பயங்­க­ர­வா­தி­க­ளென்று பட்டம் சூட்டி முழு காசா­வை­யுமே இஸ்­ரவேல் முற்­று­கை­யிட்டு அந்த மக்­களை காசா­வை­ விட்டும் முற்­றாகத் துரத்­தி­ய­டிக்கத் துணிந்­துள்­ளதை இனச்­சுத்­தி­க­ரிப்பு என்று கூறாமல் வேறென்ன பெயர்­கொண்டு அழைப்­பதோ?

1948ல் உரு­வாக்­கப்­பட்ட இஸ்­ர­வேலின் எல்­லை­யை­விடப் பன்­ம­டங்கால் விஸ்­தீ­ரணம் அடைந்­துள்­ளது இன்­றைய இஸ்­ரவேல். பலஸ்­தீ­னத்தின் நிலப்­ப­ரப்பில் 78 சத­வீ­தத்தை இன்­றைய இஸ்­ரவேல் தன்­வசம் கொண்­டுள்­ளது. அவ்­வாறு ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட நிலங்கள் போரி­னாலும் தீவி­ர­வா­தத்­தாலும் கைப்­பற்­றப்­பட்ட நிலங்­களே. அந்த ஆக்­கி­ர­மிப்­புக்கு ஆசீர்­வாதம் வழங்­கி­யுள்­ளது அமெ­ரிக்­காவும் அதன் மேற்கு நேச­நா­டு­களும். அந்தக் கப­டத்தை விரைவில் விளக்­குவோம். முதலில் இஸ்­ர­வேலின் அடிப்­படை நோக்கம் என்ன என்­பதை விளங்கிக் கொள்­ள­வேண்டும். அதைச் சுருக்­க­மாக விப­ரிப்பின் என்றோ ஒரு நாள் முழு பலஸ்­தீ­னத்­தையும் தன்­வ­ச­மாக்கி அங்­குள்ள அர­பு­மக்­களை எகிப்­துக்கோ அல்­லது வேறு அரபு நாடு­க­ளுக்கோ துரத்­தி­ய­டித்­த­பின்னர் அல்-­அக்சா பள்­ளி­வா­ச­லையும் ஏனைய இஸ்­லா­மியச் சின்­னங்­க­ளையும் அழித்­தொ­ழித்து, தனது தலை­ந­க­ராக ஜெரு­ச­லத்தைப் பிர­க­டனம் செய்து, பலஸ்­தீனம் என்ற ஒரு நாடே பூகோ­ளப்­ப­டத்­தி­லி­ருந்து நீக்­கப்­ப­டு­வ­தற்குப் படிப்­ப­டி­யாகத் தனது காய்­களை நகர்த்­து­வதே சியோ­னிச இஸ்­ர­வேலின் அந்­த­ரங்கக் கொள்கை. 1948 இலிருந்து அந்த நோக்கம் படிப்­ப­டி­யாக ஈடே­றி­வ­ரு­வதை மத்­தி­ய ­கி­ழக்கு விவ­கா­ரங்­களை உன்­னிப்பாய் அவ­தா­னிப்போர் உணரத் தவ­ற­மாட்­டார்கள்.

பலஸ்­தீனம் என்­பது வர­லாறு மறந்த ஒரு கதை­யா­கவே ஈற்றில் முடி­வ­டையும். அல்-­அக்சா பள்­ளி­வா­சலின் அடித்­தளம் அகழ்­வா­ராய்ச்சி என்ற போர்­வையில் தோண்­டப்­பட்டு பல­வீ­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­மையை உலகம் அறி­யுமா?

அதனால் அந்தப் பள்­ளி­வாசல் என்றோ ஒருநாள் தானா­கவே சரிந்­து­வி­ழு­வது நிச்­சயம். பலஸ்­தீ­னத்தை இஸ்­ரவேல் முற்­றாக இணைத்­த­ பின்­புதான் நபி ஈசா மீண்டும் பூவு­ல­குக்கு வருவார் என்ற ஒரு நம்­பிக்கை அமெ­ரிக்க கிறிஸ்த­வர்­க­ளி­டையே நில­வு­கி­றது. எனவே இஸ்­ர­வேலின் இந்த முற்­று­கைக்கு அவர்­களின் மறை­மு­க­மான ஆத­ர­வுண்டு என்­ப­தையும் கவ­னத்தில் வைத்­தி­ருக்க வேண்டும். மொத்­தத்தில் இஸ்­ர­வேலின் நில விஸ்­த­ரிப்­புக்கும் பலஸ்­தீ­னத்தின் முற்­று­கைக்கும் தனது முழு ஆத­ர­வையும் வழங்­கு­கி­றது அமெ­ரிக்­காவும் அதன் ஐரோப்­பிய நேச­நா­டு­களும். அவுஸ்­தி­ரே­லி­யாவும் அந்தக் கூட்­ட­ணிக்குள் அடங்கும். எனவே மேற்கு நாடு­களின் கப­ட­நா­ட­கத்தை இனி விளக்­குவோம்.

மேற்கின் கப­ட­நா­டகம்
பலஸ்­தீ­னர்கள் இஸ்­ர­வேலைத் தாக்­கினால் அது பயங்­க­ர­வாதம். ஆனால் இஸ்­ர­வேலின் படைகள் பலஸ்­தீ­னர்­களைக் கொன்று குவித்தால் அது தற்­காப்பு நட­வ­டிக்கை. 1948லிருந்தே இந்தக் கப­டத்தை ராஜ­தந்­நிரம் என்ற போர்­வையில் நடத்­தி­வ­ரு­கி­றது மேற்­கு­லகு. பயங்­க­ர­வாதம், பயங்­க­ர­வா­திகள் என்ற வார்த்­தை­க­ளுக்கு மேற்­கு­லகு கண்­டு­பி­டித்­துள்ள வியாக்­கி­யா­னங்கள் வேடிக்­கை­யா­னவை. உதா­ர­ண­மாக, ரஷ்­யாவின் ஆக்­கி­ர­மிப்பை எதிர்த்துப் போராடும் உக்­ரே­னி­யர்கள் விடு­த­லைதப் போர்­வீ­ரர்கள். இஸ்­ர­வேலின் ஆக்­கி­ர­மிப்பை எதிர்த்துப் போராடும் பலஸ்­தீ­னி­யர்­களோ பயங்­க­ர­வா­திகள். அதே­போன்று ரொனால்டு ரேகனின் ஆட்­சியில் அன்­றொ­ருநாள் அமெ­ரிக்­கா­வுடன் இணைந்து சோவியத் படை­களை ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருந்து விரட்­டி­ய­டிக்க தலி­பான்கள் போரிட்­ட­போது அவர்கள் விடு­தலைப் போரா­ளிகள். அதே தலி­பான்கள் அமெ­ரிக்­கா­வையே ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருந்து வெளி­யேறச் சொன்­ன­வுடன் அவர்கள் பயங்­க­ர­வா­தி­க­ளா­னார்கள். ஆகவே பயங்­க­ர­வா­தி­ளென்றால் அவர்கள் அமெ­ரிக்­கா­வையும் அதன் நேச­நா­டு­க­ளையும் எதிர்ப்­ப­வர்கள் என்­பது இங்கே புலப்­ப­ட­வில்­லையா? அந்தச் சூத்­தி­ரத்தின் அடிப்­ப­டை­யி­லேதான் இஸ்­ர­வேலை எதிர்த்துப் போராடும் பலஸ்­தீன ஹமாசும் லெப­னானின் ஹிஸ்­புல்­லாவும் வளை­கு­டாவின் அல்-­கை­தாவும் பயங்­க­ர­வாதக் குழுக்­க­ளா­கின. பூனை ஒரு சாது­வான பிராணி. ஆனால் அதனை விரட்­டி­வி­ரட்டி ஒரு மூலைக்குக் கொண்டு சென்றால் அது தப்­பு­வ­தற்­காக எதிர்த்துப் பாய்­வதை விட வேறு வழி இல்லை. அப்­படிப் பாய்­வதால் அதனை ஒரு கொடிய மிருகம் என்று அழைக்­க­லாமா?

இதற்­கி­டையில் இஸ்­ரவேல் என்ற ஒரு நாட்டின் அத்­தி­வா­ரமே பயங்­க­ர­வா­தத்தால் கட்­டப்­பட்­டுள்­ளது என்­ப­தையும் அதன் தலை­வர்கள் பயங்­க­ர­வாதக் குழுக்­களின் ஸ்தாப­கர்கள் என்­ப­தையும் மேற்கின் வர­லாற்­றா­சி­ரி­யர்­களும் அதன் செய்தி ஊட­கங்­களும் தொடர்ந்து மூடி­ம­றைக்­கின்­றன. உதா­ர­ண­மாக, ஒரு பலஸ்­தீனச் சிறுவன் இஸ்­ரவேல் படை­வீரர் சென்ற ஒரு ஆயுதம் தாங்­கிய வாக­னத்­துக்குக் கல்­லெ­றிந்தான் என்­ப­தற்­காக அச்­சி­று­வ­னையே சுட்­டுக்­கொன்­றமை தற்­காப்பு நட­வ­டிக்கை. ஆனால் அப்­ப­டை­வீ­ரர்­களை நோக்கி ரொக்கட் வீசும் பலஸ்­தீ­னர்­களோ பயங்­க­ர­வா­திகள். இன்று காசாவில் நடக்கும் இஸ்­ர­வேலின் இனச்­சுத்­தி­க­ரிப்பை கடந்த வாரம் நடை­பெற்ற ரொக்கட் தாக்­கு­தலில் இருந்து ஆரம்­பித்­த­தாகக் கதை அளக்கும் மேற்கின் செய்தி ஊட­கங்கள் அதற்­கு முன் இஸ்­ரவேல் காசாவில் நடத்­திய குண்­டு­வீச்­சு­க­ளைப்­பற்­றியும் கொலை­க­ளைப்­பற்­றியும் அழி­வு­க­ளைப்­பற்­றியும் மௌனம் சாதிப்­ப­தேனோ? எங்கே சென்­றது இவ்­வூ­ட­கங்­களின் நிதர்­சனப் பார்வை? அவ்­வாறு நிதர்­ச­ன­மாக விட­யங்­களை விப­ரிக்கும் செய்தித் தாப­னங்­க­ளையும் அதன் நிரு­பர்­க­ளையும் இல்­லா­ம­லாக்­கு­வதும் இந்த நாடகக் கதையின் இன்னோர் அத்­தி­யாயம். அமெ­ரிக்கா அன்று ஈராக்கை குண்­டு­வீசித் தாக்­கி­ய­போது சில உண்­மை­களை ஒளி­ப­ரப்­பிய அல்-­ஜெ­ஸீரா நிலை­யத்தை குண்­டு­வீசித் தகர்க்­க­வில்­லையா? அதே­போன்­றுதான் இன்று காசா­வி­லி­ருந்து உண்­மை­களைத் தெரி­விக்கும் நிரு­பர்­க­ளையும் இஸ்­ரவேல் படை­யினர் சுட்டுக் கொன்­றுள்­ளனர்.

அதே­வேளை அப்­பட்­ட­மான பொய்­யொன்றை இஸ்­ரவேல் இப்­போது சிருட்­டித்து விட்­டி­ருக்­கி­றது. அதனை மேற்கு ஊட­கங்கள் உண்­மை­யனெ நம்­பச்­செய்­யு­மாறு ஓயாது பரப்­பிக்­கொண்­டி­ருக்­கின்­றன. அதா­வது நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் இந்த இனச்­சுத்­தி­க­ரிப்பை காசா-­ இஸ்­ரவேல் யுத்தம் என்று நாமம் சூட்டி காசா பலஸ்­தீ­னத்தின் பகுதி அல்ல என்­ற­வாறு கதை­பு­னைந்து காசாவை முற்­றாகக் கைப்­பற்­றினால் அது பலஸ்­தீ­னத்தை கைப்­பற்­று­வ­தாகக் கரு­த­மு­டி­யாது என்­ற­வாறு ஒரு புதிய நாடகம் அரங்­கேற்­றப்­ப­டு­கின்­றது. அதைப்­பற்றி அரபு ஊட­கங்கள் உதா­சீ­னமாய் இருப்­பது ஆபத்­தா­னது.

எப்­ப­டி­யா­வது இஸ்­ரவேல் மேற்கின் பாது­கா­வ­ல­னாக மத்­தி­ய­கி­ழக்கில் விளங்க வேண்டும் என்­பதே மேற்­கு­லகின் ராஜ­தந்­திரம். இது முஸ்­லிம்­களின் உது­மா­னியப் பேர­ரசு சின்­னா­பின்­ன­மாக்­கப்­பட்டு, தேசியம் என்ற போர்­வையில் வெவ்­வேறு நாடு­க­ளாகப் பிரிக்­கப்பட்டு, ஐரோப்­பிய குடி­யேற்­ற­வா­தி­களின் ஆட்­சிக்­குள்­ளாக்­கப்­பட்டு, அதன் பின்னர் சுதந்­திரம் என்ற ஒரு பம்­மாத்து மந்­தி­ரத்தின் அடிப்­ப­டையில் முஸ்லிம் நாடு­க­ளுக்கு அர­சியல் சுதந்­திரம் வழங்­கியும் அந்­நா­டு­களைச் சுதந்­தி­ர­மாக வள­ர­வி­டா­வண்ணம் தடுக்கும் ஒரு கப­ட­நா­ட­கத்தின் கதைச் சுருக்கம். அந்தக் கதையின் ஆசி­ரி­யனும் நாட­கத்தின் இயக்­கு­னனும் அமெ­ரிக்கா. இப்­போது பலஸ்­தீ­னத்தில் அந்த நாட­கத்தின் ஒரு காட்சி அரங்­கே­று­வதைக் காண்­கிறோம். ஹமாஸ் கடைந்­தெ­டுக்­கப்­பட்ட தீமையின் சுய­வ­டிவம் என்று அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோ பைடன் விப­ரித்­தி­ருப்­பது அந்த நாட­கத்தின் ஒரு விளம்­ப­ரமே. இப்­ப­டிப்­பட்ட விப­ரிப்­புகள் அமெ­ரிக்­கா­வுக்குப் புதி­தல்ல. ஏன், ஜோர்ஜ் புஷ் லிபி­யா­வையும் ஈராக்­கையும் ஈரா­னையும் அவ­்­வாறு அன்று விப­ரிக்­க­வில்­லையா? இருந்தும், பலஸ்­தீ­னத்தின் பரி­தா­பத்­தையும் மேற்கின் கப­ட­நா­ட­கத்­தையும் அவ­தா­னிக்கும் அதே வேளையில் அரபு நாடு­களின் கைய­று­நி­லை­யையும் நாம் விளங்­குதல் வேண்டும்.

ஐயோ அரபு நாடு­களே! ஐயோ முஸ்லிம் நாடு­களே!
ஒன்றை மட்டும் இக்­கட்­டுரை முதலில் வலி­யு­றுத்த விரும்­பு­கி­றது. அதா­வது, வெறும் பிரார்த்­த­னை­க­ளாலும் இறை­வ­னிடம் கையேந்தி ஒப்­பா­ரி­வைத்து அல­று­வ­தாலும் பலஸ்­தீ­னத்தின் பரி­தா­பத்தை நீக்க முடி­யாது. அதற்குத் தேவை ஆயு­தப்­ப­லமும் சாணக்­கிய ராஜ­தந்­தி­ரமும். இஸ்­ரவேல் உத­ய­மா­கிய காலம் தொடக்கம் இன்­று­வரை இந்த இரண்­டையும் அரபு நாடு­களோ முஸ்லிம் நாடு­களோ சம்­பா­திக்­க­வில்லை. ஐம்­பத்­தேழு முஸ்லிம் நாடுகள் ஐக்­கிய நாடுகள் சபையில் இன்று அங்கம் வகிக்­கின்­றன. அவை­க­ளுக்­கி­டையே உலக விவ­கா­ரங்­க­ளைப்­பற்­றிய ஓர் ஒரு­மைப்­பா­டான நோக்கு கிடை­யவே கிடை­யாது. பெரும்­பாலும் மேற்­கு­லகின் பகடைக் காய்­க­ளா­கவே அவை இயங்­கு­கின்­றன.

யானைக்குத் தெரி­யாதாம் அதன் உண்­மைப்­பலம். அதே­போன்­றுதான் உலக சனத்­தொ­கையில் சுமார் கால்­வா­சி­யினர் முஸ்­லிம்­க­ளென்று பறை அடித்­துக்­கொண்டு அதன் பலத்தை உப­யோ­கிக்கத் தெரி­யாத கைய­று­நி­லையை நாம் காண்­கிறோம். அதற்­கு­ரிய கார­ணங்­களை விளக்­கு­வ­தானால் ஒரு புத்­த­கத்­தையே எழு­தி­வி­டலாம். ஆனால் ஒரே­யொரு விட­யத்­தை­மட்டும், அதுவும் அரபு நாடுகள் தொடர்­பாக, அதிலும் இன்று செல்­வத்தில் மிதக்­கின்ற எண்­ணெய்­வள நாடு­களை மைய­மாக வைத்து விப­ரிக்க வேண்­டி­யுள்­ளது.

வறு­மையால் பீடிக்­கப்­பட்டுப் பல­மி­ழந்­து­கி­டந்த அர­பு­ல­குக்கு எண்ணெய் வளம் ஒரு வரப்­பி­ர­சா­த­மாக மாறி 1980க்குப் பின்னர் நினைக்க முடி­யாத அள­வுக்கு செல்­வத்தில் மிதக்­கத்­தொ­டங்­கின. அந்தச் செல்­வத்தை சவுதி அரே­பி­யாவும் லிபி­யாவும் ஈராக்கும் மற்றும் வளை­குடா நாடு­களும் என்ன செய்­தன? பளிங்­கினால் மாளி­கை­க­ளைக்­கட்டி நவீ­னத்­துவம் என்ற பெயரில் மேற்கு நாடு­களின் தொழில் வல்­லு­னர்­களைக் கொண்டு உல்­லாச புரி­களை உரு­வாக்கி உல­கையே வியக்க வைத்­தன. ஆனால் தமது முன்­னோர்கள் உரு­வாக்­கிய அறி­வு­லக சாம்­ராஜ்­யத்­துக்கு ஈடாக ஒரு விஞ்­ஞான ஆய்­வு­கூ­டத்­தை­யா­வது நிறுவி தொழில்­நுட்ப வல்­லு­னர்­களை உற்­பத்தி செய்து அறி­வு­லகின் எல்லைக் கோட்­டினில் நின்று முஸ்லிம் உலகைப் பலப்­ப­டுத்­தி­னார்­களா?

ஆனால் அதே கால­கட்­டத்­தி­லேதான் வறு­மைக்குள் வாடிக்­கி­டந்த சீனமும் இந்­தி­யாவும் எண்ணெய் வளம் இல்­லா­தி­ருந்தும் ஒரு புதிய பொரு­ளா­தாரப் பாதையில் கால்­வைத்து முன்­னேறத் தொடங்­கின. இன்று அவை இரண்டும் பிராந்­திய வல்­ல­ர­சு­க­ளாக ஆயுத பலத்­துடன் திகழ ஏன் அரபு நாடுகள் இன்னும் மேற்கின் அடி­வ­ரு­டி­க­ளாக வலம் வரு­கின்­றன. இந்த நாடு­களின் ராஜ­தந்­திரம் எல்லாம் எப்­படி அமெ­ரிக்­கா­வையும் அதன் நேச­நா­டு­க­ளையும், ஏன் இஸ்­ர­வே­லை­யும்­கூட நண்­பர்­க­ளாக்கி அவற்றின் உத­வி­யுடன் தமது அர­சியல் தலை­மைத்­து­வத்தை காப்­பாற்­றலாம் என்­ப­தையே மைய­மாகக் கொண்­டுள்­ளது. அரபு நாடு­க­ளெல்லாம் ஒன்று சேர்ந்து பலஸ்­தீ­னத்­தையே இஸ்­ர­வே­லுக்குத் தாரை­வார்த்துக் கொடுத்­தாலும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை. அந்த அள­வுக்கு இவை கைய­று­நி­லைக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளன. என்ன கேவ­லமோ? இவர்கள் மத்­தி­யிலா நபி­களார் அவ­த­ரித்தார்?

காலஞ்­சென்ற யாசிர் அரபாத் அவ­ரு­டைய பலஸ்­தீன விடு­தலை இயக்கம் மூன்று விமா­னங்­களைக் கடத்தி குண்­டு­வீசித் தகர்த்­த­வே­ளையில் அவ­ரிடம் தொலைக்­காட்சி நிருபர் ஒருவர் கேட்ட கேள்­விக்குப் பதி­ல­ளிக்­கையில் ‘‘நாங்கள் இஸ்­வே­லுக்குள் நேர­டி­யாக நுழைய மாட்டோம் அரபு ுக்குள் நேரடியாக நுழைய மாட்டோம் அரபு நாடுகளின் ஊடாகத்தான் நுழைவோம்’’ என்று பதிலளித்தார். ஹமாஸ் போன்ற பலஸ்தீன விடுதலை அமைப்புகளும் அதைத்தான் செய்யவேண்டுமோ? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.