உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் : வாசித்து முடிக்கப்பட்ட 23270 குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கும் பிரதிவாதிகள்

0 297

எம்.எப்.அய்னா

உயிர்த்த ஞாயிறு தின­மான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்­தப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வங்கள் குறித்து குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ரான வழக்கு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில், சிறப்பு ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் முன் அவர்­க­ளுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்கள் வாசித்து முடிக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த குண்டுத் தாக்­குதல் தொடர்­பி­லான விவ­கா­ரத்தை விசா­ரிக்­க­வென நிய­மிக்­கப்­பட்­டுள்ள, கொழும்பு மேல் நீதி­மன்றின் தலைமை நீதி­பதி தமித் தொட­வத்த தலை­மையில் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளான அமல் ரண­ராஜா ஆகியோர் அடங்­கிய அமர்வு முன்­னி­லையில் இந்த 23,270 குற்­றச்­சாட்­டுக்­களும் வாசித்து முடிக்­கப்­பட்­டுள்­ளன. குற்­றச்­சாட்­டுக்­களை சிங்­கள மொழியில் நீதி­மன்ற உரைப்­பெ­யர்ப்­பாளர் டி.டி. அபே­கு­ன­வர்­த­னவும் தமிழில் நீதி­மன்ற உரைப் பெயர்ப்­பா­ளர்­க­ளான ஏ.எஸ்.எம். ரிஸ்வான் மற்றும் டி.ரி. சதாம் ஆகி­யோரும் வாசித்­துக்­காட்­டினர். இந்த நிலையில் தாம் அனைத்து குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும் நிர­ப­ரா­திகள் என பிர­தி­வா­திகள் அறி­வித்­தனர். குற்றம் சுமத்­தப்­பட்ட 25 பேரில் 17 ஆவது பிர­தி­வாதி விளக்­க­ம­றி­யலில் உயி­ரி­ழந்­துள்ள நிலையில், அவ­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­களை மட்டும் சட்ட மா அதிபர் மீளப் பெற்­றுக்­கொண்­டுள்ளார்.

கடந்த வாரம் 7,9,10,11 ஆம் திக­தி­களில் இந்த வழக்கு தொடர்ச்­சி­யாக விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டி­ருந்­தது. இதன்­போது 7 ஆம் திகதி மட்டும் இந்த சிறப்பு ட்ரயல் அட்பார் நீதி­மன்ற குழாமில் அடங்கும் நீதி­பதி நவ­ரத்ன மார­சிங்க விசா­ர­ணை­க­ளுக்கு சமூ­க­ம­ளிக்­க­வில்லை.

23270 குற்­றச்­சாட்­டுக்கள் 25 பிர­தி­வா­திகள் மீது சுமத்­தப்­பட்­டுள்ள நிலையில், அவற்றை சுருக்க முறையில் வாசித்து காட்டும் நட­வ­டிக்­கைகள் கடந்த பெப்­ர­வ­ரியில் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

கொழும்பு மேல் நீதி­மன்றின் முதலாம் இலக்க விசா­ரணை அறையில் இந்த வழக்கு விசா­ர­ணைக்கு வந்த நிலையில், நீதி­மன்றின் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. பொலி­சாரும் பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யி­னரும் குவிக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

குறிப்­பாக வழக்கு விசா­ர­ணைக்கு வந்த கொழும்பு மேல் நீதி­மன்றின் முதலாம் இலக்க விசா­ரணை அறைக்குள் மூன்றாம் தரப்­பினர் உள் நுழைய அனு­ம­தி­ய­ளிக்­கப்­ப­ட­வில்லை. நீதி­மன்ற செய்­தி­யா­ளர்கள் உள்­ளிட்ட அனை­வ­ருமே சோதனை செய்­யப்­பட்ட பின்­ன­ரேயே நீதி­மன்­றுக்குள் அனு­ம­திக்­கப்­பட்­டனர்.
இந் நிலையில், இந்த விவ­கா­ரத்தில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள 24 பிர­தி­வா­தி­களும் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், மெகஸின், அங்­கு­ண­கொ­ல­பெ­லஸ்ஸ, மஹர, நீர்­கொ­ழும்பு, போகம்­பறை உள்­ளிட்ட பல சிறைச்­சா­லை­களில் இருந்து அவர்கள் 24பேரும் அழைத்து வரப்­பட்­டனர்.

பிர­தி­வா­தி­க­ளுக்­காக ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனுர மெத்­தே­கொட, சிரேஷ்ட சட்­டத்­த­ரணி என்.எம். சஹீட், சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கஸ்­ஸாலி ஹுசைன், சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், சட்­டத்­த­ரணி ஜி.கே. கரு­னா­சே­கர, சட்­டத்­த­ரணி வஸீமுல் அக்ரம், சட்­டத்­த­ரணி சுரங்க பெரேரா, சட்­டத்­த­ரணி ரிஸ்வான் உவைஸ், சட்­டத்­த­ரணி அசாத் முஸ்­தபா, சட்­டத்­த­ரணி இம்­தியாஸ் வஹாப், சட்­டத்­த­ரணி சச்­சினி விக்­ர­ம­சிங்க உள்­ளிட்டோர் ஆஜ­ராகி வரு­கின்­றனர்.

இந்த வழக்கில் சட்ட மா அதிபர் சார்­பாக மேல­திக சொலி­சிட்டர் ஜெனரால் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஹரிப்­பி­ரியா ஜய­சுந்­த­ரவின் தலை­மையில் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்­ஷன டி சில்வா, பிரதி சொலி­சிட்டர் ஜென­ரால்­க­ளான சுஹர்ஷி ஹேரத், சஜித் பண்­டார உள்­ளிட்ட 8 பேர் கொண்ட குழு­வினர் ஆஜ­ரா­கினர்.

பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் சார்­பிலும் சட்­டத்­த­ரணி சுரேன் டி பெரேரா தலை­மை­யி­லான குழாம் பிர­சன்­ன­மா­வ­தாக அறி­விக்­கப்­பட்­டது.
கடந்த 7 ஆம் திகதி நீதி­பதி நவ­ரட்ன மார­சிங்க வருகை தரா­மையால், குற்­றச்­சாட்­டுக்­களை வாசித்துக் காட்டும் நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­ற­வில்லை. ஏனைய 3 நாட்­க­ளிலும் குற்­ர­சாட்­டுக்­களை வாசிக்கும் பணிகள் தொடர்ந்து அவை நிறைவு செய்­யப்­பட்­டன.

7 ஆம் திகதி தலைமை நீதி­பதி தமித் திட்­ட­வத்த , உயர் நீதி­மன்றின் கடிதம் ஒன்­றினை மன்றில் வாசித்து, வழக்கு கோவையை உயர் நீதி­மன்­றுக்கு அனுப்­பு­மாறு அறி­வித்தல் வந்­துள்­ள­தா­கவும் அதனால் வழக்கை முன்­னெ­டுத்துச் செல்ல முடி­யாமல் உயர் நீதி­மன்ற விவ­காரம் முடியும் வரை காத்­தி­ருப்­பது சிறந்­த­தாக இருக்கும் என சுட்­டிக்­காட்­டினார்.

எனினும் அரசின் மேல­திக சொலி­சிட்டர் ஜெனரால் ஹரிப்­பி­ரியா ஜய­சுந்­தர, உயர் நீதி­மன்­றினால் எந்த தடை உத்­த­ரவும் இவ்­வ­ழக்கை தொடர இல்­லா­மையால், விசா­ர­ணை­களை தொடர முடியும் என குறிப்­பிட்டார்.
எனினும் வழக்குக் கோவையை உயர் நீதி­மன்றம் கோரும் பின்­ன­ணியில் வழக்­கினை தொடர்­வது தொடர்பில் தலைமை நீதி­பதி தனது நிலைப்­பாட்­டினை முன் வைத்தார்.

இதன்­போது பிர­தி­வா­தி­க­ளுக்­காக ஆஜ­ராகும் சட்­டத்­த­ர­ணி­க­ளான ரிஸ்வான் உவைஸ் மற்றும் கஸ்­ஸாலி ஹுசைன் ஆகி­யோரும் மன்றில் விட­யங்­களை முன் வைத்­தனர்.

இதன்­போது, பிர­தி­வா­தி­களில் இருவர் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் முன் வைத்­துள்ள பிணை மனு தொடர்­பி­லான விட­யங்கள் அது தொடர்­பி­லான உயர் நீதி­மன்றின் இடைக்­கால தடை உத்­த­ரவு தொடர்பில் மன்றில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இரு பிர­தி­வா­திகள் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் பிணை கோரி மனு தாக்கல் செய்­துள்­ளனர். பயங்­க­ர­வாத தடைச் சட்ட திருத்­தங்கள் பிர­காரம், பிணை அதி­காரம் மேன் முறை­யீட்டு நீதி­மன்­றுக்கு உள்ள நிலையில், அதனை மையப்­ப­டுத்தி இந்த பிணை மனுக்கள் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தன.

எனினும் ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் ஒன்றின் முன்­னி­லையில் உள்ள வழக்கு விசா­ரணை என்­பதால், மேன் முறை­யீட்டு நீதி­மன்­றுக்கு அதில் தலை­யீடு செய்ய அதி­காரம் இல்லை எனவும், உயர் நீதி­மன்­றமே தலை­யீடு செய்ய முடியும் எனவும் சட்ட மா அதிபர் தரப்பு அந்த பிணை மனு தொடர்பில் ஆட்­சே­ப­னை­களை முன் வைத்­துள்­ளது.

அந்த ஆட்­சே­ப­னை­களை நிரா­க­ரித்­துள்ள மேன் முறை­யீட்டு நீதி­மன்றம், பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் பிர­காரம் பிணை குறித்த நிலை­யான நீதி­மன்ற அதி­காரம் மேன் முறை­யீட்டு நீதி­மன்­றுக்கே இருப்­ப­தாக அறி­வித்­தி­ருந்­தது.

இந் நிலையில், மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் இந்த அறி­விப்­புக்கு எதி­ராக சட்ட மா அதிபர் உயர் நீதி­மன்றில் சிறப்பு மேன் முறை­யீட்டு மனுவை தாக்கல் செய்­துள்ள நிலையில், அது குறித்த விசா­ரணை நிலு­வையில் உள்­ளது.
அதன்­படி, உயர் நீதி­மன்றம் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் உள்ள பினை மனுவை விசா­ரணை செய்ய இடைக்­கால தடை விதித்­துள்ள நிலை­யி­லேயே, குறித்த பிணை மனுக்கள் மற்றும் மேல் நீதி­மன்றின் முன்­னி­லையில் உள்ள வழக்கின் மூல ஆவணக் கோவை­களை தமக்கு அனுப்­பு­மாறு அவ்­விரு நீதி­மன்­றங்­க­ளுக்கும் உத்­த­ர­விட்­டுள்­ளது.

இது குறித்து வழங்­கப்­பட்ட அறி­வித்­தலின் பிர­கா­ரமே, மேல் நீதி­மன்றின் ட்ரயல் அட்பார் குழாமின் தலைமை நீதி­பதி தமித் தொட்­ட­வத்த அக்­க­டி­தத்தை முன்­னி­றுத்தி, மூல வழக்­கேட்­டினை உயர் நீதி­மன்­றுக்கு அனுப்­பினால் உயர் நீதி­மன்ற நட­வ­டிக்கை முடியும் வரை, வழக்கு விசா­ர­ணை­களை ஒத்தி வைக்க வேண்டி வரலாம் என சுட்­டிக்­காட்­டினார்.

இந் நிலையில் இந்த விடயம் தொடர்பில் நகர்த்தல் பத்­திரம் ஒன்­றூ­டாக உரிய விளக்­கத்­தினை பெற்­றுக்­கொள்­வது தொடர்பில், வழக்குத் தொடுநர் மற்றும் பிர­தி­வா­தி­களின் சட்­டத்­த­ர­ணி­க­ளி­டையே இணக்கம் காணப்­பட்­டது.

உயிர்த்த ஞாயிறு தின­மான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்­தப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வங்கள் குறித்து குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள 25 பிர­தி­வா­தி­க­ளுக்கும் தற்­போ­தைய நிலையில் பிணை­ய­ளிக்க முடி­யாது என சிறப்பு ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் கடந்த ஜன­வரி 5 ஆம் திகதி அறி­வித்­தி­ருந்­தது. இந் நிலையில் அந்த தீர்­மா­னத்­துக்கு எதி­ரான திருத்தல் மனுவை தாக்கல் செய்­யாமல், நிலை­யான நீதி­மன்ற அதி­காரம் இருப்­ப­தலால் இரு பிர­தி­வா­திகள் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் பிணை கோரி பிணை மனுக்­களை தாக்கல் செய்­துள்­ளமை இங்கு சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.

இந்த நிலையில் குற்றம் சாட்­டப்­பட்­டுள்­ளோ­ருக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுக்கள் வாசித்து காட்டும் நட­வ­டிக்கை நிறை­வ­டைந்த கையோடு, பிர­தி­வா­திகள் தம் மீதான குற்­றச்­சாட்­டுக்­களை நிரா­க­ரிப்­பதால் வழக்கின் சாட்சி விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க தீர்­மா­னித்து அதற்கும் திகதி குறித்­தது. அதன்­படி வழக்கின் சாட்சி விசா­ர­ணை­களை எதிர்­வரும் ஒக்­டோபர் 10,11,12 ஆம் திக­தி­களில் முன்­னெ­டுக்க நீதி­மன்றம் திகதி குறித்­துள்­ளது. முதல் சாட்­சி­யா­ள­ராக சி.ஐ.டி.யின் முன்னாள் பிரதிப் பணிப்­பா­ளரும் தற்­போ­தைய பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ரு­மான பி.அம்­பா­வில அழைக்­கப்­பட்­டுள்ளார். அவ­ருக்­கான அறி­வித்­தலும் அனுப்­பப்­பட்­டுள்­ளது. இத­னை­விட உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சம­னுக்கும் அறி­வித்தல் அனுப்­பப்­பட்­டுள்­ளது.

வழக்குத் தொட­ரப்­பட்­டுள்ள பிர­தி­வா­திகள்:
1.அபூ செய்த் எனப்­படும் மொஹம்மட் இப்­ராஹீம் மொஹம்மட் நெளபர் அல்­லது நெளபர் மெள­லவி
2.அபூ ஹதீக் எனப்­படும் கபூர் மாமா அல்­லது கபூர் நாநா எனும் பெயரால் அறி­யப்­படும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை
3. அபூ சிலா எனப்­படும் ஹயாத்து மொஹம்­மது மில்ஹான்
4. அபூ உமர் எனப்­படும் மொஹம்மட் இப்­ராஹீம் சாதிக் அப்­துல்லாஹ்
5. அபூ பலாஹ் எனப்­படும் மொஹம்மட் இப்­ராஹீம் சாஹித் அப்துல் ஹக்
6.அபூ தாரிக் எனப்­படும் மொஹம்மட் அன்வர் மொஹம்மட் ரிஸ்கான்
7. அபூ மிசான் எனப்­படும் மொஹம்மட் மன்சூர் மொஹம்மட் சனஸ்தீன்
8. அப்துல் மனாப் மொஹம்மட் பிர்­தெளஸ்
9. அபூ நஜா எனப்படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்லது சாஜித் மெளலவி
10. ஷாபி மெளலவி அல்லது அபூ புர்கான் எனப்படும் அப்துல் லதீப் மொஹம்மட் ஷாபி
11. ஹுசைனுல் ரிஸ்வி ஆதில் சமீர்
12.அபூ தவூத் எனப்படும் மொஹம்மட் சவாஹிர் மொஹம்மட் ஹசன்
13. அபூ மொஹம்மட் எனப்படும் மொஹம்மட் இப்திகார் மொஹம்மட் இன்சாப்
14. ரஷீத் மொஹம்மட் இப்றாஹீம்
15.அபூ ஹினா எனப்படும் மொஹம்மட் ஹனீபா செய்னுல் ஆப்தீன்
16.அபூ நன் ஜியார் எனப்படும் மொஹம்மட் முஸ்தபா மொஹம்மட் ஹாரிஸ்
17. யாசின் பாவா அப்துல் ரவூப் ( விளக்கமறியலில் வைத்து மரணித்துவிட்டார்)
18. ராசிக் ராசா ஹுசைன்
19.கச்சி மொஹம்மது ஜெஸ்மின்
20.செய்னுல் ஆப்தீன் மொஹம்மட் ஜெஸீன்
21. மொஹம்மட் முஸ்தபா மொஹம்மட் ரிஸ்வான்
22.அபூ சனா எனப்படும் மீரா சாஹிப் மொஹம்மட் நப்லி
23. மொஹம்மட் அமீன் ஆயதுல்லாஹ்
24.மொஹம்மட் அன்சார்தீன் ஹில்மி
25. மொஹம்மட் அக்ரம் அஹக்கம்

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.