முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தமும் பெண்களின் உரிமைப் போராட்டமும்

0 410

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

முஸ்­லிம்­களின் திரு­மணம், விவா­க­ரத்து சம்­பந்­த­மான தனியார் சட்டம் 1951ஆம் வருடம் ஆண்­களே நிறைந்த ஒரு நாடா­ளு­மன்­றத்தால் நிறை­வேற்­றப்­பட்டு ஒரு சில செயற்­பாட்டு சம்­பந்­த­மான மாற்­றங்­க­ளுடன் இன்று வரை அமுலில் இருந்து வரு­கின்­றது. ஆணா­திக்கம் அர­சோச்­சிய ஒரு காலச் சூழலில் வைதீக மார்க்­க­போ­த­கர்­களின் ஏக­போக உரி­மை­யாக இஸ்லாம் கரு­தப்­பட்­டி­ருந்­ததால் திரு­மண விவா­க­ரத்துச் சட்­டத்­திலும் பெண்­க­ளுக்­கான உரி­மைகள் மறுக்­கப்­பட்­டி­ருந்­ததில் ஆச்­ச­ரி­ய­மில்லை. ஆனால் அன்று வாழ்ந்த முஸ்லிம் பெண்கள் வேறு இன்று வாழும் முஸ்லிம் பெண்­களோ வேறு. நவீ­னத்­து­வத்தின் தாக்­கத்­தாலும் கல்­வி­ய­றிவின் பர­வ­லாலும் சமூ­கத்தின் பொது விவ­கா­ரங்­களில் அவர்­க­ளுக்­குள்ள ஈடு­பாட்­டி­னாலும் உலக முஸ்லிம் பெண்­க­ளி­டையே ஒரு விழிப்­பு­ணர்வு ஏற்­பட்­டுள்­ளதை யாரும் மறுக்க முடி­யாது. ஆதலால் அவர்கள் தாங்கள் வாழும் சமூகம் ஆணா­திக்­கத்தின் பிடி­க­ளுக்குள் சிக்­குண்டு பெண்­களை தொடர்ந்தும் இரண்­டாந்­தரப் பிர­ஜை­க­ளாகக் கணித்­து­வ­ரு­வதை எதிர்த்துப் போராடத் துணிந்­து­விட்­டனர். அந்தத் துணிச்சல் அலை இலங்­கை­யிலும் வீசத் தொடங்­கி­விட்­டது. அந்த வீச்சின் குரல்தான் தனியார் சட்­டத்­தினை திருத்த வேண்டி அவர்கள் இப்­போது நடத்தும் உரிமைப் போராட்டம். அது­பற்­றிய முக்­கி­ய­மான ஓரிரு சிந்­த­னை­களை இக்­கட்­டுரை வாச­கர்­க­ளுடன் பகிர்ந்­து­கொள்ள விரும்­பு­கி­றது. அதே வேளை இப்­போ­ராட்­டத்­துக்கு ஆத­ர­வாக முஸ்லிம் ஆண்­வர்க்­கத்தின் புத்­தி­ஜீ­வி­களுள் கணி­ச­மான ஒரு பகு­தி­யினர் ஆத­ரவு வழங்­கு­வ­தையும் சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது. ஆதலால் இப்­போ­ராட்டம் வெற்றி பெறு­வது நிச்­ச­யமே.

முத­லா­வ­தாக, இலங்­கையில் எப்­போது இந்தப் போராட்டம் ஆரம்­ப­மா­கி­யது என்­பதை விளங்­க­வேண்டும். கல்­வி­ய­றிவு இன்­மை­யாலும் உலக மாற்­றங்­களை அறி­யாத கிணற்றுத் தவ­ளை­க­ளா­கவும் தமது வீடு­க­ளுக்­குள்­ளேயே தூங்­கிக்­கி­டந்த முஸ்லிம் பெண்­க­ளி­டையே இல­வசக் கல்­வியின் வளர்ச்­சியும் அதனால் ஏற்­பட்ட வேலை வாய்ப்­பு­களும் அவர்­களின் கண்­களைத் திறக்­க­லா­யின. இது சம்­பந்­த­மாக ஒரு சம்­ப­வத்தை நான் வாச­கர்­க­ளுடன் பரிர்ந்­து­கொள்ள விரும்­பு­கிறேன்.

1970களில் ஒரு நாள் அன்­றைய கல்வி அமைச்சர் பதி­யு­தீ­னுடன் அவ­ரது கம்­பளை இல்­லத்தில் உரை­யா­டி­ய­போது பொதுத் தரா­த­ரப்­ப­ரீட்­சையில் ஐந்து பாடங்­களில் மட்டும் சித்­தி­ய­டைந்த முஸ்லிம் பெண்­க­ளுக்கு ஆசி­ரியத் தொழில் வழங்­கு­வதால் கல்­வியின் தரம் கெட்டு விடும் என்ற ஒரு வாதத்தை அவ­ரிடம் கூறினேன். அதற்கு அவ­ர­ளித்த பதிலை என்னால் மறக்க முடி­யாது. நான் அவ­ளுக்­காக அந்தத் தொழிலை வழங்­க­வில்லை, அவளின் பிள்­ளை­க­ளுக்­காக வழங்­கு­கிறேன் என்றார். அதா­வது கல்­வியின் பயனை அவள் உணர்ந்­து­விட்டால் அவள் தனது பிள்­ளையை கடைச்­சிப்­பந்­தி­யா­கவோ அங்­காடி வியா­பா­ரி­யா­கவோ உரு­வாக்­காமல் கல்­வி­யி­லேயே ஊக்கம் செலுத்த வைப்பாள் என்றார். அவ­ரது தூர­நோக்கும் அவ­ரது அந்தக் கொள்­கை­யும்தான் பின்னர் முஸ்லிம் பெண்­க­ளி­டையே ஒரு விழிப்பை உண்­டு­பண்­ணிற்று என்றால் அது மிகை­யா­காது.

அந்த விழிப்பின் விளை­வா­கத்தான் 1980களி­லி­ருந்தே முஸ்லிம் பெண்கள் தமக்­கென சங்­கங்­களை அமைத்து அவற்றின் மூலம் தமது பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண முற்­பட்­டனர். அதுதான் அவர்­களின் கவ­னத்தை தனியார் சட்­டத்­தின்­பாலும் திருப்­பி­யது. அச்­சட்­டத்தில் திருத்­தங்­களை கொண்­டு­வ­ரு­மாறு அர­சாங்­கத்­திடம் பல வழி­க­ளாலும் வலி­யு­றுத்­தி­யதால் 2009ஆம் வருடம் அப்­போ­தி­ருந்த நீதி அமைச்சர் மிலிந்த மொறெ­கொட 16 அங்­கத்­த­வர்­களை உள்­ள­டக்­கிய ஒரு குழுவை நீதி­ய­ரசர் மர்சூப் சலீம் தலை­மையில் நிய­மித்து விட­யத்தை ஆராய்ந்து ஆக்­க­பூர்­வ­மான சிபார்­சு­களைச் சமர்ப்­பிக்­கு­மாறு பணித்தார். அந்தக் குழுவில் ஆக மூன்று முஸ்லிம் பெண்­களே இடம்­பெற்­றமை அக்­கு­ழுவும் ஆணா­திக்­கத்தின் பிர­தி­ப­லிப்­பென்­பதை எடுத்துக் காட்­டிற்று. அப்­போது அதை யாருமே சுட்­டிக்­காட்டத் தவ­றி­யது ஒரு மகா தவறு. குழுவின் ஏனைய அங்­கத்­த­வர்­களுள் பெரு­ம­ள­வா­ன­வர்கள் சட்­டத்­த­ர­ணிகள்.

அவர்­க­ளுடன் ஜமி­யத்துல் உலமா சபையின் இரு அங்­கத்­தி­னரும் ஒரு அரபு மொழிக் கலா­நி­தியும் இடம்­பெற்­றி­ருந்­தனர். அவர்­களுள் எவ­ருக்­கா­வது தற்­கால முஸ்லிம் பெண்­ணி­னத்தின் உயர்ச்­சி­யையும் அவர்கள் இஸ்லாம், இஸ்­லா­மிய வர­லாறு, இஸ்­லா­மிய மார்க்கச் சட்­டங்கள், முஸ்­லிம்­களின் கலா­சாரம் ஆகிய துறை­களில் வெளி­யிட்ட எத்­த­னையோ ஆய்­வு­க­ளையும் அவர்­க­ளது சாத­னை­க­ளையும் வாசித்­தா­வது இருந்­தார்­களா என்­பது சந்­தே­கமே. எனினும் ஒன்­பது வருட இழு­ப­றி­யின்­பின்னர் நீதி­ய­ரசர் சலீம் அவர்கள் 2018 இல் ஓர் அறிக்­கையை அன்­றைய பெண் நீதி அமைச்சர் தலதா அத்­துக்­கோ­ற­ளை­யிடம் சமர்ப்­பித்தார். அதில் பெண்­ணு­ரி­மைக்குச் சாத­க­மான ஓரிரு சிபார்­சுகள் இருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. ஆனாலும் அந்த அறிக்கை பெரும்­பா­லான குழு அங்­கத்­த­வர்­களின் சம்­ம­தத்தைப் பெற்­றி­ருக்­க­வில்லை. அந்தப் பிளவு இனி வரப்­போகும் எதிர்ப்பைத் தூண்டும் ஒரு சங்­கொ­லிபோல் இருந்­தது.

அவ்­வ­றிக்­கையின் சிபார்­சு­க­ளுக்கு எதி­ராக எழுந்த குர­லுக்குத் தலைமை தாங்­கியோர் உலமா சபை அங்­கத்­தி­னரே. அந்­தக்­கால கட்டம் அர­சாங்­கத்தின் இறுதி வரு­ட­மாக இருந்­த­தாலும் அவ்­வ­றிக்­கைக்­கெ­தி­ரான மக­ஜர்கள் அமைச்சர் மடியில் வந்து குவிந்­த­தாலும் அந்த அர­சி­யல்­வா­தியும் அவ்­வ­றிக்­கையை ஏற்­பதா மறுப்­பதா என்ற முடிவை நாடா­ளு­மன்ற முஸ்லிம் பிர­தி­நி­தி­களின் பொறுப்பில் தந்­தி­ர­மாகச் சுமத்­தி­விட்டுக் கைக­ழு­வினார். அடுத்து நடந்­த­தென்ன?

நாடா­ளு­மன்ற முஸ்லிம் பிர­தி­நி­தி­களின் முழுக் கவ­னமும் அவ்­வ­றிக்­கை­யை­விட எதிர்­வ­ரப்­போகும் தேர்­தலில் தமது ஆச­னங்­களை எவ்­வாறு கைப்­பற்­று­வது என்­ப­தி­லேயே தங்­கி­யி­ருந்­தது. இது உலமா சபை­யி­ன­ருக்குக் கிடைத்த ஒரு வரப்­பி­ர­சாதம். உலமா சபையோ நாட்­டி­லுள்ள பெரும்­பா­லான பள்­ளி­வா­சல்­க­ளையும் மத­ர­சாக்­க­ளையும் தனது செல்­வாக்­கினுள் வைத்­தி­ருந்­ததால் அவற்­றி­னூ­டாக முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளுக்கு எதி­ரா­கவோ சார்­பா­கவோ பிரச்­சாரம் செய்­யக்­கூ­டிய வாய்ப்பு அச்­ச­பைக்கு இருந்­தது. அந்த வாய்ப்பை ஓர் ஆயு­த­மாகப் பயன்­ப­டுத்தி முஸ்லிம் பிர­தி­நி­தி­களை அவ்­வ­றிக்­கையை ஏற்­க­வேண்­டா­மென அழுத்தம் கொடுத்­தனர். அப்­பி­ர­தி­நி­தி­களும் சுய­நலம் கருதி உலமா சபைக்கு ஆமா போட்­டனர். ஆதலால் சலீம் அறிக்கை நாடா­ளு­மன்ற அருஞ்­சு­வ­டிச்­சா­லைக்குள் தஞ்சம் அடைந்து தூசு பிடிக்கத் தொடங்­கிற்று.

அதன்­பி­றகு இப்­போது இன்­னு­மொரு தோர்தல் வரப்­போகும் ஒரு சூழலில் 18 முஸ்லிம் நாடா­ளு­மன்ற அங்­கத்­த­வர்கள் (அனை­வரும் ஆண்கள்) ஒரு புதிய மக­ஜரை தனியார் சட்­டத்­தி­ருத்தம் சம்­பந்­த­மாக நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக்ச அவர்­க­ளிடம் சமர்ப்­பித்­துள்­ளனர். அந்த மக­ஜ­ரிலும் உலமா சபையின் வாடை வீசு­கி­றது. மீண்டும் அதற்­கெ­தி­ராக முஸ்லிம் பெண் இயக்­கங்­களும், ஏனைய சமூ­கத்­தி­லுள்ள பெண் அறி­வா­ளி­களும், முஸ்லிம் ஆண் புத்­தி­ஜீ­வி­களின் அமைப்­பு­களும் போர்­கொடி தூக்­கி­யுள்­ளனர்.

இந்தப் போராட்­டத்தின் முக்­கிய கோரிக்­கைகள் யாவை? முத­லா­வ­தாக, ஒரு பெண் பருவம் எய்­தி­ய­வுடன் அவளை வீட்­டுக்­குள்ளே பூட்­டி­வைத்து அவளை ஒரு பார­மாகப் பெற்றோர் கருதி இளம் வய­தி­லேயே அந்தப் பெண்ணை எந்த ஓர் ஆண்­ம­கனின் தலை­யி­லா­வது வில­பேசிக் கட்­டி­வைத்து அதனால் பெற்­ற­வர்­களின் குடும்பப் பாரத்தைக் குறைக்கும் தீங்­கினை அகற்­று­வ­தற்­காக திரு­மணச் சோடி­களின் வய­தெல்­லையை பதி­னெட்­டாக உயர்த்தி பெண்ணை விலை­பேசி விற்கும் சீதனக் கொடு­மை­யையும் ஒழிப்­பது. இரண்­டா­வ­தாக, திரு­மண ஒப்­பந்­தத்தில் மண­மகள் கைச்­சாத்­தி­டு­வது அவ­சியம். அத்­துடன் அந்தக் கைச்­சாத்­தி­னுக்குச் சாட்­சி­யாக ஓர் ஆண் பாது­கா­வ­லனே கைச்­சாத்­திட வேண்டும் என்ற நிய­தியை அகற்றல். மூன்­றா­வ­தாக, பெண்­ணுக்கும் விவா­க­ரத்துச் செய்யும் உரி­மையை வழங்­குதல். நான்­கா­வ­தாக, காதி நீதி மன்ற நீதி­ப­தி­க­ளாகப் பெண்­க­ளையும் நிய­மித்தல். ஐந்­தா­வ­தாக ஆண்கள் பல­தார மணம் செய்­வதை முற்­றாக ஒழித்தல்.

இந்தக் கோரிக்­கைளின் அடிப்­படை வாத­மாக இன்­றைய முஸ்லிம் பெண்­களும் வளர்ச்­சி­ய­டைந்த இதர சமூ­கங்­களில் வாழும் பெண்­க­ளைப்­போன்று தமது சொந்­தக்­காலில் நின்று வாழ்க்கை நடத்தத் தகு­தி­யுள்­ள­வர்கள் என்­பது மட்­டு­மல்ல, அவர்­களால் தனித்து நின்று குடும்பப் பாரத்தைத் தாங்க முடி­கின்ற அதே­வேளை ஆண்­க­ளைப்­போன்று சகல துறை­க­ளிலும் அவர்­களால் பங்­கு­கொள்ள முடி­யு­மா­தலால் அவர்­க­ளுக்கு ஏன் திரு­ம­ண­பந்­தத்தில் சம­நிலை வழங்க முடி­யாது என்­ப­து­மாகும். பல துறை­களில் முஸ்லிம் ஆண்­க­ளை­வி­டவும் பெண்கள் திறமை உள்­ள­வர்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றனர். அந்தப் பட்­டி­யலை நீட்­டு­வ­தற்கு இக்­கட்­டுரை இடம் தராது. சுருக்­க­மாகச் சொன்னால் அன்று கவிஞர் அப்­துல்­காதர் லெப்பை விப­ரித்த இலட்­சியப் பெண்ணை இன்று நாம் சமூ­கத்தில் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது. இந்த முன்­னேற்­றத்­தைப்­பற்றி மேலும் விப­ரிக்­காமல் அவர்­களின் போராட்­டத்தின் எதி­ரி­களை இனங்­கண்டு அவர்­களின் எதிர்ப்பின் அடிப்­படை என்ன என்­ப­தைப்­பற்றி ஒரு கருத்தை விளக்க வேண்­டி­யுள்­ளது. இக்­க­ருத்தை ஜீர­ணிப்­பது பல­ருக்குக் கடி­ன­மாக இருக்­கலாம். ஆனால் சொல்ல வேண்­டி­யதை சொல்ல வேண்­டிய இடத்தில் சொல்­லித்­தானே ஆக­வேண்டும்.

பெண்­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டுள்ள கட்­டுப்­பா­டுகள் யாவும் ஷரீயத், பிக்ஹ் சட்­டங்­களின் அடிப்­ப­டையில் அமைந்­துள்­ள­னவால் அவற்றை மீறுதல் இறை­வ­னையும் அவ­னது தூத­ரையும் அவ­ம­திப்­ப­தற்குச் சமன் என்­ற­வாறே எதி­ரி­களின் வாதங்கள் அமைந்­துள்­ளன. இங்­கேதான் பிரச்­சி­னையே எழு­கின்­றது.

ஷரீயத், பிக்ஹ் ஆகிய இரண்­டுக்கும் மூலா­தாரம் இறை­வனின் திரு­ம­றையும் நபி­க­ளாரின் வார்த்­தை­களும் நடத்­தை­க­ளுமே. அதில் எந்தச் சந்­தே­கமும் இல்லை. ஆனால் தீரு­ம­றைக்கும் நபி­க­ளா­ருக்கும் இடையில் இன்­னொன்றும் இருக்­கி­றது. அதா­வது திரு­ம­றையின் வச­னங்கள் மட்­டுமே நபி­க­ளா­ருக்கு அரு­ளப்­பட்­டன. அவற்றின் விளக்­கங்கள் அரு­ளப்­ப­ட­வில்லை. இதனை முதலில் உண­ர­வேண்டும். அந்த விளக்­கங்­களை நபி­க­ளாரே சுய­மாக அறிந்­து­கொள்­ள­வேண்டி இருந்­தது. ஆனால் மாநபி அவர்கள் ஒரு மனிதர். இறை­வ­னல்ல. அதை இறை­வனே குர்­ஆனின் பதி­னெட்­டா­வது அத்­தி­யா­யத்தில் நூற்­றுப்­பத்­தா­வது வச­னத்தில் தெட்­டத்­தெ­ளி­வாக்­கி­யுள்ளான்.

எந்த ஒரு மனி­த­னுக்கும் தாய் தந்தை மற்றும் குடும்பம் என்­பன உண்டு. அந்தக் குடும்­பமும் அந்த மனி­தனும் ஒரு சமூ­கத்தின் சூழ­லி­லேதான் வாழ்­கின்­றனர். அதே வேளை அந்தச் சமூ­கத்­துக்கு ஒரு வர­லாறும் உண்டு. எனவே சமூகச் சூழலும் வர­லாறும் ஒரு மனி­தனின் சிந்­த­னை­யுடன் மோதும்­போ­துதான் அவ­னது கருத்­து­களும் செயல்­களும் உத­ய­மா­கின்­றன. இந்த நிய­திக்கு இறை தூதர்­களும் விதி­வி­லக்­கல்ல. இதை விளங்கிக் கொண்டால் சூழ­லும்­மாறி வர­லாறும் வள­ரும்­போது ஒரு காலத்தில் சரி­கா­ணப்­பட்ட கருத்­துகள் இன்­னொரு காலத்தில் பொருத்­த­மற்­ற­வை­யாகக் காணப்­ப­டுதல் இயல்பு. பதி­னாலாம் நூற்­றாண்டு பெற்­றெ­டுத்த சமூ­க­வி­யலின் பிதா என அழைக்­கப்­படும் இப்னு கல்தூன் தொடக்கம் இரு­பதாம் நூற்­றாண்டின் பேரா­சி­ரியர் பஸ்லுர் ரகுமான், இன்று வாழும் இஸ்­லா­மிய சட்­டத்­துறைப் பேரா­சி­ய­ரியன் காலித் இப்னு பத்ழ் வரை பல்­துறை வல்­லு­னர்கள் இந்த நிய­தியின் அடிப்­ப­டை­யி­லேதான் குர்­ஆ­னையும் நபி­க­ளாரின் போத­னை­க­ளையும் இமாம்­களின் சட்­டக்­கோர்­வை­க­ளையும் அணுகி மாற்­றங்கள் செய்ய வேண்­டு­மென வலி­யு­றுத்­து­கின்­றனர். இதைத்தான் இஜ்­திஹாத் என்று கூறப்­ப­டு­கின்­றது. அவ்­வா­றானால் திரு­ம­றையின் வாக்­கி­யங்­க­ளுக்கும் பெரு­மா­னாரின் போத­னை­க­ளுக்கும் அவ­ரது நடத்­தை­க­ளுக்கும் ஒரு சந்­தர்ப்­ப­சூழல் வரை­யறை உண்டு என்­பதை மறுக்க முடி­யாது. சந்­தர்ப்ப சூழ்­நி­லைகள் மாறும்­போது அவற்றின் வியாக்­கி­யா­னங்­களும் மாறவே வேண்டும். அந்த அடிப்படையிலேதான் 1951ல் நிறைவேற்றப்பட்ட தனியார் சட்டத்தையும் அணுகவேண்டியுள்ளது.

இதில் இன்­னு­மொரு சிக்­கலும் உண்டு. அதா­வது அந்த வியாக்­கி­யா­னங்­களை யார் செய்­வது? மத­ர­சா­விலே ஓதிப்­ப­டித்துப் பட்­டம்­பெற்ற உலமா தேவைதான். ஆனாலும் உலமா என்­பது அவர்­களை மட்­டும்தான் உள்­ள­டக்கும் ஒரு வார்த்தை அல்ல. உயர்ந்த இல்ம் அல்­லது அறி­வு­டைய எல்­லாரும் உல­மாவே. அதில் பெண்­களும் அடங்­குவர். இஸ்­லாத்தின் வர­லாற்றில் தமது அறி­வி­னாலும் புத்­தி­சா­து­ரி­யத்­தி­னாலும் தடம் பதித்த பெண்­களை யார்தான் மறுப்­பரோ? பெரு­மா­னாரின் மனை­வியார் கதீ­ஜா­வி­லி­ருந்து அந்தப் பட்­டி­யலை ஆரம்­பிக்­கலாம். எனவே தனியார் சட்டத் திருத்­தத்தை நீதி அமைச்­சர்கள் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களின் கைக­ளிலும் உலமா சபையின் கைக­ளிலும் விடாமல் பல துறை­க­ளிலும் பாண்­டித்­தியம் பெற்ற அறி­வு­டையோர் கைகளில் ஒப்­ப­டைத்து அவர்­களுள் பெண் அறி­வா­ளி­க­ளையும் சம­மாக உள்­ள­டக்கி இருந்தால் இந்தப் பிரச்­சினை எப்­போதோ தீர்க்­கப்­பட்­டி­ருக்கும். அந்தத் தவ­றி­னா­லேதான் இன்று பெண்­ணினம் போராட்­டத்தில் இறங்­கி­யுள்­ளது. இலங்­கையின் இன்­றைய முஸ்லிம் பெண்­களுள் அவ்­வா­றான திற­மை­யுள்­ள­வர்கள் உள்­ளனர். அவர்கள் ஆணா­திக்­கத்­துக்கு அடி­ப­ணி­ய­மாட்­டார்கள். வர­லாறும் அவர்­க­ளுக்குச் சார்பாகச் சாட்சியம் கூறுகிறது. எனவே அவர்களது உரிமைப் போராட்டம் வெற்றி பெறுவதைத் தடுக்க முடியாது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.