‘இலங்கை – ஓமான் உறவுகள் : நேற்று, இன்று, நாளை’

ஒரு வரலாற்று ஆவணம்

0 738

எம்.பி.எம்.பைறூஸ்

ஓமான் – இலங்கை நாடு­க­ளுக்­கி­டை­யி­லான இரா­ஜ­தந்­திர உற­வு­க­ளுக்கு நான்கு தசாப்­தங்கள் பூர்த்­தி­யா­வதை முன்­னிட்டு வெளி­வந்த ‘இலங்கை –ஓமான் உற­வுகள் -: நேற்று, இன்று, நாளை’ எனும் தலைப்­பி­லான நூல் இலங்­கையின் வெளி­யு­ற­வுத்­துறை வர­லாற்றில் பாது­காக்­கப்­பட வேண்­டிய ஓர் ஆவணம் என்றால் மிகை­யா­காது.

வெளி­வி­வ­கார அமைச்சின் கொள்கைத் திட்­ட­மிடல், மீளாய்வு திட்ட அமு­லாக்கம் மற்றும் மனித வள அபி­வி­ருத்­திக்குப் பொறுப்­பான பணிப்­பாளர் நாய­க­மாக தற்­போது கட­மை­யாற்றும் சிரேஷ்ட இரா­ஜ­தந்­திரி ஓ.எல். அமீர் அஜ்வாத், தான் ஓமா­னுக்­கான இலங்கை தூது­வ­ராக கட­மை­யாற்­றிய காலத்­தி­லேயே இந்­நூலை தொகுத்து வெளி­யிட்­டி­ருந்தார். இந் நூல் கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் ஓமா­னிலும் இவ்­வ­ருட ஆரம்­பத்தில் இலங்­கை­யிலும் வெளி­யி­டப்­பட்­டது.
இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான கடந்த கால உறவை மீட்டிப் பார்த்து, சம­கால உற­வுக்கு முக்­கி­யத்­து­வ­ம­ளித்து எதிர்­கா­லத்தில் உறவை மேலும் வலுப்­ப­டுத்­து­வ­தற்குத் தேவை­யான தக­வல்­களை வழங்­கு­வதே இந்நூல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளதன் நோக்கம் என நூலா­சி­ரியர் குறிப்­பி­டு­கிறார்.

இவ்­விரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான வர்த்­தக உற­வுகள் பல நூற்­றாண்டு கால வர­லாற்றைக் கொண்­டவை. இந்து சமுத்­தி­ரத்தில் இரு நாடு­களும் பிர­தான கடல்­மார்க்­கத்தில் அமையப் பெற்­றுள்­ள­மை­யா­னது இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான உறவில் பாரிய செல்­வாக்குச் செலுத்த காரணம் எனலாம். எனினும் உத்­தி­யோ­க­பூர்­வ­மான இரா­ஜ­தந்­திர உற­வுகள் 1981 இலேயே ஆரம்­ப­மா­கி­யுள்­ளன.

இந்நூல் இலங்­கைக்கும் அரபு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான வர­லாற்று ரீதி­யான உற­வுகள், இலங்கை மற்றும் ஓமா­னுக்­கி­டை­யி­லான இரா­ஜ­தந்­திர உற­வுகள், இரு தரப்பு உற­வு­களின் கடந்த காலப் பதி­வுகள், ஓமானில் வாழும் இலங்கைச் சமூகம் மற்றும் இரு நாடு­க­ளி­னதும் எதிர்­கால உற­வுகள் ஆகிய ஐந்து முக்­கிய பகு­தி­களைக் கொண்­டுள்­ளது.

 

இந்­நூலில் பல சுவா­ரஷ்­ய­மான விட­யங்கள் உள்­ள­டங்­கி­யுள்­ளன. ஓமானின் முத­லாது பொலிஸ் மாஅ­திபர் ஓர் இலங்­கையர் என்றால் நம்ப முடி­கி­றதா? இலங்­கை­ய­ரான பீலிக்ஸ் பெரேரா 1969 இல் ஓமான் நாட்டு பொலிஸ் சேவையில் இணைந்து 1974 இல் அந்­நாட்டின் பொலிஸ் மா அதி­ப­ராக பத­வி­யு­யர்த்­தப்­பட்டார். அந்­நாட்டின் மிகப் பொறுப்­பு­மிக்க பத­வியில் இலங்­கையர் ஒருவர் அமர்த்­தப்­பட்­ட­மை­யா­னது இலங்கை மீதான ஓமானின் நன்­ம­திப்பைப் பறை­சாற்­று­வ­தாக உள்­ளது.

ஓமானின் பிர­பல இனிப்புப் பண்­ட­மான ‘ஓமானி ஹல்வா’ இலங்­கையில் மஸ்கட் என்று அழைக்­கப்­ப­டு­வதன் பின்­னணி பற்­றியும் இந்நூல் விளக்­கு­கி­றது. மஸ்கட் என்­பது ஓமானின் தலை­ந­கரம் என்­பதை நாம் அறிவோம்.
கிழக்கில் காத்­தான்­குடி என்ற பெயர் வந்­த­தற்கு ‘கஹ்தான்’ எனும் அரபுப் பழங்­கு­டி­யினர் இங்கு வந்து குடி­யே­றி­யமை கார­ண­மாக இருக்­கலாம் என நூலா­சி­ரியர் குறிப்­பி­டு­கிறார். கஹ்தான் பழங்­கு­டி­யினர் யெமன், சவூதி அரே­பியா மற்றும் ஓமான் ஆகிய நாடு­களைப் பூர்­வீ­க­மாகக் கொண்­ட­வர்­க­ளாவர் என்ற வர­லாற்­றையும் இந்த நூல் உள்­ள­டக்­கி­யுள்­ளது.

இந் நூலை எழு­து­வ­தற்­காக துதுவர் அமீர் அஜ்வாத் மிகுந்த சிர­ம­மெ­டுத்­தி­ருப்­பதை காண முடி­கி­றது. இதில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள ஒவ்­வொரு தக­வ­லுக்கும் ஆதா­ரங்கள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. வர­லாற்று நூல்­களும், ஊடக செய்திகளும் ஓமான் தூத­ரக ஆவ­ணங்­களும் இந்­நூலை தொகுப்­ப­தற்கு பெரிதும் உத­வி­யுள்­ளன.

இந்நூல் மிக நேர்த்­தி­யாக வடி­வ­மைக்­கப்­ப­டுள்­ள­துடன் தொடர்­பு­டைய ஏரா­ள­மான புகைப்­ப­டங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீத் 1987 இல் ஓமானில் இலங்கைத் தூத­ர­கத்தை திறந்­து­வைத்­தமை, 2021 இல் நடந்த இலங்கை மற்றும் ஓமான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான முத­லா­வது சர்­வ­தேச கிரிக்கட் போட்டி, இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான உயர்­மட்ட பேச்­சு­வார்த்­தைகள் மற்றும் கைச்­சாத்­தி­டப்­பட்ட ஒப்­பந்­தங்­களின் பதி­வுகள் உட்­பட பல புகைப்­ப­டங்கள் நூலுக்கு அழகு சேர்க்­கின்­றன.

இலங்­கைக்கும் ஓமா­னுக்­கு­மி­டை­யி­லான கிரிக்கட், வர்த்­தகம், கலா­சாரம், தொழில்­வாய்ப்பு என சகல துறைகள் பற்­றி­ய­து­மான விரி­வான விப­ரங்கள் இதில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக எதிர்­கால கண்­ணோட்டம் எனும் தலைப்­பி­லான இறுதிப் பகு­தியில் ஓமான் நாட்­டவர் இலங்­கையில் முத­லீடு செய்­வ­தற்­குள்ள வாய்ப்­புகள் பற்றி விரி­வாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இது நிச்­சயம் அந்­நாட்டு வர்த்­த­கர்­களை ஈர்க்கும் எனலாம்.

தூதுவர் அமீர் அஜ்வாத் எழுதி வெளி­யிட்­டுள்ள இந்நூல் இலங்கை- ஓமான் இரா­ஜ­தந்­திர உற­வு­க­ளுக்­கான ஒரு Encyclopedia என்றால் மிகை­யா­காது. அவ­ருக்குப் பின்னர் பதவி வகிக்­க­வுள்ள ஓமா­னுக்­கான இலங்கைத் தூது­வர்­க­ளுக்கும் அதி­கா­ரி­க­ளுக்கும் இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான உறவு பற்றிய ஆய்வாளர்கள், மாணவர்கள், ஓமானில் வசிக்கும் இலஙகையர்கள் அனைவருக்கும் இந்நூல் மிகப் பயனுள்ளத்தாக அமைந்துள்ளது.

தூதுவரின் இந்த முன்மாதிரியை ஏனைய இராஜதந்திரிகளும் பின்பற்ற வேண்டும். இலங்கைக்கும் பல மத்திய கிழக்கு நாடுகளுக்குமிடையிலான உறவில் அண்மைக் காலங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதை நாம் அவதானிக்கிறோம். இந்த விரிசலை குறித்து, உறவை மேலும் கட்டியெழுப்ப ஏனைய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்களும் இவ்வாறான நூல்களை தொகுக்க முன்வர வேண்டும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.