மருத்துவ அலட்சியங்களுக்கு இடமளிக்க முடியாது

0 361

கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு உட்பட நிலையில் மரணித்த சிறுவன் ஹம்தியின் விவகாரம் கடந்த ஓரிரு வாரங்களாக ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பதை நாம் அறிவோம். அழகிய இந்தச் சிறுவனின் மரணம் அவனது குடும்பத்தினரை மாத்திரமன்றி அனைவரையுமே அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன. இது திட்டமிட்ட செயலா அல்லது மருத்துவ ரீதியாக இடம்பெற்ற தவறா என்பதைக் கண்டறியும் வகையில் விசாரணைகள் தொடர்கின்றன.

இந்த விடயத்தில் பாதிக்கப்பட்ட தரப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனப் போராடுவதும் சிறுவனின் குடும்பத்திற்காக பிரார்த்திப்பதும் நம் அனைவரதும் கடமையாகும்.

அதேபோன்று இந்த விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட தரப்புகளை வைத்து இன, மத ரீதியான கண்ணோட்டத்துடன் இதனை அணுகுவதைத் தவிர்ப்பதே சிறந்ததாகும். மருத்துவ சேவையைப் பொறுத்தவரை நாடெங்குமுள்ள வைத்தியசாலைகளில் இன மத பேதமின்றியே சேவைகள் வழங்கப்படுகின்றன என்ற யதார்த்தத்தை நாம் மறந்துவிடக் கூடாது.
இதேவேளை, அண்மைக் காலமாக நாட்டில் மருத்துவத்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையில் சற்று சரிவு ஏற்பட்டு வருகின்ற நிலையில் இச் சிறுவனின் மரணமும் நிகழ்ந்திருப்பதானது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது எனலாம்.

சமீபத்தில் பேரா­தனை வைத்­தி­ய­சா­லையில் தடுப்­பூசி ஏற்­றப்­பட்ட யுவ­தி­யொ­ருவர் உடம்­பெங்கும் நீல நிற­மாகி உட­ன­டி­யாக உயி­ரி­ழந்­தமை, இதே­போன்று குளி­யாப்­பிட்டி பகு­தியில் 4 மாத குழந்­தை­யொன்று தடுப்­பூசி ஏற்­றப்­பட்­டதன் பின்பு உயி­ரி­ழந்­தமை மற்றும் ஏற்­க­னவே கண் சத்­திர சிகிச்சை செய்து கொண்ட பலர் பார்வை குறை­பா­டு­க­ளுக்கு உள்­ளா­னமை போன்ற சம்பவங்களும் பொது மருத்துவத்துறை மீது மக்கள் நம்பிக்கையிழக்க காரணமாக அமைந்துள்ளன.

இது மட்­டு­மல்ல நாடெங்கும் வைத்­தி­ய­சா­லை­களில் மருந்துப் பற்­றாக்­குறை நில­வு­கி­றது. பல ஸ்கேன் இயந்­தி­ரங்கள் செய­லி­ழந்து பல மாதங்­க­ளாக ஒதுக்கி வைக்­கப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் சுகா­தார சேவை தொழிற்­சங்­கங்கள், மருத்­துவ அமைப்­புகள் தொடர்ச்­சி­யாக குற்றம் சுமத்தி வரு­கின்­றன. அரச வைத்­தி­ய­சா­லை­களில் மாதாந்த மருத்­துவ சேவையை பெற்­றுக்­கொள்ளும் மக்­க­ளுக்கு வழங்­கப்­படும் மருந்­து­க­ளுக்கும் தட்­டுப்­பாடு நில­வு­கி­றது. இதனால் பொது மக்கள் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொள்­கின்­றனர்.

சுகா­தா­ரத்­து­றையில் பெரும்பாலான வைத்­தி­யர்கள் ஓய்வு பெற்றுச் செல்­கின்­றமை மற்றும் வெளி­நா­டு­க­ளுக்குச் செல்­கின்­ற­மையும் பாரிய பிரச்­சி­னை­யாக உரு­வா­கி­யுள்­ளது. கடந்த ஒரு வருட காலத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான வைத்­தி­யர்கள் புலம்பெயர்ந்­துள்­ளமை புள்ளி விப­ரங்­க­ளுடன் மருத்­துவ சங்­கங்­களால் வெளிச்­சத்­துக்கு கொண்டு வரப்­பட்­டுள்­ளன.

வரு­டத்தின் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் 500க்கும் மேற்­பட்ட மருந்­துகள் பதி­வு­க­ளுக்கு அப்பால் இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்­ளன. பதிவு செய்­யப்­பட்டு கொண்டு வரப்­பட்­டுள்ள அனைத்து மருந்­து­களும் மீண்டும் ஆய்­வுக்­குட்­ப­டுத்தப்பட வேண்டும் என சுகா­தார தொழில் வல்­லு­னர்கள் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

இலங்கை மக்களில் பெரும்பான்மையானோர் அரச வைத்­தி­ய­சா­லை­க­ளையே தமது சிகிச்சைகளுக்காக நம்பியிருக்கின்றனர். பொரு­ளா­தார நெருக்­க­டியினால் அன்றாட உணவுக்குக்கூட அல்லல்படும் மக்கள் தனியார் வைத்­திய சேவையை நாட முடி­யா­துள்­ளனர். எனவே அர­சாங்கம் இதனை ஓர் அவ­சர நிலை­யாகக் கருதி தேவை­யான மருந்­து­களை வைத்­தி­ய­சா­லை­க­ளுக்குப் பெற்­றுக்­கொ­டுக்­க ­வேண்டும்.

தர­மற்ற மருந்­துகள் இறக்­கு­மதி உட்­பட இத்­து­றையில் மாபி­யாக்­க­ளுக்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது. இது விட­யத்தில் அர­சாங்கம் பொறுப்­புடன் செயற்­பட வேண்டும்.

சிறுவன் ஹம்திக்கும் ஏனையவர்களுக்கும் நடந்தது போன்று எதிர்காலத்திலும் மருத்துவமனைகளே உயிர்களைக் காவு கொள்வதற்கு நாம் அனுமதிக்க முடியாது. எனவேதான் மருத்துவ அலட்சியங்களைத் தடுத்து நிறுத்தி சிறந்த சேவையை வழங்கும் வகையில் நமது பொதுச் சுகாதாரத்துறை வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.