தொடரும் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனம்

0 268

பலஸ்­தீனின் ஜெனின் நகர் மீது இஸ்­ரே­லிய படை­யினர் கடந்த இரண்டு தினங்­க­ளாக முன்­னெ­டுத்த பலத்த தாக்­கு­தல்­களில் 12 பலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­பட்ட சம்­பவம் அங்கு வர­லாற்றில் இடம்­பெற்ற மிக மோச­மான ஆக்­கி­ர­மிப்­பு­களில் ஒன்­றாக வர்­ணிக்­கப்­ப­டு­கி­றது.

பலஸ்­தீ­னி­லுள்ள மிகப் பாரிய அகதி முகாம்­களுள் ஒன்­றான ஜெனின் மீது நடாத்­தப்­பட்ட இந்தக் காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான தாக்­கு­தல்­களில் சுமார் 100 பேர் காய­ம­டைந்­துள்­ள­தா­கவும் 4000 இற்கும் அதி­க­மானோர் தமது வீடு­களை விட்டும் வெளி­யே­றி­யி­ருப்­ப­தா­கவும் பலஸ்­தீன செஞ்­சி­லுவைச் சங்கம் தெரி­வித்­துள்­ளது. இதனால் மக்­களின் வீடுகள் மற்றும் பொது கட்­டி­டங்கள் பாரிய சேதங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளன.

இதன்­போது இடம்­பெற்ற மோதல்­களில் இஸ்­ரே­லிய படை­யினர் ஒருவர் கொல்­லப்­பட்­டுள்ள நிலையில், நேற்­றி­ரவு அப் பகு­தி­யி­லி­ருந்து அவர்கள் வெளி­யே­றி­யுள்­ள­தா­கவும் தாக்­கு­தல்கள் தற்­போது முடி­வுக்கு வந்­துள்­ள­தா­கவும் பலஸ்­தீன ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

1000 இஸ்­ரே­லிய படை­யினர் இத் தாக்­கு­தலில் பங்­கெ­டுத்­த­தா­கவும் இதன்­போது தாக்­குதல் ஹெலி­கொப்­டர்கள், ட்ரோன்கள், தாக்­குதல் விமா­னங்கள் மற்றும் கன­ரக ஆயு­தங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் சர்­வ­தேச கண்­கா­ணிப்­பா­ளர்கள் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளனர். சுமார் 20 தட­வைகள் ட்ரோன் மூலம் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.
இத் தாக்­குதல் மேற்குக் கரையில் கடந்த 20 வரு­டங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட மிக மோச­மான தாக்­கு­தல்­களில் ஒன்று என மிடில் ஈஸ்ட் மொனிடர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.
இத் தாக்­கு­தல்­களை பலஸ்­தீன அதி­கார சபை உட்­பட சர்­வ­தேச நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்­பு­களும் வன்­மை­யாகக் கண்­டித்­துள்­ளன.

இந்த வரு­டத்தின் முதல் ஆறு மாதங்­களில் மாத்­திரம் இஸ்­ரே­லினால் நடாத்­தப்­பட்ட தாக்­கு­தல்­களில் 26 சிறு­வர்கள் உள்­ளிட்ட 170 பலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.
ஐக்­கிய நாடுகள் சபையின் மனி­தா­பி­மான விவ­கா­ரங்­க­ளுக்­கான ஒருங்­கி­ணைப்பு அலு­வ­ல­கத்தின் அறிக்­கை­க­ளுக்­க­மைய இந்த வரு­டத்தின் முதல் ஆறு மாதங்­களில் மாத்­திரம் இஸ்­ரே­லிய குடி­யே­றிகள், மாதாந்தம் தலா 95 தாக்­கு­தல்­களை பலஸ்­தீ­னர்கள் மீது நடாத்­தி­யுள்­ள­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதற்­க­மைய மொத்­த­மாக 570 தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. இவற்றில் சுமார் 160 தாக்­கு­தல்­களில் பலஸ்­தீ­னர்கள் காய­ம­டைந்­துள்­ளனர். இது இஸ்­ரே­லிய இரா­ணு­வத்­தினர் மாத்­தி­ர­மன்றி சட்­ட­வி­ரோத யூத குடி­யேற்­ற­வா­சி­களும் அப்­பாவி பலஸ்­தீ­னர்கள் மீது எந்­த­ளவு தூரம் வன்­மு­றை­களை கட்­ட­விழ்த்­து­வி­டு­கின்­றனர் என்­பதைத் தெளி­வு­ப­டுத்­து­வ­தா­க­வுள்­ளது.

அது­மாத்­தி­ர­மன்றி, பலஸ்­தீனின் மொத்த நிலப்­ப­ரப்பில் 85 வீத­மான நிலப்­ப­கு­தியை தற்­போது இஸ்ரேல் ஆக்­கி­ர­மித்­துள்­ளது. ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் அறிக்­கை­க­ளுக்­க­மைய, 2012 முதல் 2022 வரை­யான காலப் பகு­தியில் மேற்குக் கரையில் ஆக்­கி­ர­மிப்­பா­ளர்­களின் சனத்­தொகை 520,000 இலி­ருந்து 700,000 ஆக அதி­க­ரித்­துள்­ளது. இந்த ஒரு தசாப்த காலப்­ப­கு­தியில் பலஸ்­தீ­னர்கள் மீது குடி­யேற்­ற­வா­சி­களால் 3372 தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­துடன் இவற்றில் 1222 பலஸ்­தீ­னர்கள் காய­ம­டைந்­துள்­ளனர்.

இன்று உலகில் எந்­த­வித விலை­ம­திப்­பு­மற்­ற­தாக பலஸ்­தீ­னர்­களின் உயிர்­களும் அவர்­க­ளது நிலங்­களும் மாறி­யுள்­ளன. தினமும் இஸ்ரேல் கட்­ட­விழ்த்­து­விடும் காட்­டு­மி­ராண்­டித்­த­னங்­களைத் தட்­டிக்­கேட்க எவ­ரு­மற்ற அநா­த­ர­வான நிலைக்கு அந்தமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இஸ்ரேலுக்கு எதிராக இன்று வரை நூற்றுக் கணக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் இதுவரை அவற்றில் ஒன்றேனும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதே கவலையான செய்தியாகும். ஒரு சில இஸ்லாமிய நாடுகளை தவிர எல்லா சர்வதேச நாடுகளும் இஸ்ரேலின் இந்த வன்முறைகளை சகித்துக் கொண்டு அதனுடன் தொடர்ச்சியாக தேனிலவு கொண்டாடி வருகின்றன. இந்நிலை மாற வேண்டும். இஸ்ரேலுடனான உறவுகள் துண்டிக்கப்பட வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேலின் இந்த காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும்.
எவ்வாறு தீவிரவாத இயக்கங்களை தடை செய்து அவற்றுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுகின்றவோ அதேபோன்று மனித குலத்துக்கு எதிரான தீவிரவாதத்தில் கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக ஈடுபட்டு வரும் இஸ்ரேலுக்கு எதிராகவும் ஒன்றுபட வேண்டும்.

பலஸ்தீன மக்கள் மீதான ஆக்கிரமிப்புகள் முடிவுக்கு வரவும் அம்மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்கான சூழல் பிறக்கவும் அனைவரும் பிரார்த்திப்போமாக.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.