பெண் காதி நியமனம் தொடர்பில் என்ன நிலைப்பாட்டை எட்டலாம்?

0 334

தற்­பொ­ழுது பேசு­பொ­ரு­ளா­கி­யி­ருக்கும் பெண் காதி நிய­மனம் உட்­பட முஸ்லிம் விவாக மற்றும் விவா­க­ரத்துச் சட்டச் சீர்­தி­ருத்தம் பற்றி 2020 ஆம் ஆண்டில் வெளி­யி­டப்­பட்ட “WE ARE A PART, NOT APART” என்ற தனது நூலில், மூன்றாம் அத்­தி­யா­யத்தில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் எழு­தியுள்ள ஆக்கத்தின் தமிழ் வடிவத்தை காலப் பொருத்தம் கருதி இங்கு பிரசுரிக்கிறோம்.

முஸ்லிம் விவாக மற்றும் விவா­க­ரத்துச் சட்­டத்­திற்கு (Muslim Marriage and Divorce Act) தேவை­யான திருத்­தங்­களை மேற்­கொள்ளும் விட­யத்தில் இடம்­பெறும் தாம­தங்கள் குறித்த சர்ச்சை மிகவும் துர­திர்ஷ்­ட­வ­ச­மா­ன­தாக இருந்து வரு­வ­துடன், ஒரு சவா­லையும் முன்­வைக்­கின்­றது. புத்­தி­ஜீ­விகள், உல­மாக்கள் அமைப்­புக்­களின் உறுப்­பி­னர்கள் ஆகி­யோரும், அர­சி­யல்­வா­திகள் என்ற முறையில் நாங்­களும் இதற்­கான பொறுப்பை ஏற்க வேண்டும். இது தொடர்­பாக பல முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

2009 ஆம் ஆண்­டில்­ அப்­போ­தைய நீதி அமைச்சர் மிலிந்த மொர­கொ­ட­வினால் அதற்­கென ஒரு குழு ஸ்தாபிக்­கப்­பட்­டது. ஒன்­பது வருட கால தாம­தத்தின் பின்னர் இக் குழு 2018 ஆம் ஆண்டில் ஓர் அறிக்­கையைச் சமர்ப்­பித்­தது. இந்தப் பிரச்­சினை தொடர்­பாக பெண் செயற்­பாட்­டா­ளர்கள் விமர்­ச­ன­பூர்­வ­மான பல கட்­டு­ரை­களை எழு­தி­யுள்­ளார்கள்.
இலங்­கையில் முஸ்லிம் தனியார் சட்­டத்தில் சீர்­தி­ருத்­தங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான செயற்­பா­டு­களை எடுத்து விளக்கும் “Women Claiming Rights and Spaces” என்ற நூலின் வெளி­யீட்டு விழா­வுக்கு எனக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

2011 தொடக்கம் 2014 வரையில் நான் நீதி அமைச்­ச­ராகப் பணி­யாற்­றிய கால­கட்­டத்தில், அந்தக் குழுவின் தலை­வ­ராக இருந்த உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்ஸூப் அவர்­களை மும்­முறை அணுகி, பிரஸ்­தாப கமிட்டி தனது அறிக்­கையை விரை­வாக ஒப்­ப­டைத்தால் அந்தத் திருத்­தங்­களை என்னால் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்க முடி­யு­மெனத் தெரி­வித்தேன். ஆயினும், அது கைகூ­ட­வில்லை.

இந்தத் திருத்­தங்கள் உள்­ள­டக்கும் பரப்பு குறித்து முஸ்லிம் பெண் செயற்­பாட்­டா­ளர்­க­ளுக்கும், உலமா சபையின் உறுப்­பி­னர்­க­ளுக்கும் இடையில் பாரி­ய­ள­வி­லான கருத்து முரண்­பா­டுகள் காணப்­பட்­டன.பிரஸ்­தாப அறிக்­கையும் இந்தக் கருத்து முரண்­பா­டு­களைப் பிர­தி­ப­லித்­தது. அந்த இரு தரப்­பு­க­ளுக்­கு­மி­டையில் கருத்­தொற்­று­மையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு உத­வு­மாறு என்­னி­டமும், சக அமைச்­ச­ராக இருந்த எம்.எச்.ஏ ஹலீ­மி­டமும் மைத்­திரி – ரணில் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் நீதி அமைச்சர் தலதா அத்­துக்­கோ­ரள வேண்­டு­கோ­ளொன்றை விடுத்­தி­ருந்தார். அது தொடர்­பான ஒரு கருத்­தொற்­று­மையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் பல தட­வைகள் முயற்­சித்தோம்.

உல­மாக்கள் அமைப்பின் உறுப்­பி­னர்கள் சில­ருக்கு ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா மற்றும் முன்னாள் சட்­டமா அதிபர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சிப்லி அஸீஸ் போன்ற சிரேஷ்ட சட்ட வல்­லு­னர்­களின் ஒத்­து­ழைப்பு கிடைத்­தி­ருந்­தது என்ற விடயம் தெரிய வந்­தது. மறு­பு­றத்தில், நீதி­பதி சலீம் மர்ஸூப் முஸ்லிம் பெண்­களின் குரல்­களை ஓங்கி ஒலித்­த­துடன், அந்த இரு தரப்­புக்­க­ளுக்­கு­மி­டையில் பாரி­ய­ள­வி­லான கருத்து வேறு­பா­டுகள் நிலவி வந்­தன.

இரு குழுக்­க­ளுக்கும் இடை­யி­லான முரண்­பா­டு­களைத் தீர்த்து வைக்கும் பொருட்டு ஜித்­தாவில் கவுன்ஸல் ஜென­ர­லாகப் பணி­யாற்­றிய முன்னாள் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற நீதி­ய­ரசர் ஏ.டபிள்யூ.ஏ ஸலாம் அவர்­களைச் சம்­பந்­தப்­ப­டுத்திக் கொள்­வது சிறப்­பாக இருக்­கு­மென நான் நினைத்தேன். அவரை உட­ன­டி­யாக இங்கு வர­வ­ழைக்­கு­மாறு வெளி­நாட்டலு­வல்கள் அமைச்­சிடம் வேண்­டுகோள் விடுத்தேன். அதே வேளையில், 2018ஆம் ஆண்டில் நான் சவூதி அரே­பி­யா­விற்கு உம்ரா யாத்­திரை மேற்­கொண்­டி­ருந்த பொழுது அவ­ருடன் இது குறித்து பேசி­ய­துடன், இந்த விட­யத்தில் தலை­யிட்டு இச் சர்ச்­சையை முடி­வுக்கு கொண்டு வரு­மாறு கேட்டுக் கொண்டேன்.

இந்தச் சிக்கல் இவ்­வா­றி­ருந்த நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் இடம்­பெற்­ற­துடன், அதன் விளை­வாக நாட்டில் அவ­ச­ர­கால நிலை­மையும் பிர­க­டனம் செய்­யப்­பட்­டது. சமூ­கத்தில் நில­விய பதற்­றங்­க­ளுக்கு மத்­தியில், முஸ்லிம் பெண்­ணி­ய­வாத அமைப்­புக்கள், புத்­தி­ஜீ­விகள் மற்றும் உலமா சபை உறுப்­பி­னர்கள் ஆகி­யோ­ருக்­கி­டையில் இடம்­பெற்று வந்த சர்ச்­சையில் முஸ்லிம் எதிர்ப்புக் குழுக்­களைச் சேர்ந்­த­வர்­களும், அக்­கு­ழுக்­களின் ஏற்­பாட்­டா­ளர்­களும் தலை­யிட்­டார்கள். அதன் விளை­வாக, முஸ்லிம் தனியார் சட்­டங்­களை முழு­மை­யாக ஒழித்­து­விட வேண்­டு­மென உரத்துக் குர­லெ­ழுப்­பப்­பட்­ட­துடன், அந்தக் குரல்கள் மென்­மேலும் வலு­வ­டைந்து கொண்டே வந்­தன.

அந்த வாய்ப்பைச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்தி அத்­து­ர­லியே ரத்­தின தேரர் முஸ்லிம் விவாக மற்றும் விவா­க­ரத்துச் சட்­டத்தை ஒழிப்­ப­தற்­கென பாரா­ளு­மன்­றத்தில் ஒரு தனி அங்­கத்­தவர் பிரே­ர­ணை­யையும் முன்­வைத்தார். அந்தப் பின்­பு­லத்தில், அப்­போ­தைய அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் அவர்­களின் முஸ்லிம் சமய விவ­கா­ரங்கள் அமைச்சு சம்­பந்­தப்­பட்ட அனைத்து தரப்­புக்­க­ளி­னதும் பங்­கேற்­புடன் அமைச்­சிலும், அதே போல முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி அவர்­களின் இல்­லத்­திலும் பல சந்­திப்­புக்­களை ஏற்­பாடு செய்­தது. எமது விடாப்­பி­டி­யான முயற்­சி­களின் விளை­வாக பெரும்­பா­லான கருத்து முரண்­பா­டுகள் தொடர்­பாக நாங்கள் ஒரு கருத்­தொற்­று­மையை எட்­டினோம். எவ்­வா­றி­ருப்­பினும், துர­திர்­ஷ்­ட­வ­ச­மாக பெண்­களின் திரு­மண வயது மற்றும் பெண் காதி நீதி­ப­தி­களின் நிய­மனம் ஆகிய இரு விட­யங்கள் தொடர்பில் ஓர் உடன்­பாட்­டிற்கு வர முடி­யா­தி­ருந்­தது.

இந்த இரு பிரச்­சி­னைகள் தொடர்பில் எனது அறி­வுக்கு எட்­டிய வரை­யிலும், இஜ்­திஹாத் பிர­காரம், இஸ்­லாத்தின் அடிப்­படைக் கோட்­பா­டு­களைப் பின்­பற்றி, இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா அமைப்பின் உறுப்­பி­னர்கள் கால மாற்­றங்­க­ளுக்­கேற்ப அனு­ச­ரித்துச் செல்ல வேண்­டு­மென்றும், பய­னுள்ள சீர்­தி­ருத்­தங்­களை பகி­ரங்­க­மாக ஏற்­றுக்­கொள்ள வேண்­டு­மென்றும் நான் அவர்­க­ளிடம் வினய­மாக வேண்­டுகோள் விடுத்­தி­ருந்தேன்.

சட்­டத்தின் வளர்ச்­சியில் இஜ்­தி­ஹாத்தின் பங்கு குறித்து நீதி­ய­ரசர் வீர­மந்­திரி விளக்­கி­யுள்ளார். இந்த விஷயம் தொடர்பில் எமது கருத்­துக்­களை இக்­கு­ழு­வி­ன­ருடன் கூறி­ய­துடன் மட்டும் நான் நின்­று­வி­ட­வில்லை. மேலும், பொது அரங்­கு­க­ளிலும் இது குறித்து நான் பேசினேன். ஏனெனில், அவ்­வாறு பேசு­வதில் எந்தத் தவறும் இல்­லை­யென நான் கரு­தினேன். உரிய கவ­னத்­து­டனும், ஓர் அர­சியல் கட்­சியின் தலைவர் என்ற முறை­யிலும், நான் பகி­ரங்­க­மாக பேசு­கின்றேன் என்ற விடயத்தை கருத்தில் கொண்ட விதத்­திலும் தொடக்­கத்தில் நான் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா அமைப்­புடன் தொடர்பு கொண்டேன்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்­கு­தல்­களை அடுத்து சிங்­கள பௌத்த தீவி­ர­வா­தி­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டுகள் மற்றும் பிர­சா­ரங்கள் என்­ப­வற்­றினால் எழுந்த அலையின் பின்­ன­ணியில், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா அமைப்பின் உறுப்­பி­னர்கள் தமது நிலைப்­பாட்டை மீளாய்வு செய்ய வேண்­டிய ஒரு கட்­டாய நிலை இறு­தியில் தோன்­றி­யது. அத்­த­கைய ஒரு மீளாய்வு தவிர்க்க முடி­யா­தது எனப் பெரும்­பா­லானோர் அபிப்­பி­ரா­யப்­பட்­டார்கள்.

மாத்­தளை ஆமினா பெண்கள் கல்­லூரி மற்றும் கொழும்பு பாத்­திமா மகளிர் கல்­லூரி என்­ப­வற்றின் பரி­ச­ளிப்பு விழாக்­களின் பிர­தம அதி­தி­யாக தலைமை தாங்கி உரை நிகழ்த்­திய பொழுது இப்­பி­ரச்­சி­னை­களை நான் பகி­ரங்­க­மாக குறிப்­பிட்டேன். இந்தப் பின்­ன­ணியில், பெண்­களை காதி நீதி­ப­தி­க­ளாக நிய­மனம் செய்தல் தொடர்பில் சில சிந்­த­னை­களைப் பகிர்ந்து கொள்ள விரும்­பு­கிறேன்.

பெண்கள் காதி நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளாக
நிய­மனம் செய்­யப்­ப­டு­வார்­களா?
ஆண்கள் மட்­டுமே காதி நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளாக நிய­மனம் செய்­யப்­பட முடி­யு­மென குறித்­து­ரைக்கும் முஸ்லிம் விவாக மற்றும் விவா­க­ரத்துச் சட்டம் தமது உரி­மை­களை மீறும் ஒரு செய­லாக இருந்து வரு­கின்­றது எனப் பல வருட காலம் பெண்கள் விமர்­சனம் செய்து வந்­துள்­ளார்கள். 1978 ஆம் ஆண்­டிற்கு முன்னர் அமு­லி­லி­ருந்து வந்த சட்­டங்கள் மற்றும் எழுதாச் சட்­டங்கள் என்­ப­வற்றை நீதி­மன்ற மீளாய்­வுக்கு உட்­ப­டுத்­த முடி­யாது என்ற பணிப்­பா­ணையை எமது அர­சியல் யாப்பின் 16ஆவது உறுப்­புரை கொண்­டுள்­ளது. இந்த நிலையில், பாரா­ளு­மன்­றத்­தினால் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்கும் சட்­டங்கள் தொடர்­பாக – அவற்றின் ஏற்­பா­டுகள் அர­சியல் யாப்­புக்கு முர­ணா­ன­வை­யாக இருந்து வந்­தாலும் கூட – கேள்வி எழுப்ப முடி­யாத ஒரு நிலை­மையை நாங்கள் எதிர்­கொண்டு வரு­கின்றோம். எவ்­வா­றி­ருப்­பினும், சட்­ட­வாக்­கங்கள் இயற்­றப்­பட்ட பின்னர் அவற்றை மீளாய்வு செய்­வ­தற்­கான தேவை இருந்து வரு­கின்­றது என்ற விடயத்தை அர­சியல் யாப்பு சீர்த்­தி­ருத்தச் செயன்­முறை வலி­யு­றுத்­தி­யி­ருந்­தது.

முஸ்லிம் தனியார் சட்­டங்கள் அர­சியல் யாப்பில் வழங்­கப்­பட்­டி­ருக்கும் மனித உரி­மைகள் பாது­காப்­புக்கு முர­ணான விதத்தில் இருந்து வரு­வ­தற்­கான காரணம், அர­சியல் யாப்பின் உறுப்­புரை 16 ஆகும். இந்த உறுப்­புரை இல்­லா­தி­ருந்தால், குறிப்­பாக முஸ்லிம் ஆண்­க­ளுக்கு மட்­டுமே பிரத்­தி­யே­க­மாக குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும் காதி நீதி­மன்ற நீதி­ப­தி­களின் நிய­மனம் தொடர்­பான ஏற்­பாடு, அடிப்­படை உரி­மைகள் அத்­தி­யா­யத்தை மீறு­கின்­றது என்ற அடிப்­ப­டையில் நிச்­ச­ய­மாக ரத்து செய்­யப்­பட்­டி­ருக்கும்.

திருக்­குர்­ஆ­னிலோ, சுன்­னா­விலோ அல்­லது வேறு இஸ்­லா­மிய அடிப்­படை மூல­தா­ரங்­க­ளிலோ காதி நீதி­ப­தி­க­ளாக பெண்­களை நிய­மனம் செய்­வ­தற்கு ஆத­ர­வா­கவோ அல்­லது எதி­ரா­கவோ எத்­த­கைய நேர­டி­யான குறிப்­புக்­களும் இருந்து வர­வில்லை. பெண் காதி நீதி­ப­தி­களின் நிய­ம­னத்­திற்கு எதிர்ப்புத் தெரி­விப்­ப­வர்கள் ஒரு சில சான்­று­களை முன்­வைத்­தாலும் கூட, மிகவும் கவ­ன­மாகப் பரி­சீ­லனை செய்யும் பொழுது, இந்தத் திரு­மறை வச­னங்கள் வேறு­பட்ட விட­யங்­களை குறிக்­கின்­றன என்­பதை இங்கு குறிப்­பி­டுதல் வேண்டும்.

குறிப்­பாக, திரு­ம­றையில் சூறா அந் – நிசாவில் உள்ள வச­னங்கள் இவ்­வாறு கூறு­கின்­றன:
‘பெண்­களின் நிர்­வா­கி­க­ளாக ஆண்­களே இருக்­கின்­றனர். ஏனெனில், அவர்­களில் ஒரு­வரை விட மற்­ற­வரை அல்லாஹ் மேன்­மை­யாக்கி வைத்­தி­ருக்­கின்றான். அன்றி (ஆண்­க­ளா­கிய) அவர்கள் தங்கள் பொருள்­களை பெண்­க­ளுக்­காக செலவு செய்­கின்­றனர். ஆகவே, நல்­லொ­ழுக்கம் உள்ள பெண்கள், (அல்­லாஹ்­வுக்கும் தங்கள் கண­வ­னுக்கும்) பணிந்தே நடப்­பார்கள். (தங்கள் கணவன்) மறை­வாக உள்ள சம­யத்தில், பாது­காக்­கப்­பட வேண்­டு­மென அல்லாஹ் விரும்­பு­ப­வ­ன­வற்றை (தங்­க­ளையும், கண­வரின் மற்றப் பொருட்­க­ளையும்) பேணிக் காத்துக் கொள்­வார்கள். எவளும் (கண­வ­னுக்கு) மாறு செய்­வா­ளென்று நீங்கள் அஞ்­சினால், அவ­ளுக்கு நல்­லு­ப­தேசம் செய்­யுங்கள்; (அவள் திருந்­தா­விடில்) படுக்­கை­யி­லி­ருந்து அவளை அப்­பு­றப்­ப­டுத்தி வையுங்கள். (அதிலும் அவள் சீர்­தி­ருந்­தா­விடில்) அவளை (இலே­சாக) அடி­யுங்கள் அதனால் அவள் உங்­க­ளுக்கு வழிப்­பட்­டு­விட்டால், அவள் மீது (வேறு குற்­றங்­களைச் சுமத்த) யாதொரு வழி­யையும் தேடா­தீர்கள். நிச்­ச­ய­மாக அல்லாஹ் மிக மேன்­மை­யா­ன­வனும், மிகப் பெரி­ய­வ­னு­மா­யி­ருக்­கின்றான்’. (சூறா அந் – நிசா 4:34)

இந்த திரு­வ­சனம் ஆண்கள் பெண்­க­ளிலும் பார்க்க மேன்­மை­யா­ன­வர்கள் என்றோ அல்­லது பெண்கள் தலை­மைத்­துவப் பாத்­தி­ரங்­க­ளையோ அல்­லது வேறு பொறுப்­புக்­க­ளையோ வகிக்க முடி­யா­த­வர்கள் என்றோ எந்த வகை­யிலும் குறிப்­பி­ட­வில்லை. புனித அல்­குர்­ஆனின் இந்த திரு­வ­சனம் திரு­மண வாழ்க்கை தொடர்­பாக குறிப்­பி­டு­கின்­றது. இந்த வச­னத்­திற்கு முன்­னரும் பின்­னரும் உள்ள வச­னங்கள் குடும்ப வாழ்க்கை தொடர்­பான விஷ­யங்­களை கவ­னத்தில் கொள்­கின்­றன. எனவே, குடும்பப் பிரச்­சி­னைகள் தொடர்­பாக குறிப்­பிடும் இந்தத் திரு­மறை வச­னங்­களை பொது­மைப்­ப­டுத்­து­வது தவ­றா­ன­தாகும்.

பெண்கள் காதி நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளாக நிய­மனம் செய்­யப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­விப்­ப­வர்கள் சூறா அல் பக­ரா­வி­லி­ருந்து 282ஆம் வச­னத்தை ஆதா­ர­மாகக் காட்­டு­கி­றார்கள். அந்த வசனம் பணம் கடன் கொடுப்­பது தொடர்­பான கோட்­பாட்­டுடன் சம்­பந்­தப்­பட்­டுள்­ளது:

‘விசு­வா­சி­களே! நீங்கள் ஒரு குறித்த தவ­ணையின் மீது (உங்­க­ளுக்குள் ) கடன் கொடுத்துக் கொண்டால், அதை எழுதிக் கொள்­ளுங்கள். தவிர (கடன் கொடுத்­த­வனோ அல்­லது கடன் வாங்­கி­ய­வனோ) உங்­களில் (எவன் எழு­திய போதிலும், அதை) எழு­து­பவன் நீத­மா­கவே எழு­தவும்: (அவ்­வி­ரு­வரும் எழுத முடி­யாமல், எழுத்­தா­ள­னிடம் கோரிக் கொண்டால்) எழுத்­தாளன் (நீத­மாக எழு­து­மாறு) அல்லாஹ் அவ­னுக்கு அறி­வித்­தி­ருக்­கி­ற­படி எழுதிக் கொடுக்க மறுக்க வேண்டாம். அவன் எழுதிக் கொடுக்­கவும். தவிர, கடன் வாங்­கி­ய­வனே, (கடன் பத்­தி­ரத்தின் ) வாச­கத்தை கூறவும். (வாசகம் கூறு­வ­திலும், அதை எழு­து­வ­திலும்) தன் இறை­வ­னா­கிய அல்­லாஹ்­வுக்குப் பயந்து கொள்­ளவும். ஆகவே, அதில் யாதொன்­றையும் குறைத்­து­விட வேண்டாம். (வாசகங் கூற வேண்­டிய) கடன் வாங்­கி­யவன், அவி­வே­கி­யா­கவோ அல்­லது (வாசகங் கூற) இய­லாத (வயோ­தி­க­னா­கவோ, சிறு­வ­னா­கவோ) தானே வாசகஞ் சொல்லச் சக்­தி­யற்ற (ஊமை போன்ற)வனா­கவோ இருந்தால், அவ­னு­டைய பாது­கா­வலன் நீத­மாக வாசகங் கூறவும். மேலும், நீங்கள் சாட்­சி­யாக (அங்­கீ­க­ரிக்க) க்கூடிய உங்கள் ஆண்­களில் (யோக்­கி­ய­மான) இரு­வரை (அக்­க­ட­னுக்குச்) சாட்­சி­யாக்­குங்கள். அவ்­வாறு (சாட்­சி­யாக்க வேண்­டிய) இரு­வரும் ஆண் பாலா­ராகக் கிடைக்­கா­விட்டால், ஆண் ஒரு­வ­ருடன், நீங்கள் சாட்­சி­யாக அங்­கீ­க­ரிக்­கக்­கூ­டிய பெண்கள் இரு­வரை (சாட்­சி­யாக்க வேண்டும். ஏனென்றால் பெண்கள் பெரும்­பாலும் கொடுக்கல் வாங்­கலை அறி­யா­த­வர்­க­ளாக இருப்­ப­தனால்) அவ்­வி­ரு­வரில் ஒருத்தி தவ­றி­விட்­டாலும், மற்றப் பெண் அவ­ளுக்கு (அதனை) ஞாப­க­மூட்டிக் கொடுக்கும் பொருட்டு (இவ்­வாறு செய்­யவும்). சாட்­சிகள் (அவர்­க­ளுக்குத் தெரிந்­த­வற்றைக் கூற) அழைக்­கப்­படும் போது, (சாட்சி கூற) மறுக்க வேண்டாம்). அன்றி (கடன் ) சிறி­ய­தா­யினும், பெரி­ய­தா­யினும் (உட­னுக்­குடன் எழுதிக் கொள்­ளவும்). அதன் தவணை (வரும்) வரையில், அதனை எழு­தாமல் சோம்­பல்­பட்டு இருந்­து­வி­டா­தீர்கள். (கடனை ஒழுங்­காக எழுதிக் கொள்­ளவும்). இது அல்­லாஹ்­வி­டத்தில் வெகு நீதி­யா­ன­தா­கவும் , சாட்­சி­யத்­திற்கு வெகு உறு­தி­யா­ன­தா­கவும் (கடனின் தொகை­யையோ அல்­லது தவ­ணை­யையோ பற்றி) நீங்கள் சந்­தே­கப்­ப­டா­ம­லி­ருக்க மிக்க பக்க (பல) மாகவும் இருக்கும். ஆனால், நீங்கள் உங்­க­ளுக்­கி­டையில் ரொக்­க­மாக நடத்திக் கொள்ளும் வர்த்­த­க­மா­கி­யி­ருந்தால், அதனை நீங்கள் எழுதிக் கொள்­ளா­விட்­டாலும், அதனால் உங்கள் மீது குற்­ற­மில்லை. ஆயினும், (ரொக்­க­மாக) நீங்கள் வர்த்­தகஞ் செய்து கொண்ட போதிலும் அதற்கும் சாட்சி ஏற்­ப­டுத்திக் கொள்­ளுங்கள்! அன்றி, (தவ­றாக எழு­து­மாறு) எழுத்­தா­ள­னையோ, (பொய் கூறும்­படி) சாட்­சி­யையோ துன்­பு­றுத்­தக்­கூ­டாது. நீங்கள் (துன்­பு­றுத்தி) அவ்­வாறு செய்தால், நிச்­ச­ய­மாக அது, உங்­க­ளுக்குப் (பெரும்) பாவ­மாகும். ஆதலால், அல்­லாஹ்­வுக்கு பயந்து கொள்­ளுங்கள். அல்லாஹ் (கொடுக்கல் வாங்­கலைப் பற்­றிய தன்­னு­டைய விதி­களை) உங்­க­ளுக்கு (இவ்­வா­றெல்லாம்) கற்­றுக்­கொ­டுக்­கின்றான். மேலும், அல்லாஹ் யாவற்­றையும் மிக அறிந்­தவன். (சூறா – பக்ரா 2 : 282)

அக்­கால கட்­டத்தின் சமூக, பொரு­ளா­தார நிலை­வ­ரங்­களின் பின்­ன­ணியில், ஆண்­க­ளுடன் ஒப்­பிடும் பொழுது, பெண்கள் வியா­பார விடயங்கள் தொடர்பில் நன்கு பரிச்­சயம் பெற்­றி­ருக்­க­வில்லை. எனவே, வியா­பா­ரத்தில் பெண்கள் தவறு இழைக்கக் கூடிய வாய்ப்பு இருந்து வந்­தது. இந்தத் திரு­மறை வசனம் பெண்கள் குறை­பாடு உடை­ய­வர்­க­ளாக இருந்து வரு­கின்­றார்கள் எனக் கூற­வில்லை; அல்­லது அவர்­க­ளு­டைய ஆற்றல் குறித்து அது கேள்வி எழுப்­ப­வு­மில்லை. பெண்கள் வழங்கும் சாட்­சி­யங்கள் ஆண்­களின் சாட்­சி­யங்­க­ளிலும் பார்க்க பல­வீ­ன­மா­னவை என நிரூ­பிப்­ப­தற்கு முயற்­சிப்­பதும், அவர்­களை வியா­பார கொடுக்கல் வாங்­கல்­களில் ஈடு­ப­டு­வ­தற்கு தகுதி அற்­ற­வர்கள் என நிரூ­பிப்­ப­தற்கு முயற்­சிப்­பதும் தவ­றா­ன­தாகும். திரு­ம­றையும் அதே போல ஹதீஸ்­களும் வியா­பார விட­யங்கள், குத்­தகைத் தொழில், வாட­கைக்கு விடுதல், வக்ப் சொத்­துக்­களை வழங்­குதல், சொத்­துக்கள் மற்றும் முத­லீடு என்­ப­வற்றை உரித்­தாக கொண்­டி­ருத்தல் என்­ப­வற்­றுக்­கென ஆண்­க­ளுக்கும், பெண்­க­ளுக்கும் முழு உரி­மை­களை வழங்­கி­யுள்­ளன. தமது வாதத்தை நிரூ­பிப்­ப­தற்­கென இந்த வச­னங்­களை பயன்­ப­டுத்­து­ப­வர்கள் பின்­வரும் ஹதீ­ஸி­லி­ருந்து ஆதாரம் காட்­டு­கின்­றார்கள்:

ஆபூ பக்ரா அவர்­களால் அறி­விக்­கப்­பட்­டது:
அல் ஜமல் (யுத்தம் இடம்­பெற்ற) நாட்­களின் போது, நான் அல்­ஜமல் (ஒட்­டக) தோழர்­க­ளுடன் இணைந்து, அவர்­க­ளுடன் சேர்ந்து யுத்­தத்தில் ஈடு­பட்ட பின்னர், அல்­லாஹ்வின் திருத்­தூ­த­ரி­ட­மி­ருந்து இந்தச் சொல்லைக் கேட்கக் கூடிய பாக்­கி­யத்தை அல்லாஹ் எனக்குத் தந்­தி­ருந்தான். பார­சீக மக்கள் கொஸ்­ராவின் மகளை தமது ஆட்­சி­யா­ள­ராக மகுடம் சூட்­டி­ய­தாக அல்­லாஹ்வின் திருத்­தூ­த­ருக்கு அறி­விக்­கப்­பட்ட பொழுது, அவர்கள் சொன்­னார்கள்: ‘எந்த ஒரு மக்கள் கூட்­டத்­தினர் பெண்ணின் ஆட்­சியின் கீழ் இருந்து வரு­கின்­றார்­களோ அவர்கள் ஒரு போதும் வெற்­றி­யீட்­ட­மாட்­டார்கள் .

கலீபா ஒரு­வ­ராக பதவி வகித்தல் அல்­லது கலீ­பாவால் ஒரு நீதி­ப­தி­யாக நிய­மனஞ் செய்­யப்­ப­டுதல் போன்­ற­வற்­றுக்­கான வாய்ப்பை பெண்­க­ளுக்கு மறுக்கும் பொருட்டு சட்ட வல்­லு­னர்கள் பல நூற்­றாண்­டு­க­ளாக இந்த ஹதீஸை பயன்­ப­டுத்தி வந்­துள்­ளார்கள். அது பெண்­களின் அந்­தஸ்தை பாதித்­தி­ருப்­ப­துடன், தொழில் வாய்ப்­புக்கள் தொடர்­பாக நிலவி வரும் பால்­நிலை அடிப்­ப­டை­யி­லான பார­பட்­சத்தை இல்­லா­தொ­ழிப்­ப­த­னையும் சிர­ம­மாக்­கி­யுள்­ளது. பெண்­க­ளுக்கு அவர்­க­ளு­டைய அர­சியல் உரி­மை­களும், பங்­கேற்பு உரி­மை­களும், உயர் பத­வி­களை வகிப்­ப­தற்­கான உரி­மை­களும் சாட்­சி­க­ளாக, நீதி­ப­தி­க­ளாக, தலை­வர்­க­ளாக செயற்­ப­டு­வ­தற்­கான உரி­மை­களும் மறுக்­கப்­பட்­டுள்­ளன. எவ்­வா­றி­ருப்­பினும், இந்த நியா­ய­மற்ற வியாக்­கி­யா­னத்தை முக்­கி­ய­மான அறி­ஞர்கள் உணர்ந்து, ஏற்­றுக்­கொண்­டி­ருப்­ப­துடன், பெண்கள் கலீ­பாவின் அதி­யுயர் பொறுப்பைத் தவிர, நீதி­பதி போன்ற அர­சாங்கப் பத­வி­களை பொறுப்­பேற்க முடியும் எனக் குறிப்­பிட்­டுள்­ளார்கள்.

அபூ­பக்ரா அவர்கள் கூறிய விட­யத்தின் பின்­புலம் சார்ந்த பொருள் விளக்கம் தொடர்­பாக ஓர­ள­வுக்கு விவா­தங்கள் எழுந்­தி­ருப்­ப­துடன், இந்த ஹதீஸ் எதனைக் கூற வரு­கின்­றது என்ற விடயம் தொடர்­பா­கவும் ஓர­ள­வுக்கு விவா­தங்கள் இடம்­பெற்­றுள்­ளன. முதலில் ஜமல் போரின் போது அல்­லது ஆயிஷா (ரலி) அவர்கள் பஸ்­ரா­வுக்கு ஒரு படைக்குத் தலைமை தாங்கிச் சென்ற பொழுது இடம்­பெற்ற பஸ்ராப் போரின் போது இந்த ஹதீஸ் கூறப்­பட்­ட­தாக கரு­தப்­ப­டு­கின்­றது. இதனைக் கூறிய அபூ­பக்ரா, ஆயிஷா (ரலி) அவர்­க­ளினால் வழி­ந­டத்திச் செல்­லப்­பட்ட இரா­ணு­வத்தின் ஓர் உறுப்­பி­ன­ராக இருந்து வந்தார். இந்தப் படை­யெ­டுப்பு முறி­ய­டிக்­கப்­பட்­டமை தொடர்­பா­கவும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்­களின் தோழர்கள் பலர் அதில் உயி­ரி­ழந்­தமை தொடர்­பா­கவும் ஒரு சில கேள்­விகள் எழுப்­பப்­பட்­டி­ருந்­தன. குறிப்­பாக, இந்த ஹதீஸ் உண்­மை­யா­ன­தாக இருந்து வந்தால், அபூ­பக்ரா ஆயி­ஷாவின் ஆற்றல் குறித்தும், இந்தப் படை­யெ­டுப்­புக்கு அவர் வழங்­கிய தலை­மைத்­துவம் குறித்தும் கேள்வி எழுப்­பு­கிறார் என்ற வாதத்­திற்கு அது ஆத­ர­வ­ளிக்­கின்­றது.

நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்­களின் மூத்த தோழர்­க­ளான தல்ஹா பின் உபை­துல்லா மற்றும் இப்னு அவ்ஹம் ஆகியோர் இந்த ஹதீஸை எடுத்துக் கூறும் அபூ­பக்ரா (ரலி) அவர்­க­ளுடன் இணைந்து போரிட்­டார்கள். அவர்கள் பெண் தலை­மைத்­து­வத்தை ஏற்­றுக்­கொள்­ளா­தி­ருந்தால் ஆயிஷா (ரலி) அவர்­களின் தலை­மைத்­து­வத்தின் கீழ் போருக்குச் சென்­றி­ருக்­க­மாட்­டார்கள். எவ்­வா­றி­ருப்­பினும், பெண்­களின் தலை­மைத்­து­வத்­திற்கு எதிர்ப்புத் தெரி­விப்­ப­வர்கள், போரின் பின்னர் ஆயிஷா (ரலி) அவர்கள் நடந்து கொண்ட விதத்தை அதற்­கான ஒரு நியா­யப்­ப­டுத்­த­லாக முன்­வைக்க விரும்­பு­கின்­றார்கள். ஒட்­டக யுத்­தத்தின் பின்னர், ஆயிஷா (ரலி) அவர்கள் தான் போருக்குச் சென்­றமை குறித்து வருந்­தி­ய­தா­கவும், தான் வீட்டில் இருந்­தி­ருக்க வேண்டும் எனக் கூறி­ய­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது. மேலும், பெண் தலை­மைத்­து­வத்தின் கீழ் போருக்குச் செல்­வது தவ­றா­னது என்ற விட­யத்தை ஏற்றுக் கொண்­டி­ருந்தார் என்றும் கூறப்­பட்­டி­ருந்­தது. படை வீரர்­களின் உயி­ரி­ழப்­புக்கள் மற்றும் உற­வி­னர்கள் பலரின் இழப்­புக்கள் ஏற்­ப­டுத்­திய துயரம் கார­ண­மாக ஏற்­பட்­டி­ருந்த மன உளைச்­சலின் விளை­வாக கூறப்­பட்ட ஆயிஷா (ரலி) அவர்­களின் வார்த்­தை­களை, ஓர் எதிர்­வா­த­மாக முன்­வைக்கப் பயன்­ப­டுத்­து­வது தவ­றா­னது எனக் கரு­தப்­ப­டு­கின்­றது.

திருத்­தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்­களின் அபிப்­பி­ரா­யங்கள் நிச்­ச­ய­மாக தவ­றா­ன­வை­யாக இருக்க முடி­யாது. எவ்­வா­றி­ருப்­பினும், குறிப்­பிட்ட ஹதீஸ் அது முன்­வைக்கும் வாதத்தில் பல­வீ­ன­மா­ன­தாக இருந்து வரு­வ­தற்­கான சாத்­தி­யப்­பா­டுகள் இல்­லை­யென ஒருவர் வாதிட முடி­யாது. இது தொடர்­பாக ஷீபாவின் ராணி குறித்த திரு­ம­றையின் சூரா – அன் நம்ல் (23-44) வச­னங்கள் முன்­னைய ஹதீஸ்­க­ளுடன் முரண்­ப­டு­வ­தாக அறி­ஞர்கள் பலர் சுட்­டிக்­காட்­டு­கின்­றார்கள். இந்த வசனம் அழி­வு­க­ர­மான ஒரு போர் தடுக்­கப்­பட்­டது என்றும், ராணியின் ஞானம் மற்றும் தூர நோக்கு என்­ப­வற்றின் கார­ண­மாக மக்கள் சரி­யான திசையில் வழி­ந­டத்­தப்­பட்­டார்கள் என்றும் குறிப்­பி­டு­கின்­றது. எனவே, அத்­த­கைய ராணிகள் வர­லாற்றில் இருந்து வந்­துள்­ளார்கள் என்ற விட­யமும், பெண் தலை­மைத்­துவம் தொடர்­பாக நவீன முன்­னு­தா­ர­ணங்கள் இருந்து வரு­கின்­றன என்ற விட­யமும் அபூ­பக்ரா அவர்­களால் எடுத்துக் கூறப்­பட்ட ஹதீஸை அது கூறப்­பட்ட காலத்தின் பின்­ன­ணியில் வாசிக்க வேண்­டிய தேவையை எடுத்துக் காட்­டு­வ­தாக வாதி­டு­ப­வர்கள் இருந்து வரு­கின்­றார்கள். அதனை எல்லாக் காலங்­க­ளுக்கும் பொது­மைப்­ப­டுத்த முடி­யாது எனவும் அவர்கள் கூறு­கின்­றார்கள்.

ஆண்­களை மட்டும் காதி நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளாக நிய­மனம் செய்யும் வழக்கம், பெண்­களின் சமூக அந்­தஸ்து, கல்வி மற்றும் திறன்கள் என்­ப­வற்றில் ஏற்­பட்டு வந்­தி­ருக்கும் மாற்­றங்­களின் பின்­ன­ணியில் காலப் போக்கில் மாற்­ற­ம­டைந்­துள்­ளது. இந்த நிலையில், பல நாடுகள் – குறிப்­பாக முஸ்லிம் பெரும்­பான்­மையைக் கொண்­டி­ருக்கும் நாடுகள் – பெண்­களை காதி நீதி­ப­தி­க­ளாக நிய­மனம் செய்யும் விட­யத்தை அங்­கீ­க­ரித்­துள்­ளன. பெண் காதி நீதி­ப­தி­களின் நிய­ம­னங்­களை அங்­கீ­க­ரிக்கும் நாடு­களின் பட்­டியல் எகிப்து, ஜோர்தான், மலே­சியா, பலஸ்­தீனம், சூடான், ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸ், யெமன், டியு­னீ­சியா, பங்­க­ளா­தேஷ், பாகிஸ்தான், இந்­தோ­னி­ஷியா மற்றும் லெபனான் என்­ப­வற்­றையும் உள்­ள­டக்கும் விதத்தில் விரி­வ­டைந்­துள்­ளது.

அந்தப் பின்­பு­லத்தில், முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யாக வாழ்ந்து வரும் ஒரு நாட்டில் பெண்­களை காதி நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்வதற்கு எதிரான கூக்குரல்கள் எவ்வளவு காலத்திற்குத்தான் தாக்குப் பிடிக்க முடியும்? எனது அபிப்பிராயத்தில் குர்ஆன், ஹதீஸ் மற்றும் ஏனைய இஸ்லாமிய ஆவணங்கள் என்பவற்றின் அடிப்படையில் நாங்கள் ஒரு முற்போக்கான தீர்வுக்கு வர வேண்டிய தேவையிருந்து வருகின்றது.
இஸ்லாமிய பெண்ணியவாதிகள் பலரும் ,மொரோக்கோவின் அறிஞர் அப்துஸ் ஸலாம் யாசீனின்(Abdessalam Yassine) மகள் நாதியா யாசீன்(Nadia Yassine) போன்ற புலமை வாய்ந்தவர்களும் இடையூறுகள் மற்றும் நிர்ப்பந்தங்களுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி, இஜ்திஹாத்திற்கு ஊடாக நேரடியாக மூலப் பிரதிகளுடன் தொடர்பு கொள்வதன் மூலம் அசல் சமயவியல் சான்றுகளைப் பெற்று, வலியுறுத்துவது எப்படி என்ற விடயத்திற்கு மிகச் சிறந்த உதாரணங்களை முன்வைத்துள்ளார்கள்.

அவ்­வாறே இஸ்­லா­மிய அறி­ஞர்கள் பலரும் இஸ்­லா­மிய பெண்­ணி­ய­வா­தி­களும் இஸ்­லா­மிய வெளிச்­சத்தில் அசல் நோக்­கத்தை மீளக் கண்­ட­றிந்து கொள்­வ­தற்கு இப்­பொ­ழுது முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றார்கள். ஆண்­களைப் போல பெண்­களும் திருக்­குர்­ஆனில் கூறப்­பட்­டி­ருக்கும் ‘பால்­நிலை சமத்­து­வத்தை’ எவ்­வாறு பார்க்­கின்­றார்கள் என்ற விட­யத்தை ஆழ­மாக தேடிக் கண்­ட­றி­வ­தற்கும், ஆராய்ச்சி செய்­வ­தற்­கு­மான விசேட கடப்பாட்டினைக் கொண்டுள்ளார்கள்.

ஆண்களின் ‘ஆண்மைவாத’ விளக்கவுரைகளுக்கு பின்னால் மறைந்திருப்பது என்ன என்பதை அவர்கள் தேடிக் கண்டுபிடித்தல் வேண்டும். பெண்நிலைவாதம் என்பதே இன்றைய மேலைத்தேய உலகில் பெருமளவுக்கு வாதப்பிரதிவாதங்களுடன் கூடிய ஒரு சொற் பதமாக இருந்து வருகின்றது. பெண்நிலைவாதத்தை விமர்சன ரீதியாக நோக்கும் முஸ்லிம் பெண்களும் தமது சமூகத்தில் தலைவர்களாக இருந்து வருகின்றார்கள். அவர்கள் பெண்களின் நலனோம்பல் திறனை விருத்தி செய்யும் விடயத்திற்கென ஆழமாக தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருப்பது மட்டுமன்றி, தம்மை ஆணாதிக்கத்திற்கு அடிபணிய வைக்கும் முயற்சிகளையும் முனைப்பான விதத்தில் எதிர்த்து வருகின்றார்கள்.

இந்தச் செயற்பாடு எமது சமூகத்திலும் ஊக்குவிக்கப்பட வேண்டியதாக இருந்து வருகின்றது என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயமாகும். அந்த நிலையில், அதிகம் அதிகமான பெண்கள் சமூகத்தில் புதிய முற்போக்கு வகிபாகங்ளை மேற்கொள்ளும் பொழுது அது வெற்றியளிக்கும். நாங்கள் இப்பொழுது காளை மாட்டின் கொம்புகளை சரியாக கரங்களால் பற்றிப் பிடிக்க வேண்டிய தருணம் வந்துள்ளது.

பெண்­களின் மனச்­சாட்­சியின் விழிப்­பு­ணர்வு ஒரு கூட்டுப் பொறுப்­பாக உரு­வாகும் சந்­தர்ப்­பத்தில் அது பெண்­க­ளுக்கு சிறந்­ததோர் ஆசீர்­வா­த­மாக இருந்து வரும். மேலும், அத்­த­கை­ய­தொரு நிலை பெண்­க­ளுக்கு எதி­ரான அடக்­கு­மு­றைகள் எவை­யு­மி­ருப்பின், அவற்றை எதிர்த்து நிற்­ப­தற்­கான அனைத்­து­ம­டங்­கிய சட்­டகம் ஒன்­றையும் வழங்கும். பெண்கள் தமது கோரிக்­கை­களை தாங்­களே முன்­னெ­டுத்து, அதனை ஆண்கள் செய்ய வேண்­டு­மென அவர்கள் மீது தங்­கி­யி­ருப்­ப­தற்குப் பதி­லாக, தமது வலிமையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒவ்­வொரு அடக்­கு­முறை சக்­திக்கும் எதி­ராக இஜ்­தி­ஹாத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான துணிச்­சலை முஸ்லிம் பெண்கள் பெற்­றுக்­கொள்ள வேண்டும். இஜ்­திஹாத் காலம் தோறும் மாற்­ற­ம­டைந்து வரும் வாழ்க்­கையின் தேவை­களை சமா­ளித்துச் செல்லும் ஆற்றல் மிக்­கது. பெண்கள் தமது பிரச்­சி­னை­களை தாமே முன்­வைக்கும் ஒரு சக்­தி­யாக எழுச்­சி­ய­டையும் சந்­தர்ப்­பத்தில், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சீர்­தி­ருத்­தங்­களை எடுத்து வரும் விதத்தில் செயற்­பட முடியும். முஸ்லிம் சமூ­கத்­திற்குள் பெண்­க­ளுக்கு நன்கு அங்கீகரிக்கப்பட்ட ஓர் இடம் இருந்து வருவதுடன், அவர்களுடைய உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்காகவும், அவர்களுக்கு ஒரு சிறந்த உலகை உருவாக்குவதற்காகவும் தொடர்ந்தும் முயற்சிப்போம். பெண்களுக்காக என்று அல்லாமல், பொதுவாக அனைவருக்காகவும் அந்த முயற்சியில் ஈடுபடுவோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.