முஸ்லிம் பெண்களின் கலாசார உடையினை உறுதிப்படுத்துங்கள்

மலையக முஸ்லிம் கவுன்ஸில் ஜனாதிபதியிடம் கோரிக்கை

0 192

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பதுளை வலயக் கல்­விப்­ப­ணிப்­பாளர், அர­சாங்க பரீட்­சை­க­ளுக்குத் தோற்றும் பரீட்­சார்த்­திகள் தலையை ஆடை­யினால் மறைத்துக் கொண்டு பரீட்சை எழு­து­வ­தற்கு அனு­ம­திக்க வேண்டாம் என பரீட்சை மேற்­பார்­வை­யாளர்களுக்கு உத்­த­ர­விட்­டுள்­ளதால் முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­திகள் தலையை மறைக்­காமல் திறந்த நிலையில் பரீட்சை எழுதும் நிலை­மைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளார்கள்.

தலையை மறைத்து ஆடை அணி­வது முஸ்லிம் பெண்­களின் சமய மற்றும் கலா­சார உரி­மை­யாகும். முஸ்லிம் மாண­விகள் தொடர்ந்தும் தமது உரி­மை­களை அனு­ப­விப்­பதை உறு­திப்­ப­டுத்­து­மாறு மலை­யக முஸ்லிம் கவுன்ஸில் ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

மலை­யக முஸ்லிம் கவுன்­ஸிலின் பொதுச் செய­லாளர் எம்.ரி.எம்.பாயிஸ் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­திலே இக்­கோ­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பிட்ட கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது: பரீட்­சார்த்­திகள் தங்­க­ளது அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்த வேண்­டி­யது கட்­டா­ய­மாகும் என்­பதை நாம் ஏற்­றுக்­கொள்­கிறோம். இதற்கு மாற்றுக் கருத்து இல்லை. முகத்தை மறைத்துக் கொண்டு பரீட்சை எழு­தலாம் என்று கோருவோர் தொடர்­பிலும் நாம் உடன்­ப­ட­வில்லை.

முஸ்லிம் மாண­விகள் பொது­வாக தங்­க­ளது தலையை ஆடையால் மறைத்­துக்­கொண்டு ஏனையோர் மத்­தியில் பழ­கு­ப­வர்கள் என்­ப­தையும் தங்­க­ளது கவ­னத்­திற்கு கொண்டு வரு­கிறோம். அவர்கள் தமது அன்­றாட வாழ்க்­கை­யிலும் இந்த கலா­சார உடை­யினை அணி­ப­வர்கள். முஸ்லிம் மாண­வி­களின் பாட­சாலை சீரு­டையின் ஒரு பகு­தி­யாக இந்த ஆடை கலா­சாரம் இருந்து வரு­கி­றது.

இந்­நி­லையில் முஸ்லிம் மாண­வி­களின் பாட­சாலை சீரு­டையில் தலையை மூடி­யி­ருக்கும் பகு­தியை அகற்­றும்­படி உத்­த­ர­வி­டு­வது பாட­சாலை சீரு­டையில் ஒரு பகு­தியை கழற்­று­வ­தாக அமையும். அந்­நியர் முன்­னி­லையில் முஸ்லிம் மாண­விகள் தங்­களின் தலையை மூடாது திறந்­தி­ருக்க வேண்­டு­மென பல­வந்­தப்­ப­டுத்­தினால் அவர்கள் உள­வியல் ரீதியில் பாதிக்­கப்­ப­டு­வார்கள்.

நிலைமை இவ்­வாறு இருக்­கும்­போது பதுளை வலய கல்விப் பணிப்­பாளர் இவ்­வி­வ­கா­ரத்தில் தனது அதி­கா­ரத்தை எல்லை மீறி பயன்­ப­டுத்தி பொது பரீட்­சை­க­ளுக்குத் தோற்றும் மாண­வி­களின் தலையை மறைக்கும் ஆடையை (பர்தா) அகற்­று­வ­தற்கு தொட­ராக முயற்­சித்து வரு­வ­தாக முஸ்லிம் பரீட்­சார்த்­திகள் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர்.
கல்விப் பணிப்­பா­ளரின் இந்த ஆலோ­ச­னை­யி­னை­ய­டுத்து கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி நடை­பெற்ற GIT அதா­வது தகவல் தொழில் நுட்ப பொதுப்­ப­ரீட்­சைக்குத் தோற்­றிய முஸ்லிம் மாண­விகள் தங்­க­ளது தலை­களை மறைக்­காது திறந்த நிலையில் பரீட்சை எழுத வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது. அத்­தோடு கடந்த 2022 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்­தர பரீட்சை எழு­திய மாண­வி­களும் இந்­நி­லை­மைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டனர். மாண­வி­க­ளுக்கு இவ்­வா­றான அழுத்­தங்கள் வழங்­கப்­ப­டு­வது அவர்­க­ளது பரீட்சை முடி­வு­க­ளிலும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தலாம் என்­பது எமது நிலைப்­பா­டாகும்.

இந்தப் பிரச்­சினை ஊவா மாகாண பதுளை கல்வி வலய அதி­கா­ரத்­துக்­குட்­பட்ட பிர­தே­சங்­களில் மாத்­தி­ரமே உரு­வெ­டுத்­துள்­ளது. ஏனைய பிர­தே­சங்­களில் பரீட்சை எழுதும் முஸ்லிம் மாண­விகள் தங்­க­ளது பர்­தாவை சிறிது இல­கு­ப­டுத்தி காதுகள் இரண்டும் தெரியும் வகையில் சரி­செய்து பரீட்சை மேற்­பார்­வை­யா­ளர்­க­ளுக்கு தங்­க­ளது ஆள­டை­யா­ளத்தை உறு­தி­ப­டுத்­தி­யுள்­ளனர். இந்த வாய்ப்பு அப்­ப­குதி பரீட்சை மேற்­பார்­வை­யா­ளர்­களால் வழங்­கப்­பட்­டுள்­ளது.

குறிப்­பிட்ட விடயம் தொடர்பில் நாம் பரீட்சை ஆணை­யாளர் நாய­கத்­திடம் வின­வினோம். கல்விப் பொதுத்­த­ரா­தர (சா/த) மற்றும் உயர்­த­ரப்­ப­ரீட்சை எழுதும் மாண­விகள் அணிய வேண்­டிய ஆடைகள் தொடர்­பி­லான உத்­தி­யோ­கப்­பூர்வ விதி­மு­றைகள் என்ன என நாம் வின­வினோம்.

பிரதி பரீட்சை ஆணை­யாளர் நாயகம் எஸ்.ஜி.எஸ்.சம­ரகோன் இதற்கு பதில் கடிதம் அனுப்­பி­யுள்ளார். அக்­க­டி­தத்தில் இது தொடர்பில் இது­வரை எவ்­வித சட்­டமும் பிறப்­பிக்­கப்­ப­ட­வில்லை. என்றும் பரீட்­சார்த்­திகள் பின்­பற்ற வேண்­டிய வழி­மு­றைகள் தொடர்பில் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது என்றும் தெரி­வித்­துள்ளார். அதற்­கான வர்த்­த­மானி அறி­வித்­தலின் பிர­தி­யொன்­றி­னையும் அனுப்பி வைத்­துள்ளார்.

குறிப்­பிட்ட வர்த்­த­மானி அறி­வித்­தலில் பரீட்­சார்த்­திகள் தலையை மூடிக்­கொண்டு இருக்க முடி­யாது. என்றோ கட்­டா­ய­மாக தலையை திறந்த நிலையில் வைத்­தி­ருக்க வேண்­டு­மென்றோ எவ்­வி­டத்­திலும் குடிப்­பி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை.

முஸ்லிம் மாண­விகள் தங்­க­ளது தலை­யினை மறைத்து (மூடி) பாட­சாலை சீரு­டை­யினைத் தயா­ரித்துக் கொள்­வது அவர்­க­ளது சமய மற்றும் கலா­சார உரிமையாகும். இந்த உரிமையை உறுதி செய்து பதுளை நீதிவான் நீதிமன்றினால் வழக்கு இல பீ ஆர் 1075/99 ன் கீழ் தீர்ப்பொன்றும் வழங்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் பெண்களின் கலாசார உடைக்கு எதிராக செயற்பட்டு ஒரு சில குழுக்கள் நாட்டில் மீண்டும் இனங்களுக்கிடையில் கலவரங்களை ஏற்படுத்தும் இவ்வாறான முயற்சிகளுக்கு இடமளிக்கக் கூடாது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோடுகிறோம் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.