2.6 மில்லியன் யாத்திரிகர்கள் இவ்வருட ஹஜ்ஜில் பங்கேற்பர்

0 105

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இந்த வருட ஹஜ் யாத்­தி­ரையில் சுமார் 2.6 மில்­லியன் மக்கள் உல­கெங்­கி­லு­மி­ருந்து பங்­கேற்­பார்கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

கொவிட் 19 வைரஸ் தொற்று நோய் பர­விய கால கட்­டத்­துக்குப் பின்பு இடம் பெறும் பாரிய அள­வி­லான ஹஜ் நிகழ்வு இது­வென சவூதி அரே­பிய ஹஜ் அமைச்சு வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளது.

ஹஜ் யாத்­தி­ரையில் பங்­கேற்­க­வுள்ள மில்­லியன் கணக்­கான யாத்­தி­ரி­கர்­களின் நலன்­களைப் பேணு­வ­தற்கு சவூதி அரே­பிய ஹஜ் அமைச்சு சகல நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுத்­துள்­ளது. யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு உதவும் பணியில் 14 ஆயிரம் உத்­தி­யோ­கத்­தர்­களும் 8 ஆயிரம் தொண்­டர்­களும் சேவையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். பாது­காப்புப் பணியில் ஆயி­ரக்­க­ணக்­கான பொலி­ஸாரும் ஏனைய உத்­தி­யோ­கத்­தர்­களும் பணியில் அமர்த்­தப்­பட்­டுள்­ளனர்.

கொவிட் 19 வைரஸ் தொற்­றுக்­கா­லத்தில் சவூதி ஹஜ் அமைச்சு ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் தொடர்பில் கடும் கட்­டுப்­பா­டு­களை விதித்­தி­ருந்­தது.

யாத்­தி­ரி­கர்­களின் எண்­ணிக்­கை­யையும் கட்­டுப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. ஹஜ் கோட்­டாக்­களும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன. இந்த வருட ஹஜ் யாத்­திரை கொவிட் 19 வைரஸ் தொற்­றுக்குப் பின்­ன­ரான மிகப்­பெ­ரிய யாத்­தி­ரை­யாக அமை­ய­வுள்­ள­தாக இரு புனித பள்­ளி­வா­சல்கள் விவ­கார பொதுத் தலை­மைத்­து­வத்தின் தலைவர் கலா­நிதி அப்துல் ரஹ்மான் அல்­சு­தைஸ் தெரி­வித்­துள்ளார். கொவிட் 19 வைரஸ் தொற்­றுக்குப் பின் ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் எண்­ணிக்கை தொடர்­பான வரை­ய­றையை நீக்­கி­யுள்­ளது.

மக்கா பெரிய பள்­ளி­வா­சலிலும் மதி­னா­வி­லுள்ள நபிகள் நாய­கத்தின் பள்­ளி­வா­ச­லிலும் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு மொத்தம் 3 இலட்சம் புனித குர்ஆன் பிர­திகள் விநி­யோ­கிக்­கப்­ப­ட­வுள்­ளன எனவும் அல் சுதாயிஸ் தெரி­வித்­துள்ளார்.

உல­கெங்­கு­மி­ருந்து வரு­கை­தரும் பல்­வேறு மொழிகள் பேசும் யாத்­தி­ரி­கர்­களின் நலன் கருதி அவர்­க­ளுக்கு தேவை­யான சேவை­களை வழங்­கு­வ­தற்­காக 51 மொழி­களில், மொழி பெயர்ப்பு சேவைகள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. மேலும் இந்­நி­கழ்வில் குர்ஆன் மனனம், மற்றும் குர்ஆன் பாரா­யணம் செய்­வ­தற்­கான பயிற்­சிப்­பட்­ட­றை­களும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன. யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு கைய­டக்கத் தொலைபேசி செயலிகள், உள்ளடங்களான இலத்திரனியல் தொழில் நுட்ப வசதிகளும் வழங்கப்படவுள்ளன.
மக்கா, மதீனா இரு பள்ளிவாசல்களிலும் தினம் 2 மில்லியன் தண்ணீர் போத்தல்கள் அதாவது 40 ஆயிரம் லீற்றர் புனித ஸம்ஸம் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.