சவூதி அரேபியாவும் இலங்கையும் 60க்கு மேற்பட்ட துறைகளில் ஒன்றிணைய ஒப்பந்தம் கைச்சாத்து

0 136

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இலங்­கையும், சவூதி அரே­பி­யாவும் தங்­க­ளுக்­கி­டை­யி­லான அர­சியல் புரிந்­து­ணர்வு மற்றும் நட்­பு­ற­வினை 60க்கும் மேற்­பட்ட துறை­களில் பலப்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கி­ன்றன. இரு நாடு­க­ளி­னதும் பிரதிநிதி­க­ளுக்­கி­டையில் அண்மையில் இடம் பெற்ற சந்திப்பில் இதுபற்றி தெரி­விக்­கப்­பட்­டது.

இலங்கை பிர­தி­நி­திகள் குழு­வொன்று அண்­மையில் சவூதி அரே­பியா ரியாத் நகரில் சவூதி அரே­பிய பிர­தி­நி­தி­க­ளுடன் இது தொடர்­பான முதற்­கட்ட பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட்­டனர். இந்த முதற்­கட்ட பேச்சுவார்த்­தைக்கு சவூதி அரே­பி­யாவின் மனித வள பிர­தி­ய­மைச்சர் கலா­நிதி அப்­துல்லா அபு துனைன் மற்றும் இலங்­கையின் வெளி­வி­வ­கார இரா­ஜாங்க அமைச்சர் தாரக பால சூரிய ஆகிய இரு­வரும் இணைத் தலைமை வகித்­தனர்.

சவூதி அரே­பி­யா­வுக்கும் இலங்­கைக்­கு­மி­டை­யி­லான நட்­பு­றவு மேலும் பல­ம­டைந்து வரு­கின்­றமை பெரிதும் மகிழ்ச்­சிக்­கு­ரி­ய­தாகும் என இலங்­கையின் வெளி­வி­வ­கார இரா­ஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரி­வித்தார். இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான இணை அங்­கத்­தவர்கள் குழு 63 துறை­களில் ஒன்­றி­ணைந்து அபி­வி­ருத்­திக்­காக செயற்­ப­டுத்­து­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்­ளது. இரு நாடு­க­ளுக்­கு­மி­டையில் இது தொடர்பில் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­த­மொன்றும் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. அர­சியல் ரீதி­யான புரிந்­து­ணர்வு இரு நாட்டு வெளி­வி­வ­கார அமைச்­சர்­களுக்கிடையில் தொடர் பேச்சு வார்த்­தை­க­ளுக்கு வழி­வ­குக்கும் எனவும் இலங்­கையின் வெளி­வி­வ­கார இரா­ஜாங்க அமைச்சர் தெரி­வித்தார். சர்­வ­தேச அரங்கில் சவூதி அரே­பியா பல்­வேறு துறை­களில் முன்­னணி வகிக்­கின்­ற­மையை காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

குறிப்­பிட்ட இரு நாடு­களின் பிர­தி­நி­தி­க­ளுக்­கி­டை­யி­லான கூட்டம் இரு நாடு­க­ளுக்­கு­மி­டையில் பொரு­ளா­தாரம்,வர்த்­தகம், முத­லீடு, கல்வி, கலா­சாரம், விளை­யாட்டு, விவ­சாயம், மனி­தா­பி­மான செயற்­றிட்­டங்கள் உட்­பட பல்­வேறு துறை­களில் ஒத்­து­ழைப்­பினை மேம்­ப­டுத்­து­வ­தற்கு வழி­வ­குக்கும் என இலங்­கைக்­கான சவூதி அரே­பி­யாவின் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்­தானி தெரி­வித்தார். இரு நாடு­க­ளுக்குமிடை­யி­லான உறவில் மற்றும் அர­சியல் உறவில் இந்த உடன்­ப­டிக்கை குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்­றத்­துக்கு வழி சமைத்­துள்­ளது என்றும் அவர் கூறினார்.

இதே­வேளை இலங்கை மற்றும் சவூதி அரேபியாவுக்கு மிடையிலான நல்லுறவு உச்ச நிலையை எய்தியுள்ளதெனவும் இரு நாடு­களும் தங்­க­ளுக்குள் சர்­வ­தேச ரீதியில் ஒத்­து­ழைப்­பு­களைப் பரி­மா­றிக்­கொள்­கின்­றன எனவும் சவூதி அரே­பி­யா­வுக்­கான இலங்கை தூதுவர் பக்கீர் மொஹிதீன் ஹம்ஸா தெரிவித்தார்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.