வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைக் கொண்டுள்ள 35 இலங்கையருக்கே ஹஜ் யாத்திரைக்கு வாய்ப்பு

அரச ஹஜ் குழு தெரிவிப்பு

0 174

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இவ்­வ­ருட ஹஜ் கட­மைக்­காக விண்­ணப்­பித்­துள்ள வெளி­நாட்டு கட­வுச்­சீட்­டு­களைக் கொண்­டுள்ள 162 இலங்கை ஹஜ் விண்­ணப்­ப­தாரிகளில் 35 பேருக்கே சவூதி அர­சாங்கம் ஹஜ் கட­மைக்­கான அனு­ம­தி­யினை வழங்­கி­யுள்­ள­தாக அரச ஹஜ் குழு தெரி­வித்­துள்­ளது.
இவ்­வ­ருடம் சவூதி அரே­பிய ஹஜ் அமைச்சு இலங்­கைக்கு வழங்­கி­யுள்ள 3500 ஹஜ் கோட்­டாவில் இது 1 வீத­மாகும். வெளி­நாட்டுக் கட­வுச்­சீட்­டுக்­களைக் கொண்­டுள்ள 162 விண்­ணப்­ப­தா­ரி­களில் கண­வரோ அல்­லது மனை­வியோ வெளி­நாட்­ட­வ­ராக இருப்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இதே­வேளை இலங்­கை­யி­லி­ருந்து முத­லா­வது ஹஜ் யாத்­தி­ரிகர் குழு எதிர்­வரும் 4 ஆம் திகதி அதி­காலை எமிரேட்ஸ் விமானம் மூலம் சவூதி அரே­வி­யாவை நோக்கி பய­ணிக்­க­வுள்­ளது. இக்­கு­ழுவில் 62 பேர் அடங்­கி­யுள்­ளனர். அத்­தோடு ஹஜ் கட­மையை பூர்த்தி செய்­து­விட்டு இலங்கை யாத்­தி­ரிகர் குழு எதிர்­வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதி முதல் நாடு திரும்­ப­வுள்­ளனர்.

இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்கள், ஹஜ் முக­வர்­க­ளுடன் உடன்­ப­டிக்­கை­யொன்­றினை கைச்­சாத்­திட்டு பய­ண­மா­வதால் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு உடன்­ப­டிக்­கையில் குறிப்­பிட்­டுள்ள சேவைகள், ஹோட்டல் வச­திகள் என்­பன வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென அரச ஹஜ் குழு முக­வர்­களைக் கோரி­யுள்­ளது.

உடன்­ப­டிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள சேவைகள், தங்­கு­மி­ட­வ­ச­திகள் வழங்­கப்­ப­டா­விட்டால் யாத்­தி­ரிகர்கள் அரச ஹஜ் குழு­விடம் முறை­யி­டும்­ப­டியும் கேட்­கப்­பட்­டுள்­ளனர். ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் முறைப்­பா­டுகள் அதற்­கென நிய­மிக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணைக்­கு­ழு­வினால் விசாரிக்கப்பட்டு அவை நிரூபிக்கப் பட்டால் உரிய
முகவர் நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென அரச ஹஜ் குழுவின் உறுப்பினர் அஹ்கம் உவைஸ் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.