அதிகரிக்கும் குற்றச் செயல்கள்: பெற்றோர் விழிப்பார்களா?

0 244

நாட்டில் தொட­ராக இடம்­பெறும் சிறு­வர்கள் மற்றும் பெண்­க­ளுக்கு எதி­ரான குற்றச் செயல்கள் அதிர்ச்சி தரு­வ­தாக உள்­ளன. கடந்த சில தினங்­க­ளாக ஊட­கங்­களில் வெளி­வரும் செய்­திகள் நாட்டின் எதிர்­காலம் குறித்து பலத்த சந்­தே­கங்­களைத் தோற்­று­விப்­ப­தாக உள்­ளன.

களுத்­துறை பிர­தே­சத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் ஹோட்டல் ஒன்றின் வெளிப்­பு­றத்­தி­லி­ருந்து நிர்­வா­ண­மான நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்ட சம்­பவம் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. குறித்த மாணவி, தனது நண்பி ஒரு­வரால் ஏமாற்றி அழைத்துச் செல்­லப்­பட்டு காமுகன் ஒரு­வ­னது வலையில் சிக்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக ஆரம்­பக்­கட்ட தக­வல்கள் கூறு­கின்­றன. எனினும் இது தொடர்­பான முழு­மை­யான விசா­ர­ணைகள் முடி­வுக்கு வர­வில்லை. சம்­பந்­தப்­பட்ட நபர்கள் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

அதே­போன்­றுதான் கம்­பளை, கெலி­ஓயா பகு­தியில் 22 வய­தான முஸ்லிம் யுவதி ஒருவர் கழுத்து நெரித்துக் கொல்­லப்­பட்ட சம்­ப­வமும் பெரும் அதிர்ச்­சியைத் தோற்­று­வித்த ஒன்­றாகும். காலையில் தொழி­லுக்­காகச் சென்ற குறித்த யுவதி, போதைக்கு அடி­மை­யான ஒரு­வரால் இழுத்துச் செல்­லப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டுள்ளார். கொலை­யாளி கைது செய்­யப்­பட்­டுள்ள நிலையில் விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன.

கடந்த வாரம் ஊட­கங்­களில் வெளி­யான மற்­றொரு செய்­தியே ஆசி­ரியர் ஒருவர் 16 மாண­வி­களை பாலியல் ரீதி­யாக துஷ்­பி­ர­யோகம் செய்­துள்ளார் என்­ப­தாகும். குறித்த ஆசி­ரியர் தலை­ம­றை­வா­கி­யி­ருந்த நிலையில் தற்­போது கைது செய்­யப்­பட்­டுள்ளார். வகுப்­ப­றைக்குள் வைத்தும் வாக­னத்­திற்குள் வைத்தும் காட்டுப் பகு­தி­க­ளுக்கு அழைத்துச் சென்றும் இச் சிறு­மிகள் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளனர்.

அது­மாத்­தி­ர­மன்றி சூம் இணைப்பின் வழி­யாக மாண­வி­களைத் தொடர்பு கொண்டு அவர்­க­ளது ஆடை­களை களை­யு­மாறு கூறி அவற்றை வீடியோ பதிவு செய்தும் இந்த ஆசி­ரியர் துஷ்­பி­ர­யோகம் செய்­துள்ளார். குறித்த வீடியோ பதி­வு­களை கண்­ணுற்ற ஆசி­ரி­யரின் மனைவி செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­யவே சம்­பந்­தப்­பட்ட ஆசி­ரியர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். பாதிக்­கப்­பட்ட சிறு­மி­களில் ஒருவர் களுத்­துறை பிர­தேச பொலிஸ் அதி­காரி ஒரு­வரின் மகள் என்றும் விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ளது.

2020 ஜூலை முதல் 2022 ஜூலை வரை 17 சிறுவர் சிறு­மியர் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்டு கொல்­லப்­பட்­டுள்­ள­தாக சிறு­வர்­களைப் பாது­காப்­ப­தற்­கான அணியின் ஸ்தாபகர் மிலானி சல்­பி­டி­கோ­ரள தெரி­வித்­துள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளன. இது மிகவும் பார­தூ­ர­மான எண்­ணிக்­கை­யாகும்.
இவ்­வா­றான சம்­ப­வங்கள் நமது இளம் சமு­தா­யத்தின் பாது­காப்பு குறித்த கவ­லையைத் தோற்­று­விப்­ப­ன­வாக உள்­ளன. ஹோட்டல் விவ­கா­ரத்தில் உயி­ரி­ழந்த சிறுமி தன்சல் நிகழ்­வுக்குச் செல்­வ­தாகக் கூறியே வீட்­டி­லி­ருந்து வெளி­யே­றி­யுள்ளார். அவ­ரது நண்பி ஒரு­வரே பல­வந்­தப்­ப­டுத்தி அழைத்துச் சென்­றுள்ளார். மாண­விகள் துஷ்­பி­ர­யோக விவ­கா­ரத்தில் சம்­பந்­தப்­பட்­டவர் அவர்­க­ளுக்கு கற்­பித்த ஆசி­ரியர். கெலி­ஓ­யாவில் யுவதி கொல்­லப்­பட்ட விட­யத்தில் சம்­பந்­தப்­பட்ட இளைஞர் போதைக்கு அடி­மை­யா­னவர் எனக் கூறப்­ப­டு­கி­றது.

இவ்­வாறு சமூ­கத்தில் குற்றச் செயல்கள் மலிந்­துள்ள நிலையில் தமது பிள்­ளைகள் ஒவ்­வொ­ரு­வ­ரது பாது­காப்பு குறித்தும் மிகுந்த அவ­தா­னத்­துடன் செயற்­பட வேண்­டி­யது பெற்­றோரின் பொறுப்­பாகும்.

போதைப் பொருள் பாவனை மற்றும் கைய­டக்கத் தொலை­பேசி பாவனை அதி­க­ரிப்பு என்­ப­னவும் இன்று இவ்­வா­றான குற்றச் செயல்கள் அதி­க­ரிப்­ப­தற்கு கார­ண­மாக அமைந்­துள்­ளன. குறிப்­பாக பிள்­ளைகள் சமூக வலைத்­த­ளங்கள் அதிகம் ஊடா­கவே இலக்கு வைக்­கப்­ப­டு­கின்­றனர். களுத்­து­றையில் உயி­ரி­ழந்த மாண­வியை சந்­தேக நபர் டிக் டொக் செயலி ஊடா­கவே முதலில் தொடர்பு கொண்­ட­தா­கவும் தெரிய வந்­தி­ருக்­கி­றது. களுத்­து­றையில் குறித்த ஆசி­ரியர் சிறு­மி­களை சூம் செயலி ஊடாக தொடர்பு கொண்டே அவர்களை வீடியோ எடுத்து மிரட்டி தனது இச்சைக்கு இரையாக்கியுள்ளார்.

இவ்வாறான சம்பவங்களை வெறும் செய்தியாக கடந்து செல்லாது இவற்றிலிருந்து நாம் படிப்பினை பெற வேண்டும். பெற்றோர் தமது பிள்ளைகளின் கையடக்கத் தொலைபேசி மற்றும் சமூக வலைத்தள பாவனை தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசிமாகும். வெளியில் செல்லும்போது அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அவசியமாகும். நமது பிள்ளைகளை நாமே பாதுகாக்க வேண்டும். அப்பொறுப்பை அரசாங்கம் செய்யும், பொலிசார் பார்த்துக் கொள்வார்கள் என நினைப்பது நமது மடமைத்தனமாகும்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.