கல்முனை மாநகர நிதி மோசடி விவகாரம்: விசாரணைக்குழு அறிக்கை கிழக்கு மாகாண பிரதம செயலாளரிடம் கையளிப்பு; நடவடிக்கைகள் தாமதம்

0 204

(றிப்தி அலி)
கல்­முனை மாந­கர சபையில் இடம்­பெற்ற நிதி மோசடி தொடர்பில் விசா­ரணை மேற்­கொண்ட குழுவின் இடைக்­கால அறிக்கை கடந்த திங்­கட்­கி­ழமை கிழக்கு மாகாண பிர­தம செய­லாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்­நா­யக்­க­விடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்ள நிலையில் குற்­ற­மி­ழைத்­த­வர்­க­ளுக்கு எதி­ராக இது­வரை எந்­த­வித நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிதி மோச­டியில் ஈப­டு­பட்­ட­வர்­களின் பெயர் விபரம், அவர்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்ள வேண்­டிய நட­வ­டிக்­கைகள், மோசடி செய்­யப்­பட்ட நிதித் தொகை உள்­ளிட்ட பல விட­யங்கள் குறித்த இடைக்­கால அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கிழக்கு மாகாண கணக்­காய்வுத் திணைக்­க­ளத்தின் பிர­தம உள்­ளக கணக்­காய்­வாளர் எச்.எம்.எம். றசீத் தலை­மை­யி­லான குழு­வி­ன­ரா­லேயே இந்த நிதி மோசடி தொடர்­பான விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது.

மக்­களின் வரிப் பணம் கல்­முனை மாந­கர சபையின் உத்­தி­யோ­கத்­தர்­க­ளினால் கையாடப்பட்டுள்ள விடயம் தற்­போது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில் எந்­த­வித நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­டாமை மக்கள் மத்­தியில் பாரிய சந்­தே­கத்­தினை எழுப்­பி­யுள்­ளது.

இந்த நிதி மோச­டி­யுடன் தொடர்­பு­பட்­டார்கள் என்ற அடிப்­ப­டையில் கல்­முனை மாந­கர சபை­யினால் பணி நீக்கம் செய்­யப்­பட்ட ஏ.ஆர்.எம். முஜாஹித் மற்றும் எம்.எம்.ஏ. நஸீம் ஆகியோர் சந்­தே­கத்தின் பேரில் அம்­பா­றை­யி­லுள்ள விசேட குற்­றப்­புலன் விசா­ரணைப் பிரி­வினால் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இதே­வேளை, கல்­முனை மாந­கர சபையின் பெயரில் 2020.01.01 ஆம் திகதி தொடக்கம் 2023.02.15 ஆம் திகதி வரை­யான 38 மாதங்­க­ளுக்குள் வழங்­கப்­பட்ட சுமார் இரண்டு கோடி ரூபா பெறு­ம­தி­யான 2,709 பற்­றுச்­சீட்­டுகள் உரிய அதி­கா­ரி­களின் எந்­த­வித அனு­ம­தி­யு­மின்றி TaxMan எனும் மென்­பொ­ருளின் ஊடாக இரத்துச் செய்­யப்­பட்­டுள்ள விடயம் விசா­ர­ணை­களின் போது தெரி­ய­வந்­துள்­ளது.

அது மாத்­தி­ர­மல்­லாமல், உள்­ளீடு செய்­யப்­பட்டு இரத்துச் செய்­யப்­பட்ட பற்­றுச்­சீட்­டுக்­களின் 830 தர­வு­களில் வரு­மான வரிக்­கோவை இலக்­கங்கள் அழிக்­கப்­பட்­டுள்­ள­துடன் 892 புதிய வரிக் கோவைகள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.

கல்­முனை மாந­கர சபையில் நிதி மோச­டியில் ஈடு­ப­டு­வ­தற்­காக திட்­ட­மி­டப்­பட்டு TaxMan எனும் இந்த மென்­பொருள் கொள்­வனவு செய்­யப்­பட்­டுள்ள விட­யமும் விசா­ர­ணை­களின் ஊடாக வெளி­யா­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.