ஆட்கடத்தல் கும்பல்களிடம் ஏமாறும் அப்பாவி இலங்கையர்கள்

0 392

இலங்­கை­யி­லி­ருந்து ஓமான் உள்­ளிட்ட மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு வீட்டுப் பணிப் பெண்கள் என்ற போர்­வையில் அழைத்துச் சென்று அங்கு அவர்­களை விபச்­சாரம் உள்­ளிட்ட சட்ட விரோத நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்தி பணம் சம்­பா­திக்கும் கும்பல் ஒன்று தொடர்பில் தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதன் பின்­னா­லுள்ள கும்­பலை கண்­ட­றிந்து சட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க விசா­ரணை குழுக்­களை அனுப்பியுள்­ள­தாக பாது­காப்பு அமைச்சின் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இந்த சட்ட விரோத செயற்­பாட்­டுடன் தொடர்­பு­டைய முகவர் நிறு­வ­னங்கள், தூத­ரக அதி­கா­ரிகள், குடி­வ­ரவு குடி­ய­கல்வு அதி­கா­ரிகள் மற்றும் வெளி­நாட்டு வேலை வாய்ப்பு பணி­யக அதி­கா­ரி­களை அடை­யாளம் கண்டு அவர்­களை சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­தற்­காக இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.

நாட்டில் பொரு­ளா­தார நெருக்­கடி ஏற்­பட்­டதைத் தொடர்ந்து ஆயிரக் கணக்­கானோர் வெளி­நா­டு­க­ளுக்குத் தொழில்­வாய்ப்­பு­களைத் தேடி தினமும் பய­ணித்­த­வண்­ண­முள்­ளனர். இந்த ஆண்டில் கடந்த செப்டம்பர் வ­ரை­யான காலப்­ப­கு­தியில் மாத்­திரம் சுமார் 2 இலட்சம் பேர் இவ்­வாறு வெளி­நாடு சென்­றுள்­ள­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யக தக­வல்கள் கூறு­கின்­றன. இந்த வரு­டத்தில் மாத்­திரம் மொத்­த­மாக 330,000 பேர் வெளி­நா­டு­க­ளுக்கு தொழில்­வாய்ப்­பு­க­ளுக்­காகச் செல்வர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
இவ்­வாறு ஏரா­ள­மானோர் தொழில்­தேடி நாட்டை விட்டு வெளி­யேறும் வாய்ப்பை பயன்­ப­டுத்தி சில திட்­ட­மிட்ட கும்­பல்கள் மனிதக் கடத்­தல்­களில் ஈடு­பட்டு பணம் சம்­பா­திக்கும் சம்­ப­வங்கள் அதி­க­ரித்­துள்­ளன.

வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்த நூற்றுக்கணக்கானோர் கடந்த காலங்களில் இலங்கை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அதேபோன்று, பலர் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று தஞ்சமடைந்திருந்த செய்திகளையும் அறிய முடிகிறது. இந்த நிலையில், இலங்கையிலிருந்து மியன்மாருக்கு விமானம் வழியாகச் சென்று அங்கிருந்து படகு மூலம் கனடாவுக்குச் செல்ல முற்பட்ட 303 பேர் மீட்கப்பட்டு தற்போது வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தலா 20 இலட்சம் ரூபா வரை ஆட்கடத்தல்காரர்களுக்கு செலுத்தியே இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இப் பயணத்திற்காக இங்குள்ள தமது சொத்துக்களை விற்றே பலரும் பணம் செலுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இன்று இலங்கைக்கும் வர முடியாது கனடாவுக்கும் செல்ல முடியாது இடைநடுவே அகப்பட்டுக் கொண்டுள்ளனர். இவ்வாறான ஆட்கடத்தல்காரர்களின் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்காது உரிய அங்கீகரிக்கப்பட்ட வழிகள் ஊடாக தமது பயணத்தை பயணத்தை திட்டமிடுவதே புத்திசாலித்தனமானதாகும்.

இதனிடையே பெண்களை வெளி­நாட்டில் கௌர­வ­மான தொழில்­களை பெற்றுத் தரு­வ­தாக பொய்­களைக் கூறி, அங்கு அழைத்துச் சென்று விபச்­சாரத் தொழிலில் ஈடு­ப­டுத்­து­கின்ற மனி­தா­பி­மா­ன­மற்ற கும்­பலின் செயற்பாடுகளும் கண்­டிக்­கத்­தக்­க­வை­யாகும். இவ்­வா­றான கும்­பல்­களின் பின்னால் அர­சி­யல்­வா­திகள், தூத­ரக அதி­கா­ரிகள், அரச அதி­கா­ரிகள் எனப் பலர் இருப்­பதும் தெரி­ய­வந்­துள்­ளது. இவர்கள் அனை­வ­ருக்கு எதி­ரா­கவும் கடும் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

அது­மாத்­தி­ர­மன்றி, வெளி­நாட்டு அந்­நியச் செலா­வ­ணியைப் பெற்றுக் கொள்­வதை மாத்­திரம் குறி­யாகக் கொண்டு பெண்­களை நினைத்­த­வாறு வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்­பு­வதை அர­சாங்கம் அனு­ம­திக்கக் கூடாது. மாறாக இது தொடர்­பான சட்­டங்­களை இறுக்­க­மாக்க வேண்டும். குறித்த நாடு­களில் உள்ள தூத­ர­கங்கள் மூல­மாக இலங்கைத் தொழி­லா­ளர்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த வேண்டும்.

வெளி­நா­டு­களில் பணி­பு­ரியும் இலங்­கை­யர்கள் மூலம் மில்­லியன் கணக்­கான டொலர்­களை வரு­மா­ன­மீட்டும் இலங்கை, ஒரு போதும் அவர்­க­ளது தொழில் உரி­மைகள், பாது­காப்பு தொடர்பில் கவனம் செலுத்­து­வ­தில்லை. இந் நிலை மாற்­றி­ய­மைக்­கப்­பட வேண்டும்.

இன்று நாடு எதிர்­நோக்­கி­யுள்ள அந்­நியச் செலா­வணி நெருக்­க­டி­யி­லி­ருந்து மீள்­வ­தற்கு இவ்­வா­றான தொழி­லா­ளர்­களின் பங்­க­ளிப்பு அவ­சி­ய­மா­ன­தாகும். அவர்­க­ளது தொழில் பாது­காப்பு உத்­த­ர­வா­தப்­ப­டுத்­தப்­படும் பட்­சத்­தி­லேயே அவர்­களால் வரு­மா­ன­மீட்டி இலங்­கைக்கு பணத்தை அனுப்ப முடியும். மாறாக அவர்கள் இவ்வாறு மனிதக் கடத்தல்காரர்களின் வலையில் சிக்குண்டால் அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படுவதுடன் வெளிநாடு செல்லும் பெண்களின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி ஏற்படும். அது இலங்கையின் வருமானத்தை வெகுவாகப் பாதிக்கும்.

எனவேதான் இந்த ஆட்கடத்தல் கும்பல்களிடமிருந்தும் சர்வதேச விபச்சாரத் தொழில் வலையமைப்பிலிருந்தும் நமது நாட்டின் பெண்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடப்பாடாகும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.