மஹர பள்ளிவாசலுக்கு தாமதியாது மாற்றுக்காணி பெற்றுத்தாருங்கள்

பள்ளிவாசல் நிர்வாகம் ஜனாதிபதிக்கு கடிதம்

0 252

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
மஹர சிறைச்­சாலை வளா­கத்தில் சுமார் 115 வரு­டங்­க­ளுக்கும் மேலாக இயங்கி வந்த பள்­ளி­வா­சலை சிறைச்­சாலை நிர்­வாகம் கையேற்று சிறைச்­சா­லை­களின் ஊழி­யர்­களின் ஓய்வு அறை­யாக மாற்றிக் கொண்­டுள்­ளதால் மூன்றரை வரு­டங்­க­ளாக இப்­ப­குதி முஸ்­லிம்கள் சம­யக்­ க­ட­மை­களை நிறை­வேற்­று­வதில் அசெ­ள­க­ரி­யங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர். எனவே இப்­ப­குதி முஸ்­லிம்­க­ளுக்கு பள்­ளி­வாசல் ஒன்­றினை நிறு­விக்­கொள்­வதற்கு மாற்­றுக்­கா­ணி­யொன்­றினை பெற்­றுத்­தா­ருங்கள் என மஹர சிறைச்­சாலை வளாக பள்­ளி­வாசல் நம்­பிக்கை பொறுப்­பாளர் சபை ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

இப்­பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்­பி­லான முழு­வி­ப­ரங்­களும் அடங்­கிய கடி­த­மொன்று ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அதன் பிர­திகள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ள­ருக்கும், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்­கீ­முக்கும் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பள்­ளி­வா­சலின் நம்­பிக்கை பொறுப்­பாளர் சபையின் தலைவர் ஹபீல் லக்­சான விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.
கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

“நீங்கள் பிர­த­ம­ரா­கவும், மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யா­கவும் இருந்த காலத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலைத் தொடர்ந்து 2019 இல் பள்­ளி­வாசல் மூடப்­பட்டு சிறைச்­சாலை நிர்­வா­கத்­தினால் கையேற்­கப்­பட்டு ஓய்வு அறை­யாக மாற்­றப்­பட்டு புத்தர் சிலை­யும் வைக்­கப்­பட்­டது.

அன்று முதல் இன்­று­வரை நாங்கள் சம்­பந்­தப்­பட்ட அனைத்துத் தரப்­பு­க­ளையும் தொடர்பு கொண்­டுள்ளோம். பாது­காப்பு அமைச்சு, வக்பு சபை, நீதி­ய­மைச்சு, கலா­சார அமைச்சு, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் உட்­பட அனைத்து நிறு­வ­னங்­க­ளையும் தொடர்பு கொண்­டுள்ளோம். ஆனால் எங்­க­ளுக்கு பள்­ளி­வா­ச­லொன்று நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்கு காணி­யொன்று ஒதுக்­கப்­ப­ட­வில்லை.

சமயக் கட­மை­களை நிறை­வேற்­றிக்­கொள்­வ­தற்கு பள்­ளி­வாசல் ஒன்று இப்­ப­கு­தியில் இன்றி நூற்­றுக்­க­ணக்­கான முஸ்­ஸிம்கள் அசெ­ள­க­ரி­யங்­களை எதிர்­கொண்­டுள்­ளனர். பள்­ளி­வாசல் ஒன்­றினை நிர்­மா­ணித்­துக்­கொள்­வ­தற்கு காணி ஒதுக்கித் தரு­வ­தாக கடந்­த­கால அர­சினால் உறு­தி­ய­ளிக்­கப்­பட்டு வரு­டங்கள் கடந்தும் அது நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. எனவே மஹர பகுதி முஸ்­லிம்­க­ளுக்கு சமய கட­மை­களை மேற்­கொள்­வ­தற்கு பள்­ளி­வா­ச­லொன்­றினை நிர்­மா­ணிப்­ப­தற்கு தாம­தி­யாது காணி­யொன்­றினை ஒதுக்­கித்­த­ரு­மாறு வேண்­டு­கிறோம் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சு இதற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்கு முஸ்லிம் சமய கலா­சார பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு அனு­மதி வழங்­கி­யுள்­ள­தை­ய­டுத்து திணைக்­க­ளத்தின் அதி­கா­ரிகள் அண்­மையில் மஹர பகு­திக்கு விஜயம் செய்து காணி­யொன்­றினை இனங்­காணும் முயற்­சி­களில் ஈடு­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

என்­றாலும் இந்­ந­ட­வ­டிக்கைகள் தாம­த­மா­கவே இடம் பெறு­வ­தை­ய­டுத்து பள்­ளி­வாசல் நிர்­வாகம் திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ளரைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தாக பள்­ளி­வாசல் நிர்­வாகம் தெரி­வித்­தது.

அத்­தோடு இவ்­வி­வ­காரம் தொடர்பில் பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பி­னர்கள் ரவூப் ­ஹக்கீம், முஜிபுர் ரஹ்மான் ஆகி­யோரைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்­ட­தா­கவும் பள்­ளி­வாசல் நிர்­வாக சபைத்தலைவர் ஹபீல் லக்ஸான தெரிவித்தார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.