நெளபர், சாஜித் மௌலவிக்கு எதிரான விசாரணை ஜன.10 வரை ஒத்திவைப்பு

0 209

( எம்.எப்.எம்.பஸீர்)
மாவ­னெல்லை பகு­தியில் புத்தர் சிலை தகர்ப்பு விவ­கா­ரத்தில் நெளபர் மெள­லவி மற்றும் சாஜித் மெள­லவி ஆகி­யோ­ருக்கு எதி­ரான விசா­ர­ணைகள் எதிர்­வரும் 2023 ஜன­வரி 10 ஆம் திக­தி­வரை ஒத்தி வைக்­கப்பட்­டுள்­ளது.

நேற்று (9) குறித்த வழக்கு சப்­ர­க­முவ மாகாண மேல் நீதி­மன்றில் (கேகாலை) நீதி­பதி ஜகத் கஹந்­த­க­மகே தலை­மை­யி­லான ஜயகி டி அல்விஸ் மற்றும் இந்­திகா காலிங்­க­வங்ச ஆகிய நீதி­ப­திகள் அடங்­கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதி­மன்ற அமர்வு முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போதே வழக்கின் சாட்சி விசா­ர­ணைகள் இவ்­வாறு ஒத்தி வைக்­கப்பட்­டது.

மாவ­னெல்லை பகு­தியில் புத்தர் சிலை தகர்ப்பு விவ­கா­ரத்தில் கைது செய்­யப்­பட்டு, வழக்குத் தொட­ரப்­பட்ட 16 பிர­தி­வா­தி­களில் மூவரை வழக்­கி­லி­ருந்து விடு­வித்த சப்­ர­க­முவ மாகாண மேல் நீதி­மன்றின் ( கேகாலை) மூவர் கொண்ட நீதி­ப­திகள் அமர்வு ( ட்ரயல் அட் பார்) மேலும் 11 பேருக்கு 7 வரு­டங்­க­ளுக்கு ஒத்தி வைக்­கப்­பட்ட 3 மாத கால சிறைத் தண்­ட­னையை அளித்து கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி தீர்ப்­ப­ளித்­தது. குறித்த வழக்கில் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழான குற்­றச்­சாட்­டுக்­களை விலக்­கிக்­கொள்ள சட்ட மா அதிபர் இணங்­கிய நிலையில், தண்­டனைச் சட்டக் கோவையின் கீழ் முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டினை, விரை­வான விடு­தலை கருதி 11 பிர­தி­வா­திகள் ஏற்­றுக்­கொண்ட நிலை­யி­லேயே அவர்­க­ளுக்கு ஒத்தி வைக்­கப்­பட்ட சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.
எவ்­வா­றா­யினும் குற்­றச்­சாட்­டுக்­களை 8 ஆவது பிர­தி­வா­தி­யாக பெய­ரி­டப்­பட்­டுள்ள அபூ செய்த் எனும் மொஹம்மட் இப்­ராஹீம் நெளபர் மெள­லவி, 9 ஆவது பிர­தி­வா­தி­யான அபூ நஜா எனப்­படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்­லது சாஜித் மெளலவி ஆகியோர் ஏற்றுக்கொள்ள மறுத்த நிலையில், அவ்விருவருக்கு எதிராக மட்டும் குறித்த வழக்கு விசாரணை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தகக்து.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.