இஸ்லாம் பாட நூல்களை 15க்கு முன் பாடசாலைகளுக்கு விநியோகிக்குக

அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சர் உத்தரவு

0 189

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
திருத்­தப்­பட்­ட இஸ்லாம் பாட­நூல்­களை எதிர்­வரும் 15ஆம் திக­திக்கு முன்பு அனைத்து பாட­சா­லை­க­ளுக்கும் விநி­யோ­கிக்­கு­மாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­விட்­டுள்ளார்.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பிர­தி­நி­திகள் அதன் பொதுச்­செ­ய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் தலை­மை­யிலும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரிசாத் பதி­யுதீன் மற்றும் நீதிக்­கான மய்­யத்தின் உறுப்­பி­னர்கள் அதன் தலைவர் சட்­டத்­த­ரணி ஷஹ்பி தலை­மை­யிலும் கல்வி அமைச்சர் சுசில் பிரே­ம­ஜ­யந்­தவைச் சந்­தித்து திருத்­தப்­பட்ட இஸ்லாம் பாட­நூல்­களின் மீள் விநி­யோகம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டினர். இதன்­போதே கல்­வி­ய­மைச்சர் அதி­கா­ரி­க­ளுக்கு இவ்­வாறு உத்­த­ர­விட்டார்.

இக்­க­லந்­து­ரை­யாடல் தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் விடி­வெள்­ளிக்குத் தெரி­விக்­கையில், ‘தரம் 6,7,8,10 மற்றும் 11ஆம் தரங்­க­ளுக்­கு­ரிய இஸ்லாம் பாட­நூல்­களில் அடிப்­ப­டை­வாத வச­னங்கள் உள்­ள­டங்­கி­யுள்­ள­தாக ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவில் வாக்­கு­மூ­ல­ம­ளிக்­கப்­பட்­ட­த­னை­ய­டுத்து அந்­நூல்­களின் விநி­யோகம் உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட்டு கல்வி வெளி­யீட்டுத் திணைக்­க­ளத்­தினால் மீளப் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டன.

இந்­நூல்களில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு மீள் விநி­யோகம் செய்­வதில் நிலவும் தாமதம் குறித்து அமைச்­ச­ருடன் கலந்­து­ரை­யா­டினோம். இதன்­போதே இஸ்லாம் பாட­நூல்­களை எதிர்­வரும் 15ஆம் திக­திக்கு முன்பு அனைத்து பாட­சா­லை­க­ளுக்கும் விநி­யோ­கிக்­கு­மாறு கல்வி அமைச்சர் பணிப்­புரை விடுத்தார்.

அத்­தோடு தற்­போது பாட­நூல்­களில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள திருத்­தங்கள் சரி­யா­னதா? அல்­லது வேறு திருத்­தங்கள் செய்ய வேண்­டுமா? என்­பது தொடர்பில் உலமா சபையின் ஆலோ­ச­னை­களைப் பெற்­றுக்­கொள்­ளு­மாறும் அவர் தெரி­வித்தார். இந்­நி­லையில் எதிர்­வரும் காலங்­களில் இஸ்லாம் பாட­நூல்­களில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்பில் உலமா சபை ஆலோசனை வழங்கும் என்றார்.

இத­னி­டையே நாட்டின் தேசிய கல்விக் கொள்­கை­யினை வகுக்கும் தேசிய கல்வி நிறு­வ­னத்­துக்கு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் ஆலோ­ச­னை­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரே­ம­ஜ­யந்த தீர்­மா­னித்­துள்ளார். ஆசி­ரி­யர்­க­ளுக்­கான வழி­காட்­டல்கள் மற்றும் இஸ்லாம் சம­ய பாடம் தொடர்பில் உலமா சபையின் ஆலோ­ச­னைகள் பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

இதற்­கென அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் 3 அங்­கத்­த­வர்கள் கொண்ட ஆலோ­சனைச் சபை­யொன்­றினை நிய­மிக்­கு­மாறு கல்வி அமைச்சர் உலமா சபையைக் கோரி­யுள்ளார்.

எதிர்­கா­லத்தில் இஸ்­லா­மிய பாட­நூல்­களில் ஏதேனும் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மாயின் உலமா சபையின் ஆலோ­ச­னைகள் கட்­டா­ய­மாகப் பெற்­றுக்­கொள்­ளப்­பட வேண்­டு­மெ­னவும் கல்வி அமைச்சர் அமைச்சின் அதி­கா­ரி­க­ளுக்கு பணிப்­புரை விடுத்­துள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.