கடலுக்குச் சென்று 33 நாட்களாகியும் நான்கு மீனவர்களையும் காணவில்லை

தேடும் நடவடிக்கைகள் மந்த கதியில்; கண்டுபிடித்து தரும்படி உறவினர்கள் கோரிக்கை

0 243

(எச்.எம்.எம்.பர்ஸான்)
மீன்­பி­டிக்க ஆழ்­க­ட­லுக்குச் சென்ற வாழைச்­சேனை பகு­தியைச் சேர்ந்த நான்கு மீன­வர்கள் இது­வரை வீடு திரும்­ப­வில்லை என துறை­முக அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.
வாழைச்­சேனை துறை­மு­கத்­தி­லி­ருந்து கடந்த செப்­டம்பர் மாதம் 25 ஆம் திகதி மீன்­பி­டிக்க ஆழ்­க­ட­லுக்குச் சென்ற தந்தை, மகன், உற­வினர் ஒருவர் உட்­பட நான்கு மீன­வர்­க­ளுமே இவ்­வாறு காணாமல் போயுள்­ள­தாக மீன­வர்­களின் உற­வி­னர்கள் வாழைச்­சேனை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

ஏழு நாட்கள் பயணம் செய்து மீன்­பி­டிக்கச் சென்ற நான்கு மீன­வர்­களும் 31 நாட்கள் கடந்தும் ஒக்­டோபர் 26 ஆம் திகதி வரை வீடு திரும்­ப­வில்லை என்று காணமல் போயுள்ள மீன­வர்­களின் உற­வி­னர்கள் கவலை தெரி­வித்­தனர்.

இதில், வாழைச்­சேனை கோழிக்­கடை வீதியைச் சேர்ந்த உமர்தீன் அசன் அலி (62 வயது) அவ­ரது மகன் அசன் அலி முகாஜித் (34 வயது) மற்றும் அவர்­க­ளது உற­வி­ன­ரான பிறைந்­து­றைச்­சே­னையைச் சேர்ந்த பீ.எம்.இர்ஷாத் (32 வயது) அவர்­க­ளோடு வாழைச்­சேனை ஹைராத் வீதியைச் சேர்ந்த எம்.எச்.எம்.றிஸ்வி (34 வயது) ஆகிய மீன­வர்­களே இவ்­வாறு காணாமல் போயுள்­ளனர்.

35 அடி நீள­மான இயந்­திரப் படகில் சென்ற நான்கு மீன­வர்­களும் ஒரு வாரத்­துக்­கான உண­வு­களை மாத்­தி­ரமே கொண்டு சென்­றுள்­ள­தா­கவும், மீன­வர்­களை தேடும் நட­வ­டிக்­கைகள் மந்த கதியில் இடம்­பெற்று வரு­வ­தா­கவும் மீன­வர்­களின் உற­வி­னர்கள் தெரி­வித்­தனர்.

அத்­துடன், மீன­வர்­களை கண்­டு­பி­டிப்­ப­தற்­காக வேண்டி மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் தாம் முறைப்­பாடு செய்­ய­வுள்­ள­தா­கவும் மீன­வர்­களின் உற­வி­னர்கள் மேலும் தெரி­வித்­தனர்.

இவ்­வாறு காணமால் போயுள்ள தமது உறவுகளை கண்டுபிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உறவினர்கள் வேண்டிக் கொண்டுள்ளனர்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.