முஸ்லிம் சமய திணைக்கள கட்டடத்தில் இந்து, கிறிஸ்தவ விவகார திணைக்களங்கள்

சாவிக்கொத்தை பொறுப்பேற்றது புத்தசாசன, மத விவகார அமைச்சு

0 287

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொழும்பு 10 ரி.பி.ஜாயா மாவத்­தையில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் இயங்கி வரும் கம்­பீ­ர­மான 9 மாடி கட்­டிடம் முஸ்லிம் சமூ­கத்­தி­ட­மி­ருந்து கைந­ழுவிப் போகி­றது. கட்­டி­டத்தில் தற்­போது பயன்­பாட்டில் உள்ள மூன்று மாடி­களைத் தவிர்ந்த ஏனைய மாடி­களின் சாவிக்­கொத்து புத்­த­சா­சன மற்றும் மத விவ­கார கலா­சார அமைச்­சினால் கையேற்­கப்­பட்­டுள்­ளது.

பூர­ணப்­ப­டுத்­தப்­ப­டாது, பயன்­பாட்டில் இல்­லாத மாடி­களின் திருத்த வேலைகள் இம்­மாத இறு­தியில் அல்­லது அடுத்த மாதம் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. தற்­போது வாடகை கட்­டி­டங்­களில் இயங்­கி­வரும் இந்­து­மத விவ­கார திணைக்­களம் மற்றும் கிறிஸ்­தவ மத விவ­கார திணைக்­களம் இக்­கட்­டி­டத்­துக்கு இட­மாற்றம் செய்­யப்­ப­ட­வுள்­ளது.

கலா­சார அமைச்சின் தீர்­மா­னத்­தின்­படி 3ஆம் 4ஆம் மாடி­க­ளுக்கு இந்­து­மத விவ­கார திணைக்­க­ளமும், 5ஆம் மாடிக்கு கிறிஸ்­தவ விவ­கார திணைக்­க­ளமும் இட­மாற்றம் செய்­யப்­ப­ட­வுள்­ளது. 6ஆம், 7ஆம், 8ஆம் மாடி­களில் கேட்போர் கூடம் அமைந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

1999 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டார நாயக்­கவின் ஆட்சிக் காலத்தில் கலா­சார அமைச்­ச­ராக இருந்த லக்ஷ்மன் ஜயக்­கொடி சமர்ப்­பித்த அமைச்­ச­ரவைப் பத்­திரம் மூலம் இக்­கட்­டி­டத்­துக்­கான காணி பெற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­துடன் இங்கு முஸ்­லிம்­க­ளுக்­கென்று முஸ்­லிம்கள் சார்­பான அரச நிறு­வ­னங்­களை உள்­வாங்கிக் கொள்­வ­தற்­காக கட்­டி­ட­மொன்று நிர்­மா­ணிக்க உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இக்­கட்­டிடம் வக்பு ஹவுஸ் என்று அழைக்­கப்­படும் எனவும் அப்­போது சந்­தி­ரிகா பண்­டார நாயக்­கவால் தெரி­விக்­கப்­பட்­டது.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்ஸார் கருத்து தெரி­விக்­கையில், ‘இக்­கட்­டிடம் முஸ்லிம் அரச நிறு­வ­னங்கள் அனைத்­தையும் ஒரு குடையின் கீழ் கொண்­டு­வரும் நோக்கில் இஸ்­லா­மிய கட்­டி­டக்­கலை அம்­சங்­க­ளுடன் நிர்­மா­ணிக்­கப்­பட்­ட­தாகும். என்­றாலும் 3 மாடி­களைத் தவிர ஏனைய மாடிகள் பூர­ணப்­ப­டுத்­தப்­ப­டா­மை­யினால் அந்த வாய்ப்பு ஈடே­ற­வில்லை.

இந்து மற்றும் கிறிஸ்­தவ மத விவ­கார திணைக்­க­ளங்கள் வாடகை கட்­டி­டத்தில் இயங்கி வரு­வதால் இக்­கட்­டி­டத்­துக்கு இட­மாற்றம் செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. என்­றாலும் இக்­கட்­டிட பணி­களை பூர்த்தி செய்து இங்கு வக்பு சபை, வக்பு ட்ரிபி­யுனல், காதிகள் மேன்­மு­றை­யீட்டு சபை , ஹஜ் குழு காரி­யா­லயம், அரபுக் கல்­லூரி, அஹ­தியா தலை­மை­யகம் என்­ப­வற்றை இட­மாற்­றலாம். இந்து மற்றும் கிறிஸ்­தவ விவ­கா­ரங்­க­ளுக்­கான திணைக்­க­ளங்­க­ளுக்­கென புதி­தாக கட்­டி­டங்­களை நிர்­மா­ணித்துக் கொள்ள முடியும். அவர்­க­ளிடம் வளங்கள் இருக்­கின்­றன. இதற்கு எம்­மாலும் உத­விகள் செய்ய முடியும். அரபு மற்றும் சர்­வ­தேச நாடு­க­ளி­ட­மி­ருந்து நிதி­யு­தவி பெற்றுக் கொடுக்க முடியும்.

ஏனைய மதங்­க­ளுக்­கான திணைக்­க­ளங்கள் இங்கு இட­மாற்றம் செய்­யப்­பட்டால் வாகனத் தரிப்­பிட இடப்­பற்­றாக்­கு­றையும் ஏற்­படும்.

இந்­நி­லை­மை­யினை கருத்­திற்­கொண்டு முஸ்லிம் அர­சியல் தலைமைகள் கட்சி வேறுபாடுகளை மறந்து இக்கட்டிடத்தை பாதுகாத்து கொள்வதில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தற்போது வாகனத் தரிப்பிடத்திற்கு அடுத்த மேல் மாடி (Upper Floor) முதலாம் மாடி, மற்றும் இரண்டாம் மாடி பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.