வடமாகாண முஸ்லிம்கள் தொடர்பில் கவனம் செலுத்துக

ஐ.நா. பிரதிநிதியிடம் மகஜர் கையளிப்பு

0 299

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 51 ஆவது கூட்­டத்­தொ­டரின் இலங்கை தொடர்­பான இறுதி அறிக்­கையில் இலங்­கையின் வட மாகாண முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் மற்றும் அபி­லா­சைகள் தொடர்­பிலும் கவனம் செலுத்­து­மாறு கோரும் மக­ஜ­ரொன்று ஐ.நா.வின் செய­லா­ள­ருக்கு அனுப்பும் பொருட்டு UNHRC யாழ் அலுவலக பிர­தி­நிதி திரு­மதி. காயத்­தி­ரி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

குறிப்­பிட்ட மகஜர் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை மக்கள் பணி­மனை தவி­சா­ளரும், வடக்கு முஸ்­லிம்­களின் உரி­மை­க­ளுக்­கான அமைப்பின் செய­லா­ள­ரு­மான அஷ்ஷெய்க் பி.எ.எஸ். சுபியான் மற்றும் அமைப்­பாளர் ஏ.சி.எம். கலீல் என்­போ­ரினால் UNHRC யாழ் அலு­வ­ல­கத்தில் கைய­ளிக்­கப்­பட்­டது.

மக­ஜரில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது “தாங்கள் இலங்கை தொடர்­பான அறிக்­கையை சென்ற வாரம் வெளி­யிட்­டி­ருந்­தீர்கள். இவ்­வ­றிக்­கையில் எவ்­வித தவ­று­களும் செய்­யாத ஒரு இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட அப்­பாவி முஸ்லிம் மக்கள் ஆயுத முனையில் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்டு, வரு­டங்கள் பல கடந்தும் தீர்­வுகள் கிட்­டா­துள்­ளனர்.இவர்கள் பற்றி கவனம் செலுத்­தப்­ப­டவில்லை என்­பதே எமது கவ­லை­யாகும்.

மறக்­கப்­பட்ட சமூ­க­மாக இருக்கும் இலங்­கையின் வட­மா­காண முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்க்க தாங்கள் இக்­கூட்­டத்­தொ­டரில் கவனம் செலுத்தி இறுதி அறிக்­கையில் உள்­வாங்க சர்­வ­தே­சத்தின் கவ­னத்தை எங்கள் பக்கம் திருப்ப ஆத­ரவு தாருங்கள். இது தொடர்பில் இலங்கை அர­சுக்கும் அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்­கு­மாறு தாங்­களை வேண்­டிக்­கொள்­கிறோம்.

வட­ மா­கா­ணத்தில் பாரம்­ப­ரி­ய­மாக வாழ்ந்து வந்த முஸ்­லிம்கள் ஆயு­த­மு­னையில் வெளி­யேற்­றப்­பட்­டனர். அவர்கள் தமது அசையும், அசை­யாத சொத்­துக்­களை பறி­கொ­டுக்க வேண்­டி­யேற்­பட்­டது. 2 மணி நேரத்தில் இனச்­சுத்­தி­க­ரிப்பு நிறை­வே­றி­யது.
32 வரு­டங்கள் கடந்து விட்ட நிலையில் வட­மா­காண முஸ்­லிம்­களின் மீள் குடி­யேற்றம் இன்னும் பூர­ணப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் மீளக்­கு­டி­யேற்றம் தொடர்பில் ஒரு நிலை­யான கொள்கை, திட்­ட­மிடல், தொடர் வேலைத்­திட்டம் எதுவும் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. தற்­போது 2 இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட சனத்­தொ­கையைக் கொண்­டுள்ள இம்­மக்கள் ஆத­ர­வற்­ற­வர்­க­ளாக ஆக்கப்பட்டுள்ளனர்.
இம்மக்களிடையே இவ்இடைப்பட்ட கால கட்டத்தில் புதிய இரண்டு தலைமுறையினர் உருவாகியுள்ளனர். தீர்வு என்று வரும்போது இவர்களுக்கும் சேர்த்தே தீர்வு காணப்படவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.