சோகத்தில் நாங்கல்ல!

0 6,922

எஸ்.என்.எம்.சுஹைல்

நாங்­கல்­லவைச் சேர்ந்த, மனாசிக் கான், மிப்ளால், சப்ரான், அல்தாப் மற்றும் ரஹ்மி ஆகிய ஐவரும் சிறு­ப­ராயம் முதல் நண்­பர்­களே. தற்­போது 27 வய­தாகும் சம­வ­ய­து­டைய இவர்கள், நாங்­கல்ல முஸ்லிம் வித்­தி­யா­ல­யத்தில் ஒன்­றாக படித்து பாட­சாலை காலம் முடி­வ­டைந்து 8 வரு­டங்கள் கடந்­தி­ருப்­பினும் அன்று போல் இன்றும் ஒன்­றா­கவே தோழமை பாராட்டி வந்­த­வர்கள். ஊரில் எல்­லோ­ரு­டனும் இயல்­பாக பழகும் இவர்கள் அனை­வ­ரது அன்­பையும் பெற்­றி­ருந்­தனர் என்­பதை கடந்த 9 ஆம் திகதி இரவு கேகாலை, ரங்­வெல்ல பகு­தியில் இடம்­பெற்ற வீதி விபத்தின் பின்னர் தெளி­வாக புரிந்து கொள்ள முடிந்­தது.

9 ஆம் திகதி இரவு இஷாத் தொழு­கையை பள்­ளி­வா­சலில் நிறை­வேற்­றி­விட்டு, நாங்­கல்ல பத்­தி­ரிகை விற்­பனை முகவர் நிலை­யத்­திற்­க­ருகே ஒன்றாய் கூடி கதைத்துக் கொண்­டி­ருந்­ததை அல்­தாபின் தந்தை கண்­டி­ருக்­கிறார். பின்னர் அங்­கி­ருந்து இவர்கள் கேகா­லைக்கு அல்­லது மாவ­னெல்­லைக்கு சென்று உண­வ­ருந்­தி­விட்டு மீண்டும் வீட்­டுக்கு திரும்பிக் கொண்­டிருக்­கை­யி­லேயே இந்த கோர விபத்து ஏற்­பட்­டுள்­ளது.

சம்­பவம்
கடந்த 9 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை இரவு கொழும்பு – கண்டி பிர­தான வீதி, கேகாலை – ரங்­வல பகு­தியில் மூன்று மோட்டார் சைக்­கிள்கள் மீது வேன் ஒன்று மோதி­யதில் இந்த கோர விபத்து பதி­வா­னது.

கொழும்­பி­லி­ருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்­டி­ருந்த வேன் ஒன்று மறு திசையில் இந் நண்பர்கள் பயணித்த மூன்று மோட்டார் சைக்­கிள்கள் மீது மோதி­ய­தி­லேயே இக் கோர விபத்து ஏற்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரிய வரு­கி­றது.
மோட்டார் சைக்­கிள்கள் மூன்றில் ஐவர் பய­ணித்­தனர். மொஹமட் மல்கான் மொஹமட் மனாசிக் கான், மொஹமட் மிஹ்லார் மொஹமட் மிப்ளால், மொஹமட் நிஸார் மொஹமட் சப்ரான், மொஹமட் ஹிலுர் மொஹமட் அல்தாப் மற்றும் ரஹ்மான் மொஹமட் மொஹமட் ரஹ்மி ஆகி­யோரே இவ்­வாறு மோட்டார் சைக்­கிளில் பய­ணித்த போது விபத்­துக்­குள்­ளா­கினர்.

அதி வேகத்­துடன் வந்த வேன் குறிப்­பிட்ட மூன்று மோட்டார் சைக்­கிள்­க­ளையும் மோதி­யதில் இரண்டு மோட்டார் சைக்­கிள்கள் வேனுடன் இழுத்துச் செல்­லப்­பட்டு மதி­லொன்­றுடன் மோதி­யுள்­ளன. மற்­று­மொரு மோட்டார் சைக்­கி­ளா­னது வேன் மோதி­யதில் தூரத்தே வீசப்­பட்­டுள்­ளது.

பலத்த காயங்­க­ளுக்கு உள்­ளான ஐவ­ரையும் கேகாலை போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்த போதிலும் மனாசிக் கான், மிப்ளால், ரஹ்மி ஆகிய மூவரும் அன்­றைய தினமே உயி­ரி­ழந்­துள்­ளனர். மேலும் இருவர் பலத்த காயங்­க­ளுக்கு உள்­ளான நிலையில் அவ­சர சிகிச்சை பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு வந்­தனர். இந்­நி­லையில், அல்தாப், நேற்று முன்­தினம் செவ்­வா­யன்று சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்தார். சப்ரான் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரு­கின்றார்.

இத­னி­டையே இவ் விபத்­துக்குக் கார­ண­மான வேன் சாரதி 20 வய­து­டை­யவர் எனக் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­துடன் அவர் கேகாலை பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

மனாசிக் கான்
நாங்­கல்ல வீர­கே­சரி, விடி­வெள்ளி பத்­தி­ரிகை விற்­பனை முக­வ­ரான மொஹமட் மல்கான் மொஹமட் மனாசிக் கான் மருந்­த­கத்­தையும் நடத்தி வந்தவர். தந்தை மொஹமட் மல்கான் உயி­ரி­ழந்த பின்னர் பத்­தி­ரிகை விற்­பனை முகவர் நிலை­யத்தை நடத்தி வரும் மனாசிக் கான் வீட்­டுக்கு ஏக புதல்­வ­ராவார். தாய் வழி குடும்­பத்தில் இவர் மாத்­தி­ரமே ஒரே­யொரு பேரப்­பிள்­ளையும் ஆவார். மிகவும் செல்­ல­மாக வளர்ந்த இவர் திரு­ம­ண­மாகி கிட்­டத்­தட்ட ஒரு வரு­ட­மே­யாகும். மனைவி நிறை­மாதக் கர்ப்பிணி­யாக உள்ளார்.

“ஊரில் எல்­லோ­ரு­டனும் நட்­பாக பழகும் மனாசிக் கான், குடும்­பத்தின் ஒரே வாரிசு என்­பதால் எமக்கு இந்த இழப்பை ஒருபோதும் ஈடுசெய்ய முடி­யாது” என்று அவ­ரது சாச்சா மொஹமட் சாக்கிர் கூறினார்.

அத்­தோடு, இவர் மார்க்க விட­யங்­க­ளுக்­காக அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்டு வந்தார் என ஹட்டன் மத்­ர­ஸாவின் அதிபர் முஸம்மில் மௌலவி கூறினார். மத்­ர­சா­விற்­காக மாதாந்தம் ஒரு தொகை பணத்தை தொடர்ச்­சி­யாக சதகா செய்து வந்­த­தையும் அவர் ஞாபகப்படுத்­தினார். மார்க்கக் கல்­விக்­காக மறை­மு­க­மாக அவர் செய்­து­வந்த உதவி முன்­மா­தி­ரி­யான செயல் என்றார்.

மிப்ளால்
மொஹமட் மிஹ்லார் மொஹமட் மிப்ளால் புறக்­கோட்டை அமானா தக்­காபுல் காப்­பு­றுதி நிறு­வ­னத்தில் பணி­யாற்­றினார். வீட்டில் மூத்த பிள்­ளை­யான இவ­ருக்கு ஒரே­யொரு சகோ­தரி இருக்­கிறார். இவரும் திரு­மணம் முடித்து சில வரு­டங்­க­ளே­யா­கின்­றன. இவர் மிகவும் அமை­தி­யா­ன­, மென்­மை­யா­ன சுபாவமுடையவர் என அவ­ருக்கு நெருக்­க­மா­ன­வர்கள் கூறு­கின்­றனர்.

“ஐந்து நண்­பர்­களும் மிகவும் நெருக்­க­மா­ன­வர்கள். இவர்கள் பிர­தே­சத்தில் மதிக்­கப்­பட்டு வரும் இளை­ஞர்­க­ளாக திகழ்ந்­த­தோடு மார்க்க விட­யங்­க­ளிலும் ஈடு­பாடு காட்டி வந்­தனர். முன்­மா­தி­ரி­யான இளை­ஞர்­க­ளாக செயற்­பட்டு வந்த இவர்­களை அல்லாஹ் நேரகாலத்­தோடு தன் பக்கம் அழைத்­துக்­கொண்டான்” என தந்தை மிஹ்லார் கவ­லை­யுடன் தெரி­வித்தார்.

ரஹ்மி
ரஹ்மான் முஹம்­மது ரஹ்மி தொழிற்­சா­லை­யொன்றில் வேலை செய்து வரு­கின்றார். திரு­ம­ண­மாகி ஒன்­றரை வரு­டங்­க­ளா­கின்ற நிலையில் 27 நாட்­க­ளே­யான குழந்­தையின் தந்­தையே ரஹ்மி.

இவர் ஏற்­க­னவே மாலை­தீவில் தொழில் செய்­து­விட்டு நாட்­டுக்கு திரும்பி இங்கு தொழிலில் ஈடு­பட்டு வந்­த­தாக அவ­ரது ஒரே­யொரு சகோ­த­ர­ரான முஹம்­மது ரமீஸ் கூறினார்.

அத்­தோடு, விபத்­துக்­குள்­ளா­ன­போது ரஹ்­மியின் கைய­டக்கத் தொலை­பேசி தொலைந்­து­விட்­ட­தா­கவும் குறித்த தொலை­பே­சியில் முக்­கி­ய­மான ஆவ­ணங்கள் இருப்­ப­தா­கவும் ரமீஸ் தெரி­வித்தார்.

 

அல்தாப்
தந்தை மொஹமட் ஹில்­ருக்கு பக்­க­ப­ல­மாக நாங்­கல்­லயில் வாசனை திர­வி­யங்கள் கொள்­முதல் வியா­பா­ரத்தில் ஈடு­பட்டு வந்­தவர் தான் மொஹமட் ஹில்ர் மொஹமட் அல்தாப். நாங்­கல்­லையில் வர்த்­தக நிலை­யத்தை நடத்தி வரும் இவர் ஐந்து சகோ­த­ரர்­க­ளுடன் பிறந்தார்.

வீட்டில் மூன்­றா­வது பிள்­ளை­யான இவர் இன்னும் திரு­ம­ண­மா­கா­தவர். தந்தை பள்­ளி­வா­ச­லுக்­காக தனது காணியை வக்பு செய்­த­துபோல் மகனும் மார்க்க மற்றும் பொது வேலை­க­ளுக்­காக பல்­வேறு உத­வி­களை செய்­து­வந்தார் என்றார் அல்­தாபின் மூத்த சகோ­தரர் இக்ராம் மதனி.

விபத்தில் சிக்­கிய அல்தாப் அதி­தீ­விர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நான்கு தினங்­க­ளுக்கு பின்னர் கடந்த செவ்­வா­யன்று உயி­ரி­ழந்தார்.

 

சிகிச்சை பெற்று வரும் சப்ரான்
நாங்­கல்­லயில் முச்­சக்­க­ர­வண்டி உதி­ரிப்­பா­கங்கள் விற்­பனை செய்யும் நிலை­யத்தை நடத்தி வரு­பவர் மொஹமட் நிஸார் மொஹமட் சப்ரான். மூன்று பேருடன் பிறந்த இவர் வீட்டில் மூன்­றா­மவர். 2019 ஆம் ஆண்டு திரு­மண பந்­தத்தில் இணைந்த சப்ரான் ஒரு பிள்­ளையின் தந்­தை­யாவார்.

விபத்தில் சிக்­கிய இவர் கேகாலை போதனா வைத்­தி­ய­சா­லையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்டு தொடர்ந்தும் சிகிச்­சை­ பெற்று வரு­கின்றார்.

விபத்தில் சிக்­கி­ய­வுடன் வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் செல்­லப்­பட்­ட­போது சாதா­ரண சிகிச்சை பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தார். எனினும், பின்னர் உடல்­நிலை மோச­ம­டைந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரி­வுக்கு மாற்­றப்­பட்­டுள்ளார்.

“சப்­ரானின் உடல் நிலை தொடர்ந்தும் மோச­மா­ன­தா­கவே இருக்­கி­றது. உள்­கா­யங்கள் இருப்­ப­தா­கவே தெரி­கி­றது. இவ­ருக்­காக துஆச் செய்­யுங்கள்” என்றார் அவரின் மாமா முஹம்­மது ஜெஸீல்.

நாங்­கல்­லவைச் சேர்ந்த மனாசிக் கான், மிப்லால், சப்ரான், அல்தாப் மற்றும் ரஹ்­மி­யுடன் மேலும் இரு நண்­பர்கள் இந்த வட்டத்தில் இருக்­கின்­றனர். இவர்கள் எப்­போதும் ஒன்றாக இருப்பவர்கள். கூட்டாக இணைந்து பல நல்ல காரியங்களை மேற்கொள்பவர்கள். சமூக சேவைகளுக்கு முன்னின்று செயற்படுபவர்கள். குறித்த விபத்துச் சம்பவத்தையடுத்து நாங்கல்ல மக்கள் மட்டுமல்ல செய்தியறிந்த அனைவரும் பெருந் துயருக்கு ஆளானார்கள். இந்த விபத்தினால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள நாங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பலரும் கடந்த சில தினங்களாகவே நோன்பிருந்து இந்த இளைஞர்களுக்காக துஆச் செய்து வருகின்றனர். நாமும் இவர்களுக்காக பிரார்த்திப்போம். திடீர் விபத்துகளிலிருந்து பாதுகாப்பு வேண்டுவோம். அத்துடன் அனுபவமற்றவர்களின் கைகளில் வாகனங்களை ஒப்படைப்பதையும் தவிர்த்துக் கொள்வோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.