முஸ்லிம் தலைவர்களின் வங்குரோத்து அரசியல்

0 493

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

இலங்­கையின் இன்­றைய நிலையோ பரி­தா­பத்­துக்­கு­ரி­யது. இந்த நாட்டின் வர­லாற்றில் என்­றுமே ஏற்­ப­டாத ஒரு பொரு­ளா­தார நெருக்­க­டிக்குள் சிக்­கிக்­கொண்டு மற்ற நாடு­க­ளிடம் பிச்சைப் பாத்­திரம் ஏந்­து­கிற அள­வுக்கு சீர­ழிந்­துள்­ளது. அதைப்­பற்றி பல உள்­நாட்டு, வெளி­நாட்டு அர­சியல் அவ­தா­னி­களும் விமர்­ச­கர்­களும் பொரு­ளி­ய­லா­ளர்­களும் அறி­வா­ளி­களும் தமது கருத்­துக்­களை விப­ர­மாகப் பதிவு செய்­துள்­ளனர். எனவே அவற்றை மேலும் இங்கே விப­ரிக்­காது, இந்த நிலையைப் போக்­கு­வ­தற்கு இலங்­கையின் முஸ்லிம் தலை­வர்கள் இது­வரை என்ன ஆலோ­ச­னை­களை அர­சாங்­கத்­திடம் சமர்ப்­பித்­துள்­ளனர் என்ற ஒரே கேள்­வி­யை­மட்டும் முன்­வைத்து அதன் முக்­கி­யத்­து­வத்­தைப்­பற்­றிய சில கருத்­துக்­களை வாச­கர்­க­ளுடன் பகிர்ந்­து­கொள்­வதே இக்­கட்­டு­ரையின் நோக்கம். இதை காலத்தின் கட்­டாயம் எனவும் கரு­து­கிறேன்.

புதிய ஜனாதிபதியின் அமைச்சர் சபைக்குள் எவ்வாறு நுழையலாம் என்ற சிந்தனையில் முஸ்லிம் பிரபலங்கள் மூழ்கியுள்ளார்களே ஒழிய நாடாளுமன்றத்துக்கு வெளியே முன்வைக்கப்படுகின்ற மாற்றுக் கருத்துக் களில் கவனம் செலுத்துபவர்களாக அவர்கள் காணப் படாதது முஸ்லிம் சமூகத்துக்கே ஆபத்தானது என்பதை அவர்கள் உணர்வார்களா?

இலங்­கையில் நாடா­ளு­மன்ற ஜன­நா­யக ஆட்­சி­முறை ஆரம்­ப­மா­கிய காலம் தொடக்கம் இன்­று­வரை எத்­த­னையோ முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் மக்கள் பிர­தி­நி­தி­க­ளாக நாடா­ளு­மன்­றத்­துக்குள் நுழைந்து அமைச்­சர்­க­ளா­கவும் பிரதி அமைச்­சர்­க­ளா­கவும் கட­மை­யாற்­றி­யுள்­ளனர். அவர்­களுள் ஒரு சிலர் முஸ்லிம் சமூ­கத்தின் ஒப்­பற்ற தலை­வர்­க­ளா­கவும் உயர்ந்து இன்றும் சிறப்­பிக்­கப்­ப­டு­கின்­றனர். ஆனால், கடந்த ஏழு தசாப்­தங்­க­ளாக எத்­த­னையோ பிரச்­சி­னைகள் தனிப்­பட்ட சமூ­கங்­க­ளுக்கும் அப்பால் நாட­ளா­விய ரீதியில் தேசியப் பிரச்­சி­னை­க­ளாக எழுந்­துள்­ளன. அவற்றுள் நாட்டின் இைற­மையும் அதன் பாது­காப்பும், பொரு­ளா­தாரம், பயங்­க­ர­வாதம், என்­ப­னவும் அடங்கும். அவ்­வா­றான பிரச்­சி­னைகள் நாடா­ளு­மன்­றத்தில் விவா­திக்­கப்­ப­டும்­போது அந்த விவா­தங்­களில் முஸ்லிம் பிர­தி­நி­தி­களின் பங்­க­ளிப்பு மிகவும் குறை­வா­னது என்ற உண்­மையை அர­சியல் அவ­தா­னிகள் உணர்வர்.

இந்த நிலைக்கு இரண்டு கார­ணங்­களை முன்­வைக்­கலாம். ஒன்று, நாடா­ளு­மன்­றத்­துக்குள் முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தி­க­ளாக அனுப்­பப்­பட்­ட­வர்­களின் தகைமை. இரண்­டா­வது, உலக விவ­கா­ரங்­க­ளைப்­பற்­றிய மத ­ரீ­தி­யான சிந்­தனை.

1950கள் தொடக்கம் நாடா­ளு­மன்­றத்­துக்குள் நுழைந்த முஸ்லிம் பிர­தி­நி­தி­களுள் பெரும்­பா­லானோர் ஒன்றில் செல்­வந்­தர்­க­ளாக இருந்­தனர், அல்­லது மதக்­க­ட­மை­களை தவ­றா­து­பேணி சமூ­கத்தின் நற்­பெ­யரைப் பெற்­ற­வர்­க­ளாக இருந்­தனர். அதனால் அவர்­களின் கல்­வித்­த­கை­மையோ விவா­தத்­தி­றனோ ஒரு பொருட்­டாகக் கரு­தப்­ப­ட­வில்லை. பொது­வா­கவே உல­கியல் கல்­வியை துச்­ச­மாக மதித்த அன்­றைய சமூ­கச் ­சூ­ழலில் அந்­தத்­த­கை­மை­கள் முஸ்லிம் தலை­வர்­க­ளிடம் குறை­வாக இருந்­ததில் வியப்­பில்லை. ஆகவே அவர்­கள் நாடா­ளு­மன்ற விவா­தங்­களில் ஆர்வம் காட்­டா­தி­ருந்­தாலும் ஆச்­ச­ரி­ய­மில்லை.

மத ரீதி­யான ஒரு கார­ணமும் இந்த நிலைக்கு ஒரு கார­ணமாய் அமைந்­தது. இக­லோக வாழ்வு அனிச்­சயம், பர­லோக வாழ்வே நிச்­சயம் என்ற அடிப்­ப­டையில் மத­போ­த­னைகள் அமைந்­ததால் உலக விவ­கா­ரங்­க­ளைப்­பற்­றிய சிந்­த­னை­க­ளுக்கு மதமே ஒரு தடை­யாக அமைந்­தது. தொழில், குடும்பம், பள்­ளி­வாசல் ஆகிய மூன்­றையும் சுற்­றியே ஒரு முஸ்­லிமின் வாழ்வு சுழன்­றோ­டி­யதால் அர­சியல், நாடு, பொரு­ளா­தாரம், இன­நல்­லு­றவு, கலை, கலா­சாரம் என்­ப­ன­வெல்லாம் பர­லோக வாழ்­வுக்கு இடைஞ்­சல்கள் என்ற ஒரு அபிப்­பி­ரா­யத்தை மார்க்க உப­தே­சிகள் மக்­க­ளி­டையே விதைத்­தனர். அதனால் இராமன் ஆண்­டா­லென்ன இரா­வணன் ஆண்­டா­லென்ன என்ற ஒரு போக்கு முஸ்லிம் சமூ­கத்தை ஆட்­கொண்­டி­ருந்­தது. ஒரு சந்­தர்ப்­பத்தில் காலஞ்­சென்ற கலா­நிதி கொல்வின் ஆர் டி சில்வா முஸ்­லிம்­க­ளுக்கும் இந்த நாட்­டுக்கும் இடை­யே­யுள்ள உற­வைப்­பற்றிப் பேசும்­போது அது மாட்­டுக்கும் புல்­லுக்கும் உள்ள உறவு என வரு­ணித்தார். இது எவ்­வ­ளவு பார­தூ­ர­மான குற்­றச்­சாட்டு என்­பதை கவிஞர் அப்துல் காதர் லெப்பை அவ­ரது தினக் குறிப்­பு­களில் பதிவு செய்­துள்ளார்.

இந்­தக்­கா­ர­ணங்­களால் அன்­றைய நாடா­ளு­மன்­றத்தில் அர­சாங்­கத்தின் வர­வு­செ­லவு அறிக்­கை­யைப்­பற்­றியோ, மொழிக் கொள்­கை­யைப்­பற்­றியோ, சம­வு­டமைக் கொள்­கை­க­ளைப்­பற்­றியோ விவா­தங்கள் நடை­பெ­றும்­போது முஸ்லிம் பிர­தி­நி­திகள் பெரும்­பாலும் பார்­வை­யா­ளர்­க­ளா­கவே இருந்து வாக்­கெ­டுப்பு நடை­பெற்­ற­போது மட்டும் பெரும்­பான்­மை­யுடன் சேர்ந்து தமது ஆத­ரவை காட்­டு­வ­துடன் அமைதி கண்­டனர்.

துர­திஷ்­ட­வ­ச­மாக அதே போக்கு முஸ்­லிம்­க­ளி­டையே உல­கி­யற்­கல்வி வளர்ச்­சி­ய­டைந்­துள்ள நிலை­யிலும் தமக்­கென அவர்கள் தனிப்­பட்ட அர­சியல் கட்­சி­களை உரு­வாக்­கிய பின்பும் தொடர்­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. இதற்கு மத­ரீ­தி­யான கார­ணத்தை தொடர்ந்தும் முன்­வைக்க முடி­யாது. ஏனெனில், முஸ்­லிம்­க­ளி­டையே இப்­போது வளர்ச்­சி­பெற்­றுள்ள ஆண் பெண் இணைந்த ஒரு புத்­தி­ஜீவி வர்க்கம் உலக வாழ்வில் மற்ற இனங்­க­ளுடன் போட்­டி­போட்டு முன்­னே­று­வதில் ஆர்வம் காட்­டு­கின்­றனர். அதில் வெற்­றியும் ஈட்­டு­கின்­றனர். ஆகவே அவர்­களின் முயற்­சிக்கும் வெற்­றிக்கும் தடை­க­ளாக விளங்கும் எந்தப் போத­னை­க­ளையோ அவற்றின் போத­கர்­க­ளையோ உதா­சீ­னஞ்­செய்ய அவர்கள் தயங்­கு­வ­தில்லை. சுருக்­க­மாகக் கூறு­வ­தாயின் மதத்தின் செல்­வாக்கு வலு­வி­ழந்து வரு­கின்­றது. இது பூகோள ரீதி­யான ஓர் உண்மை.

ஆனால் முஸ்லிம் அர­சியல் தலை­மைத்­து­வமோ இன்னும் முஸ்­லிம்­களின் நிலை­பற்­றி நாடா­ளு­மன்­றத்­துக்குள் ஓயாது ஒப்­பாரி வைப்­ப­வர்­க­ளாக இருக்­கி­றார்­களே ஒழிய நாட்­டைப்­பற்­றியோ அதன் வளர்ச்­சி­பற்­றியோ ஆக்­க­பூர்­வ­மான திட்­டங்­க­ளையோ கருத்­துக்­க­ளையோ முன்­வை­க்கக்­கூ­டிய திற­மை­யற்­ற­வர்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றனர். கல்வித் தகைமை அவர்­க­ளிடம் இருந்­தாலும் அவர்­க­ளது புலன் வேறு­தி­சையில் செலுத்­தப்­ப­டு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. அது என்ன திசை? அதனால் முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்கும் பிரச்­சினை என்ன?

சுதந்­திர இலங்­கையின் வர­லாற்றில் நெற்றி வியர்வை நிலத்திற் சிந்­தாது சொற்ப காலத்­துக்குள் செல்­வந்­த­ரா­கக்­கூ­டிய ஒரே­யொரு தொழில் நாடா­ளு­மன்றப் பிர­தி­நி­தித்­து­வம்தான் என்ற அள­வுக்கு அர­சியல் ஒரு வியா­பா­ர­மாக மாறி­யுள்­ளது. அதற்குப் புற­ன­டை­யாகச் சிலர் இருந்­தாலும் பெரும்­பா­லா­ன­வர்கள் நாடா­ளு­மன்­றத்­துக்குள் பிர­தி­நி­தி­க­ளாக நுழை­வது உழைப்­ப­தற்கே. தேர்தல் என்­பதே ஒரு சூதாட்­ட­மாக மாறி­விட்­டது. கோடிக்­க­ணக்­கான பணத்தை அந்தச் சூதிலே முடக்கி வெற்­றி­பெ­று­வது அந்தப் பணத்தை பன்­ம­டங்­காகப் பெருக்­கு­வ­தற்கே என்­பதை இன்­றைய நாடா­ளு­மன்றப் பிர­தி­நி­திகள் பலரின் வர­லாறு தெளி­வாக்கும். உதா­ர­ண­மாக, ராஜ­பக்­சாக்­களின் கோடிக்­க­ணக்­கான சொத்­துகள் கடின உழைப்­பினால் குவிந்­த­வையா? அதே­போன்று சில முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களின் சொத்­துக்­க­ளெல்லாம் எவ்­வாறு பெரு­கின? ஊழல் மலிந்த இலங்கை அர­சி­யலில் அமைச்­சர்­க­ளா­கவும் ஆளு­னர்­க­ளா­கவும் பத­விகள் வகித்துப் பணம் திரட்­டி­யோரின் பட்­டியல் ஒரு நாள் வெளி­வ­ரத்தான் போகி­றது. அதற்­கான காலமும் விரைந்­து­கொண்­டி­ருக்­கி­றது.

இவ்­வாறு அமைச்­சர்­க­ளா­கியும் ஆளு­னர்­க­ளா­கியும் எப்­ப­டி­யெல்லாம் செல்வம் பெருக்­கலாம் என்ற திசை­யிலே தமது புலனைத் திருப்பும் முஸ்லிம் தலை­வர்கள் ஏன் நாட்டின் பொதுப் பிரச்­சி­னை­க­ளைப்­பற்­றிய விவா­தங்­களில் ஆர்வம் காட்ட வேண்டும்? இன்­று­வரை எந்த ஒரு முஸ்லிம் பிர­தி­நி­தி­யா­வது எந்த ஒரு நாடா­ளு­மன்ற விவாதத்­தி­லா­வது நாட்டு மக்­களின் கவ­னத்தை ஈர்க்­கக்­கூ­டிய வகையில் பொருள் நிறைந்த வாதங்­க­ளுடன் பங்­கு­பற்­றிய வர­லா­றுண்டா? அவ்­வா­றான பங்­கு­பற்­ற­லையும் விவாதத் திற­மை­யையும் இன்­றைய இலங்­கையின் பொரு­ளா­தார நிலைமை பெரிதும் வேண்டி நிற்­கி­றது என்­ப­தையும் வலி­யு­றுத்த வேண்­டி­யுள்­ளது.

நாட்டின் கடன் சுமை, திறை­சே­ரியின் வங்­கு­ரோத்து, பொருள்­களின் பற்­றாக்­குறை, விலை­வா­சி­களின் ஏற்றம், தொழி­லின்மை, உணவுப் பஞ்சம் என்­ற­வாறு பொரு­ளா­தார நெருக்­க­டிகள் தினந்­தோறும் அதி­க­ரித்­துக்­கொண்­டு­செல்ல அவற்றைத் தீர்ப்­ப­தற்கு என்ன பரி­காரம் என்­ப­தைப்­பற்றி முஸ்­லிம்­க­ளல்­லாத அங்­கத்­த­வர்­களே விவா­தி­க்­கும்­போது முஸ்லிம் பிர­தி­நி­திகள் பேசா­ம­டந்­தை­கள்­போன்று இருந்­து­கொண்டு தமது இனத்தின் பிரச்­சி­னையை மட்டும் சதா தூக்­கிப்­பி­டித்துப் பேசு­வது எவ்­வாறு பொருந்தும்? ஒரு குறிப்­பிட்ட முஸ்லிம் பிர­தி­நிதி அண்­மையில் தனது சொத்­து­க­ளுக்கு ஏற்­பட்ட அழி­வு­க­ளைப்­பற்­றியே தனது நாடா­ளு­மன்ற உரையில் ஒப்­பாரி வைத்­த­தையும் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. இது என்ன கேவலம்? கோத்­தா­பய ராஜ­பக்ச ஜனா­தி­ப­தி­யாக இருந்­த­போது முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான எத்­த­னையோ செயற்­பா­டுகள் நடை­பெற்­றன. ஆனால் அவரின் அதி­கார பலத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த முஸ்லிம் பிர­ப­லங்கள் அவர்­களின் ஆத­ர­வுதான் அச்­செ­யற்பா­டு­களுள் ஒன்­றி­ரண்டு கைவி­டப்­படக் கார­ணமாய் இருந்­தன என்று இப்­போது இராகம் பாடு­கி­றார்கள். இது காகம் குந்தப் பனம் பழம் விழுந்த மாதி­ரி­யான கதை. அச்­செ­யற்­பா­டுகள் கைவி­டப்­ப­ட­வேண்­டிய முக்­கிய காரணம் சர்­வ­தேச அழுத்­தங்கள் என்­பதை அவர்கள் மூடி மறைக்­கின்­றனர்.

இன்­றைய முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­க­ளி­டையே பல்­க­லைக்­க­ழக மட்­டத்தில் பல­து­றை­களிற் பாடம் கற்றுத் தேர்ச்­சி­பெற்­ற­வர்கள் இல்­லையா? ஏன் அவர்­களை அழைத்து அவர்­க­ளி­ட­மி­ருந்து ஆலோ­ச­னை­களைப் பெற்று நாடா­ளு­மன்ற விவா­தங்­களில் ஆக்­க­பூர்­வ­மாகப் பங்­கு­கொள்ள முடி­யாது? காரணம் அந்த நாட்டம் இந்தப் பிர­தி­நி­தி­க­ளிடம் இல்லை என்­பதே. இப்­பொ­ழு­து­கூட புதிய ஜனா­தி­ப­தியின் அமைச்சர் சபைக்குள் எவ்­வாறு நுழை­யலாம் என்ற சிந்­த­னையில் முஸ்லிம் பிர­ப­லங்கள் மூழ்­கி­யுள்­ளார்­களே ஒழிய நாடா­ளு­மன்­றத்­துக்கு வெளியே முன்­வைக்­கப்­ப­டு­கின்ற மாற்றுக் கருத்­துக்­களில் கவனம் செலுத்­து­ப­வர்­க­ளாக அவர்கள் காணப்­ப­டா­தது முஸ்லிம் சமூ­கத்­துக்கே ஆபத்­தா­னது என்­பதை அவர்கள் உணர்­வார்­களா? பதவி மோகமும் பணந்­தி­ரட்­டலும் ஆட்­கொண்­டி­ருக்கும் தலை­வர்­க­ளி­ட­மி­ருந்து நாடு எதைத்தான் எதிர்­பார்க்­கலாம்?

இன்று நாட்டில் ஏற்­பட்­டுள்ள பொரு­ளா­தார நெருக்­க­டி­களைத் தீர்ப்­ப­தற்கு சர்­வ­தேச நாணய நிதியின் ஆலோ­ச­னை­க­ளுடன் முன்­வைக்­கப்­படும் தீர்­வுகள் தற்­கா­லி­க­மான நிவா­ர­ணி­யே­யன்றி நிரந்­த­ர­மான பயனைத் தர­மாட்டா என்ற குரல்கள் நாடா­ளு­மன்­றத்­துக்கு வெளி­யே­யி­ருந்து ஒலிக்­கின்­றன. அந்த ஒலியின் ஓர் அலைதான் நான்கு மாதங்­க­ளுக்­குமுன் காலி­மு­கத்­தி­டலில் இளை­ஞர்­களால் தொடக்­கி­வி­டப்­பட்ட அறப்­போ­ராட்டம். அவர்­க­ளது முக்­கிய கோரிக்கை அடிப்­படை மாற்றம் தேவை என்­ப­தாகும். நாட்டின் அர­சியல், சமூக அமைப்­பு­க­ளுக்கு அடித்­த­ள­மாக அமைந்­துள்ள சிந்­தனைச் சட்­ட­கத்தை மாற்­றாமல் பொரு­ளா­தா­ரப் பிணி­க­ளுக்கு நிரந்­தரத் தீர்வு காண­மு­டி­யாது என்­பதே அவர்­களின் கோரிக்­கையின் அடி­நாதம். இந்த அடிப்­படை மாற்­றமே தமிழ் முஸ்லிம் சிறு­பான்மை இனங்­க­ளுக்கும் விமோ­சனம் அளிக்கும் என்­ப­திலே மாற்றுக் கருத்து இருக்க முடி­யாது. அதைப்­பற்றி இதற்கு முன்னும் இப்­பத்­தி­ரி­கையில் வெளி­வந்த கட்­டு­ரைகள் விளக்­கி­யுள்­ளன. இந்தக் கோரிக்­கையை முன்­வைத்தும் அந்த இளை­ஞர்­க­ளுக்கு ஆத­ர­வா­கவும் ஏன் எந்­த­வொரு முஸ்லிம் அர­சியல் தலை­வனும் இது­வரை நாடா­ளு­மன்­றத்­தினுள் குரல் எழுப்­ப­வில்லை? அதுவே இத்­த­லை­வர்­களின் வங்­கு­றோத்து அர­சி­யலை வெளிப்­ப­டுத்­து­கி­றது.

பல்­லி­னங்­க­ளையும் கலா­சா­ரங்­க­ளையும் கொண்ட இந்த நாட்டில் ஓர் இனம்­மட்டும் எண்­ணிக்­கையில் பெரும்­பான்மை என்­ப­தற்­காக நாட்­டையே சொந்தம் கொண்­டாட எண்ணி அந்த நோக்­கத்தைச் சாத்­தி­ய­மாக்க நினைக்கும் சக்­தி­க­ளுக்கு அவை என்ன குற்­றங்­களை இழைத்­தாலும் அவற்றைப் பொருட்­ப­டுத்­தாது அந்தச் சக்­தி­களை ஆட்­சி­செய்ய விட்­டதே இந்த நாடு செய்த மிகப்­பெரும் தவறு. அதுவே இன்­றைய சீர­ழி­வுக்குக் காரணம் என்­பதை உணர்ந்­த­வர்­களே அந்தப் போராட்ட இளை­ஞர்கள். அவர்­க­ளு­டைய விழிப்­பு­ணர்­வையும் அவர்­களின் போராட்­டத்தின் யதார்த்தத்­தையும் உணர்ந்தால் அவர்­களை அைனத்து இயங்கும் அர­சியல் சக்­தி­க­ளுடன் இணை­ப்பதே சிறு­பான்மை இனங்­க­ளுக்கு உள்ள ஒரே வழி என்­பதை ஏற்­கா­ம­லி­ருக்க முடி­யாது. அவ்­வாறு இணை­யக்­கூ­டி­ய­வர்­க­ளையே தலைவர்களாக முஸ்லிம் சமூகம் தெரிந்தெடுக்கவும் வேண்டும்.
அண்­மையில் அறப்­போ­ரா­ளிகள் முஸ்­லிம்­க­ளுக்கு ஓர் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­தனர். அதா­வது மதில்மேல் குந்தி இருக்கும் பூனை­யைப்­போன்று எந்தப் பக்கம் இரை கிடைக்­கி­றதோ அந்­தப்­பக்கம் சாயும் போக்­கினை தவிர்க்க வேண்டும் என்­ப­தாக அந்த எச்­ச­ரிக்கை அமைந்­தி­ருந்­தது. அது உண்­மை­யி­லேயே முஸ்லிம் தலை­வர்­க­ளுக்கு விடுக்­கப்­ப­ட­வேண்­டிய எச்­ச­ரிக்கை. ஆனாலும் அந்தத் தலை­வர்­களை தெரிவுசெய்தது முஸ்லிம் சமூகம்தானே.

எதிர்­வரும் காலம் இலங்­கைக்கு ஒரு சோதனைக் கால­மாக அமை­யப்­போ­கி­றது. ஒன்றில் இன­வாதச் சக்­தி­களே மீண்டும் வலு­வ­டைந்து, சிறு­பான்மை இனங்­களை அ­ந்நிய­ரெனப் பட்­டஞ்­சூட்டி, பொரு­ளா­தார அழி­விற்கும் அந்த இனங்­களே கார­ண­மெனக் குற்­றஞ்­சாட்டி ஓர் இனச்­சுத்­தி­க­ரிப்பு இயக்­கத்­தையே உரு­வாக்­கு­வ­தற்கு அடித்­த­ள­மி­டலாம். சிங்­கள பௌத்த இன­வாத சக்­திகள் மீண்டும் கோத்­தா­ப­யவை நாடா­ளு­மன்­றத்­துக்குள் நுழைத்து அவரைப் பிர­த­ம­ராக்கி ஒரு புதிய நாட­கத்தை அரங்­கேற்ற முனை­கின்­றது. அதற்கு மாற்­ற­மாக, அறப்­போ­ரா­ளி­களின் அடிப்­படை மாற்­றத்தை வர­வேற்கும் முற்­போக்குச் சக்­திகள் ஒன்று திரண்டு அனைத்து இனங்­க­ளையும் உள்­ள­டக்கி சர்வ மக்­க­ளையும் சம­மாக மதிக்கும் ஆட்­சி­யொன்றை நிறுவி உண்­மை­யான ஜன­நா­யக அர­சி­யலை உரு­வாக்­கலாம். இதில் எது உகந்­தது என்­பதை நன்­கு­ணர்ந்து அதற்­கேற்ப முஸ்லிம் சமூகம் தனது அர­சியற் காய்­களை நகர்த்த வேண்டும். அதற்கான தலைவர்களை உருவாக்குவதில் இப்போதிருந்தே களத்தில் இறங்க வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.