முஸ்லிம்களின் கவனத்திற்கு

0 375

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா.

‘முஸ்­லிம்­க­ளுக்கோர் எச்­ச­ரிக்கை’ என்ற தலைப்பில் அறப்­போ­ரா­ளி­களின் காணொளி நறுக்­கொன்றை அண்­மையில் பார்க்க நேர்ந்­தது. அதை அனுப்­பி­வைத்த என் நண்­ப­ருக்கு நன்­றிகள். அதனை வாசித்த முஸ்­லிம்­க­ளுக்கு அது வீணான மனக்­க­வ­லையை ஏற்­ப­டுத்தி இருக்­கு­மென நம்ப இட­முண்டு. அத­னையும் சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தத்தின் குர­லென பல­ரையும் நம்ப வைத்­தி­ருக்­கலாம். அப்­படிக் கரு­து­வது தவறு என்­ப­தையும் அந்த எச்­ச­ரிக்­கையின் யதார்த்­தத்­தைப்­பற்­றிய ஒரு விளக்­கத்­தையும் இக்­கட்­டுரை வாச­கர்­க­ளுடன் பகிர்ந்­து­கொள்ள விரும்­பு­கி­றது.

வர­லாற்றில் ஒரு திருப்­பு­முனை
சுதந்­திர இலங்கை ஒரு வர­லாற்றுத் திருப்­பு­மு­னையை இன்று எட்­டி­யுள்­ளது. கடந்த ஏழு தசாப்­தங்­க­ளாக இந்த நாட்டின் அர­சி­ய­லையும் பொரு­ளா­தா­ரத்­தையும் சமூக வளர்ச்­சி­யையும் வெளி­நாட்டுக் கொள்­கை­க­ளையும் இயக்­கி­வந்த பேரி­ன­வாதச் சிந்­தனைச் சட்­டகம் அதன் உண்­மை­யான பல­ஹீ­னத்தை இப்­போது அம்­ப­லப்­ப­டுத்­தி­யுள்­ளது. இன்று நாட்­டிலே நிலவும் அர­சியல் கொந்­த­ளிப்பும் பொரு­ளா­தார நெருக்­க­டி­களும் சமூக அமை­தி­யின்­மையும் வெளி­நா­டு­களின் அழுத்­தங்­களும் அந்­தச்­சட்­டகம் தந்த விஷப் பரி­சுகள். எனவே அந்தச் சட்­ட­கத்­தையே மேலும் தொட­ர­விட்டு இன்னும் பல நெருக்­க­டி­க­ளுக்கு நாட்­டையும் அதன் மக்­க­ளையும் பலி­யாக்­கு­வதா அல்­லது அதனை கைவிட்டு, புதி­யதோர் முற்­போக்­கான சிந்­தனைச் சட்­ட­கத்தின் அடிப்­ப­டையில் சுதந்­திர இலங்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வதா என்ற கேள்­வியே வர­லாற்றின் திருப்­பு­மு­னை­யாக அமைந்­துள்­ளது. இந்தத் திருப்­பு­மு­னையை தோற்­று­வித்­த­வர்­கள்தான் இன்­றைய அறப்­போ­ரிலே குதித்­துள்ள இளைஞர் படை. இந்த இளைய தலை­மு­றை­யி­ன­ரைப்­பற்­றியும் சிந்­தனைச் சட்­ட­கத்­தைப்­பற்­றியும் கடந்த வாரக் கட்­டுரை விளக்­க­ம­ளித்­தது.

கன்னி வெற்றி
காலி­மு­கத்­தி­டலை மைய­மாக வைத்து பல அர்ப்­ப­ணிப்­பு­களின் மத்­தியில் நிரா­யு­த­பா­ணி­க­ளாகத் திரண்டு இன, மத, மொழி வேறு­பா­டின்றி இன்­றைய நெருக்­க­டி­க­ளுக்குப் பிர­தான கார­ணமாய் அமைந்த அர­சாங்­கத்­தையும் அதன் தலை­வர்­க­ளையும் உடன் பத­வி­வி­லக வேண்­டு­மென்று கடந்த மூன்று மாதங்­க­ளுக்கும் மேலாக ஓயாது போராடி முத­லிலே பிர­த­ம­ரையும் அதன்­பின்னர் ஜனா­தி­ப­தி­யையும் பதவி துறக்கச் செய்­த­மையை போரா­ளி­களின் கன்னி வெற்றி எனக்­க­ரு­தலாம். இந்தப் போராட்­டமும் வெற்­றியும் இலங்­கையின் எதிர்­கால வர­லாற்­றிலே ஒரு காவி­ய­மாகப் பாடப்­படும் என்­ப­திலே சந்­தே­க­மில்லை. ஆனால் அத்­துடன் போராட்டம் நின்று விட­வில்லை. போரா­ளிகள் கோரும் அடிப்­படை மாற்றம் என்­பது ஒரு புதிய சிந்­தனைச் சட்­ட­கத்தின் அடிப்­ப­டையில் அர­சியல் யாப்­பி­னையும், நாட்டின் ஆட்­சி­மு­றை­யையும் பொரு­ளா­தார அமைப்­பையும் மாற்றி அமைக்­கும்­வரை தொடரும். அதற்குத் தடை­யாக விளங்கும் அனைத்­தையும் நீக்­கு­வதே அதன் பிர­தான குறிக்கோள். இந்தப் பின்­ன­ணி­யி­லேதான் முஸ்­லிம்­களை நோக்கி அவர்­கள்­வி­டுத்­துள்ள எச்­ச­ரிக்­கையை எடை­போட வேண்டும்.

மதில்­பூனை முஸ்லிம் பிர­தி­நி­திகள்
இலங்­கையின் ஜன­நா­யக அர­சியல் வர­லாற்­றிலே பாரா­ளு­மன்ற முஸ்லிம் பிர­தி­நி­தி­களுள் ஒரு­சி­ல­ரைத்­த­விர ஏனை­யோ­ரெல்லாம் மதில்மேல் படுத்­தி­ருக்கும் பூனை­போன்று எந்­தப்­பக்கம் பாய்ந்தால் தமக்குப் பத­வியும் பணமும் கிடைக்­குமோ அந்­தப்­பக்கம் பாய்ந்து சுய இலாபம் காண்­ப­வர்­க­ளா­கத்தான் செயற்­பட்டு வந்­துள்­ளனர். அவர்கள் ஒவ்­வொ­ரு­வ­ரைப்­பற்­றியும் விப­ரிப்­ப­தாயின் ஒரு நூலையே எழு­தி­வி­டலாம். 1990களின் பின்னர் முஸ்­லிம்­களின் நலன் தனிப்­பட்ட முஸ்லிம் கட்­சிகள் மூல­மா­கத்தான் கிடைக்கும் என்ற ஒரு புதிய சித்­தாந்­தத்தை உரு­வாக்கி வளர்த்து முன்னர் தனித்­த­னி­யாகப் பாய்ந்­த­வர்கள் அதன் பிறகு கூட்­டா­கவே பாயத்­தொ­டங்­கினர்.

இந்தக் கட்­சி­க­ளைப்­பற்றி ஏற்­க­னவே பல கட்­டு­ரை­களில் விமர்­சிக்­கப்­பட்­டுள்­ளது. அக்­கட்­சி­க­ளுக்குள் இருந்த பிர­தி­நி­தி­களும் அக்­கட்­சி­களின் ஒழுங்­குகள் அவர்­களை சுதந்­தி­ர­மாகப் பாய்­வ­தற்குத் தடை­யாக இருந்­ததைக் கண்டு கட்­சி­களின் கட்­டுப்­பா­டு­க­ளையும் மீறி பாயத்­தொ­டங்­கினர். இந்தப் பாய்ச்­சலே மாஜி ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்­சவை ஒரு சர்­வா­தி­கா­ரி­யாக மாற்றி அந்தச் சர்­வா­தி­கா­ரியின் நாச­காரக் கொள்­கை­க­ளாலே நாடே வங்­கு­றோத்­த­டைந்­ததை இனியும் விப­ரிக்­கவும் வேண்­டுமா? இந்தக் கேவல அர­சியல் முஸ்­லிம்­க­ளுக்குத் தேவை­தானா?

இந்தப் பச்­சோந்தி அர­சி­யலால் முஸ்­லிம்கள் நம்­பிக்கை துரோ­கிகள் என்ற இழி­வுப்­பெ­ய­ருக்கு ஆளா­னது ஒரு­பு­ற­மி­ருக்க, முஸ்லிம் பிர­தி­நி­தி­களின் செப்­ப­டி­வித்­தை­க­ளா­லேதான் நாடு இன்று நாச­மா­கி­யுள்­ளது என்­பதை வளர்ந்­து­வரும் இளம் சமு­தாயம் உணர்ந்­துள்­ளது. எனவே, திருப்பு முனை­யொன்றைச் சந்­தித்­தி­ருக்கும் இலங்­கையின் எதிர்­காலம் முஸ்லிம் பிர­தி­நி­தி­களின் வியா­பார அர­சி­யலால் ஒரு தவ­றான திசைக்குத் திரும்­பி­வி­டுமோ எனப்­ப­யந்த போரா­ளிகள் அந்த எச்­ச­ரிக்­கையை விடுத்­துள்­ளனர். அதிலே முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான இனத்­து­வேஷம் இல்லை. மாறாக, நாட்­டுப்­பற்றே வெளிப்­ப­டு­கின்­றது. இதனை முஸ்லிம் புத்­தி­ஜீ­விகள் மக்­க­ளுக்கு விளக்க வேண்டும். போரா­ளி­களின் எச்­ச­ரிக்­கைக்கு ஒரு பரீட்­சை­யாக அமை­யப்­போ­கி­றது இரண்­டொரு தினங்­களில் நடக்­க­வி­ருக்கும் ஜனா­தி­பதித் தெரிவு. இக்­கட்­டுரை வெளி­வ­ரும்­போது அப்­ப­ரீட்­சையின் முடிவும் தெரிந்­து­விடும்.

ரணிலின் ரகளை
இந்தத் தலைப்­பிலே ஒரு கட்­டுரை ஏற்­க­னவே இப்­பத்­தி­ரி­கையில் வெளி­வந்­துள்­ளது. தோல்­வியின் நாயகன் ரணில் விக்­கி­ர­ம­சிங்ஹ, எந்த ஒரு தேர்தல் தொகு­தி­யிலும் மக்­களால் தெரி­வு­செய்­யப்­ப­டாது, பின்­க­தவால் பாரா­ளு­மன்­றத்­துக்குள் நுழைந்து, அர­சியல் நகர்­வு­களை தந்­தி­ர­மாக அவ­தா­னித்து, ராஜ­பக்­சாக்­களின் பாது­கா­வலன் என்ற நாமத்­தையும் பெற்று, அறப்­போ­ரா­ளி­களின் அய­ராத ஆர்ப்­பாட்­டங்­க­ளினால் மகிந்த ராஜ­பக்ச பிர­தமர் பத­வியைத் துறக்க அந்த வெற்­றி­டத்­துக்கு ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்டு, இப்­போது அவரை நிய­மித்த ஜனா­தி­ப­தியே நாட்­டை­விட்­டோட அந்த இடத்தைக் கைப்­பற்றத் துடிக்கும் ஓர் அர­சியல் நரி. இவரின் அண்­மைக்­கால கைங்­க­ரி­யங்­களில் ஒன்­றி­ரண்டைக் குறிப்­பி­டு­வது பொருத்­த­மாக இருக்கும்.

முத­லா­வ­தாக, 2005–15 மகிந்த ஆட்­சியில் நடந்த ஊழல்­களை விசா­ரித்துத் தண்­டனை வழங்­கு­வ­தாக தேர்தல் பிரச்­சா­ரங்­க­ளிலே வாக்­கு­றுதி வழங்கி, 2015 இல் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் பிர­த­ம­ராகப் பத­வி­யேற்­றபின் அந்த வாக்­கு­று­தி­களை காற்­றிலே பறக்­க­விட்டு ராஜ­பக்­சாக்­களின் பாது­கா­வ­லா­னாக மாறி­யதை நாடு மறக்­க­வில்லை. இரண்­டா­வ­தாக, இவரின் பிர­தமர் ஆட்­சி­யி­லேதான் அன்­றைய மத்­திய வங்­கியின் ஆளுனர் அர்­ஜூன மகேந்­திரன் பண­முறி மோச­டி­செய்து வங்­கி­யையே கொள்­ளை­ய­டிக்க அதனைப் பார்த்­துக்­கொண்­டி­ருந்­த­து­மல்­லாமல் அந்தத் திரு­டனை தப்­பி­யோடச் செய்­ததும் இந்த மாம­னி­தன்­தானே.

மூன்­றா­வ­தாக, முஸ்லிம் தீவி­ர­வாதக் கும்­ப­லொன்று நாச­காரச் செய­லொன்றில் ஈடு­ப­ட­வி­ருப்­ப­தாக வெளி­நாட்டு உள்­நாட்டு இர­க­சியச் செய்­திகள் தனது அரசின் காது­களை எட்­டியும் அதனை ஜனா­தி­ப­தியின் பொறுப்­பி­லே­விட்­டு­விட்டு வாழா­வி­ருந்த ஒரு வேடிக்கை மனிதர். இப்­போது பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்குத் தீர்­வு­காண சர்­வ­தேச நாணய நிதி­யினை அணுகி அதன் உத­வியால் மட்டும் சுமுக நிலை ஏற்­பட்­டு­விடும் என்று கன­வு­காணும் ஒரு கற்­பனைக் கதா­நா­யகன். இவர் ஜனா­தி­ப­தி­யானால் இலங்­கையின் எகிப்து நாட்டு எல்-­சி­சி­யாக இவர் மாறலாம் என்ற ஒரு பயம் அவ­தா­னி­க­ளிடம் குடி­கொண்­டுள்­ளது. எகிப்தின் இன்­றைய ஜனா­தி­பதி எல்-­சிசி சுமார் 800 போராட்ட வாலி­பர்­களை கொன்று குவித்­தபின் வெளி­நாட்டுச் சக்­தி­க­ளி­னதும் உள்­நாட்டுப் பண­மு­த­லை­க­ளி­னதும் ஆத­ர­வுடன் பத­விக்கு வந்­தவர். அவரின் மறு­பி­ற­வி­யாக ரணில் மாறலாம் என்­ப­தற்கு அறி­கு­றிகள் உண்டு.

அறப்­போ­ரா­ளி­களின் எதிரி
ராஜ­பக்­சாக்­களின் பாது­கா­வலன் என்­பது ஒரு புற­மி­ருக்க அறப்­போ­ரா­ளிகள் தேடும் சிந்­தனைச் சட்­டக மாற்­றத்தின் பரம எதிரி இவர் என்­ப­தையும் அப்­போ­ரா­ளிகள் அறிவர். ஆனாலும் பழ­மையின் பாது­கா­வ­ல­னான இவர் காலி­மு­கத்­திடல் உல­கத்தின் கவ­னத்தை ஈர்த்­த­போது அறப்­போ­ரா­ளி­களை தம்­வ­சப்­ப­டுத்தும் முக­மாக காலி­மு­கக்­க­ளத்தை பாது­காப்புத் துறை­யினர் முற்­று­கை­யிடக் கூடா­தென ஒரு அறிக்­கையை விட்டார். அத்­துடன் அவர் அறி­மு­கப்­ப­டுத்­திய வரிக்­கொள்கைள் தேவை­யா­னதும் அதே சமயம் சர்­வ­தேச நாணய நிதியைத் திருப்­திப்­ப­டுத்­து­வ­தா­கவும் அமைய அவற்றை சிந்­த­னைச்­சட்­டக மாற்­றத்தின் ஆரம்பம் என்று அவர் வரு­ணித்­தது அறப்­போ­ரா­ளி­களை ஏமாற்­றவே என்­ப­தையும் அறிவர். அந்த மாற்­றங்கள் யாவும் பழைய சட்­ட­கத்தை பலப்­ப­டுத்த உத­வுமே ஒழிய அதனை மாற்­ற­மாட்­டாது.

ரணிலின் உண்­மை­யான தோற்றம் இப்­போ­துதான் வெளிப்­படத் தொடங்­கி­யுள்­ளது. நடை­மு­றை­யி­லுள்ள அர­சியல் சட்­டத்தை பாது­காக்­கப்­போ­வ­தா­கவும், அறப்­போ­ரா­ளி­களை பாசிஸ்­டுகள் என்று அவர் வரு­ணித்­ததும், அவ­ரு­டைய வீட்டைத் தீக்­கி­ரை­யாக்­கி­ய­வர்­களும் போரா­ளி­களே என்று எந்த ஆதா­ர­மு­மின்றி குற்றஞ் சுமத்­தி­யதும், சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்ட பாது­காப்புத் துறைக்கு கட்­டளை இடு­வ­தாக அறி­வித்­ததும், மேல் மாகா­ணத்தில் ஊர­டங்குச் சட்­டத்தை பிறப்­பித்­ததும், காலி­மு­கத்­தி­டலை ஹெலி­கொப்­டர்­களால் நிறைக்கப் போவ­தாகக் கூறி­யதும் போராட்­டத்தை எப்­ப­டி­யா­வது ஒரு முடி­வுக்குக் கொண்­டு­வந்து போரா­ளி­க­ளையும் சிறைக்குள் தள்­ளவே என்­பது தெளி­வா­கின்­றது. என­வேதான் போரா­ளிகள் அவரின் எதி­ரி­க­ளாக மாறி “கோத்­தாவே போ” என்ற குரல் இப்­போது “ரணிலே போ” என்று கேட்கத் தொடங்­கி­யுள்­ளது. அதன் முடிவை தீர்மானிக்கப்போகிறவர்கள் பாராளுமன்றப் பிரதிநிதிகள்.

முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு எச்சரிக்கை
போரா­ளிகள் விடுத்த எச்­ச­ரிக்கை முஸ்­லிம்­க­ளுக்­கல்ல, அவர்­களை அட­கு­வைத்துப் பிழைக்கும் அவர்­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கே. வரப்­போகும் தெரிவில் முஸ்லிம் பிர­தி­நி­திகள் எடுக்கும் முடிவு இந்த நாட்டின் தலை­வி­தியை மட்­டு­மல்ல, முஸ்லிம் சமூ­கத்தின் தலை­வி­தி­யையும் தீர்­மா­னிக்­கப்­போ­கி­றது. கோடிக்­க­ணக்­கான பணம் பிர­தி­நி­தி­களின் ஆத­ர­வுக்­காக கொட்டப்படுகிறதாகச் செய்திகள் வெளியாகின்றன. அந்தப்பணத்துக்கு விலைபோகும் பிரதிநிதிகளுக்குத் தக்க பாடம் கற்பிப்பது சமூகத்தின் கடமை. முஸ்லிம் புத்திஜீவிகள் இவர்களின் நடமாட்டங்களை விழிப்புடன் கவனித்து அவர்­களின் திரு­கு­தா­ளங்­களை அம்­ப­லப்­ப­டுத்த வேண்டும். இந்த அறப்­போ­ராட்டம் புனி­த­மா­னது. அதிலே குதித்­துள்ள இளைய தலை­மு­றை­யினர் இன­வா­தி­க­ளல்லர். அவர்கள் சகல இன மக்­க­ளையும் சம­நி­லையில் வைத்து ஜன­நா­யக விழு­மி­யங்­களைப் பேணி எல்லா மக்­க­ளி­னதும் அடிப்­படை உரி­மை­களைப் பாது­காக்கும் ஒரு சிந்­தனைச் சட்­ட­கத்­தின்கீழ் இந்­நாட்டின் எதிர்­கா­லத்தை மாற்­றி­ய­மைக்கப் போரா­டு­கின்­றனர். அதற்கு எதி­ரி­க­ளாக முஸ்லிம் பிரதிநிதிகள் செயற்படக் கூடாது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.