ரணிலின் ரகளை

0 439

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா

கடந்த வாரக் கட்­டுரை ரணில் விக்­கி­ர­ம­சிங்ஹ சர்வகட்சி அர­சாங்­கத்தின் பிர­த­மராய் வந்த பின்­ன­ணியை சுருக்­க­மாக விளக்­கி­யது. அவ­ரு­டைய நுழை­வுக்கு வெளி­நாட்டு சக்­தி­களும் அதிலும் குறிப்­பாக இந்­தியா பாடு­பட்­டது என்­பதும் இப்­போது தெரி­ய­வ­ரு­கி­றது. ஆனால் இன்­னொரு கோணத்­தி­லி­ருந்து பார்க்­கும்­போது ரணில் சிங்­கள பௌத்த பேரி­ன­வாத அர­சியல் நிறு­வ­னத்தின் ஒரு சிப்­பந்­தி­யா­கவே சில குறிப்­பிட்ட பணி­க­ளை­ மட்டும் செய்­வ­தற்­காக பிர­தமர் என்ற பெயரில் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார் என்­ப­துதான் உண்­மை­யெனத் தெரி­கி­றது. ஆனால் அவரோ அந்தப் பணி­களை நிறை­வேற்­று­வ­துடன் அதற்கும் அப்பால் ஒரு படி­யேறி 21 ஆவது அர­சியல் சட்டத் திருத்தம் என்ற ஒரு புதிய ரக­ளையை தோற்­று­வித்­துள்ளார். இந்த ரகளை அந்த நிறு­வ­னத்தின் மேலி­டத்­துக்கு ஒரு தலை­யி­டியை கொடுத்­துள்­ளது. ஆகை­யினால் அவர் எத்­தனை நாட்­க­ளுக்கு இன்னும் அந்தப் பத­வியில் இருப்பார் என்ற ஒரு சந்­தேகம் எழு­கின்­றது. அவற்­றைப்­பற்­றியே இக்­கட்­டுரை சில சிந்­த­னை­களை வாசகர்களுடன் பகிர்ந்­து­கொள்ள விளை­கின்­றது.

ரணி­லுக்குக் கொடுக்­கப்­பட்ட பணி
மகிந்த ராஜ­பக்ச பிர­த­மராக இருக்­கையில் நாடு எதிர்­கொண்ட பொரு­ளா­தார நெருக்­க­டிகள் யாவரும் அறிந்­த­வையே. ஆனால் அவற்றைத் தீர்ப்­ப­தற்­காக சில ஆலே­ாச­னை­களை எதிர் அணி­யி­லி­ருந்­து­கொண்டு முன்­வைத்த நாடா­ளு­மன்றப் பிர­தி­நி­தி­களுள் ரணில் விக்­கி­ர­ம­சிங்ஹ முதன்­மை­யா­னவர் என்­பதை மறுக்க முடி­யாது. சர்வதேச நாணய நிதியின் உத­வியை விரைவில் நாட வேண்டும், சீனேக நாடு­களின் ஒரு கூட்­டணி ஒன்­றுடன் தொடர்புகொண்டு டொலர் நாணயத் தட்­டுப்­பாட்டை நீக்க வேண்டும், அர­சாங்­கத்தின் செல­வி­னங்­களை குறைக்க வேண்டும், அநா­வ­சி­ய­மான வரிச்­ச­லு­கை­களை நீக்க வேண்டும், வரி வசூ­லிப்பை அதி­க­ரிக்க வேண்டும் ஆகிய யோச­னை­க­ளையும் இன்னும் பல பொரு­ளா­தாரம் சம்­பந்­த­மான சிபார்­சு­க­ளையும் முன்­வைத்து, அதே­வேளை, புதிய தேர்தல் ஒன்றை நடத்­து­வ­தையும் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் வாதா­டினார். ஆகவே பொரு­ளா­தாரப் பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்குப் பொருத்­த­மா­னவர் அவரே என்ற எண்ணம் ஜனா­தி­ப­தியின் உள்­ளத்தில் படிப்­ப­டி­யாக வள­ர­லா­யிற்று. அது­வேதான் ராஜ­பக்­சாக்­களை ஆட்­சியில் அம­ர­வைத்த அந்த நிறு­வ­னத்தின் காப்­பாளர்களின் கருத்­து­மாக இருந்­தது. இந்தக் கருத்து ஒற்­று­மையே மகிந்­தவின் ராஜி­னா­மாவால் ஏற்­பட்ட இடை­வெ­ளியை ரணிலைக் கொண்டு நிரப்பத் தூண்­டிற்று. ஆகவே ரணி­லுக்குக் கொடுக்­கப்­பட்ட ஒரே பணி பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வதே.

அறப்­போ­ரா­ளி­களின் கோரிக்கை
ஆனால் நாடா­ளு­மன்­றத்­துக்கு வெளியே வளர்ந்துவந்த அறப்­போ­ராட்டம் பொரு­ளா­தாரம் மீட்சி பெறு­வ­தற்கு அதன் அடிப்­படை அமைப்பில் மாற்றம் வேண்டும் எனவும் அந்த அடிப்­படை மாற்றம் அர­சியல் அமைப்பையும் அதன் அடித்­த­ளமாய் அமைந்­துள்ள தத்­துவ அமைப்­பையும் கொண்­டது. ஆதலால், அவை­களும் மாற­வேண்டும் எனக் கோரினர். அந்தத் தத்­துவம் எது?

கடந்த எழு­பது ஆண்­டு­க­ளுக்கும் மேலாக இந்த நாட்டின் அர­சி­யலை இயக்­கி­வந்த ஒரு கொள்கை சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம். பாரா­ளு­மன்ற ஜன­நா­யகம் என்ற போர்­வைக்குள் ஒழிந்­தி­ருந்து ஜன­நா­ய­கத்தின் சாறினைப் பிழிந்­தெ­றிந்­து­விட்டு அதன் சக்­கையை மட்டும் வைத்­துக்­கொண்டு நாட்டின் அர­சாங்­கங்­களை நிர்­ண­யித்த ஒரே தத்­துவம் இந்தப் பேரி­ன­வாதம். அதன் முக்­கிய நோக்­கங்­க­ளாக, இலங்கை சிங்­கள பௌத்த மக்­க­ளுக்கு மட்­டுமே சொந்­த­மான நாடு, ஏனைய இனங்­க­ளெல்லாம் சிங்­கள பௌத்த நாட்டின் குத்­தகைக் குடி­களே, சிங்­கள பௌத்­தமே ஒரே நாடு-­ ஒரே சட்­டம் -­ஒரே மொழி -­ஒரே மதம் என்­ற­வாறு நாட்டை ஆளும், சிங்­கள பௌத்த பெரும்­பான்மை ஆளும் அரசே ஜன­நா­யக அரசு என்­ப­ன­வாக அமைந்­தன. இந்தக் கொள்­கையும் அதன் அர­சியல் பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­களும் சிறு­பான்மை இனங்­க­ளுக்கு எந்த நீதி­யையும் வழங்­க­வில்லை. அதன் விளை­வு­களே 1956 இலிருந்து இற்­றை­வரை நடந்து முடிந்த இனக்­க­ல­வ­ரங்­களும் உள்­நாட்டுப் போரும்.

இன்று ஏற்­பட்­டுள்ள பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கும் இழப்­பு­க­ளுக்கும் அந்தக் கல­வ­ரங்­களும் போரும் முக்­கிய கார­ணங்கள் என்­பதை சிங்­கள பௌத்த இன­வாத எழுத்­தாளர்களும் ஆய்­வாளர்களும் அர­சி­யல்­வா­தி­களும் தொடர்ந்து மூடி மறைத்­தனர். ஒவ்வொரு முறையும் பொரு­ளா­தா­ர கஷ்­டங்கள் ஏற்­பட்­ட­போது அந்தப் பண்­டிதர்கள் அக்­கஷ்­டங்­களின் உட­னடிக் கார­ணங்­களை மட்டும் ஆராய்ந்­தார்­களே ஒழிய அவற்­றுக்­கான அடிப்­ப­டைக்­கா­ர­ணத்தை மூடியே மறைத்­தனர். இன்­று­கூட எத்­தனை ஆய்­வாளர்கள் அல்­லது பல்­க­லைக்­க­ழகப் பேரா­சி­ரியர்கள் பௌத்த பேரி­ன­வா­தத்தின் பொரு­ளா­தார அசிங்­கங்­களை அம்­ப­லப்­ப­டுத்தி உள்­ளனர்? சிங்­கள பௌத்தம் என்ற ஒரு முக­மூ­டியை அணிந்­து­கொண்டு நாட்­டையே சூறை­யா­டிவர்களுள் ராஜ­பக்ச ஆட்­சி­யினர் முதன்­மை­யா­னவர்கள் என்­பது வெளிப்­பட்­டு­விட்­டது. இன்று இலங்­கையின் பொரு­ளா­தாரம் வங்­கு­றோத்து அடை­வ­தற்கு அவர்களது அலி­பாபா ஆட்­சியே காரணம் என்­பதை மறுப்­பவர் யாரோ?

இறு­தி­யாக, ஏழு தசாப்­தங்­களின் பின்னர் சிங்­கள பௌத்த பேர­ின­வா­தத்தின் அசிங்­கங்­க­ளையும் அவை ஏற்­ப­டுத்­திய நஷ்­டங்­க­ளையும் இன்­றைய சிங்­கள பௌத்த இளைஞர் சமு­தாயம் உணர்ந்து விட்­ட­தையே காலி­மு­கத்­தி­டலில் ஆரம்­பித்த அறப்­போ­ராட்டம் தெளி­வு­ப­டுத்துகி­றது. எல்ேலா­ரையும் சில­காலம் ஏமாற்­றலாம், சிலரை எல்லாக் காலங்­களும் ஏமாற்­றலாம், ஆனால் எல்­லா­ரையும் எல்லாக் காலங்­க­ளிலும் ஏமாற்ற முடி­யாது என்­ப­தையே இந்த இளைஞர் சமு­தா­யத்தின் விழிப்பு எடுத்துக் காட்­டு­கி­றது. இது இலங்­கையின் வர­லாற்றில் ஒரு ஆரோக்­கி­ய­மான திருப்பு முனை. இந்தச் சமு­தா­யத்தை வர­லாறு பாராட்­டப்­போ­வது நிச்­சயம். “கோத்­தாவே போ”, “225 வேண்டாம்” என்­ப­வை­யெல்லாம் அந்த சமு­தாயம் கோரும் அடிப்­படை மாற்­றத் தே­வையின் வெளிப்­பா­டு­களே.

ரணிலின் ரகளை
இளைஞர்களின் கோரிக்­கை­களின் தாற்­ப­ரி­யத்தை ரணில் நன்­க­றிவார். அது ஜனா­தி­ப­திக்கும் தெரி­யா­ம­லில்லை. ஏனெனில் இவர்கள் இரு­வரும் ஓர­ள­வுக்­கா­வது உலக மாற்­றங்­களை உணர்ந்துள்­ளனர். இன்­றைய இளந் தலை­மு­றை­யினர் அவர்களின் பெற்­றோர்கள் இளை­யோராய் இருந்த நிலை­மை­யி­லி­ருந்து முற்­றாக வேறு­பட்­டவர்கள். உதா­ர­ண­மாக, தங்­க­ளது கைய­டக்கத் தொலை­பே­சியின் ஒரு பொத்­தானை அமுக்­கு­வ­தன்­மூலம் உல­கையே ஒரு நொடியில் சுற்­றி­வந்து அங்கு நடை­பெறும் மாற்­றங்­க­ளையும் நிகழ்­வு­க­ளையும் உணரும் வல்­லமை படைத்­தவர்கள் இன்­றைய இளைஞர்கள். இவர்கள் காலாலே உலகை அளந்த சிவ­னை­வி­டவும் சக்தி வாய்ந்­தவர்கள் என்பேன்.

புதி­தாகப் பிர­தமர் பதவி ஏற்ற ரணில் இளைஞர் சமுதா­யத்தின் ஆத­ரவைப் பெறாமல் நீண்ட காலம் அப்­ப­த­வியில் இருக்க முடி­யாது என்­ப­தையும் அறிவார். அறப்­போ­ராட்­டத்தை அடக்க முனைந்­த­தாற்­தானே மகிந்த பத­வி­து­றக்க வேண்­டி­ய­தா­யிற்று? ஆகவே அறப்­போ­ராட்­டத்தை ஆத­ரிப்­ப­தாக ரணில் ஒரு அறிக்­கையை உடனே விடுத்தார். ஜனா­தி­ப­தியும் அதனை ஆமோ­தித்தார். அதனைச் செயலிற் காட்­டு­வ­தற்­கா­கவே அர­சியல் யாப்பில் 21ஆவது திருத்­தத்தை கொண்­டு­வந்து ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரத்தை நீக்கி அந்த அதி­கா­ரங்­களை நாடா­ளு­மன்­றத்­திடம் கைய­ளிக்க ஒரு திட்­டத்தை வகுத்தார். அது ஒரு மசோ­தா­வாக இப்­போது நாடா­ளு­மன்­றத்தின் விவா­தத்­துக்­காகச் சமர்ப்பிக்­கப்­பட்­டுள்­ளது. இதுவே அவர் ஏற்­ப­டுத்­தி­யுள்ள ரகளை. ஏன்?

“இது உமக்கு அவ­சி­ய­மில்­லா­தது”
சிங்­கள பௌத்த பேரா­திக்கர் காவ­லாளர்களால் ரணி­லுக்குக் கொடுக்­கப்­பட்ட ஒரே பணி பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பு­தலே. அத­னைப்­பற்­றியே அவர் நாடா­ளு­மன்­றத்தில் அதி­க­ம­திகம் பிரஸ்­தா­பித்­த­தா­லேதான் அவரை பிர­த­ம­ராக நிய­மித்­தனர். நிறை­வேற்று அதி­கா­ர­முள்ள ஜனா­தி­பதி ஆட்­சியை நிறு­வி­யதன் நோக்­கமே சிங்­கள பௌத்த ஆட்­சியை எத்­த­ரு­ணத்­திலும் பாது­காப்­ப­தற்­கா­கவே. கோத்­தா­பய ராஜ­பக்ச ஜனா­தி­பதித் தேர்தலில் வென்­றபின் சம்­பி­ர­தா­யப்­படி நாடா­ளு­மன்­றத்தில் அதன் பிர­தி­நி­தி­களின் முன்­னி­லையில் தனது சத்­தி­யப்­பி­ர­மா­ணத்தை எடுக்­காமல் பௌத்த புனித தல­மான ருவன்­வெ­லி­சா­யவில் பௌத்த குரு­மாரின் முன்­னி­லையில் எடுத்­ததும், பௌத்த சாச­னத்தைப் பாது­காப்­ப­தாக அவர் உறு­தி­மொழி வழங்­கி­யதும், தனது வெற்­றிக்கு முழுக்­கா­ரணம் பௌத்த சிங்­கள மக்­களின் ஆத­ரவே எனப் பகி­ரங்­க­மா­கவே அவர் கூறி­யதும் தனக்கும் தன் பத­விக்குப் பல­மா­கவும் பௌத்த சிங்­க­ள­ பே­ரி­ன­வாத அமைப்பு அமைந்­துள்­ள­தென்­பதை உறு­திப்­ப­டுத்­தவும் அதுவே இந்த நாட்டின் அர­சி­யலை நிர்ண­யிக்கும் என்­பதை எடுத்­துக்­காட்­ட­வுமே. ஆகவே அதிலே தலை­யி­டு­வ­தற்கு ரணி­லுக்கு பிர­தமர் என்ற வகையில் அதி­காரம் இருந்­தாலும் அதற்­காக அவர் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. என­வேதான் அவர் கொண்­டு­வந்­துள்ள மசோ­தா­வுக்குத் தேவை­யான மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை ஆத­ரவை முறி­ய­டிப்­ப­தற்­கான முயற்­சிகள் இப்­போது மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. ஜனா­தி­ப­தியும் அவர் பதவி விலகப் போவ­தில்லை என்றும் ஆனால் மீண்டும் ஒரு முறை அப்­ப­த­விக்கு வேட்­பா­ள­ராக நிற்கப் போவ­தில்லை என்றும் கூறி­யுள்ளார். அது­மட்­டு­மல்ல இரட்டைப் பிர­ஜா­வு­ரி­மை­யுள்­ளவர்கள் நாடா­ளு­மன்­றத்தில் இருக்­கக்­கூ­டாது என்ற ஒரு சரத்தும் அந்த மசோ­தாவில் உண்டு. இது ராஜ­பக்ச குடும்­பத்­தி­னருள் சில­ரையும் இன்னும் சில மொட்­டுக்­கட்சிப் பிர­தி­நி­தி­க­ளையும் ஏன் ஜனா­தி­ப­தி­யை­யும்­கூட பாதிக்­கலாம். எனவே ஒரு புதிய ரக­ளையை ரணில் தோற்­று­வித்­துள்ளார். இது அவ­ருக்கு அவ­சி­ய­மில்­லாத வேலை என்­பதே அக்­கட்­சி­யாளர்களின் நிலைப்­பாடு. இதில் யார் வெற்­றி­ய­டைவார் என்­பதை எதிர்­வரும் வாரங்கள் தீர்­மா­னிக்கும்.

அறப்­போரின் நிலை
அறப்­போ­ராட்டம் எத்­தனை நாட்­க­ளுக்கு நீடிக்கும் என்ற ஒரு கவலை இப்போது எழுந்துள்ளதை உணர முடிகிறது. ஆனால் அதனை முன்னின்று நடத்திச்செல்ல ஒரு சிறந்த தலைமைத்துவம் தேவைப்படுகின்றது. இதுவரை அறப்போராளிகள் எந்த அரசியல் கட்சியின் சார்பிலும் போராடவில்லை. எனினும் சில அரசியல் தலைமைகள் அத்தலைமுறையினருடன் பரிச்சயமுள்ளவர்கள். அவர்களின் அபிலாஷைகளையும் அறிந்தவர்கள். ஆதலால் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அப்போராட்டத்துக்கு ஒரு புதிய மெருகு ஊட்ட வேண்டியுள்ளது. சிறுபான்மை இனங்களும் அதற்குப் பூரண ஆதரவை வழங்க வேண்டும். இருந்தபோதும் அந்தப் போராட்டத்தை எப்படியாவது ஒழித்துக்கட்ட தற்போதைய இனவாத அமைப்புகள் உறுதிபூண்டுள்ளன. மே மாதம் முடக்கிவிடப்பட்ட வன்செயல்கள் தோல்வி அடைந்தாலும் அவர்களின் அடுத்த முயற்சி மிகவும் வலுவானதாக இருக்கும். அதற்கு அரசின் ஆதரவும் இருக்கும் என நம்ப இடமுண்டு. ஆனால் பொருளாதாரக் கஷ்டங்கள் எதிர்வரும் மாதங்களில் மேலும் மோசமாகும் நிலையில் மக்களின் ஆதரவு போராளிகளுக்குப் பெருகும் என்பது நிச்சயம். ரணிலின் முயற்சிகளும் அதற்கு வழிவகுக்கும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.