ஜூலை 10 இற்கு முன் வைத்தியர் ஷாபிக்கு நிலுவை கொடுப்பனவுகள் வழங்கப்படும்

மேன் முறையீட்டு நீதிமன்றில் சுகாதார அமைச்சு உறுதியளிப்பு

0 232

(எம்.எப்.எம்.பஸீர்)
சட்ட விரோ­த­மாக கருத் தடை செய்­த­தாக பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்டு கட்­டாய விடு­மு­றையில் அனுப்­பட்ட வைத்­தியர் ஷாபிக்கு, கட்­டாய விடு­முறை காலத்தில் வழங்­கப்­ப­ட­வேண்­டிய சம்­பளம் மற்றும் கொடுப்­ப­ன­வு­களை எதிர்­வரும் ஜூலை 10 ஆம் திக­திக்குள் பூர­ண­மாக செலுத்தி முடிப்­ப­தாக சுகா­தார அமைச்சு மேன் முறை­யீட்டு நீதி­மன்­றுக்கு உறு­தி­ய­ளித்­துள்­ளது.

சட்ட மா அதிபர் ஊடாக இதனை சுகா­தார அமைச்சு நேற்று முன் தினம் மேன் முறை­யீட்டு நீதி­மன்­றுக்கு அறி­வித்து.

சட்ட விரோ­த­மாக கருத் தடை செய்­த­தாக பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்டு கட்­டாய விடு­மு­றையில் அனுப்­பப்பட்ட தனக்கு, வழங்­கப்­பட வேண்­டிய சம்­பள நிலுவை மற்றும் கொடுப்­ப­ன­வு­களை உட­ன­டி­யாக வழங்க உத்­த­ர­வி­டு­மாறு கோரி குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பிர­சவ மற்றும் மகப்­பேற்று பிரிவின் வைத்­தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல் செய்த எழுத்­தாணை ( ரிட்) மனு நேற்று முன் தினம் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் பரி­சீ­லிக்­கப்­பட்­டது. மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் நீதி­ப­தி­க­ளான சோபித்த ராஜ­க­ருணா மற்றும் தம்­மிக கனே­பொல ஆகியோர் அடங்­கிய நீதி­ப­திகள் குழாம் முன்­னி­லையில் இம்­மனு இவ்­வாறு பரி­சீ­லிக்­கப்­பட்­டது.

இதற்கு முன்னர் குறித்த மனு பரி­சீ­லிக்­கப்பட்ட போது அரச நிர்­வாக அமைச்சின் நிறு­வனங்கள் தொடர்­பி­லான பணிப்­பாளர் நாய­கத்தின் கடிதம் ஒன்­றினை மன்றில் முன்­னி­லைப்­ப­டுத்தி, சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் பிர­சன்­ன­மான மேல­திக சொலி­சிட்டர் ஜெனரால் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சுமதி தர்­ம­வர்­தன, வைத்­தியர் ஷாபி கட்­டாய விடு­மு­றையில் அனுப்­பப்­பட்ட காலப்­ப­கு­தியில், அவ­ருக்கு செலுத்­தப்­ப­ட­வேண்­டிய அடிப்­படை சம்­பளம், கொடுப்­ப­ணவு, வாழ்க்கைச் செலவு கொடுப்­ப­ணவு, இடைக்­கால கொடுப்­ப­ண­வுகள் உள்­ளிட்­ட­வற்றை வழங்க நட­வ­டிக்கை எடுப்­ப­தாக நீதி­மன்­றுக்கு தெரி­வித்­தி­ருந்தார்.

இந் நிலை­யி­லேயே, அம்­மனு நேற்று முன் தினம் பரி­சீ­ல­னைக்கு வந்­த­போது, குறித்த அடிப்­படை சம்­பளம், கொடுப்­ப­னவு, வாழ்க்கைச் செலவு கொடுப்­ப­னவு, இடைக்­கால கொடுப்­ப­ண­வுகள் உள்­ளிட்­ட­வற்றை ஜூலை 10 ஆம் திக­திக்குள் முழு­மை­யாக செலுத்­து­வ­தாக சுகா­தார அமைச்சின் சார்பில் உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது.

வைத்­தியர் ஷாபி­யினால் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள இந்த எழுத்­தாணை மனுவில், குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் வைத்­தியர் சந்­தன கெந்­தன்­க­முவ, அவ்­வைத்­தி­ய­சா­லையின் முன்னாள் பணிப்­பாளர் வைத்­தியர் ஏ.எம்.எஸ். வீர­பண்­டார, சுகாதார அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல்ல, சுகா­தார அமைச்சின் செயலர் மேஜர் ஜெனரல் வைத்­தியர் எஸ்.எம். முண­சிங்க, சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் வைத்­தியர் அசேல குண­வர்­தன ஆகியோர் பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

வைத்­தியர் சந்­தன கெந்தன் கமுவ முன்­னி­லையில் ஒழுக்­காற்று விசா­ர­ணை­களை எதிர்­கொள்ள வைத்­தியர் ஷாபி சிஹாப்­தீ­னுக்கு ஆட்­சே­பனை இல்லை என அவ­ரது சட்­டத்­த­ர­ணிகள் மன்­றுக்கு தெரி­வித்­தனர்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.