மாற்றத்தின் எதிரிகளும் நண்பர்களும்

0 372

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா

மாற்றம் மட்­டுமே மாறா­த­தென்பர். இன்­றைய அறப்­போ­ராட்­டத்தின் அடிப்­படைக் கோரிக்­கையும் இலங்­கையின் அர­சியல், பொரு­ளாதார அமைப்­பு­களில் மாற்றம் வேண்டும் என்­பதே. கோத்­தாவே போ, 225 தேவை­யில்லை என்­ப­ன­வெல்லாம் அந்த அடிப்­படை மாற்­றத்­தினை அடை­வ­தற்­கான பாதை­களே ஒழிய அவை­களே முக்­கிய இலட்­சி­யங்­க­ளல்ல. போரா­ளி­களின் அடிப்­படை இலட்­சி­யத்­துக்கு சமூ­கத்தின் சகல இனங்­களின் புத்­தி­ஜீ­வி­க­ளி­டை­யேயும் அறி­வா­ளி­களின் மத்­தி­யிலும் ஊடக வட்­டா­ரத்தின் சில பகு­தி­க­ளி­லி­ருந்தும் பௌத்த சங்­கத்­தினர் சிலரின் மத்­தி­யிலும் ஆத­ரவு பெரு­கி­யுள்ள போதிலும், கடந்த சில வாரங்­க­ளாக, அதிலும் குறிப்­பாக முன்­னைய பிர­தமர் இரா­ஜி­னாமா செய்­த­தி­லி­ருந்து, நடை­மு­றை­யி­லி­ருக்கும் அமைப்­பு­க­ளையே பாது­காப்­ப­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வதை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருக்­கி­றது. ரணில் விக்­கி­ர­ம­சிங்­ஹவை பிர­த­ம­ரா­கக்­கொண்ட சர்வகட்சி அர­சாங்கம் இந்த முயற்­சி­களின் ஒரு பிர­தி­ப­லிப்பு என்­பதே இக்­கட்­டு­ரை­யா­ளரின் கருத்து. ஏன் இந்த அமைப்­பு­மாற்றம் தேவைப்­ப­டு­கின்­றது? அதன் எதி­ரி­களும் நண்பர்களும் யாவர்? என்­ப­ன­ பற்­றிய சில சிந்­த­னை­களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்­வதே இக்­கட்­டு­ரையின் நோக்கம்.

எழு­பது வரு­ட­கால அமைப்பின் தீங்கு
1948 இல் சுதந்­திரம் கிடைத்­த­போது பிரித்­தா­னி­யரின் நாடா­ளு­மன்ற ஜன­நா­யக அர­சியல் முறை­யையே 1947ஆம் ஆண்டின் சோல்­பரி அர­சியல் யாப்பின் மூலம் இலங்கை பெற்றுக் கொண்­டது. அந்த அர­சியல் யாப்பில் பல்­லி­னங்கள் வாழும் இலங்­கை­யிலே பெரும்­பான்மை இனத்தின் பாரிய ஆத­ர­வுடன் ஆட்­சிக்­கு­ வரும் அர­சாங்­கங்கள் சிறு­பான்மை இனங்­களை நசுக்­காமல் இருப்­ப­தற்­காக பல பாது­காப்­புகள் புகுத்­தப்­பட்­டி­ருந்­தன. அந்த யாப்பின் 29ஆவது சரத்தை வாசித்தால் அவை எவை என்­பதை அறிந்­து­கொள்­ளலாம். பிரித்­தா­னியர் ஆண்­ட­போதே சமஷ்டி அர­சியல் வேண்­டு­மென சிறு­பான்மைத் தலைவர்கள் போராடி இருந்தால் ஒரு­வேளை அது சாத்­தி­ய­மாகி இருக்­கலாம்.

அப்­போது இந்­தி­யாவில் நடை­பெற்ற இந்து, முஸ்லிம் இனக் ­க­ல­வ­ரங்கள் பிரித்­தா­னி­யரை சமஷ்டி அர­சி­ய­லுக்கு இணங்கச் செய்­தி­ருக்­கலாம். ஆனால் சோல்­பரி யாப்பு கொண்­டி­ருந்த பாது­காப்­பு­களை நம்­பிய சிறு­பான்மை தலைவர்கள் ஒற்­றை­யாட்­சியை ஏற்றுக் கொண்­டனர். அது அவர்கள் விட்ட தவறா அல்­லது அவர்களின் நாட்­டுப்­பற்றா என்­பது விவா­தத்­துக்­கு­ரிய ஒரு விடயம். ஆனால் அதன் பின்னர் நடந்­த­தென்ன? எதை சோல்­ப­ரித்­திட்டம் தடுக்க விரும்­பி­யதோ அதுவே பூதம்போல் வெளிப்­பட்டு இற்­றை­வரை ஆட்­சி­செய்து இலங்­கையை ஒரு பிச்­சைக்­கார நாடா­கவும் பிள­வு­பட்ட நாடா­கவும் மாற்­றி­யுள்­ளது.

சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம்
சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம் 1950களி­லி­ருந்தே அர­சி­யலில் நுழையத் தொடங்கி 1956ஆம் வருடத் தேர்தலில் அதன் பூர­ண­ப­லத்தை வெளிப்­ப­டுத்­தி­யது. அன்­றி­லி­ருந்து இன்­று­வரை ஆட்­சிக்­கு­வந்த எல்லா அர­சாங்­கங்­க­ளுமே சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தத்தைத் தழு­வியே ஆட்சி செய்­தன. இந்த நாட்டின் பல்­லின சமூக, கலாசார அமைப்­பினைச் சித­ற­டித்து ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே மதம், ஒரே இனம், ஒரே மொழி என்­ப­தையே நோக்­கா­கக்­கொண்டு எல்லா அர­சாங்­கங்­களும் வெளிப்­ப­டை­யா­கவோ மறை­மு­க­மா­கவோ செயற்­பட்டு வந்­துள்­ளன. அந்தக் கொள்­கையின் பூரண செயல்­வ­டி­வமே ராஜ­பக்­சாக்­களின் ஆட்சி. ஆகவே ஒவ்­வொரு அர­சாங்­கத்­தி­னதும் வெளிப்­ப­டை­யான அர­சியல், பொரு­ளா­தார, சமூக மேம்­பாட்டுக் கொள்­கைகள் வேறு­பட்­டி­ருந்­தாலும் அவற்றின் அடித்­த­ள­மாக சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தமே செயற்­பட்டு வந்­துள்­ளதை மறுக்க முடி­யாது.

இந்தப் பேரி­ன­வா­தத்தின் மிகப்­பெரும் தீங்கு என்­ன­வெனில் ஆட்­சி­யி­லி­ருப்­பவர்கள் எக்­குணம் படைத்­தவர்களாக இருந்­தாலும், அவர்கள் நாட்­டையும் நாட்டு மக்­க­ளையும் சூறை­யாடித் தமது சொந்த நலன்­க­ளையும் குடும்ப வளங்­க­ளையும் குவித்­தாலும், அதற்­காக அவர்கள் மற்ற இனங்­களின் மனித உரி­மை­க­ளைப்­ப­றித்து உயிர் கொலை­க­ளையும் நடத்தி மற்றும் ஊழல்­க­ளிலும் ஈடு­பட்டு, ஏன் நாட்­டையே பிற­ருக்கு அடை­மானம் வைத்­தாலும், ஈற்றில் நடிப்­பி­லா­வது அவர்கள் பௌத்த போர்­வையைப் போற்­றிக்­கொண்டு பக்தர்களா­கவும் பௌத்த சாச­னத்தைப் பாது­காப்­பவர்களா­கவும் பௌத்த சங்­கத்­தி­னரை மதித்துக் கௌர­வித்து அச்­சங்­கத்­தி­னரின் நலன்­களைப் பாது­காப்­பவர்களா­கவும் இருந்தால் அவர்களின் குறை­க­ளெல்லாம் மூடி மறைக்­கப்­பட்டு விடும். இத்­த­னைக்கும் இலக்­க­ண­மாக அமைந்­தது ராஜ­பக்ச ஆட்சி.

ஒரு பக்­கத்தில் பௌத்த மதத்தை அர­சியல் பிர­சா­ரத்­தினுள் கொண்­டு­வந்து, அப்­பாவி பௌத்த வாக்­காளர்களை அதன் மகு­டியில் மயங்­கச்­செய்து, தேர்தல்­களை வென்று ஆட்­சிக்கு வந்­தபின் மறு­பக்­கத்தில் பௌத்­தத்தின் காருண்­யத்­தையும் சாந்­தி­ போ­த­னை­யையும் ஆட்சித் தத்­து­வங்­க­ளையும் பௌத்­தரின் ஏழ்மை வாழ்­வையும் புறந்­தள்ளும் அர­சியல் தலைவர்களையே இப்­பே­ரி­ன­வாதம் வளர்த்துள்­ளதை யாராலும் மறுக்க முடி­யுமா?

அது ஒரு­பு­ற­மி­ருக்க, பௌத்த சிங்­கள ஆட்­சி­யையே குறிக்­கோ­ளாகக் கொண்டு சிறு­பான்மை இனங்­களை அதிலும் தமி­ழி­னத்தை நசுக்க எடுத்த அர­சியல் முயற்­சிகள் ஈற்றில் ஓர் ஆயுதப் போரா­க­மாறி சுமார் கால் நூற்­றாண்டு கால­மாக இழு­ப­றிப்­பட்டு ஈற்றில் ராஜ­பக்­சாக்­களின் ஆட்­சியில் பாரிய கட­னுக்கு ஆயு­தங்­களை வாங்கி ஆயி­ரக்­க­ணக்­கான அப்­பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து ஆட்­சி­யினர் வெற்­றி­கொண்­டா­டினர். அந்தக் கடன்­சு­மையே மேலும் மேலும் பெருகி இன்று இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தை வங்­கு­றோத்­தாக்­கி­யுள்­ளது என்­பதை யாராலும் மறுக்க முடி­யுமா? அம்­பாந்­தோட்டைத் துறை­முகம் சீனர்களின் கைக்குள் சிக்­கி­யுள்­ளதும் இந்­தக்­கடன் சுமை­யி­னா­லேயே என்­ப­தையும் மூடி­ம­றைக்க முடி­யுமா? அரசன் இன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்­ப­தற்கு இலங்கை அர­சாங்­கங்கள் ஒரு சிறந்த உதா­ரணம். கடன்­பட்ட இலங்கை கலங்­காமல் இருக்க முடி­யுமா? இத்­த­னை நடந்தும் பெரும்­பான்மை இனம் பௌத்த பிர­சார மகு­டியில் மயங்கி தமிழ் எதி­ரி­களை ஒழித்­து­விட்டோம் என்று வெற்றிக் கும்­மாளம் கொட்­டி­யது ஒரு புது­மையே. அந்தக் கும்­மாளம் இன்று ஒப்­பா­ரி­யாக மாறி உல­கெங்கும் கேட்­கி­றது.

விழித்­தெ­ழுந்த சிங்­கள பௌத்த இளைஞர்கள்
கடந்த இரண்டு ஆண்­டு­க­ளுக்குள் ஏற்­பட்ட கோவிட் நோயும் அத­னா­லேற்­பட்ட உலகப் பொரு­ளா­தார மந்­தமும், உக்ரைன் நாட்­டினை ரஷ்யா படை­கொண்டு தாக்­கி­யதும் இலங்­கையின் பொரு­ளா­தார நெருக்­க­டி­களை மேலும் பெருக்­க­லா­யின. அத­னி­டையே ராஜ­பக்ச அர­சாங்­கத்தின் பொரு­ளா­தாரக் கொள்­கைகள் எரி­கின்ற நெருப்­பிலே எண்­ணெய்யை ஊற்­றி­ய­துபோல் அமைந்­தது. அந்த நெருக்­க­டி­களை இங்கே பட்­டி­ய­லிட்டால் கட்­டுரை மிகவும் நீண்டு விடும். அவை எல்­லா­ருக்கும் தெரிந்­த­வையே. எரி­வா­யுக்­காக மணிக்­க­ணக்­கிலே நுகர்வோரின் நீண்ட வரி­சையில் கொதிக்கும் வெய்­யி­லிலும் கொட்டும் மழை­யிலும் கால்­க­டுக்க நின்று மயங்கி விழுந்து மர­ணித்த அந்த உடல்கள் பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளைப்­பற்­றிய காவி­யங்­களை எதிர்­கா­லத்தில் பாடும். இந்தப் பொரு­ளா­தார நெருக்­க­டிகள் பௌத்த பேரி­ன­வா­தத்­தைப்­போன்று சிறுபான்மை இனங்­க­ளை­ மட்டும் வாட்­ட­வில்லை. பெரும்­பான்மை இனத்­தையும் சேர்த்தே வாட்­டி­யது. அந்தச் சமத்­து­வத்தை பாராட்­டாமல் இருக்க முடி­யாது.

எழு­பது ஆண்­டு­க­ளுக்கும் மேலாக நாட்டை ஆண்ட அர­சாங்­கங்கள் சர்வமக்­க­ளி­னதும் நல­னை­யும்­பேணி, ஜன­நா­யக விழு­மி­யங்­க­ளுக்கு மதிப்­ப­ளித்து, சட்­டத்­துக்­குமுன் யாவரும் சமமே என்ற அடிப்­ப­டையில் குற்­ற­வா­ளிகள் யாராய் இருந்­தாலும் அவர்களின் குற்­றங்­க­ளுக்குத் தண்­ட­னை­களை உட­னுக்­குடன் வழங்கி, பௌத்­தனின் போத­னை­க­ளுக்­க­மைய ஆட்­சி­செய்­தி­ருந்தால் இயற்கை வளம்­பெற்ற இந்தப் புண்­ணிய பூமி அதன் புரா­தன மகி­மை­யையும் புக­ழையும் இழந்­தி­ருக்­குமா? அன்­றொரு நாள் ஈழத்து உணவு காவி­ரிப்பூம் பட்­டி­னத்­தையே வாழச் செய்­த­தல்­லவா? ஏன் இன்று அது தமி­ழ­கத்­திடம் பிச்­சைப்­பாத்­திரம் ஏந்­த­வேண்டும்? இந்தக் கேள்­வியே புதி­தாக வளர்ந்­துள்ள பௌத்த இளைஞர் சமு­தா­யத்தை வாட்டத் தொடங்­கி­யது. எவ்­வாறு பௌத்­தத்தின் பெயரை உச்­ச­ரித்­துக்­கொண்டு ஆட்­சி­யாளர்கள் மக்­களை ஏமாற்றி நாட்டைச் சூறை­யா­டி­யுள்­ளனர் என்­ப­தற்கு விடை­தே­டினர் விழிப்­ப­டைந்த அந்த இள­வல்கள். அவர்களின் தேட­லுக்குக் கிடைத்த விடையே அடிப்­படை மாற்றம் வேண்டும் என்ற மகத்­தான கோரிக்கை. அந்தக் கோரிக்­கையால் உதித்­ததே காலி­மு­கத்­திடல் அறப்­போ­ராட்டம்.

அவர்கள் தேடு­கின்ற மாற்றம் தனியே கோத்­தா­பய ராஜ­பக்ச வெளி­யேற வேண்டும், 225 நாடா­ளு­மன்றப் பிர­தி­நி­தி­களும் வீடு செல்­ல­வேண்டும் என்­ப­தல்ல. இந்த அர­சியல் அமைப்பின் அடித்­த­ள­மாக அமைந்­துள்ள சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம் முற்­றாக நீக்­கப்­பட்டு உண்­மை­யான ஜன­நா­யக ஆட்சி மல­ர­வேண்டும் என்­பதே. அந்த ஒரு கோரிக்கை நாட்டின் சகல இனங்­க­ளி­னதும் உயிர் நாடியைத் தொட்­டு­விட்­டது என்­ப­தையே நாடெங்­கிலும் பர­வத்­தொ­டங்­கிய அர­சுக்­கெ­தி­ரான கிளர்ச்சிகள் எடுத்­துக்­காட்­டின. காலி­மு­கத்­திடல் சர்வ இன­மக்­களும் சம­மாக வாழும் நவ இலங்கை என்ற ஒரு விருட்சம் வளர்வதற்கு நாட்­டப்­பட்ட ஒரு சிறு பூண்டு. அந்தத் தவப்­பூண்­டுக்குச் சிங்­க­ளவர், தமிழர், முஸ்­லிம்கள், பௌத்தர்கள், கிறிஸ்­தவர்கள், இந்­துக்கள், இஸ்­லா­மியர் என்ற எந்தப் பேத­மு­மின்றி, ஆண்­களும் பெண்­களும் இளை­யோரும் முதி­யோரும் ஒன்­றாக இணைந்து நீர் வார்ப்­பதை ஒலி, ஒளிப் பதி­வுகள் உல­கெலாம் பரப்­பு­வதை காணும்­போதும் கேட்­கும்­போதும் நெஞ்சம் உரு­கு­கின்­றது. இந்த எழுச்­சியைத் தோற்­று­வித்த சிங்­கள பௌத்த இளை­யோ­ருக்கு நன்றி கூறு­வ­தற்கும் வாழ்த்­துக்கள் வழங்­கு­வ­தற்கும் இக்­கட்­டு­ரையின் வார்த்தை வளம் போதாது.

எதி­ரி­களின் எதிர் போராட்டம்
இந்த மாற்­றத்தால் பாதிக்­கப்­ப­ட­வி­ருக்கும் பழமை விரும்­பிகள் எதிர் போராட்­ட­மொன்றை இப்­போது ஆரம்­பித்­துள்­ளனர். கடந்த ஒன்­பதாம் திகதி அறப்­போ­ரா­ளி­க­ளுக்கு எதி­ராக முடக்­கி­வி­டப்­பட்ட வன்­செ­யல்கள் உல­கத்தின் வெறுப்பை ஆட்­சி­யாளர்களுக்குத் தேடிக்­கொ­டுத்­தது என்­பதை மறுக்க முடி­யாது. எனவே வன்­மு­றையை இறுதி ஆயு­த­மாக வைத்­துக்­கொண்டு அன்பு முக­மூ­டி­யொன்றை அணிந்து இந்தப் போராட்டம் ஆரம்­பித்­துள்­ளது. இப்­போ­ராட்­டத்தின் காவியத் தலை­வ­னாக வெளிப்­பட்­டுள்ளார் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. காலி­மு­கத்­தி­டலை ஆயு­தப்­ப­லத்­தினால் கலைக்க வேண்டாம் என்று ஜனா­தி­பதி கோத்­தா­பய காவல் துறை­யி­ன­ருக்குக் கட்­டளை பிறப்­பித்­துள்ளார். அத­னையே ஆமோ­தித்து தற்­கா­லிகப் பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்­கவும் அறப்­போ­ரா­ளி­க­ளுக்கு ஆத­ர­வு­ வ­ழங்க முன்­வந்­துள்ளார். ஆடு நனை­கி­ற­தென்று ஓநாய் கத­று­வ­தைப்போல் இருக்­கி­றது இவர்களின் கபட நேசம். ஆனால் அறப்­போ­ரா­ளி­களின் அடிப்­படை மாற்றம் இத்­த­லைவர்களி­னதும் அவர்களின் ஆட்­சிக்கும் ஆப்பு வைக்கும் என்­பதை அவர்கள் நன்­க­றிவர். என­வேதான் வங்­கு­றோத்­த­டைந்­துள்ள பொரு­ளா­தா­ரத்தை உட­ன­டி­யாகக் கட்டியெழுப்­ப­வேண்டும் என்­பதை வலி­யு­றுத்தி அடிப்­படை மாற்­றத்­துக்கு இது­வல்ல நல்ல நேரம் என்­பதை கூறா­மற்­கூறி சர்வகட்சி அர­சாங்கம் என்ற பெயரில் ஒரு பூச்­சாண்டி அர­சாங்­கத்தை நிறு­வி­யுள்­ளனர். அதற்கு ஆத­ரவு வழங்க எத்­த­னையோ மந்­திரிகள் எதி­ர­ணி­யி­லி­ருந்து தாவிப் பாய்ந்­துள்­ளனர். இது ஒரு ஸ்திர­மற்ற அர­சாங்கம் என்­பதை நாடு விரைவில் உணரும்.

அதன் உண்­மை­யான நோக்கம் பழ­மையை அதா­வது சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தத்தின் அத்­தி­வா­ரத்தை உடை­யாமல் காப்­பாற்­று­வதே. உதா­ர­ண­மாக, அறப்­போ­ரா­ளிகள் வேண்­டு­வ­து­போன்று நிறை­வேற்று அதி­கா­ரம்­கொண்ட ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை முற்­றாக நீக்கி அந்த அதி­கா­ரங்­களை முன்னர் இருந்­த­படி நாடா­ளு­மன்­றத்­திடம் சமர்ப்பிக்க யாப்பு ரீதி­யான மாற்­றத்தைக் கொண்­டு­வ­ரு­வ­தாக விக்­கி­ர­ம­சிங்க கூறி­யி­ருந்தார். ஆனால் இன்று நடந்­த­தென்ன? அவர் அறி­மு­கப்­ப­டுத்­திய 21ஆவது யாப்­புச்­சட்டத் திருத்தம் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை முற்­றாக நீக்­காமல் அவ­ருக்குத் தொடர்ந்தும் சில அமைச்சுப் பொறுப்­பு­களை வைத்­தி­ருக்க இடம்­கொ­டுத்­துள்­ளது.

இன்னும் சொல்­லப்போனால் பாது­காப்பு அமைச்சு இவரின் கைக­ளி­லேதான் இருக்கும் என்று நம்ப இட­முண்டு. இது என்ன கண்­து­டைப்போ? ஜனா­தி­பதி கோத்­தா­பய பௌத்த சாச­னத்தைக் காக்­கவென்று வந்த ஒரு பாது­கா­வலன். பௌத்­த­ பே­ரி­ன­வா­தத்தின் வெற்­றியே அவரின் வெற்­றியும், அவரின் தமை­யனின் மொட்­டுக்­கட்­சியின் வெற்­றியும். பேரி­ன­வாத்தின் காவலர்களோ காவி­யுடை காலாட்­படை வீரர்கள். அந்த வீரர்களின் சாக­சங்­களை நாடே அறியும். அவர்களின் ஆத­ரவால் ஆட்­சிக்­கு­ வந்த ராஜ­பக்ச குடும்பம் அடிப்­படை மாற்­றத்தை விரும்­புமா? அடிப்­படை மாற்றம் ஏற்­பட்டால் அவர்களின் மொட்டுக் கட்­சியின் எதிர்­காலம் என்­ன­வாகும்? அதே­போன்று அவர்களின் கட்­சியில் வெற்­றி­பெற்ற அநே­க­ரின் அர­சியல் எதிர்­கா­லம் அந்தோ கதி­யாகும்.

ரணிலின் தலை­மையில் வெளி­நாட்டு உத­வி­க­ளைப்­பெற்று மக்­களின் அன்­றாட வாழ்க்­கையில் ஏற்­பட்­டுள்ள பொரு­ளா­தாரக் கஷ்­டங்­க­ளிலே சில­வற்­றை­யா­வது குறைத்­து­விட்டால் அதனை பழ­மையின் வெற்­றி­யாக விளம்­ப­ரப்­ப­டுத்தி அறப்­போ­ராட்­டத்தை முறி­ய­டித்து விடலாம் என்று கங்­கணம் கட்­டி­யுள்­ளனர் சர்வகட்சி அர­சாங்­கத்­தினர். ஆனால் இந்த அர­சாங்கம் உறு­தி­யற்­ற­தொன்று. மக்­களின் ஆத­ர­வில்­லாமல் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்பும் நீண்­ட­காலத் திட்­டங்­களை இதனால் வகுக்க முடி­யாது. வெளி­நாட்டு உத­வி­களும் வெள்ளம்போல் வந்து குவி­யப்­போ­வ­தில்லை. பண­வீக்கம் உயரும். விலை­வாசி அதி­க­ரிக்கும். பற்­றாக்­குறை நீடிக்கும். பட்­டினி மக்­களை வீதிக்குக் கொண்­டு­வரும். ஆட்­சியில் அமர்ந்துள்ள மாற்­றத்தின் எதி­ரிகள் புற­மு­துகு காட்டி ஓடும் நாள் வெகு­தூ­ரத்தில் இல்லை. பொதுத் தேர்தல் விரைவில் நடை­பெற்று மக்­களின் ஆத­ர­வுடன் ஓர் அர­சாங்கம் நிறு­வப்­பட வேண்டும்.

மாற்­றத்தின் நண்பர்கள்
அறப்­போ­ராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள இளந்­த­லை­மு­றையைப் பற்­றிய சில உண்­மை­களை அறிந்து கொள்­ளுதல் அவ­சியம். இந்தத் தலை­முறை உல­க­ளா­விய ஒன்று. இன்று உல­கெங்கும் நடை­பெறும் மனித உரிமை, சுற்­றுச்­சூழல், பரு­வ­கால மாற்றம், பெண்­ணு­ரிமை போன்ற மகத்­தான போராட்­டங்­களை முன்­னெ­டுத்துச் செல்­பவர்கள் இளைய தலை­மு­றை­யினர். அவர்கள் வாழும் உலகும் இன்­றைய முதி­யவர்கள் இளை­யோர்­க­ளாக வாழ்ந்த உலகும் தரத்தால் வேறு­பட்­டவை. தனது கைய­டக்கத் தொலை­பே­சியின் ஒரு பொத்­தானை அமுக்­கி­விட்டு உலக நடப்­பு­களை அறிந்­து­கொண்டு உல­க­மெங்கும் தொடர்பு கொள்ளும் சக்­தி­கொண்ட ஒரு இளைய சமு­தாயம் இது. அந்த விழிப்­புற்ற, வீறு­கொண்ட ஒரு உலக சமு­தா­யத்தின் பிர­தி­நி­தி­களே அறப்­போ­ரா­ளிகள். அவர்களை யாரும் விலைக்கு வாங்க முடி­யாது. பூகோ­ள­ம­ய­வாக்கம் படைத்­து­விட்ட ஒரு­சில நற்­ப­டைப்­பு­களில் ஒன்றே இந்தச் சந்­ததி. ஆண்­க­ளையும் பெண்­க­ளையும் சம­மாக உள்­ள­டக்­கிய இந்த இளம்­படை இயங்­கு­வதைக் காணக்­கி­டைத்­ததே இன்­றைய முதி­யவர்களின் நற்­பாக்­கியம் என்று கூறுவேன். வாழ்க இவர் சந்­ததி. வள­ரட்டும் இவர் பணி.

இலங்­கையின் மொத்த வாக்­காளர் பட்­டி­யலில் சுமார் மூன்­றி­லி­ரண்டு பகு­தியினர் 40 வய­துக்குக் குறைந்­தவர்கள். ஆகவே அதில் பெரும்­பான்­மை­யினர் இத்­த­லை­மு­றை­யினர். அது­மட்­டு­மல்ல, மொத்தச் சனத்­தொ­கையில் அரை­வா­சிக்கும் சற்று அதி­க­மா­னவர்கள் பெண்­களே. எனவே இளந்தலை­மு­றைக்குள் சரி­பா­தி­யா­வது பெண்கள். இன்­றைய பெண்கள் விட்டில் பற­வை­க­ளல்ல பொற்­கூண்­டுக்குள் பறப்­ப­தற்கு. அறப்­போ­ராட்­டத்தில் அவர்கள் குதித்­தி­ருப்­பது ஒரு வகையில் அவர்களது உரிமைப் போராட்­டத்­தையும் பிர­தி­ப­லிக்­கி­றது. அந்தப் போராட்­டத்தில் முஸ்லிம் பெண்­களைக் காணும்­போது பெரு­மை­யாக இருக்­கி­றது.

ஆனால் இவர்­க­ளுக்கும் இவர்­களின் போராட்­டத்­துக்கும் அர­சியல் ரீதி­யான நண்­பர்கள் யார்? இது­வரை அறப்­போ­ரா­ளிகள் எந்­த­வி­த­மான அர­சியல் சாயத்­தையும் பூசிக்­கொள்­ளாமல் நடு­நி­லையில் நின்று எல்லா அர­சியல் ஆத­ர­வா­ளர்­க­ளையும் அணைத்­தது அவர்­களின் அர­சியல் முதிர்ச்­சியை உணர்த்­து­கி­றது. எனினும் இன்று அவர்­களின் போராட்­டத்தை நசுக்க எதி­ரிகள் கூட்­ட­மொன்று நட்பு வேடம் பூண்டு சர்­வ­கட்சி அர­சாங்கம் என்ற பெயரில் வெளிப்­பட்­டுள்­ளது. எனவே மாற்றம் வேண்டும் என்ற கோரிக்­கையின் உண்­மை­யான அர­சியல் நேசர்­களை இனங்­காணும் கடமை எழுந்­துள்­ளது.

அர­சி­ய­லிலும் பொரு­ளா­தார அமைப்­பிலும் அடிப்­படை மாற்­ற­மின்றேல் இந்த நாட்­டுக்கு நீண்­ட­கால சுபீட்சம் இல்லை என்­பதில் மக்கள் விடு­தலை முன்­னணி, தேசிய மக்கள் சக்தி, சோஷ­லிச முன்­னணி ஆகி­யவை ஏகோ­பித்த கருத்­து­டை­ய­ன­வாக உள்­ளன. ஆனால் அவர்­க­ளுக்­குள்ளே ஒரு பெரும் குறை­பா­டுண்டு. முற்­போக்குக் கொள்­கை­க­ளைக்­கொண்ட இட­து­சா­ரி­க­ளி­டையே தத்­துவ ரீதி­யான வேறு­பா­டுகள் ஒரு தீராத நோய். முட்­டை­யிலே மயிர் பிடுங்க நினைத்து தம்­மைத்­தாமே பலவீ­னப்­ப­டுத்­திக்­கொண்டு ஆளும் சந்­தர்ப்­பங்­களை இழப்­பது இவர்­க­ளது ஒரு பொழு­து­போக்­காக மாறி­விட்­டது. இது ஒரு நாட்­சென்ற கதை. ஆனால் இன்று இலங்கை இருக்கும் நிலையில் இம்­முன்­ன­ணிகள் சொற்­சி­லம்பு ஆடிக்­கொண்­டி­ருப்­பது மன்­னிக்க முடி­யா­த­தொன்று. இவர்­க­ளுக்கு இளைய தலை­மு­றை­யி­ன­ருடன் உறவு உண்­டென்­பதை மறுப்­ப­தற்­கில்லை. ஆனால் அந்த உறவு அர­சியல் அடிப்­ப­டையில் வளர்ச்­சி­ பெற வேண்­டு­மானால் இந்த மூன்று அணி­யி­னரும் ஏகோ­பித்த ஒரு செயல் திட்­டத்­துடன் இளந்­த­லை­மு­றை­யி­னரை அணுகி அவர்­களின் பலத்­துடன் மக்­களின் ஆத­ரவை நல்­க­வேண்டும். இது காலத்தின் கட்டாயம். நடைபெறுமா?
“உங்களை நீங்களே மாற்றும்வரை இறைவனும் உங்களைத் தொடான்” (அல்-குர்ஆன்)

–Vidivelli

Leave A Reply

Your email address will not be published.